வான்முகிலாய் வந்த தேவதையே-1

4.3
(8)

அத்தியாயம்-1

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு..

அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் க்வாட்டரு

கடல போல காதல் ஒரு சால்ட்டு வாட்டரு

அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு

என்ற காதல் பெயிலாய் போன பாடல் ஒன்று அங்கிருந்த மீன் பொறிக்கும் கடைகளில் ஏதோ ஒரு கடையில் ஓடிக்கொண்டிருக்க.. அதனை கண்களை மூடிக்கேட்டவாறே உட்கார்ந்திருந்தாள் சஷ்டி.. சஷ்டிகா.

இப்போ இவனுங்க என்ன சொல்ல வரானுங்க.. லவ் ஃபெயிலியர் வெறும் ஆம்பளைங்களுக்கு மட்டும் தான் வரும்ன்றானுங்களா.. இல்ல இந்த ஆம்பளைங்க என்னிக்கும், யாரையும் ஏமாத்தமாட்டாங்கன்றாங்களா..”யோசனையிலையே உட்கார்ந்திருந்தவளின் முகம் ஒருவித சோர்வையும், அதையும் தாண்டி ஒருவித கோவம் தெரிந்தது.

அழகான சந்தியா காலப்பொழுது. வானில் அங்காங்கு ஆரஞ்ச் பழம் தன்னுடைய தோளை பிச்சிப்போட்டது போல ஆரஞ்ச் வண்ணத்தை பூசிக்கொண்ட சூரியன் தன்னுடைய வெட்பத்தை முழுதாக மூட்டைக்கட்டிக்கொண்டு தன் இல்லத்திற்கு எடுத்து செல்லும் மாலை நேரம் அது.

அதுவும் அந்த சென்னையின் புகழ்பெற்ற மெரினா பீச்சில் சூரியன் மறைவது அவ்வளவு ரம்மியமாக தெரிந்தது. அந்த மாலை நேரத்தில் கூட்டம் அள்ளியது. பின்னே இருக்காதா அது வார இறுதி நாளாயிற்றே. குழந்தைகள் தங்கள் விடுமுறையை தன் தாய், தந்தைகளுடன் இனிமையாக கொண்டாட்டிக்கொண்டிருந்தனர்.

வார இறுதி நாள் என்பதால் அந்த மெரினா கரையில் போட்டிருக்கும் கடைகளின் தொழிலோ சும்மா பிச்சிக்கொண்டு போனது. ஐஸ்க்ரீம் கடையாக இருக்கட்டும், மீன் கடையாக இறுக்கட்டும், பானி பூரி கடையாக இருக்கட்டும் அனைத்து கடைகளிலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோதியது.

அந்த கடற்கரையில் காலையில் இல்லாத ஒரு பரப்பரப்பு மாலை அவ்வளவு பரப்பரப்பாக இருந்தது. அதற்கு பகல் வெயிலின் தாக்கம் ஒரு காரணமாக இருக்கலாம்.

அந்த மாதிரியான கடற்கரையின் ஒரு மூலையில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய வகையிலான படகிற்கு அந்த பக்கம் உட்கார்ந்தவாறே ஏதோ யோசனையில் இருந்த சஷ்டியின் கண்களோ அங்குமிங்கும் அலை பாய்ந்தது.

அவள் கண்களுக்கு அங்கு தெரியும் காட்சிகள் அனைத்தும் பொறாமையையும், ஏக்கத்தையும் தான் அதிகப்படுத்தியது. குழந்தைகளுடன் விளையாடும் தாய்மார்கள், குழந்தைகளை தூக்கி கொஞ்சும் தகப்பன்கள், மொத்த குடும்பமும் விரும்பி சாப்பிட ஆசைப்பட்ட திண்பண்டங்களை வாங்கி குவிக்கும் குடும்பஸ்தர்கள், காதலிக்கு ஆசையாக மல்லிப்பூ வாங்கித்தரும் காதலர், புது மனைவிக்கு ஒற்றை ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுத்து அதனை விளையாட்டாக, காதலாக பிடிங்கி சாப்பிடும் புது கணவர்கள்,தன் குழந்தைகளை அழகாக புகைப்படம் எடுக்கும் பெற்றோர்கள் என்று அனைத்தும் அவள் கண்கள் ஏக்கமாக தான் பார்த்தது.

அங்கிருந்த அனைத்து மக்களின் முகத்திலும் அவ்வளவு சிரிப்பு, அவ்வளவு சந்தோஷம், அவ்வளவு குதுக்கலிப்பு அனைத்தும் அவ்வளவு இருந்தது. இன்னும் எத்தனை விதமான உணர்வுகள்.. அங்கிருந்த அனைவரது சந்தோஷ முகத்தை பார்த்தும் அவளும் முறுவலிக்கதான் நினைக்கின்றாள். அடுத்த நிமிடம் தான் ஏன் அவர்களை போல ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கையை வாழவில்லை இல்லை இல்லை கிடைக்கவில்லை என்று பொறாமையும் படுகின்றாள்.

இல்ல நம்ம கண்ணு பட்டு இவங்க வாழ்க்கையும் நம்மள மாதிரி ஆகிட கூடாது..”அடுத்த நிமிடம் அதனை மாற்றியும் கொள்கின்றாள். இப்படியே அவள் எண்ணங்கள் அவளை ஆட்கொண்டது.

எப்போதாவது அவளுக்கு இதுபோல கிறுக்குத்தனமாக தோன்றினால் அவள் ஓடிவரும் இடம் கடல் தான். ஆனால் அந்த கடல் கூட இப்போது அவளுக்கு உதவியாகவோ, மனகஷ்டத்தை குறைப்பதாகவோ இல்லை. அவளுக்கும் இந்த கடலுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது அது என்னவென்றால் இந்த கடல் தான் அவளை அநாதை ஆக்கியது.

ஆம் இந்த கடல் தான் அவளின் தாய், தந்தை இருவரையும் மாய்த்து தனக்குள் இழுத்துக்கொண்டு இவளை மட்டும் கரை ஒதுக்கி, காப்பாற்றி இப்போது அநாதையாக நிற்க வைத்திருக்கின்றது. இங்கு யாராலும் மறக்க முடியாத ஒரு விடயம் என்றால் அது இரண்டாயிறத்து நாலாம் ஆண்டு வந்த கோர சம்பவமான சுனாமி தான். அந்த சுனாமி பேரலையால் தான் இன்று இவள் அநாதையாக்கப்பட்டு இருக்கின்றாள்.

ஆம் அப்போது சஷ்டிக்கு நான்கு வயது. அன்னை, தந்தையுடன் வார இறுதி நாளை கொண்டாட கடலுக்கு வந்தவளுக்கு கிடைத்ததென்னவோ அநாதை என்ற பட்டம் தான். திடீரென்று ஏற்பட்ட சுனாமி அலையில் முதலில் விளையாடிக்கொண்டிருந்த சஷ்டிதான் மாட்டிக்கொண்டாள். கரையில் உட்கார்ந்து மகள் விளையாடுவதை ஆசையாக பார்த்த பெற்றோர்கள் அவள் கடலை நோக்கி இழுக்கப்படுவதும், கடலுக்கு நடுவில் ராட்சஸ அலை ஒன்று உருவாகிவதையும் பார்த்த அவளின் தந்தையோ துரிதமாக செயல்பட்டு சஷ்டியை காப்பாற்ற அலைகளுடன் போராட.. அவருடன் சேர்ந்து சஷ்டியின் அன்னையும் தண்ணீரில் குதித்துவிட்டாள்.

தன் ஆசை மகளை அலைகளுடன் போராடி மீட்டெடுத்த சஷ்டியின் தந்தையோ அவசரமாக கரைக்கு வந்தவர் சஷ்டியை தூக்கி அங்கிருக்கும் கடல் பாதுகாப்பு காவலரிடம் நீட்டியவர் அடுத்த நிமிடம் மனைவியை காப்பாற்ற தண்ணீரில் குதிக்க.. அதற்குள் அந்த ராட்சஸ அலைகள் கரையை நோக்கி வேகமாக வந்தது. சஷ்டியின் தந்தை சஷ்டியை ஆசையாக ஒருதரம் பார்த்தவர் தன் மனைவியின் உயிரை காப்பாற்ற போராட்டத்தில் கடலினுள் இழுக்கப்பட.. அந்த காவலரோ தான் வைத்திருக்கும் ஜீப்பில் சஷ்டியை தூக்கி போட்டவர் அந்த இடத்தை விட்டு தப்பித்துவிட்டார்.

அவர் செய்ததும் ஒன்றும் தவறில்லையே.. இயற்கையின் சேதாரத்திற்கு பயந்தே அவர் ஓட.. பாவம் அப்போது நான்கு வயதான சஷ்டி அநாதையாக்கப்பட்டாள்.

அதன் பிறகு சஷ்டியின் தாய், தந்தை உடல்கள் கூட கிடைக்கவில்லை. சிறிது நாட்கள் சுனாமியில் இருந்து தப்பித்தவர்களுக்காக அரசாங்கம் செய்துக்கொடுத்த குடிசை வீட்டில் அவளை போல தாய், தந்தை இறந்த குழந்தைகளுடன் குழந்தையாக இருக்க.. அப்போது அவளை தேடி வந்திருந்தார் சஷ்டியின் அன்னையின் அண்ணன் மாதவன்.

அவரை பார்த்து அடையாளம் கண்டுக்கொண்ட அந்த சின்னஞ்சிறு மொட்டு அவருக்கு பின்னால் தன் தாய், தந்தை வருகிறார்களா என்று பார்த்து இல்லை என்றதும் கத்திக்கதற அதனை பார்த்த மாதவனுக்கு கண்களே கலங்கி போனது.

சரிடா சரிடா தங்கம் மாமா இருக்கேன்டா..”அவளை சமாதானம் செய்தவறோ அவளை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டார். என்னதான் சஷ்டிக்கு தாய், தந்தையின் இழப்பு அதிகமாக இருந்தாலும் உறுதுணையாக வாழ ஒரு ரத்தபந்தம் கிடைத்ததே என்ற அளவிற்கு வாழ்க்கை நன்றாக தான் போனது. அதுவும் சஷ்டிக்கு ஆறு வயதாகியது வரை தான்.

அதற்கு பிறகு எதுவும் நார்மலாக இல்லை சஷ்டிக்கு. அதற்கு காரணம் தன் மாமனின் மனைவி அதாவது அவளின் அத்தை கனகா தான். கனகா ஆரம்பத்தில் சஷ்டியின் மீது பாசமாக தான் இருந்தாள்.. ஆனால் போக போக சஷ்டியை பிடிக்காமல் போய்விட்டது அதற்கு காரணம் சஷ்டி அப்படியே அவள் அன்னையை போல இருப்பது என்று தனக்கு தானே காரணம் கற்பித்துக்கொண்டாள் கனகா.

கனகாவிற்கு சஷ்டியின் அன்னையை அவ்வளவாக பிடிக்காது. ஏதோ நாத்தனார் என்ற பெயரில் கம்மென்று வாயை மூடிக்கொண்டு இருக்க திடீரென்று பிடிக்காத நாத்தாரின் மகளை தான் வளர்ப்போம் என்று நினைத்தும் பார்க்கவில்லை. அதனால் கொஞ்ச கொஞ்சமாக சஷ்டியை விட்டு விலக ஆரம்பித்தாள் கனகா.

அதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது அவளின் கர்ப்பம். சஷ்டி எப்போதும் போல ஆசையாக அவளின் மடியில் உட்கார வந்தால்… ஏய் அறிவில்ல பல தடவ சொல்லிட்டேன் என் மடியில உட்காராத என் குழந்தைக்கு நல்லதில்லன்னு கேட்கமாட்டனு இருக்கியா.”என்றவாறே சிறுபிள்ளையான சஷ்டியின் முதுகில் நங்கென்று ஒரு அடியை வைக்க..

ஏற்கனவே தனக்கு பிடித்த அத்தை தன்னை திட்டுவதிலையே அரண்டு போனவள் இன்னும் தன்னை அடித்ததில் அழவே ஆரம்பித்துவிட்டாள். அதனை கேட்டு பதறி ஓடிவந்தார் மாதவன். கனகாவிற்கு எப்படியோ மாதவனுக்கு தன் மருமகள் சஷ்டி என்றால் கொள்ளை பிரியம்.. எப்போதிலிருந்து என்றால் சஷ்டி பிறந்ததில் இருந்து. ஆனால் இப்போது தாய், தந்தை இல்லாமல் போனவளை தன் உயிர் போல காத்தார் மாதவன்.

அம்மு என்னாச்சிடா ஏன் அழற..”ஓடிவந்து அவளை தூக்கிக்கொண்டவறோ சஷ்டி தன் முதுகை வருடுவதை கண்டு தன் மனைவியை குழப்பமாக பார்க்க..

கனகாவோ முன்பு போல் இருந்தால் பயந்திருப்பாளோ என்னவோ இப்போது பிள்ளையை காரணம் காட்டி.. “வயித்துல புள்ள இருக்கு அவ இஷ்டத்துக்கு வந்து வயித்துல மோதுறாங்க.. இவ இப்டியே செஞ்சா அப்புறம் புள்ளக்கி ஏதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்குங்க..”என்று பயமாக முகத்தை வைத்துக்கொண்டு அழ.. அதற்கு மாதவனால் ஒன்றுமே கூற முடியவில்லை.

என்ன இருந்தாலும் அவருக்கும் தன் பிள்ளை மேலே பாசம் இருக்கத்தானே செய்யும்.. அதனால் சஷ்டியை பக்குவமாக தூக்கி சென்றவர் அவளுக்கு பிடித்த சாக்லேட்டை வாங்கிக்கொடுத்து அவளிடம் பேச ஆரம்பித்தார்.

அம்மு அத்த வயித்துல பாப்பா இருக்குல்ல.. இப்டி வேகமாலாம் இனி அத்தக்கிட்ட ஓட கூடாது செல்லம்.. அப்புறம் பாப்பாவுக்கு வலிக்கும்டா..”பதுசாக பேசியவரை அழகான கண்களை விரித்து பார்த்தவளோ..

நா லேசாதான் மாமா அத்த மடியில உட்கார்ந்தேன் ஆனா அத்த அடிச்சிட்டா..”என்று தேம்பியவாறே கூறிய குழந்தையை புரியாமல் பார்த்த மாதவனோ அதன் பின் அவளை சமாதானம் செய்தார். அவளுக்கு பல விதமாக எடுத்துக்கூற.. அவளுக்கு புரிந்தது என்னவோ இனி அத்தை அருகில் செல்லக்கூடாது என்பது தான்.

அதன் பிறகு அதை தான் கடைப்பிடித்தாள் ஆனாலும் கனகா அமைதியாக இருக்கவில்லை. சஷ்டி அவள் அருகில் வரவில்லை என்றாலும் ஏதாவது காரணம் சொல்லி அவளை அடித்தாள், பொய்யாக மாதவனிடம் புகார் வாசித்தாள். “இங்க பாருங்க இவளால என் குழந்தைக்கு என்னமோ ஆக போகுது அது மட்டும் உறுதி.. அப்டி மட்டும் ஆனுச்சி உங்க மேலையும், இந்த குட்டிசாத்தான் மேலையும் போலீஸ் கம்ளைன்ட் கொடுக்காம ஓய மாட்டேன் நானு..”என்று ஆங்காரமாக கத்தியவளை மாதவன் வித்தியாசமாக பார்த்தார்.

அவருக்கு தெரிந்த கனகா இப்படி இல்லை.. அமைதியின் சொரூபமாக இருப்பவள் இப்படி ராட்சஸி கணக்காக கத்துவது வித்தியாசமாக இருந்தது. ஆனாலும் கனகாவை எதுவும் கூறாமல் சஷ்டியை தான் அடக்கினார் மாதவன். பிள்ளைத்தாச்சியை போய் என்ன செய்வது என்ற எண்ணம் தான் அவருக்கு.. ஆனால் அதன் பின்பும் சஷ்டி பற்றிய புகார் அதிகம் தான் ஆகியது.

அதனை எல்லை மீறும் விதமாக ஒருநாள் தோட்டத்தில் கீழே விழப்போன கனகாவோ கடைசி நேரம் விழாமல் தப்பிக்க அருகில் விளையாடிக்கொண்டிருந்த சஷ்டியின் தோளை பிடிக்க சஷ்டியோ கனகா பாரம் தாங்காமல் கீழே விழ.. அங்கோ பெரிய கல் கிடக்க அது சஷ்டியின் நெற்றியை பதம் பார்த்திருந்தது.

ஆஆ அம்மா…”சஷ்டி கதறலாக அழ..

கனகாவிற்கோ அதனை பார்த்து பயம் அல்லுவிட்டது.. “அய்யோ…”பதறியவள் உடனே தன் கணவனுக்கு அழைத்து கூற.. அவரோ பதறி அடித்துக்கொண்டு வந்தவருக்கு காட்சியளித்ததோ கனகாவும் தலையில் ரத்தத்துடன் நிற்பது தான்..

அய்யோ என்னாச்சி..”ஓடிவந்து தள்ளாடிய கனகாவை தாங்கிக்கொண்டவறோ அங்கு அழுதவாறே படுத்திருந்த சஷ்டியை பார்த்து பயந்தே போனார்.

எல்லாத்துக்கும் காரணம் இவ தாங்க.. குறுக்க வராத குறுக்க வராதன்னு ஆயிரம்தரம் சொன்னேன் கேட்டாளா.. இவளால இன்னிக்கி நானும் உங்க பிள்ளையும் பரலோகம் போயிருப்போம்.. ம்ம் இது சரிவராதுங்க இந்த சனியன் இருக்க வீட்ல நான் இருக்கமாட்டேங்க.. நான் போறேன் எங்க அம்மா வீட்டுக்கு இத கூடவே வச்சிட்டு என்னால சாக முடியாது.. இவள ஓழிச்சிட்டு வந்து என்ன கூப்டுங்க..”அப்படியே தவறை தூக்கி சஷ்டியின் மீது போட்ட கனகாவோ இதுதான் சஷ்டியை வீட்டை விட்டு துரத்த சரியான நேரம் என்று திட்டம் போட.. அது நன்றாகவே வேலை செய்தது. அதன் விளைவு அடுத்த நாளே சஷ்டி ஹாஸ்டலில் சேர்க்கப்பட்டாள்.

அதனை நினைத்தவாறே உட்கார்ந்திருந்த சஷ்டிக்கோ இப்போது அது எல்லாம் பிரச்சனை இல்லை. கனகா விடயம் அரந்த பழசாகி போனது. இப்போதிருப்பது என்னவோ அவளின் ஆருயிர் நண்பன், தற்போதைய ஆசைக்காதலன் அவளை நீ எனக்கு வேண்டாம் என்று துரத்தியதே இந்த உலகம் வெறுத்த நிலைக்கு காரணம்.

பேசாம செத்துடுவோமா..”எண்ணிக்கொண்டே இருந்தவளுக்கு முன்பே அந்த ஆழமான கடலில் தன் வாழ்வை முடித்துக்கொள்ள இறங்கிருந்தான் இன்னொருவன்..

(தேவதை..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!