சஷ்டி தனக்கு முன்னால் பம்மிக்கொண்டு நிற்பவனையே வெறிகொண்டு முறைத்துக் கொண்டிருந்தவளுக்கு தன் நிலையை நினைத்து கடுப்பாக இருந்தது… யாருக்கோ உதவி செய்யப் போய் இப்போது அவள் மாட்டிக்கொண்டது தான் இந்த கடுப்பிற்கு காரணம்.. இப்போது சஷ்டியின் நிலைமை வடிவேலு ஒரு காமெடியில் சொல்வது போல “பேசாம நம்மளும் பெட்டே கட்டி இருக்கலாமோ..” என்ற நிலைமை தான்..
எங்கோ வேலியில் போன ஓணாவை தூக்கி வேட்டியில் விட்டுவிட்ட கதையாக தான் இப்போது சஷ்டியின் நிலை இருந்தது.. அவ்வளவு கடுப்பாக நின்று கொண்டிருந்தாள் அதுவும் காவல் நிலையத்திற்குள்.. ஆம் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு அந்த மெரினா கடற்கரையில் உட்கார்ந்து தனது வாழ்க்கையை பற்றி நினைத்து கொண்டே இருந்தவளின் கண்களுக்கு கடலில் ஒரு உருவமா வேகமாக இறங்கி செல்வதைப் பார்த்து பகீர் என்று ஆனது…
முதலில் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாதவள் “கடல்ல குளிக்க போறாங்க போல..”என்று ஆசுவாசமாக நினைத்தவாறே உட்கார்ந்தவளுக்கு அந்த உருவத்தின் வேகம் கண்டு யோசனையாக புருவம் சுருங்கிற்று.. “குளிக்க இவ்ளோ வேகமா..”என்று புரியாமல் யோசித்தவளுக்கு அது குளிக்க அல்ல குதிக்க என்பது அதன் பிறகு தான் புரிந்தது. அவளும் சிறிது நேரத்திற்கு முன்பு அந்த யோசனையில் இருந்தவள் தானே..
“அய்யய்யோ ஏன் இவ்வளவு வேகமா போறாங்க..” என்று யோசித்தவாறு அந்த கடலில் இறங்கி ஓடும் உருவத்தையே பார்த்துக் கொண்டிருக்க.. அந்த உருவமும் சடார் சடார் என்று வேகமாக அலைகளை தள்ளிவிட்டு கடலில் இறங்கிக் கொண்டிருந்தது..
“என்ன உள்ள போற வேகத்தை பார்த்தா ஏதோ கடல்ல குளிக்க போற மாதிரி தெரியலையே கடல்லயே குதிக்க போற மாதிரி இல்ல தெரியுது..” என்று சஷ்டி அந்த உருவத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அந்த உருவம் செய்யப் போகும் விபரீதம் நன்றாகவே பிரிந்து போனது. “அய்யய்யோ..” என்று கத்தியவாறே எழுந்தவள் வேக வேகமாக கடலை நோக்கி ஓட ஆரம்பித்தாள்..
“அய்யோ ஏங்க கொஞ்சம் நில்லுங்க.. எதுக்காக இவ்வளவு வேகமா கடலுக்குள்ள இறங்கறீங்க.. நில்லுங்க கொஞ்சம் நில்லுங்க..”வேகமாக கத்தியவாறு சஷ்டி அலைகளை தள்ளிவிட்டு அந்த உருவத்தை பின் தொடர்ந்து செல்ல.. அந்த உருவமும் எதனையும் காதில் வாங்குவதாக இல்லை.. சடார் சடார் என்று அலைகளை தள்ளிக் கொண்டு கடலில் குதிக்க ஏதுவாக வேகமாக சென்று கொண்டிருக்க.. சஷ்டிக்கு ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்தது..
“அய்யோ என்னங்க சாகுறது மட்டுமே வழியில்லங்க.. கொஞ்சம் நில்லுங்க வாழ்றதுக்கு எவ்வளவோ வழி இருக்கு..” என்று பின்னால் ஓடியவாறே கத்தியவளுக்கு ஒன்று நன்றாக புரிந்து போனது.. அந்த உருவம் தன்னுடைய பேச்சைக் கேட்பதாக இல்லை என்று நன்றாகவே புரிந்து போனது.. எப்படியாவது அந்த மனிதனை காப்பாத்தியே ஆகணும் என்ற நிலையிலேயே சஷ்டியும் வேகவேகமாக கடலில் இறங்கி ஓடினாள்..
அவளுக்கு ஏன் யாருக்காகவோ இதனை நாம் செய்கிறோம் என்று மட்டும் தோன்றவில்லை.. ஏதோ ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் அவளும் வேகமாக இறங்கி ஓடினாள்.. ஆனால் இதே கடலில் தான் தனக்கு முன்னால் தந்தை,தாய் இறப்பதே கண்ணார கண்டவளுக்கு தன் கண்முன்னே இன்னொரு உயிர் போகப் போவதை நினைத்து உடலே நடுங்கிப் போனது..
“ஏங்க கொஞ்சம் நான் பேசுறத கேட்கிறீர்களா..” என்று பேசியவாறே சஷ்டி ஓட.. ஆனால் அந்த உருவம் எதனையும் கேட்பதாக இல்லை.. அப்போது தான் அவள் அந்த உருவத்தின் முகத்தை பார்க்க முயன்றாள்.. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழ ஆரம்பித்திருந்தது. கடற்கரையில் இருந்த கூட்டமும் குறைய ஆரம்பித்திருந்தது..
அவளுக்கு அந்த உருவம் யார் என்று நன்றாக தெரிந்து போனது.. சிறிது நேரத்திற்கு முன்பாக தனது வாழ்க்கையில் நடந்ததை பற்றி நினைத்துக் வருந்தியவளுக்கு இந்த பக்கம் ஒரே அழுகை சத்தமாக கேட்டுக் கொண்டிருந்தது.. அப்போதே சஷ்டிக்கு ஒன்றும் புரியவில்லை.. “யாருடா இது நம்மள விட ரொம்ப ஜோகத்துல இருக்குறது..”என்று தான் தோன்றியது..
“நான் ஏன் உயிரோட இருக்கணும்.. என்னோட காதல் இப்படி தோத்துப்போச்சு நான் உண்மையா தானே காதலிச்சேன்.. ஏன் என் காதல் தோத்துப் போச்சு.. உலகத்துல யாருக்குமே என்ன புடிக்கல எல்லாருக்குமே நான் வேண்டாதவனா தான் இருக்கேன்.. அம்மாக்கு புடிக்கல அதுனால தான் விட்டுட்டு போய்ட்டாங்க.. அப்பாக்கு பிடிக்கல, என் சித்திக்கு பிடிக்கல இப்போ என்னோட லவ்வருக்குமே என்ன புடிக்கல.. என் லவ் என்ன அவ்ளோ வீக்கா… ஒன்னு, ரெண்டு வருஷத்து லவ்வா இது.. கிட்டதட்ட பத்து வருஷமா அவள நினைச்சு நினைச்சு உருகிட்டு இருந்தேனே.. இப்படி என்னை ஒரேடியா வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு போயிட்டாளே..” என்று அழுகையில் தேம்பியவாறு பேசியது அப்பட்டமாக சஷ்டியின் காதில் விழுந்தது.. அதுவும் ஒரு ஆண்மகனின் குரல்.. அதுதான் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.. “என்னடா இது ஏதோ குழந்தை ஐஸ்கிரீம்க்கு அழுவுற மாதிரி தோணுது..” என்று நினைத்தவாறே இருந்த சஷ்டிக்கு காது மட்டும் அந்த பக்கம் தான் இருந்தது..
“ம்ச் சும்மா இரண்டு வருஷ லவ்வு.. நம்மளாலையே அந்த துஷ் செஞ்சத தாங்க முடில.. இது பத்து வருஷ லவ்வாமே.. அப்போ கஷ்டம் தான்..”என்று யாரோ தெரியாதவனுக்காக வருத்தப்பட்டாள் சஷ்டி..
“அவளை எப்படி எல்லாம் பாத்துக்கணும் நெனச்சேன் கல்யாணம் பண்ணி ராணி மாதிரி வச்சுக்கணும் நினைச்சேனே.. அவளுக்காக எவ்வளவு கிப்ட்ஸ் எல்லாம் வாங்கி கொடுத்தேன் எல்லாமே வேஸ்ட்டா போச்சு எல்லாத்தையும் தூக்கி மூஞ்சில எறிஞ்சிட்டாளே.. இனி நீ எனக்கு வேணாம்னு சொல்லிட்டாளே..”என்று மறுபடியும் அழுகையில் குலுங்கியவாறே குரல் கேட்க..
சஷ்டிக்கோ என்னடா இது கொடுமை என்று தான் தோன்றியது.. ஆனாலும் இப்போதைக்கு தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததை பற்றி வேதனைப்படுவதா அல்லது யாரோ தெரியாத மற்றவருக்காக வருந்துவதா என்று நினைத்தவளோ சட்டென்று தலையை குலுக்கியவாறு “முதல்ல உன்னோட விஷயத்தை பத்தி கவலைப்படுடி சஷ்டி.. உன் விஷயத்த பத்தி கவலைப்படவே இங்க யாரும் கிடையாது.. நீ மத்தவங்களோட விஷயத்துல நோஸ் இன் பண்ணாத..” என்று அவளது மனமே காரி துப்ப.. அதனை சட்டென்று துடைத்து கொண்டுவளோ தன்னுடைய நிலையை நினைத்து அதாவது தன்னுடைய தோற்றுப் போன காதலை நினைத்து சோகமாக உட்கார்ந்து இருந்தவளுக்கு.. அப்போதுதான் பக்கத்தில் இருந்து கடைசியாக..
“இனிமே நான் யாருக்காக உயிரோடு இருக்கணும்.. நான் யாருக்காகவும் உயிரோடு இருக்க விரும்பல.. நான் சாகப்போறேன்.. நான் சாகப் போறேன்..” என்று அதனையே பத்து முறை திரும்ப திரும்ப புலம்பியவாறே இருந்தவனை கண்டு அலுத்துக் கொண்டவள்…
“ம்ச் இப்படி எல்லாம் புலம்பறவங்க கண்டிப்பா சாக மாட்டாங்க..” என்று நினைத்தது தான் தவறாகிப் போனது. ஆனால் அடுத்த பத்தாவது நிமிடம் அந்த உருவம் எழுந்து கடலுக்குள் செல்ல முதலில் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்தவளால் அதற்கு மேல் கண்டு கொள்ளாமல் இருக்க முடியவில்லை.. அதன் விளைவு இப்போது அந்த உருவத்தின் பின்னாலே ஓடிக்கொண்டிருக்கிறாள்.
“ஏங்க கொஞ்சம் நில்லுங்களேன்… எதுக்காக இப்படி சாகணும்னு முடிவு எடுக்குறீங்க.. வாழ்ந்து பார்க்கலாங்க கொஞ்சம் நில்லுங்க..” என்று அந்த உருவத்தின் பின்னாலே ஓடிப்போக.. அதை அந்த உருவமும் காதில் கொள்ளவே இல்லை.. அவன்பாட்டிற்கு அந்த ஆழ்கடல் நோக்கி சென்று கொண்டிருந்தான். ஆம் அந்த உருவம் அவன் தான்.. ஒரு ஆண்மகன்..
சஷ்டி ஏதோ ஒரு வேகம் அவளுள் தோன்ற வேகவேகமாக அந்த உருவத்தின் பக்கத்தில் சென்று… அவனின் தோளை பிடித்து இழுக்க அவனோ.. அந்த உருவமோ சடார் என்று இவளை திரும்பி பார்த்தது.
அவனை பார்த்தவளுக்கு அவ்வளவு அதிர்ச்சி.. நல்ல வாட்டசாட்டமான ஒரு ஆண் தான் தற்கொலைக்கு முயன்று இருப்பான் என்று அவள் நினைக்க கூட இல்லை ஏனென்றால் இதற்கு முன்பு அவள் கேட்ட குரல் கூட ஏதோ குழந்தையை ஒத்த குரல் போல தான் இருந்தது.
“என்னது இவ்ளோ நேரம் பேசினது. ச்சி ச்சி இல்ல புலம்புனது ஒரு பையனா…” என்று அவனையே அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
அவனும் அவளை மிரட்சியுடன் பார்த்தவன்.. “என்னங்க நானே சாகறதுக்கு பயந்துகிட்டு நடுங்கிகிட்டே கடல்ல இறங்குறேன்.. நீங்க என்னன்னா வந்து என் சோல்டர இவ்வளவு அழுத்தமா புடிச்சு இழுக்கறீங்க…” என்று தன்னுடைய வலித்த சோல்டரை வருடியவாறே… “அப்பா வலிக்கிது..”முணகினான் பாவமாக..
அதில் சஷ்டிக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் முழித்தவளோ.. சட்டென்று நினைவிற்கு வந்தவள் “இப்ப எதுக்குங்க நீங்க சாகப் போறீங்க..” என்று ஆத்திரமாக கேட்டவளை பாவமான முகத்துடன் பார்த்தவனோ..
“ம்ச் அதெல்லாம் நான் உங்க கிட்ட சொல்ல முடியாதுங்க.. நான் சாகணும் அவ்ளோதான்..”என்று மறுபடியும் கடலை நோக்கி செல்ல.
சஷ்டி அவனின் பேச்சில் பதறியவளோ.. “இன்னிக்கி நான் செத்தே ஆவேன்ற மூட்ல இருக்கான் போலவே…”என்று நினைத்தவளோ அவளின் கையை தட்டிவிட்டு கடலை நோக்கி செல்பவனை பார்த்து பதறியவள்.. “ஐயோ நான் சொல்றத கொஞ்சம் கேளுங்களேன்..” என்று சஷ்டி அவனது கையை பிடித்து இழுத்தாள்..
“ஆ ஐயோ என் கையை விடுங்க.. அப்புறம் நான் தெரியாம கடலுக்குள்ள விழுந்துடுவேன்..” என்று தன்னுடைய கையை அவளிடம் இருந்து பிடுங்க முயல.. அவன் சொன்னதை கேட்டு பெண்ணவள் தான் முழிக்க வேண்டியதாகி போனது.
“என்னது கடல்ல விழுந்துடுவேனா… அய்யோ.. இவன் தற்கொலை செய்ய வந்ததையே மறந்துட்டான் போலவே டா..”என்று தலையில் அடித்துக்கொண்டவளோ அவனது கையை மட்டும் விடுவதாக இல்லை..
“இங்க பாருங்க தற்கொலை பண்றது தப்பு.. போலீஸுக்கு மட்டும் தெரிஞ்சிது உங்கள தூக்கி உள்ள போட்டுடுவாங்க… நான் சொல்றது கொஞ்சம் பொருமையா கேளுங்க.. வாழ்க்கையில எவ்வளவோ கஷ்டங்கள் வரதாங்க செய்யும் ஆனா அதுக்காக போய் சாகணும்னு நினைக்கிறது தப்பு தானே.. நம்மள நம்பி யாரெல்லாம் இருக்காங்க உங்க அம்மா, அப்பா, உங்க கூட பிறந்த தங்கச்சி இப்படி ஏகப்பட்ட பேர் இருப்பாங்க இல்ல..” என்று கூற.
“அட எனக்கெல்லாம் அம்மா இல்லைங்க அப்பா மட்டும்தான்.. அதுவும் அவர பார்த்தா எனக்கு ரொம்ப பயம் தெரியுமா..” என்று அவன் சின்ன பிள்ளைத்தனமாக கூறினான்..
அதில் அவனை வித்தியாசமாக பார்த்த பெண்ணாவோ “சரி ஓகேங்க நம்ப அங்க போய் உட்கார்ந்து பேசலாம் வாங்க..” என்று அவனை கரையை நோக்கி இழுக்க..
“ம்ம்ம் அதெல்லாம் முடியாது நான் இன்னைக்கு செத்தே ஆவேன்..” என்று ஷாப்பிங் போயே ஆவேன் என்பது போல கூறியவனை கண்டு தலையில் அடித்துக் கொள்ள தான் தோன்றியது.
ஆனால் இப்போது அதற்கெல்லாம் நேரமில்லை எப்படியாவது அவனை பேசி கரைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று யோசித்தவள்.. “சரி ஓகே எனக்கு கொஞ்சம் உங்க கிட்ட பேசனும்.. பேசுனதுக்கு அப்புறம் நீங்க என்ன முடிவு வேணா எடுங்க.. ஆனா கொஞ்சம் எனக்கு பேச டைம் குடுங்க..” என்றவாறே அவனை எப்படியேனும் கூப்பிட்டு கரை ஏறினாள் போதும் என்று முடிவு செய்தாள்..
“நோங்க.. முடியாதுங்க நான் இன்னைக்கு தற்கொலை பண்ணியே ஆவேன்…” என்று கூறியதையே திரும்ப திரும்ப கூறியவனை நினைத்து கொலை செய்யத்தான் தோன்றியது அவளுக்கு.. “ஐயோ அவனே தற்கொலை பண்ணிக்க போறான் நீ ஏண்டி அவனை கொலை பண்ண போற..” என்று தன்னுடைய மனம் போகும் திசையை எண்ணி கடுப்பாகியவள்..
“உங்களுக்கு என்ன பிரச்சனையா இருந்தாலும் சரிங்க நான் அதை தீர்த்து வைக்கிறேன் ப்ளீஸ் என்னோட வாங்களேன்..” என்று கூறியவாறே அவனை இழுக்க முயன்றாள்.. அவனோ இல்லை என்று மறுப்பாக தலையாட்டியவனோ “இப்போ நான் சூசைட் செய்தே ஆவேன்..” என்ற நிலையில் தான் நின்று கொண்டிருந்தான்…
“டேய் முட்டாள்.. அதான் நான் சொல்றேன்லடா பேசுவோம்னு.. ஏதோ தீஞ்சி போன ரெக்கார்ட்டு மாதிரி அதே சொல்லிட்டு இருக்க.. மடசாம்பிராணி.. பைத்தியம்..”என்று கண்டப்படி அவனை திட்ட.. அதில் அவன் தான் திருத்திருவென விழித்தவாறே நின்றான்.
சஷ்டிக்கு கோவம் பொங்கியது.. பின்னே அவனையும் ஒரு மனிதனாக நினைத்து சாகுவதை வீடியோ எடுக்காமல் துணிந்து கடலில் இறங்கி அவனை காக்க நின்றால் சொன்னதையே சொல்லும் அவனை எண்ணி கடுப்பு தான் ஆனது அவளுக்கு…
அவனோ முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு நின்றவன்.. “உங்களுக்கும் என்ன பிடிக்கலையா.. திட்டுறீங்க பாருங்க.. மத்தவங்கள மாதிரி உங்களுக்கும் என்னை பிடிக்காம போச்சி…”என்று உதட்டை பிதுக்கி குழந்தையாக புலம்பியவனை கண்டு நொந்தே போனாள்.
அதில் டர்ஜ் ஆனவனோ… “என்னது பிரானா ஃபிஸா…”என்று நினைத்தவனோ தன்னை சுற்றியும் அந்த மீனை தேட ஆரம்பித்துவிட்டான் மிரண்டவாறே..
“அய்யோ ஏங்க இந்த சதை எல்லாம் பிச்சி திங்குமே அந்த ஃபிஸ்ஸாங்க..”சந்தேகத்தை உறுதி செய்துக்கொள்ள கேட்க.. அவளோ.. “ஐ மாட்டிக்கிட்டான்.. இப்டியே பேசி வெளில கூட்டிட்டு போய்ட வேண்டியது தான்..”என்று திட்டம் போட்டவள்..
“ஹான் அதே தாங்க.. ஒன்னு ஒன்னும் இந்தா தண்டில இருக்கும்…”என்று கையின் முழு அளவை காட்ட.. அவன் கண்களிலோ அவ்வளவு பயம் தாண்டவமாடியது..
“ம்ம் பயம்னா வாங்க நாம கரைக்கு போய்டலாம்.. சீக்கரம்…“அவனை சமாதானம் செய்தவாறே கரையை நோக்கி இழுக்க.. முதலில் அவள் பேச்சிக்கு கட்டுப்பட்டவன் போல சரி என்று தலையாட்டியவனோ பின்னே என்ன தோன்றியதோ…
“ஹான் முடியாது முடியாது.. நான் சாகத்தான் போறேன்..”என்று பழைய பட நடிகை போல அதே வசனத்தை பேசினான்..
அவளுக்கோ அவனை இப்போதே கழுத்தை நெரித்து கொள்ள தோன்றியது.. “அய்யோ ப்ளீஸ் நான் சொல்றது கொஞ்சம் கேளுங்க..” என்றவளுக்கு அதற்கு மேல் அவனிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை.. இப்படியே இருவரும் கடல் அலையில் போராடிக் கொண்டிருக்க.. அந்நேரம் இரண்டு காவலர்கள் அவர்களை நோக்கி ஓடி வந்து இருவரையும் கையும் களவுமாக பிடித்துக் கொண்டனர்..
“அட ஜோடிஸ்டா.. என்ன லவ் ஃபெயிலியரா ரெண்டு பேரும் தற்கொலை பண்ணிக்கறதுக்காக வந்து கடல்ல நிக்கிறீங்களா..” என்று இருவரையும் இழுத்துக் கொண்டு செல்ல… அதனை கேட்ட சஷ்டிக்கும் ஒன்றுமே புரியவில்லை.. “இது என்னடாப்பா.. புது பிரச்சனை…” என்று தான் நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு இழுக்கப்பட்டு செல்லும்போதும் அந்த அம்மாஞ்சியை முறைக்காமல் இல்லை..