முரடனின் மான்விழி
கல்லூரி ஆசிரியராக இருக்கும் தன்னுடைய அத்தை மகன் விதுரனுக்கு கல்யாணம் என்ற குதூகலத்தோடு அந்த மண்டபத்தில் வளம் வருகிறாள் விஹிதா … கோபத்துக்கும் அதிகாரத்திற்கும் மறுபெயர் என்னவென்று கேட்டால் விதுரன் பெயரையே சொல்லுவார்கள் அந்த அளவிற்கு அவனின் கோபம் கட்டுக்கடங்காமல் இருக்க…, அதிகாரமோ அவனின் கீழ் நூறு பேர் வந்தாலும் ஆளுமை திறன் நிறைந்தது அவனின் அதிகாரம்… இவனிடம் பேசுவதற்கு அங்கு உள்ளவர்கள் பயப்படுவார்கள் இவன் ஒரு பார்வை பார்த்தால் போதும் அப்படியே கப்சிப் என்று ஆகி விடுவார்கள் இப்படி இருக்கும் இவனுக்கு காதல் கல்யாணம் இதுதான் வேடிக்கையே… சுட்டி பெண்ணாக தன்னுடைய குறும்பு தனத்தால் எல்லோரையும் கட்டி போடும் விஹிதாவோ கோபம் என்றால் என்ன விலை எனக் கேட்பாள் …அந்த அளவிற்கு அவள் அன்பால் கட்டி போடுபவள்… கோபத்தின் மறு பெயரையும் , கோபத்தின் விலை என்னவென்று கேட்கும் இவர்கள் இருவரையும் எதிர்பாராத விதமாக ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஒன்றாக முடிச்சு போடும் பந்தமோ ஒரு மண பந்தம்… தனது கோபத்தால் பெண்ணவளின் வெறுப்பை சம்பாதிப்பானா ? இல்லையென்றால் தனது அன்பால் கோபத்தோடு இருக்கும் விதுரனை தன் வசம் செய்வாளா…? மேலும் தெரிந்து கொள்ள வாசியுங்கள் முரடனின் மான்விழி.
hi drs … paduchchuttu epudi irukkunnnu marakkama comment pannunga