மறுநாள் காலை உறங்கி கொண்டு இருந்த வெண்ணிலா போன் அடித்தது.. அதில் உறக்கம் கலைய புரண்டு படுத்தாள்… திரும்ப திரும்ப விடாமல் போன் அடித்து கொண்டே இருக்க, “சே யாரது காலங்காத்தால ஒரு தடவை போன் எடுக்கலைன்னா விடமா நொய் நொய்னுட்டு” என்று சலித்தபடியே கண்ணை திறக்கமால் கை நீட்டி போனை எடுத்து அட்டன் செய்து ஹலோ என்க, எதிர்முனையில் இருந்தவர்கள் சொன்ன சேதியில் அடித்து பிடித்து எழுந்தாள்…
“ஏய் இப்ப மட்டும் நீ நேர்ல இருந்திருந்தா உன்னை சாவடிச்சிருப்பேன் பைத்தியம் பைத்தியம் நைட்டு ஏதாவது தண்ணிகிண்ணி அடிச்சியா ஏன் இப்புடி ஊளறிட்டு இருக்க” என்று எதிர்முனையில் இருந்த தன் தோழியை திட்டி கொண்டே தொலைக்காட்சியை உயிர்ப்பித்து செய்தி சேனலை போட அதில் கூறிய தலைப்பு செய்தியை கேட்டவளின் கையில் இருந்த மொபைல் நழுவி கீழே விழுந்து உடைந்தது…
அந்த பெரிய வராண்டாவில் உள்ள சேரில் கண் மூடி நெற்றியை வலது கரத்தில் தாங்கியபடி அமர்ந்து இருந்தான் தேவா.. அவன் நினைவு முழுவதும் வெண்ணிலாவை சுற்றியே இருந்தது… தேவா தள்ளி விட்டதில் பின்னந்தலையில் பலமாக அடிபட்டதில் அந்த நொடியே ஜீவா உயிர் பிரிந்தது…
செக்யூரிட்டி மூலம் விஷயம் அறிந்ததும் ஜீவாவை தடுக்க வேண்டும் என்று மட்டும் தான் நினைத்தான்… இதை தேவா சற்றும் எதிர்பார்க்கவில்லை…
மருத்துவனாய் ஒரு உயிரை காப்பாற்ற வேண்டிய தன்னாலே ஒரு உயிர் போனது அதுவும் தன் நண்பனின் இறப்பு நடந்தது எண்ணி மனம் வேதனை கொண்டது… ஜீவா வேண்டுமானால் அனைவரிடமும் பொய்யாக நட்பு பாராட்டி இருக்கலாம்.
ஆனால் தேவா சூர்யா, கார்த்தி போன்று தானே ஜீவா, திவேஷ் இருவரையும் எண்ணி உண்மையான அன்பு அவர்கள் மேலும் வைத்திருந்தான்… இப்போது மருத்துவனாய், நண்பனாய் தான் தோற்று போனதாக கருதினான்.. ஜீவா இறப்பு தேவா திட்டமிட்டு செய்யவில்லை தான்.. ஆனால் நடந்த தவறுக்கு தண்டனை அனுபவிக்க அவன் தயாராக இருந்தான்.. மகேஸ்வரனிடம் காவல் துறைக்கு தகவல் சொல்ல சொல்லி விட்டு அமர்ந்து இருக்கின்றான்..
விடிந்தால் திருமணத்திற்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளன… எவ்வளவு ஆசையாக எதிர்நோக்கி காத்து இருந்தான். கடைசியில் இப்படி ஆகி விட்டது.. வெண்ணிலாவை அவளின் பிரிவை நினைக்கையிலே மனம் இன்னும் பாரமானது… அவளுக்கு இது எல்லாம் தெரிந்ததும் தன்னை எண்ணி நிறைய அழுவாள். நிறைய கவலை கொள்வாள்… அதை எண்ணும் போது இன்னும் கவலையாக இருந்தது…
ஆனாலும் அவளை சூர்யாவும் தன் குடும்பத்தினரும் நன்றாக பார்த்து கொள்வர். தான் சிறைக்கு செல்வது தந்தைக்கும் தாய்க்கும் கவலையை அளிக்கும் அவர்கள் வேதனைப்படுவர்.. ஆனாலும் இந்த கடினமான சுழலை கடந்து வர தன் குடும்பமும் நட்பும் காதலியும் தனக்கு துணையாக ஆறுதலாக இருப்பார்கள் என்று நம்பினான்…
மகேஸ்வரன் தனது அறையில் இருந்தார்… அவர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளி வரவில்லை… இந்த மருத்துவமனை இப்போது இவ்வளவு வளர்ந்திருக்கிறது. மக்களிடையே நல்ல பெயர் எடுத்து இருக்கிறது என்றால் அதற்கு அவரின் தாத்தா அப்பா இரவு பகல் பாராமல் எவ்வளவு கடின உழைப்பை கொடுத்து உருவாக்கினார்கள்.. இதுவரை சிறு தவறு கூட நடக்காமல் நேர்மையாக உண்மையாக நடத்தி வந்து இருக்கிறார்கள்… அப்படி கண்ணும் கருத்துமாய் கோவில் போல நடத்தி வந்த மருத்துவமனையில் ஜீவா இவ்வளவு அந்நியாயம் செய்து இருக்கின்றானே, அதை பற்றி தெரிந்து கொள்ளமால் இருந்த தன்னுடைய மடத்தனத்தை நொந்து கொண்டார்.
ஒன்றல்ல இரண்டல்ல நான்கு அப்பாவி உயிர்கள் இதுவரை ஜீவாவால் பறி போய் இருக்கிறது.. இப்போது தன் கண்ணா கண்டுபிடிக்காமால் இருந்திருந்தால் இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்…தன் கண்ணாவை எப்படி இதிலிருந்து வெளி கொண்டு வர வேண்டும் எப்புடி என குழப்பத்துடன் அமர்ந்து இருக்க..
அப்போது திவேஷ் அவரின் அருகில் வந்தான்… ஜீவா இறந்தது அவனுக்கும் பயங்கர வருத்தம் தான்.. அது ஒரு புறம் இருந்தாலும் வெண்ணிலா தேவா திருமணம் நிற்க போவதை நினைத்து பயங்கர கூத்தாட்டம் போட்டது மனது… இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு வெண்ணிலா முழுவதும் தேவாவை வெறுக்கும் அளவு எதையாவது செய்ய வேண்டும் என்று எண்ணி அதை நடைமுறை படுத்தவே மகேஸ்வரனிடம் பேச வந்து உள்ளான்..
மனிதன் ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு பலவீனம் திவேஷிற்கு வெண்ணிலா என்றால் மகேஸ்வரனுக்கு ஆரோக்கியம் மருத்துவமனை…
தன் அருகே வந்த திவேஷை மகேஸ்வரன் முறைத்தார்…
“சார் எனக்கு எதுவுமே தெரியாது சார்.. நான் எந்த தப்பும் செய்யலை, எனக்கே இப்ப தேவா கால் பண்ணி சொன்ன அப்றம் தான் சார் தெரியும்.. ஜீவாவை தேவா கொன்னது தப்பே இல்ல சார்.. தேவா மட்டும் இந்த நல்ல காரியத்தை செய்யலைன்னா, நானே அந்த ஜீவாவை கொன்னு இருப்பேன் சார்… எவ்வளவு பெரிய பாவத்தை ரொம்ப அசாலாட்டா பண்ணி இருக்கான் படுபாவி”…
“நாலு உயிர் அவனால் போய் இருக்குது… இந்த விஷயம் வெளிய ஜனங்களுக்கு மட்டும் தெரிஞ்சா இத்தனை வருஷமா ஹாஸ்பிடலுக்கு இருந்த நல்ல பேர் மொத்தமும் காணாமா போயிடும்.. இனி ஒருத்தர் நம்ம ஹாஸ்பிடல் பக்கம் வர மாட்டாங்க… அது மட்டும் இல்ல அரசாங்கமே ஹாஸ்பிட்டலை இழுத்து மூடி சீல் வைக்கிற நிலைமைக்கு கொண்டு வந்துட்டானே” என்று பொய்யாக கவலை படுவது போல் நடிக்க,
“ஏன் ஏன் எதுக்கு ஹாஸ்பிட்டல்ல க்ளோஸ் பண்ணுவாங்க… ஏன் இப்படி சொல்ற?”
“இல்ல சார் இன்னும் கொஞ்ச நேரத்தில் போலீஸ் இங்க வருவாங்க… தேவாவை கைது பண்ணுவாங்க… ஜீவா எப்புடி இறந்தான் விசாரிப்பாங்க… அப்ப ஜீவா செஞ்ச தப்பு எல்லாம் வெளிய வரும்… அவன் ஆர்கன் திருடி வித்தது.. அதனால் நாலு உயிர் போனது எல்லாம் வெளிய வரும்… ஆனா இந்த நியூஸ் வெளிய போகும் போது டாக்டர் ஜீவா இதை எல்லாம் செஞ்சான் அப்புடிங்கிறத விட ஆரோக்கியம் மருத்துவமனையில் ஆர்கன் திருட்டு அப்புடின்னு தானே சார் வெளிய வரும்”..
“ஆரோக்கியம் ஆஸ்பத்திரியில் ஆர்கன் திருடறாங்களாமா, இனி அங்க போனா நம்ம கிட்டினியும் திருடிறுவாங்க அப்புடி தானே சார் ஜனங்க பேசுவாங்க… அப்புறம் இவ்வளோ பெரிய தப்பு ஹாஸாபிட்டலுக்குள்ள நடந்து இருக்கு இத்தனை வருஷமா இதில்ல நிர்வாகத்திற்காக எந்த ஒரு சம்பந்தமும் இல்லன்னு சொன்னா சின்ன புள்ளை கூட நம்பாது சார்… உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்லை சார் ஆர்கன் திருட்டு எவ்வளவு பெரிய குற்றம்.. ஸ்டேட் மட்டும் இல்லை சார், சென்ட்ரல் கவர்மென்ட் வரைக்கும் இந்த கேஸை கவனிப்பாங்க.. சி.பி.ஐ விசாரணை வரை போகும் கடைசி ஹாஸ்பிடலை இழுத்து மூடி சீல் வைப்பாங்க” என்று மூச்சு கூட விடாமல் மகேஸ்வரனை குழப்ப அது சரியாக வேலை செய்தது…
இதுவரை மகேஸ்வரன் இதுபற்றி சிந்திக்கவில்லை… இப்போது யோசிக்க ஆரம்பித்தார்… திவேஷ் கூறுவது தான் நடக்க நிறைய வாய்ப்பு இருப்பது போல் தோன்றியது… நடந்த எந்த தவறுக்கும் தனக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் தொடர்பு இல்லை… ஆனால் வெளியே இதை யார் நம்புவார்கள்…
ஹாஸ்பிட்டல் பெயருக்கு களங்கம் வருமோ, அரசாங்கம் மருத்துவமனையை மூடி விடுவார்களோ தன் கையை விட்டு மருத்துவமனை போய் விடுமோ என்று ஏதேதோ யோசனை எழுந்தது.. இது எல்லாம் நடக்க கூடாது… இந்த மருத்துவமனை தான் அவரின் உயிர்….இதை எவ்வாறு காப்பாற்றுவது என்று அவருக்கு எவ்வளவு சிந்தித்தும் புரியவில்லை..
அதையும் திவேஷிடமே கேட்டார்…
இந்த சந்தர்பத்திற்காகவே இவ்வளவு நாள் காத்திருந்த திவேஷ் தேவா மீது காரணமே இல்லாமல் வளர்த்து வைத்திருந்த வன்மத்தை பழிதீர்க்க திவேஷ் தன் மொத்த விஷத்தையும் தேவா மீது கக்கினான்…
“இல்ல இல்ல இல்ல இந்த ஐடியா வேண்டாம் நீ சொல்றது மாதிரி செஞ்சா தேவாவிற்கு தான் கெட்ட பேர் வரும்.. அவன் வாழ்க்கை என்னாகிறது நான் ஒத்துக்க மாட்டேன்” என்று மகேஸ்வரன் மறுக்க,
“அப்ப சரி எனக்கு என்ன வந்தது… எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல சார்… இந்த ஹாஸ்பிட்டல்ல இல்லன்னா நான் வேற ஹாஸ்பிட்டல்ல வேலை செஞ்சிட்டு போறேன்… நஷ்டம் உங்களுக்கு தான் எனக்கு இல்ல” என்று கூறி கிளம்ப போக,
மகேஸ்வரன் மருத்துவமனையா அல்ல சிறு வயதில் இருந்து தான் தூக்கி வளர்த்த தேவாவா இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய இக்கட்டானா சூழ்நிலைக்கு தள்ளப்பட, இறுதியில் அவர் மருத்துவமனையையே தேர்வு செய்தார்…
அடுத்த நொடி தியாவை மருத்துவமனையில் இருந்து அவசர அவசரமாக மருத்துவமனையிலிருந்து வெளியேற்றி வேறு இடத்தில் வைக்கப்பட்டாள்…
போலீஸ் வந்ததும் தேவா இரவு பணியில் இருந்த பெண் டாக்டரிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் அதை தடுக்க ஜீவா வந்த போது தள்ளி விட்டதில் தலையில் காயம் ஏற்பட்டு இறந்ததாகவும் கதையவே மாற்றினர்… அதற்கு சாட்சி ஜீவாவிற்கு உதவியாக இருந்த இரண்டு நர்ஸ்கள் டாக்டர் வர்ஷா, செக்யூரிட்டி… அவனுக்கு இது பயங்கர அதிர்ச்சி…
“மாமா என்ன நடக்குது” என்று அவரிடம் கோவமாக வினவ அவரால் தேவாவை நேராக பார்க்க முடியவில்லை… அவர் தான் உயிரற்ற கட்டிடத்தின் பெயரை காப்பாற்ற கெட்டவனான ஜீவாவை நல்லவனாகவும், நல்லவனான தேவாவை கெட்டவனாகவும் மற்றவர்களுக்கு காட்ட துணிந்து விட்டாரே,
காவல் அதிகாரியிடம் தேவா நடந்த உண்மை அனைத்தையும் கூற அதை அவர்கள் ஏற்கவில்லை.. ஏனெனில் மகேஸ்வரனும் திவேஷிம் ஜீவா செய்த தவறுக்கான ஆதாரங்கள் எதையும் விட்டு வைக்காமால் அதை மாற்றி விட்டனர்… போலீஸாரால் தேவா கைது செய்யப்பட்டான்… செய்தி காட்டு தீயாய் பரவியது…
ஆரோக்கியம் மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர் தேவேந்திரன் கைது.. உடன் பணியாற்றிய பெண் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு பாலியல் தொல்லை.. தடுக்க வந்த மற்றொரு டாக்டர் ஜீவாவை தள்ளி விட்டு கொலை என்று செய்தி காட்டு தீயாய் பரவியது…
அன்றைய தலைப்பு செய்தியே முழுவதும் தேவா தான்… சமூக வலைதளங்கள் முழுவதும் தேவாவை இவன் எல்லாம் ஒரு டாக்டரா, இவனை எல்லாம் கொல்லனும் அப்புடி இப்புடி என்று கமெண்ட் டில் வறுத்து எடுத்தனர்…
அந்த செய்தியை பார்த்த வெண்ணிலா, சூர்யா, தேவா குடும்பத்தினர் அனைவருக்கும் பயங்கர அதிர்ச்சி… யாராலும் எதையும் நம்ப முடியவில்லை… தேவா தந்தையால் ஒரு துளிக்கூட இதை நம்ப முடியவில்லை… ஆனால் தேவா மீது தான் தவறு என்று ஆதாரத்தை காட்டியது மகேஸ்வரனே,
அவருக்கும் தேவாவுக்குமான உறவு அனைவரும் அறிந்ததே அதனால் நம்பாமல் இருக்க முடியவில்லை… தொடர்ந்து மகேஸ்வரனும் திவேஷிம் பொய்யான ஆதாரத்தை காட்டி, முன்ன இருந்த தேவா தப்பு பண்ணிட்டு தான் இருந்தான் வேதா, நிறைய கம்பளைண்ட் காலேஜ் டைம்ல கூட, உன்கிட்ட விஷயம் வராம நான் தான் பார்த்துக்கிட்டேன்.. வயசு கோளாறு தப்பு பண்றான்னு கல்யாணம் பண்ணூ வச்சா திருந்துவான்னு நினைச்சேன்டா, ஆனா கண்ணா அப்புடி செய்வான்னு நினைக்கவே இல்லடா என நம்பும்படி மகேஸ்வரன் கதையை திரிக்க அனைவரும் தேவா தப்பு அசிங்கம் என்றே முடிவே செய்து விட்டனர் அவனின் குடும்பத்தினர் தேவாவின் தாயை தவிர,
தேவா நம்பிய குடும்பம் காதலி அவனை கை விட்டாலும், அவனின் உண்மையான நட்பு சூர்யா அவனை ஏமாற்றவில்லை… தன் நண்பனை பற்றி இந்த மகேஸ்வரன் என்ன மேல் இருக்கும் பரமேஸ்வரனே கீழிறிங்கி வந்து சொன்னாலும் நம்ப மாட்டேன் என்று தேவாவை முழுதாக நம்பினான்… இதில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று தேவா மீது முழு நம்பிக்கை வைத்து எந்த தவறும் இல்லை என்று நிருபித்து வெளி எடுக்க நிறைய பாடுபட்டான்…
ஆனால் பொய்யை திரும்ப திரும்ப கூறி உண்மையை ஊமையாக்கி விட்டனர் மகேஸ்வரனும் திவேஷிம்… தேவாவிற்கு எதிராக சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்ட அவனுக்கு திட்டமிடப்பட்ட கொலை அல்ல விபத்து என்பதால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது…
வெண்ணிலாவும் பயங்கர குழப்பமான நிலையில் இருந்தாள்.. தேவா சிறைக்கு சென்றது அவனை பற்றி மற்றவர்கள் தவறாக பேசுவது, அவனை சமூக ஊடகங்களில் திட்டுவது, வெளியே சென்றால் இந்த மாதிரி ஒருத்தனையா நீ காதலிச்ச என்று அவளையும் கேவலமாக பார்ப்பது இந்த காரணங்கள் அவள் மனதில் வரிசை கட்டி முன் நிற்க, தேவாவும் அவன் காட்டிய காதல் அன்பு அனைத்தும் மெல்ல மெல்ல பின்னோக்கி சென்றது… திவேஷ் இந்த நிலையில் இருக்கும் வெண்ணிலாவுக்கு ஆறுதல் கூறுகின்றேன் என்று தன் வசமாக்கி விட்டான்…
அதை அறிந்த சூர்யா வெண்ணிலாவிடம் “நீ பண்றது ரொம்ப பெரிய தப்பு… தேவா எந்த தப்பும் செய்யலை ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கான்… தயவு செஞ்சு வெண்ணிலா நீயும் அவன் முதுகில் குத்தாத அவன் உடைஞ்சு போயிடுவான்… அவனுக்கு ஆறுதலா நீ தான் இருக்கும் ப்ளீஸ்டி உன்னை கெஞ்சி கேட்கிறேன்” என தங்கையிடம் கெஞ்ச,
“மாமா தப்பு செஞ்சாரோ இல்லையோ ஆனா இப்ப இந்த ஊர் உலகத்திற்கு முன்னாடி அவர் ஒரு கொலைகாரன் பொம்… பொம்பளை பொறுக்கி… இந்த பேர் அவருக்கு எப்பவும் மாற போறது கிடையாது… அவரை நான் எப்புடி கல்யாணம் பண்ணிக்க முடியும்… அப்புடி கல்யாணம் பண்ண கொலைக்காரனோட பொண்டாட்டின்னு என்னை சொல்வாங்க.. எல்லாரும் என்னை கேவலமா பார்ப்பாங்க… எனக்கு அவர் வேண்டாம்… என்னால அப்புடி அசிங்கப்பட்டு எல்லாம் காலத்திற்கும் வாழ முடியாது.. இது என்னோட வாழ்க்கை அதை எப்புடி வாழனும் நான் தான் முடிவு பண்ணணும்… நான் திவேஷை கல்யாணம் பண்ணிக்க போறேன்” என்று உறுதியாக வெண்ணிலா கூறினாள்…
மூன்று ஆண்டை சிறையில் கடினப் பட்டு தள்ளிய தேவா வெளியே வந்தான்… ஆனால் அதன் பிறகே தோன்றியது… சிறையிலே இருந்திருக்காலாமோ என்று, இந்த ஊர் உலகம் அவனை பற்றி என்ன நினைத்தாலும் கவலை இல்லை… ஆனால் அவன் தந்தை உடன் பிறந்தவர்கள் அவனை நம்பவில்லையே, அனைவரும் அவனை வெறுத்தனர்… அவன் கூறுவதை கேட்க தயாராக இல்லை… தேவாவும் தன்னை நம்பாத யாருக்கும் தன்னை நல்லவனாக நிருபிக்க தயாராக இல்லை… ஆமா நான் தப்பு தான்… தப்பானவான் தான் என்று கூறி அனைவரையும் ஒதுக்கினான்…
தனியாக வீடு எடுத்து தங்கினான்… துரோகம், ஏமாற்றம்,வலி, அவமானம் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் அனைத்தும் வாழ்க்கையின் மீது வெறுப்பை உண்டாக்கியது… மனம் மிகவும் வலித்தது… அனைத்தையும் விட அவனை வாட்டி வதைத்தது வெண்ணிலாவின் நினைவு… காதலிக்கும் காலத்தில் பொக்கிஷமாய் மனதில் சேமித்த நினைவுகள் மொத்தமும் இப்போது அவனன கொல்லாமல் கொன்றது… அவளை எத்தனை நாள் தன் மனைவியாக எண்ணி கனவு கண்டு இருப்பான்… இப்பொழுது அந்த கனவு கலைந்து அவள் வேறு ஒருவன் மனைவியாக பார்க்கும் பொழுது இதயத்தை துண்டு துண்டாக கீறியது போன்று அப்படி ஒரு வலி… இந்த வலியை தாங்க முடியவில்லை அவனால், இதிலிருந்து எல்லாம் தப்பிக்க மருத்துவனாய் எத்தனையோ பேரை மதுப்பழக்கத்திலிருந்து மீட்டு எடுத்தவன் மதுவை துணையாக நாடினான்… அதுவும் அவனுக்கு ஆறுதல் தராமல் போக மாதுவை நாடினான்…
தேவா கைது ஆன இரண்டு நாட்களுக்கு பிறகு இரவு நேரத்தில் தியாவை ஊருக்கு ஒத்துக்குபுறமான இப்போது புழக்கத்தில் இல்லாத ஆள் அரவமற்ற இரயில்வே நிலைய ஃப்ளாட் பாரத்தில் போட்டு விட்டனர்…
மறுநாள் அந்த வழியாக சென்ற ஒன்னு இரண்டு பேர் பார்த்து போலீஸ்க்கு தகவல் கொடுக்க, இரயில்வே போலீஸ் வந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து விட்டு விசாரிக்க. யார் கொண்டு வந்து இங்கு போட்டனர் என்பது அவர்களுக்கு தெரியவில்லை…
அது புழக்கத்தில் இல்லாத சிறிய அளவிலான இரெயில் நிலையம் தண்டவாளத்தில் கூட முட்கள் புல்லுகள் தான் முளைத்து இருக்கும்.. அதனால் கேமரா எதுவும் இல்லாததால் கண்டுபிடிக்க முடியவில்லை…
ஏற்கெனவே தியா காணமால் போன கேஸை விசாரித்து வந்த போலீஸ்க்கு தகவல் சொல்ல அவர்கள் தியா பெற்றோருக்கு தகவல் கூற அவர்கள் அடித்து பிடித்து வந்து தன் மகளை பார்த்தனர்… இப்புடி கிடக்கும் தன் மகளை பார்த்து கண்ணீர் சிந்த நான்கு நாட்கள் தொடர்ந்து கடத்தியவர்கள் மயக்கத்திலேயே வைத்து உள்ளனர்… உடம்புக்கு வேறு எந்த பிரச்சினையும் இல்ல நல்லபடியா இருக்காங்க என்று சொல்லிய பிறகு தான் பெற்றோருக்கு உயிரே வந்தது…
எதுக்கு கடத்தினாங்க யார் கடத்துனாங்க என்று அவர்களுக்கு தெரியவில்லை… தன் மகள் உயிருக்கும் மானத்துக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் திரும்ப கிடைத்ததே போதும் என்று அவர்கள் நினைத்தனர்… சிறு நேரத்தில் தியா கண் விழிக்க அவளை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றனர்… தொடர் மயக்கத்திலே இருந்ததால் அவளுக்கு நடந்த எதுவுமே தெரியாது..
முதன் முதலாக தேவேந்திரன் என்ற பெயரை கேட்டதும் அவனை பார்க்க வேண்டும் அவனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று தியாவிற்கு ஏற்பட்ட உள்ளுணர்வு, அடி ஆழத்தில் அவன் பெயர் பதிந்து இருந்ததலா, அல்லது தன்னுடைய உயிரை காப்பாற்ற அவன் தன் வாழ்க்கையையே தொலைத்து உள்ளான் என்பதாலாயா,