வான்முகிலாய் வந்த தேவதையே-2

5
(5)

அத்தியாயம்-2

ஐ லவ் யூ சஷ்டிமா.. உன்னை உயிரா காதலிக்கிறேன்டா.. நீ இல்லனா நான் உயிர் இல்லாத உடல் மாதிரிடா.. நூறு வருஷம் நாம இதே காதலோட வாழனும்னு ஆசையா இருக்கு.. என் காதல ஒத்துக்கிறியா சஷ்டிமா..”மென்மையான குரலில் அதே நேரம் அழகான புன்னகையுடன் சஷ்டியின் கையினை பிடித்து அதில் அழகான வைர மோதிரத்தை போட்டவாறே கேட்டான் துஷ்யந்த்.

அதில் சஷ்டியின் முகத்திலோ சந்தோஷத்தையும் தாண்டி ஒருவித குழப்பம் நிரம்பி வழிந்தது. அவளுக்கு துஷ்யந்தை பிடிக்குமா என்று கேட்டாள் பிடிக்கும் தான்.. ஆனால் காதலா என்று கேட்டால் அதற்கு அவளுக்கு யோசிக்க நேரம் தேவைப்பட்டது.

துஷ்..”தயக்கமாக அவனை அழைத்தாள் பெண்ணவள்.

துஷ்யந்த் அழகான புன்னகையுடன் ம்ம் பேபி சொல்லு..”மென்னகையுடன் கேட்டவன் அவளின் கையை இதமாக வருடியவாறே மோதிரத்தையும் ஆசையாக தொட்டவாறே கேட்டவனை கண்டு பெண்ணவள் தான் திருத்திருத்தாள். துஷ்யந்தை கிட்டதட்ட நான்கு வருடங்களாக தான் சஷ்டிக்கு தெரியும்..

மாதவனோ சரி குழந்தை பிறந்ததும் திரும்பவும் சஷ்டியை இங்கையே அழைத்து வந்துவிடுவோம் என்ற எண்ணத்தில் தான் இந்து ஆசிரமத்துடன் சேர்ந்த பள்ளியில் சேர்த்துவிட்டவருக்கு அதற்கு மேல் சஷ்டியை தன்னுடன் வைத்து வளர்க்க முடியாமலே போனது.

அதற்கு மேல் கனகாவும் விடவில்லை.. “எனக்கு ஆபத்து உண்டு பண்ணுனா போல உங்க பையனுக்கும் செஞ்சான என்ன செய்றது. பேசாம அவள அங்கையே விடுங்க ஆசிரமத்துலையே வளரட்டும்..”கனகா அதட்டலாக கூற. மாதவனோ அன்றிலிருந்து கனகாவை சந்தேகக்கண் கொண்டு பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

இல்ல அவ என் மருமக அவ இங்க தான் இருக்கனும்..”பலவாறாக அவர் எடுத்துக்கூற ஆனால் கனகாவோ அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை.. குழந்தை பிறந்த அன்று ஆசையாக ஹாஸ்டலில் இருந்து வந்து பார்த்தாள் சஷ்டி. அப்போதும் கனகா அவளை தொடவே விடவில்லை.

கைக்கால வச்சிட்டு சும்மா இல்லாம புள்ளைய தொடாத.. அவனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சி உன்ன உண்டு இல்லன்னு ஆக்கிடுவேன்..”என்று அதட்டலை போட்ட தன் அத்தையை பாவமாக பார்த்தாள் அந்த மழலை.

இப்படி எல்லாம் அவ்வளவு அவமானத்தை கடந்து ஓடியவளுக்கு கொஞ்சமே கொஞ்சம் இதமாக இருந்ததோ துஷ்யந்த் தான்.. ஆனால் அதுவும் நிலைக்காமல் போய் தான் அவள் இந்நிலையில் இருக்கின்றாள்.

யூ ஆர் வெரி ஓல்ட் டைப் சஷ்டி.. நீ இன்னும் அந்த அறந்த பழைய காலத்திலேயே இருக்கேனு நினைக்கிறேன்.. மான் நியூ வேர்ல்டுக்கு வந்து சேரு.. இந்த காலத்துல ஃப்ரெண்ட்ஷிப்னு ஒன்னு வருதுனா.. அந்த பிரண்ட்ஷிப் அடுத்த நிமிஷம் காதலா மாறுறதும், அந்த காதல் அடுத்த நிமிஷமே பிரேக் அப் ஆகுறதும் எவ்ளோ வழக்கமாகி இருக்குன்னு உனக்கு தெரியுமா.. ம்ச் இன்னும் அப்டேட் ஆகாம இருக்குறது உன் தப்பு.. அத விட்டுட்டு நீ என்னன்னா இன்னும் அதே லவ்வ பிடிச்சிக்கிட்டு..”சாதாரணமாக தோளை குலுக்கியவனோ.. “ம்ச் என்ன அதுக்குள்ள என்னை பிரேக்கப் பண்ணிட்டியா அது இதுன்னு கண்ணுல தண்ணி வச்சுக்கிட்டு நிக்கிற இதெல்லாம் பாக்க அப்புறம் உன்ன பாக்க அப்படியே பாட்டி காலத்து பொண்ணு மாதிரியே இருக்கு தெரியுமா.. இத்தனைக்கும் நீ ஒரு ஃபேமஸ் மாடல் வேற..” என்று நக்கலாக சிரித்தவாறு பேசிக் கொண்டிருந்தான் துஷ்யந்த்.

அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் சஷ்டிக்கு அப்படியே பூமியில் புதைய வேண்டும் என்பது போல இருந்தது.. கிட்டத்தட்ட ஒரு நான்கு வருடங்களுக்கு முன்பு இதே துஷ்யந்த் இந்த வார்த்தையை கூறி இருப்பானா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லுவாள்.. அப்போது அவனின் நிலைமையே வேறு.. பாதி வெளுத்து போன ஒரு கட்டம் போட்ட சட்டையும், அதற்கேற்ற வெளுத்து போன கருப்பு பேன்டையும் போட்டுக்கொண்டு தன் ஆபீஸிற்கு வெளியில் நின்று கொண்டிருந்த துஷ்யந்த் தான் இப்போது சஷ்டியின் கண் முன் வந்து தெரிந்தான்.

சஷ்டி கிட்டத்தட்ட நான்கு வயதிலிருந்து ஹாஸ்டலில் தான் வளர்ந்து கொண்டிருந்தாள்.. அதற்கு காரணம் என்னதான் கனகவாக இருந்தாலும் மாதவனின் நிலையை நினைத்து தான் சஷ்டியும் ஹாஸ்டலிலேயே தங்கி விட்டாள்.. மாதவன் எவ்வளவோ சஷ்டியை தன் உடன் வருமாறு அழைத்துக் கொண்டிருக்க ஆனால் சஷ்டியோ அதனை அடியுடன் மறுத்துவிட்டாள்.. “ஏன் சஷ்டிம்மா நான் கூப்பிட்டா வர மாட்ற ஏன் இப்படி அடம் பிடிக்கிற.. உனக்கு மாமா மேல கோவமா..” என்று சிறுவயதிலும் தன்னை பார்க்கில் உட்கார வைத்து பேசிக்கொண்டிருக்கும் மாதவனை இப்போதும் அவள் நினைப்பதுண்டு.

நோ மாமா.. இல்ல மாமா நான் உங்க மேல எல்லாம் கோபப்படவே இல்ல எனக்கு ஹாஸ்டல் ரொம்ப புடிச்சிருக்கு தெரியுமா.. இங்க எனக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க.. இங்கயே நான் ஹாப்பியா தான் இருக்கேன்.. எனக்கு உங்க வீட்டுக்கு எல்லாம் வர வேண்டாம் மாமா..”சஷ்டி கூறியபோது அவளின் குரலில் அத்தனை வேதனையையும், கலக்கமும் இருந்தது. இச்சிறு வயதிலேயே அவள் முகத்தில் இவ்வளவு கலக்கமா என்று மாதவனே அச்சமயம் ஆச்சரியமாகவும், வேதனையாகவும் தான் அவளை பார்த்தார்.

சஷ்டிமா உனக்கு மாமா மேல கோவமா..”மாதவன் குற்றவுணர்வில் தவிப்புடன் கேட்க.

நோ மாமா எனக்கு எந்த கோவமும் உங்க மேல இல்ல.. நான் இங்க ரொம்ப நல்லாவே இருக்கேன்..” என்று அழகான புன்னகை சிந்தியவாறு கூறியவளுக்கும் மனதில் கஷ்டமாகத்தான் இருந்தது.. பின்ன வார விடுமுறை,அரையாண்டு தேர்வு ,முழு ஆண்டு தேர்வு என்று அனைத்து விடுமுறையின் போதும் தன்னுடைய மாமா தன்னை கஷ்டப்பட்டு கெஞ்சி கூத்தாடி அவருடைய வீட்டிற்கு கூப்பிட்டு போவதுண்டு.. அப்போதெல்லாம் கனகாவுடன் சில பிரச்சனைகள் தான் வரக்கூடும்.

பாருங்க இவள புள்ளைக்கு வச்சிருந்த சாப்பாட எடுத்து சாப்பிட்டுட்டா, ஐயோ இவளுக்கு சரியான சளி நம்ம பையனுக்கும் நல்ல சளிய ஒட்டி விட்டுட்டாங்க, இவளை ஏங்க ஹாஸ்டல்ல இருந்து கூட்டிட்டு வந்தீங்க இவளால எப்போதும் எனக்கு சங்கடம்தான், ஐயோ எதுத்த வீட்டு மாமியோட பொண்ண இவ கீழ புடிச்சு தள்ளி விட்டுட்டா.. அந்த மாமி என்னை எப்படி எல்லாம் பேசினாங்க தெரியுமா.. இவளால எனக்கு எப்ப பாத்தாலும் அசிங்கம் தான்..”எப்போது பார்த்தாலும் கனகா புகார் புகார் புகார் என்று தான்  மாதவனிடம் கூறிக் கொண்டே இருந்தாள்.

மாதவனுக்கும் ஆரம்பத்தில் ஒன்றுமே புரியாமல் இருந்தவருக்கு போகப் போக கனகாவின் நடவடிக்கையில் சிறிது சிறிதாக சந்தேகம் வந்து முளைத்து விட்டது.. அதனை சோதிக்க பார்க்க எல்லாம் மாதவன் தயாராக இல்லை.. “உனக்கு என்ன பிரச்சனை கனகா எதுக்காக சஷ்டியை இப்படி நம்ம வீட்டுக்கே வர விடாம பண்ணிக்கிட்டு இருக்க..”ஒருநாள் அவளை உட்கார வைத்து கேட்டவரை கடுப்பாக பார்த்த கனகாவோ திருத்திருத்தவள் எனக்கு என்னங்க பிரச்சனை அவதான் சும்மா இருக்க மாட்றா.. எப்ப பாத்தாலும் யார்கிட்டயாவது வம்பு பண்ணிக்கிட்டே இருக்காங்க.. என்ன என்ன பண்ண சொல்றீங்க.. நானும் எவ்வளவோ அவளுக்கு சொல்லித்தான் பார்க்கிறேன் ஆனாலும் அவ திருந்த போற மாதிரி தெரியலையே.. பேசாம அவளை ஹாஸ்டல்லையே போட்டு வைங்க வீட்டுக்கு கூட விட வேணாம்னு சொல்லிடுங்க ஹாஸ்டல்ல..” என்று அடியோடு அவளை வரவே விடாத அளவிற்கு கனகா ஏகப்பட்ட திட்டத்தை போட்டு வைத்திருந்தாள்..

அதனை எல்லாம் மாதவன் கண்டு கொண்டவன் ஒரு நாள் வெகுண்டு எழுந்து விட்டான்.. “என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல என் தங்கச்சியோட பொண்ணு டி அவ.. பாவம் அப்பா அம்மா இல்லாதவ அவள இந்த வீட்டுக்குள்ள விடக்கூட மாட்டேன்னு சொல்ற உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்..” என்று கனகாவின் கன்னத்தில் ஓங்கி அறைய.. அது கனகாவிற்கு பயங்கர அதிர்வாகி போனது..

அப்படியே இமைக்காமல் மாதவனை பார்த்து நின்றவள் தன் முகத்தை சட்டென்று மாற்றிக்கொண்டு. “நான் எப்பங்க அப்படி சொன்னேன் அவளை எப்ப நான் வீட்டுக்குள்ள விடக்கூடாதுன்னு சொன்னேன்..” என்று நீலிக்கண்ணீர்  வடிக்க..

பின்ன நீ  நடந்துக்கிறத பாத்தா உன் மேல எனக்கு சந்தேகம் தான் வருது.. சின்ன பிஞ்சு குழந்தைடி அவ அவளுக்கு இருக்கிற ஒரே உறவு நான் மட்டும் தான்.. எனக்கு அப்புறம் நீ.. ஆனா நீ என்ன பண்ற அவளை வீட்டுக்குள்ள கூட விட மாட்டேங்குற.. குழந்தையோட சட்டை எடுத்துட்டா, குழந்தையோட சாப்பாடு சாப்பிட்டுட்டா.. இப்டி  எவ்வளவு புகாரடி வாசிப்ப.” என்று அந்த வீடே அதிரும் அளவிற்கு கர்ஜித்தவனோ

இங்க பாரு கனகா உன் மனசுல நல்லா ஒன்னு பதிய வச்சுக்கோ இன்னிக்கு என்ன தான் நீ என் மருமகளை என்கிட்ட நெருங்க விடலைனாலும் இந்த வீட்டுக்கு வர விடலனாலும் எங்களோட உறவு என்னிக்கும் மாறாது.. நான் அவளுக்கு தாய் மாமா தான்.. அவ வளர்ந்து பெரிய மனுசி ஆனதும் அவளுக்கு செய்யப்போற முதல் முற உறவு நான் மட்டும்தான்.. அவ வளர்ந்து நாளைக்கு கல்யாணமே பண்ணிக்க போறதா இருந்தாலும் அவளுக்கு மொத சீர் செய்ய போறது இந்த தாய் மாமா தான்.. அதுல எந்த மாற்றமும் இல்லை.. ஏன் அதை நீ தடுக்கவே முடியாது..”மாதவன் உறுதியாக கூறியவனோ கனகாவை எரித்த பார்வையுடன் அங்கிருந்து சென்று விட்டான்.

கனகாவிற்கும் தன்னுடைய குட்டு வெளிப்பட்டு விட்டது என்பதை நினைத்து கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தது.. ஆனாலும் எப்படி இதெல்லாம் தன்னுடைய கணவனை செய்யவிடாமல் தடுப்பது என்பதனை பற்றி அவள் யோசிக்க ஆரம்பிக்க.. ஆனால் அதனை எல்லாம் அவளால் தடுக்கவே முடியவில்லை.. ஏனென்றால் மாதவன் அத்தனை ஆக்ரோஷமாக இருந்தான்.

அதேபோல சஷ்டிக்கு பத்து வயது இருக்கும்போது ஹாஸ்டலில் இருந்து அவள் பெரிய மனுஷியாகிவிட்டால் என்ற செய்தி வர அதனைக் கேட்ட மாதவன் ஆனந்தத்துடன் தன்னுடைய மருமகளை பார்க்க ஓடினார். ஆனால் கனகாவிற்கோ அங்கு செல்ல சுத்தமாக விருப்பமே இல்லை.. ஏனோ தானோ என்று கிளம்பி சென்றவளுக்கு மாமனும், மருமகளும் கட்டிபிடித்து கொஞ்சிக்கொண்டு இருப்பதை பார்க்க எரிமலை தனலாக கொதித்துக் கொண்டிருந்தது..

அவளுக்கு இதனைக்கும் ஒரு மகன் வேறு பிறந்திருக்க அவனோ அக்கா போன்ற சஷ்டியின் மீது உயிராகவே இருந்தான்.. ஆம் அவன் பெயர் தீரன். அவனுக்கும் சஷ்டிக்கும் கிட்டத்தட்ட நான்கு வயது தான் வித்தியாசம்.. ஆனால் இருவருக்குள்ளவும் எந்தவித பாகுபாடும் இல்லை பார்த்ததில்லை.. ஒருவருக்கொருவர் தினமும் போனில் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. அதுவும் இப்போதுவரை.

அதன் பிறகு சஷ்டி ஸ்கூலை முடித்தவள் அவளுக்கு மிகவும் பிடித்த மாடலிங் எடுத்து படிக்க ஆரம்பித்தாள். “இதுக்கெல்லாம் காசு எங்கிருந்து வந்துச்சு நீங்க குடுக்க போறீங்களா..”கனகா கணவன் மாதவனை பார்த்து ஆத்திரமாக கத்திக் கொண்டிருக்க..

மாதவனும் அவளை முறைத்துப் பார்த்தவர் நான் ஏண்டி கொடுக்கிறேன்.. என் தங்கச்சியோட நகையும் என் மச்சானோட இடமுமே அவ்வளவு கிடக்கு.. அதை வச்சு அவளை படிக்க வைக்க போறேன்.. அப்படியே என் காச கொடுத்தாலும் அதைக் கேட்க வேண்டிய அதிகாரமும், உரிமையையும் உனக்கு கிடையாது..”அக்னி பார்வையால் கனகாவை எடுத்தெறிந்து பேச.. அது இன்னும் கனகாவின் கோபத்திற்கு தூபத்தை போட்டது.

தீரனுமே தன்னுடைய அன்னையிடம் பலவாறு கேட்டிருக்கிறான். “ஏம்மா சஷ்டிய உனக்கு பிடிக்கவே இல்லை..”அசராமல் கொண்டிருக்க..

அதற்கு கனகாவும் டேய் அவள இந்த வீட்ல அண்டவுட்டா நம்ப ரெண்டு பேரையும் அப்பா துரத்தி விட்டுருவாருடா கண்ணா…” என்று இல்லாதது பொல்லாததையும் கூற.. அந்த வயதில் அவனுக்கு என்ன புரிந்ததோ சஷ்டி நல்ல குணங்களை கண்ணார பார்த்தவன் கண்டிப்பாக சஷ்டி அப்படியெல்லாம் செய்யவே மாட்டாள் என்று தான் அவனும் உணர்ந்துக்கொண்டான்.

ம்ச் அவ என்னோட சஷ்டிமா.. அவ என்னைக்கும் என்ன அப்படி பண்ணவே மாட்டா.. முதல நீ அவகிட்ட இப்டி பேசுறத நிறுத்து.. அவளும் இந்த வீட்டு பொண்ணுதான்..” என்று உறுதியாக கூறியவனை கண்ட கனகாவிற்கு அலுத்து போனது..

முதலில் கணவன் இப்போது மகன் என்று இருவருமே சஷ்டியின் பக்கம் செல்ல கனகாவோ தனிமையாக்கப்பட்டாள். தீரனுக்குப் பின்பு கனகாவிற்கு எந்த குழந்தையும் பிறக்கவில்லை.. அதனால் கனகாவின் பேச்சு வார்த்தை கொஞ்சம் கொஞ்சம் நாளாக நாளாக மெளனமாக மாறிவிட்டது.

ஆனால் சஷ்டியோ ஒரு தடவை பட்ட அடி திரும்பவும் படாமல் இருப்பதற்கு இப்போது வரை கனகாவிடம் நெருங்குவதே இல்லை.. வீட்டிற்கெல்லாம் செல்லுவாள் மாமாவை பார்ப்பாள், பேசுவாள், தீரனுடன் விளையாடுவாள், அவனுடன் சண்டை பிடிப்பாள் இப்படியே நாட்களை கடத்தி விட்டு அடுத்த நாளே தான் தங்கி இருக்கும் சிறிய அப்பார்ட்மெண்டிற்க்கு ஓடி வந்து விடுவாள்.

சஷ்டி மாடலிங் படித்து முடித்துவிட்டு அதிலேயே கொஞ்சம் பெரிய கோர்ஸ் ஒன்றினை படித்து முடித்தவள்.. மிகப்பெரிய மாடலிங் கம்பெனியில் மாடலாக இருக்கின்றாள். அத்துடன் இப்போது சென்னையில் ஒரு பொட்டிக் வைத்து டிரெஸ்ஸும் டிசைனிங் செய்து கொண்டிருக்கிறாள்.. டிசைனிங் டிப்ளமோ படித்து முடித்து இருக்கிறாள்.

இப்படி அனைத்தையும் நன்றாக செய்தவள் செய்த மிகப்பெரிய தவறு துஷ்யந்த்தை ஆளாக்கிவிட்டது தான்.. ஆம் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல் தன்னுடைய எதிர்காலத்தை நினைத்து பயந்து கொண்டு இருந்த போட்டோகிராபர் துஷ்யந்தை ஏதோ ஒரு போட்டோவை கிளிக் செய்து அவனை மாடலாக்கிவிட்டது தான் இப்போது அவளுடைய லவ் பெயிலியருக்கு ஒரே காரணம்..

சும்மாவா சொன்னார்கள் காசு வந்தாலோ,தன்னுடைய நிலை மாறினாலோ மனிதனின் நிலையே மாறிவிடும் அல்லவா.. துஷ்யந்த்தும் அப்படிதான் மாறிவிட்டான்.. இரண்டு வருடங்களுக்கு முன்பு சஷ்டிக்கு தன்னுடைய காதலை கூறி ப்ரப்போஸ் செய்தவன் இன்று வசதி, வாய்ப்பு, ஃபேம் அனைத்தும் கிடைத்ததும் அவளை தூக்கி எறிந்து விட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்றிருப்பது தான் இப்போது அவளின் நிலைக்கு காரணம்..

அதனால் எல்லாம் அவள் மடிந்து விட தயாராக இல்லை.. சாகும் எண்ணம் தோன்றிய அடுத்த நிமிடமே..“ம்ச் நான் எதுக்கு சாகணும்.. என்ன அவன நம்பியா இந்த உலகத்துல நான் வந்து குதிச்சேன்.. அதெல்லாம் முடியாது நான் சாக முடியாது..” உறுதியாக நினைத்தவாறு அந்த ஆழ்கடலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களுக்கு சட்டென்று ஒரு காட்சி படர.. அதில் கண்களை ஆழ விரித்தவளோ… “நோ..” என்றவாறே கடலினை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டாள்.

ஹேய்நோ அந்த பக்கம் போகாதீங்க.. நோ எந்த தப்பான முடிவு எடுத்துடாதீங்க..”சஷ்டி அந்த நபரின் பின்னாலே ஓட.. அந்த நபரால் தான் அவளது வாழ்க்கையே மாறப்போகிறது என்று அவளுக்கு பாவம் தெரியாமல் போனது தான் விதியோ.

(தேவதை..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!