லவ்❤️..லவ்.. ❤️ எத்தனை வயது? – 51
“ஏன் மதி அவன் இப்படி பண்ணிட்டான்? அவன் தப்பு பண்ணதனால தானே நான் கண்டிச்சேன்.. அவன் எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கான்..? ஒரு அண்ணனா நான் அதை கண்டிக்க கூடாதா..?”
அவன் அப்போதும் அதே கேள்வியை கேட்க மதியழகிக்கோ அவன் மேல் இன்னும் கோவம் கூடியது.. “உங்களுக்கு நிஜமாவே புரியல இல்ல? அவன் நிஜமாவே தப்பு பண்ணி நீங்க அவனைக் கேள்வி கேட்டு இருந்தா.. அப்படியெல்லாம் பேசியிருந்தா.. அவனை அடிச்சு தண்டனை கொடுத்து இருந்தா.. இங்கே யாருமே உங்களை கேட்க போறது இல்ல.. ஆனா அவன் தப்பு பண்ணி இருக்கானா இல்லையான்னு அவன் கிட்ட தீர விசாரிக்கவும் இல்லை நீங்க.. அவன் நான் தப்பு பண்ணல பண்ணலன்னு சொல்லிட்டு இருக்கும்போது அதை காது கொடுத்து நீங்க கேட்கவும் இல்லை.. நேரடியா அவனுக்கு தண்டனை கொடுத்துட்டீங்களே.. அவன் மனசு எவ்வளவு துடிச்சி இருக்கும்..? ஒருவேளை அவன் தப்பு பண்ணலைன்னா என்ன பண்ணுவீங்க தீரா? நீங்க சொன்ன வார்த்தை எல்லாம் திரும்பி எடுத்துக்க முடியுமா உங்களால..? ரொம்ப தப்பு பண்ணிட்டீங்க தீரா.. தப்பு பண்ணது இந்தர் இல்லை.. நீங்க தான் தப்பு..” ஒரு நொடி நிறுத்தியவள் “தப்பு இல்ல பாவம் பண்ணி இருக்கீங்க.. அவன் உயிர் எவ்வளவு துடிச்சிருந்தா உங்க நம்பிக்கையை இழந்துட்ட அந்த வேதனையை அனுபவிக்கிறதை விட தன் உயிரே போனாலும் பரவால்லன்னு அவன் நினைச்சிருப்பான்.. உங்க மேல அவ்வளவு பாசமும் மரியாதையும் வச்சிருக்கிற புள்ள.. நீங்க பேசின வார்த்தை அவன் உயிரோட இருக்கும்போதே கொன்னு போட்டுருச்சு.. அவன் செஞ்சதுக்கு அது தான் அர்த்தம் தீரா..”
அவள் பேச பேச இந்தரை அவசரமாய் குற்றவாளி கூண்டில் நிற்க வைத்து நேரடியாக தண்டனை கொடுத்து தகாத வார்த்தைகளை பேசி தான் பெரிய தவறு இழைத்து விட்டோமோ என்று தோன்ற ஆரம்பித்தது தீரனுக்கு..
மலரழகி தீரனிடம் வந்து “மாமா.. கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. நான் அந்த நேரத்துல பாத்ரூம்ல குளிக்க போறேன்னு இந்தருக்கு எப்படி தெரியும்? நேத்து அந்த நேரத்துல குளிக்கணும்ன்கிற எண்ணமே அங்க போறதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி வரைக்கும் எனக்கு கிடையாது.. திடீர்னு உடம்பு எல்லாம் கசகசன்னு இருந்ததுன்னு குளிக்கலாம்ன்னு போனேன்.. அப்போ இந்தர் எப்படி கரெக்டா நான் குளிக்கப் போற நேரத்துக்கு ப்ளான் பண்ணி என் பாத்ரூம் ஜன்னல்ல வந்து பார்க்க முடியும்? இதை யோசிச்சு பார்த்து இருந்தாலே உங்களுக்கு இந்தர் மேல எந்த தப்பும் இல்லைன்னு புரிஞ்சிருக்கும் மாமா.
நீங்க என்னையும் இதை பத்தி கேட்கல.. இந்தரையும் அதை பத்தி கேட்கலை.. நேரா அவனுக்கு தண்டனை கொடுத்துட்டீங்களே மாமா.. பாவம் மாமா அவன்.. உங்க மேல உயிரையே வச்சிருக்கான்.. அதுக்காக சில விஷயங்கள் பண்ண போய்தான் நிச்சயமா அந்த சிக்கல்ல மாட்டியிருப்பான்.. நான் ஓரளவுக்கு அவன் எதுக்காக அங்க வந்திருப்பான்னு கெஸ் பண்ணி இருக்கேன்… ஆனா அதை அவன் வாயால சொல்லாம உங்க கிட்ட சொல்றதுக்கு நான் தயாராக இல்லை..”
மலர் சொன்னதை கேட்டவனுக்கு நிஜமாகவே தான் பெரிய தவறு எடுத்து விட்டோம் என்றும்.. தன் தம்பிக்கு பெரிய கொடுமையை செய்து விட்டோம் என்றும் தெளிவாக புரிந்தது வீரனுக்கு..
தலையில் அடித்துக் கொண்டு “அய்யோ மதி.. எவ்வளவு பெரிய கொடுமையான வார்த்தைகளை பேசி அவன் மேல பழி போட்டுட்டேன்.. அவனை ரொம்ப அசிங்கமா பேசிட்டேனே மதி… நான் எல்லாம் ஒரு அண்ணனா இருக்கவே லாயக்கில்லை.. அவனுக்கு பதிலா கடவுள் என் உயிரை எடுத்துக்கட்டும்.. நான் தான் அவசரப்பட்டு தப்பு பண்ணேன்.. என் தம்பி உயிரோட நெறைய வருஷம் இருக்கணும் மதி..”
அவள் அவள் கையை பிடித்துக் கொண்டு அதில் தலையை வைத்து குலுங்கி குலுங்கி அழ அதற்கு மேல் மதியால் அவன் மீது இருந்த கோபப் பார்வையை தொடர முடியவில்லை..
என்ன இருந்தாலும் அவள் உயிருக்கு உயிராய் விரும்புபவன் ஆயிற்றே.. அவன் குழந்தை போல் கதறி அழுவதை பார்த்துக்கொண்டு எப்படி அவளால் அமைதியாக இருக்க முடியும்..?
அதற்கு மேல் கோவத்தை இழுத்து பிடிக்க முடியாமல் அவன் முதுகில் தடவி கொடுத்து “இந்தர் வந்திடுவான்.. கவலைப்படாதீங்க.. அவன் நிறைய வருஷம் உங்க தம்பியா சந்தோஷமா இருப்பான்..” என்று ஆறுதலாய் பேசினாள்..
மலரழகி அப்போதுதான் நினைவு வந்தவளாக “அப்பா எப்படி இருக்காரு அக்கா? டாக்டர் என்ன சொன்னாங்க..?”
“அப்பாக்கு ஹார்ட் அட்டாக் மலரு.. அவருக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சு போச்சு..”
“எல்லா விஷயமும்னா?” மலரழகி பதறிப் போய் கேட்க “எல்லா விஷயமும்னா எல்லா விஷயமும் தான்.. நீ தீரனை கல்யாணம் பண்ணிக்கணும்னு நெனச்சது.. அதுக்கப்புறம் நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டது.. இது வரைக்கும் நாங்க புருஷன் பொண்டாட்டியா நடிச்சுக்கிட்டு இருக்கறது.. எல்லாம் தான்..”
“ஐயோ அக்கா அது தெரிஞ்சிருந்தா அப்பாவால தாங்கி இருக்கவே முடியாதேக்கா.. இந்த விஷயம் எல்லாம் அவருக்கு தெரியக்கூடாதுன்னு தானே நானும் இந்தரும் இவ்வளவு பாடுபட்டோம்..” அவள் பேச பேச மதியு தீரனும்ம் புருவம் சுருக்கி அவளை பார்த்தார்கள்..
“என்ன சொல்ற மலரு.. எது தெரிய கூடாதுன்னு நீயும் இந்தரும் என்ன பாடு பட்டீங்க? இப்பயாவது உண்மையை சொல்லுடி.. என்னடி நடந்துச்சு..? அந்த புள்ள குத்துயிரும் குலையுயிருமா கெடக்குது அங்க.. இதுக்கு மேல மறைக்காத.. உண்மையை சொல்லித் தொலை..” அவளை பிடித்து உலுக்கி கேட்டாள் மதி..
தீரனும் “என்ன மா மலரு சொல்ற..? இன்னும் என்ன ரகசியம் வச்சிருக்கீங்க.? எங்க கிட்ட ஏதாவது மறைக்கிறீங்களா..? ஏன்மா.. என்ன தான் பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கு நடுவுல..”
“மாமா.. எங்க ரெண்டு பேருக்கும் நடுவில ஒரு பிரச்சனையும் இல்லை.. அந்த சேகர் மறுபடியும் இந்தருக்கு ஃபோன் பண்ணான்.. நீங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா நடிக்கிறீங்கன்ற விஷயத்தை அவன் எங்களுக்கு ஏற்கனவே உங்க கல்யாணத்து அன்னைக்கே சொல்லி இருந்தான்..”
அதை கேட்டு அதிர்ந்து போனார்கள் இருவரும்.. “கல்யாணத்து அன்னிக்கேவா? நாங்க முடிவு பண்ணது அவனுக்கு எப்படி தெரியும்?”
தீரன் திகைத்துப் போய் கேட்க “மாமா.. அன்னிக்கு அந்த ஹோட்டல்ல நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் மாதிரி நடிச்சிட்டு திரும்பி வந்தீங்க இல்ல..? அந்த கார்ல ஒளிஞ்சிருந்து உங்களோடயே வந்து நீங்க பேசும்போது அத்தனையும் கேட்டுட்டான்.. கல்யாணத்து அன்னிக்கு உங்க கல்யாணம் முடிஞ்சப்புறம் எங்களை வந்து பார்த்து எல்லா விஷயத்தையும் சொல்லி உங்க ரெண்டு பேரையும் பிரிக்கிற வேலைய பார்க்க சொன்னான் எங்களை..”
தீரனாலும் மதியாலும் அவள் சொன்ன விஷயங்களை நம்பவே முடியவில்லை..
“ஆமா.. இவ்ளோ நடந்து இருக்கு.. ஏன் மலரு நீங்க ரெண்டு பேரும் வாயே தொறக்கல.. என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல..? அவனை ஒரு வழி பண்ணி இருப்பேன்..”
தீரன் பல்லை கடித்துக் கொண்டு பேச “இல்ல மாமா.. அப்போ அதுக்கு அவசியம் வரல.. நாங்க ரெண்டு பேரும் முதல்ல அவன் சொன்னதை நம்பவே இல்லை.. நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிறீங்க.. அவன் மதி அக்காவை விரும்புனதினால அவளை அடையணும்ங்கிற வெறியில இந்த மாதிரிலாம் பேசிட்டு இருக்கான்னு சொல்லி அவனை நல்லா திட்டி தான் அனுப்பிச்சு விட்டோம்.. ஆனா அவன் அதோட அடங்கிடுவான்னு பார்த்தா மறுபடியும் இந்தருக்கு நேத்து ஃபோன் பண்ணி இருந்தான்..”
“இப்ப எதுக்கு அவன் இந்தருக்கு ஃபோன் பண்ணான்..” தீரன் கேட்க “அந்த நாயி நீங்க புருஷன் பொண்டாட்டியா நடிக்கிறது பத்தி எங்க அப்பா கிட்ட சொல்லிடுவேன்னு பயமுறுத்தி ப்ளாக்மெயில் பண்ணி இருக்கான்.. ஆனா அதை எப்படி பண்ண போறான்னு சொல்லல.. அதுக்காக தான் இந்தர் நேத்து ராத்திரி 12:00 மணிக்கு என் ரூமுக்கு வந்திருக்கான்.. நீங்க அப்பவும் அவனை எந்த விஷயத்தையும் சொல்ல விடாம அவன் என் ரூமுக்கு வந்ததை பாத்து அவனை அடிச்சு மிரட்டி இருக்கீங்க..”
அவள் சொன்னதைக் கேட்டு தீரன் அப்படியே ஸ்தம்பித்து போய் இருக்க மதியழகி அவனை மேல் கண்ணால் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்..
தான் அவனை எள்ளளவும் நம்பாமல் எவ்வளவு கேவலமாக நினைத்து இருக்கிறோம் என்பது தீரனுக்கு புரிய ஒவ்வொரு முறை அவனைக் கேள்வி கேட்கும் போது அவன் எவ்வளவு துடித்திருப்பான் என்றும் புரிந்தது அவனுக்கு..
அவனைக் கேள்வி கேட்ட தன் நாவை சுட்டு பொசுக்கிக் கொள்ளலாமா என்ற எண்ணம் கூட தோன்றியது அவனுக்கு..
மலரழகி தொடர்ந்தாள்.. “நீங்க மிரட்டிட்டு போன அப்புறமும் அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியறதை எப்படியாவது தடுக்கணும்ன்னு அவன் மறுபடியும் எனக்கு கால் பண்ணான் மாமா.. அப்பதான் அவன் என்ன பண்ணப் போறான்னு தெரிஞ்சுக்கறதுக்காக நாங்க ஒரு பிளான் போட்டோம்.. நான் அவனுக்கு ஃபோன் பண்ணி நான் இன்னும் தீரா மாமாவை கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டுட்டு தான் இருக்கேன்.. அதனால நீ இந்தர் கிட்ட சொன்ன மாதிரி அவங்களை பிரிக்கிறதுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணுவியா ன்னு கேட்டேன்..”
இப்போது அதிரும் முறை மதியழகியினுடையதாகியது..
“அப்போ நேத்து நீ அந்த சேகர் கிட்ட பேசுனதெல்லாம் நடிப்பா..?”
“என்னக்கா சொல்ற? நான் பேசினதை நீ கேட்டியா?”
“ஆமான்டி.. நீ சேகரோட ஃபோன்ல பேசினதை நான் கேட்டேன். நீ இன்னும் உன் தீரா மாமாவை மறக்கலைன்னு நினைச்சுக்கிட்டு.. ஐயோ நான் என்னென்னவோ பண்ணிட்டேன்.. என்னை மன்னிச்சிடு மலரு.. சத்தியமா இப்படி ஒரு விஷயம் இதுக்கு பின்னாடி நடந்து இருக்கும்ன்னு எனக்கு தெரியாதுடி.. உன்னை பத்தி ரொம்ப தப்பா நினைச்சு தீரா கிட்டயும் அதை சொல்லி புலம்புனப்போ தான் அப்பாவும் அதைக் கேட்டு.. ஐயோ.. இவ்வளவு பெரிய விபரீதம் நடந்து போச்சே.. என்கிட்ட சொல்லிட்டு செய்யக்கூடாதா..மலரு.. இப்படி நீங்களாவே ஏதோ செய்ய போய் எல்லாரோட வாழ்க்கையையும் சிக்கல் ஆக்கிவிட்டு இருக்கீங்களே..”
அவள் அழுது புலம்ப மலரோ “அப்படின்னா.. எப்படிக்கா உன்னால இப்படி யோசிக்க முடிஞ்சுது..? நான் நீ வளர்த்த பொண்ணுக்கா.. நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட ஒருத்தரை உன்கிட்ட இருந்து பிரிச்சு நான் அடையணும்னு நினைப்பேன்னு எப்படிக்கா நீ நம்புன.. அந்த சேகர யாரோ எவனோ.. அவன் கூட ஃபோன் பண்ணதும் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா..? நீயும் அந்த இந்தர் மாதிரி என்னை மிரட்டுறதுக்கு ஃபோன் பண்ணியான்னு கேட்டான்.. அவனுக்கு கூட நான் மாமாவை உன் கிட்ட இருந்து பிரிப்பேன்னு நம்பிக்கை வரல.. எவ்வளவு தடவை என் கிட்ட நீ நிஜமாதான் சொல்றியானு கேட்டான் தெரியுமா? ஆனா நான் பொறந்ததிலிருந்து என்னை தூக்கி வளர்த்தவ அக்கா நீ.. நீ எப்படி கா அதை நம்புன.. நீ இதை சொன்னதனால தான் அப்பா வேற நெஞ்சு வலி வந்து விழுந்துட்டாரா.? அப்போ அப்பாவும் இதை நம்பி இருக்காரு.. கேக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு அக்கா.. சந்தோஷமா இருக்கு.. மனசுல அப்படியே யாரோ ஒரு அண்டா நிறைய ஐஸை எடுத்து ஊத்துன மாதிரி இருக்கு.. ரொம்ப தேங்க்ஸ் அக்கா..”
அவள் விரக்தியாய் பேசிக் கொண்டே போக மதியழகிக்கோ “இது என்ன விபரீதத்தில் போய் முடிய போகிறதோ?” என்று கலக்கமாய் இருந்தது..
“மலரு.. நீ அதுக்கு முன்னாடியுமா தீரன் கிட்ட நடந்துக்கிட்ட விதம்..”
மதியழகி இழுக்க “ஓ அப்ப அப்பலருந்தே என் மேல சந்தேகம் வந்துடுச்சா அக்கா உனக்கு.. சூப்பர்கா.. உனக்காக தான் அக்கா தீரா மாமா கிட்ட ரொம்ப க்ளோசா இருக்கிற மாதிரி நடிச்சேன்.. நீங்க ரெண்டு பேரும் நடிக்கிறீங்கன்னு எனக்கு எப்பவோ தெரிஞ்சிருச்சு.. சேர்க்க சொன்னது உண்மைதான் உங்க கல்யாணம் நடந்த அடுத்த நாளே நான் தெரிஞ்சுக்கிட்டேன்.. ரெண்டு பேருக்குள்ள ஒரு புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல இருக்க வேண்டிய அன்னியோன்னியம் எதுவுமே இல்லை.. ஆனா உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நிச்சயமா காதல் இருக்குன்றதை மட்டும் நான் புரிஞ்சுகிட்டேன்..”
அவள் சொன்னதை கேட்டு இருவரும் ஒருவரை ஒருவர் கலங்கி போய் இருந்த கண்களோடு பார்த்துக் கொண்டனர்..
“உங்க ரெண்டு பேரையும் எப்படியாவது உங்க மனசுல இருக்குற அந்த சின்ன தடையை உடைக்க வெச்சு சேர்த்து வைக்கணும்ங்கிறதுக்காக தான் அப்படி எல்லாம் நடந்துகிட்டேன்.. அப்ப கூட நீ என்னை சந்தேகப்படுவன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை அக்கா.. தீரா மாமா மேல எல்லாரை விடவும் உனக்கு தான் உரிமை அதிகம்னு நினைச்சு அதுக்காக சண்டை போடுவேன்னு தான் எதிர்பார்த்தேன்.. ஆனா நீ என்னை சந்தேகப்பட்டு இருக்க இல்ல?”
மதியழகியோ தான் செய்ததை எண்ணி கூனி குறுகிப் போனாள்..
“விடுக்கா.. இனிமே இதை பத்தி எல்லாம் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை.. இனிமே நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு சாரி சொன்னாலும் நொறுங்கிப் போய் இருக்கிற எங்க மனசு மறுபடியும் முழுசா மாறி வரப்போறதில்லை.. இப்ப என்னால புரிஞ்சுக்க முடியுது.. இந்தர் ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தான்னு.. நீ இப்ப சொன்ன விஷயம் எனக்கு முன்னாடியே தெரிஞ்சி இருந்தா நானும் அதே மாதிரி தான் உடைஞ்சு போய் இருப்பேன்.. இப்ப எனக்கு எப்படி இருக்கு தெரியுமா அக்கா? உயிர் இருந்தும் இல்லாத மாதிரி இருக்கு..” இப்படி பேசியவள் சட்டென எழுந்து போய் அவர்களிடமிருந்து சற்று தள்ளி இருந்த ஒரு கதிரையில் அமர்ந்து கொண்டாள்..
தீரனும் மதியும் தலையில் கை வைத்த படி அவர்களுக்கு பின்னே இருந்த கதிரையில் அப்படியே உயிரற்ற சிலைகளாய் அமர்ந்தனர்..
இந்தர் இருந்த அறையில் இருந்து வெளிவந்த மருத்துவர் “இந்தரோட அட்டெண்டர் யாரு..?” என்க அவர் அருகில் சூழ்ந்து நின்று இருந்தார்கள் மூவரும்..
“என்ன ஆச்சு டாக்டர்? இந்தருக்கு ஒன்னும் ஆபத்து இல்லையே..?”
படபடக்கும் குரலில் தீரன் கேட்க “ஆபத்தெல்லாம் எதுவும் இல்ல.. ஹாஸ்பிடல்க்கு சரியான நேரத்துக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க.. இல்லனா கொஞ்சம் லேட்டாகி இருந்தாலும் நிறைய பிளட் லாஸ் ஆகி இருக்கும்.. அது மட்டும் இல்லாம அவர் பிளீடிங் கண்ட்ரோல் பண்றதுக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணி இருக்காங்க.. அதனால அவர் உயிருக்கு எதுவும் ஆபத்தில்லை.. அவர் ஒரு டூ ஹவர்ஸ்ல கண் முழிச்சிருவாரு.. அதுக்கப்புறம் நீங்க போய் அவரை பார்க்கலாம்.. ஹீ இஸ் அவுட் ஆப் டேஞ்சர்.. யூ நீட் நாட்
ஒர்ரி..”
சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து போய்விட்டார்.. அவர் அப்படி சொல்லிய பிறகு தான் மூவரிடம் இருந்தும் ஒரு நிம்மதி பெருமூச்சு வெளி வந்தது..
தொடரும்..