பரபரப்பான காலை வேளை போக்குவரத்து நெரிசல் மிகுந்த அவிநாசி சாலையில் விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்த கார் பீளமேடு நோக்கி பயணித்தது…
அந்த காரை இயக்கி கொண்டு இருந்தவனோ யார் மேல் இருந்த கோவத்தையோ கார் ஆக்ஸிலேட்டர் மேல் காட்ட அது புழுதி மணல் பறக்கும்படி பயங்கர வேகத்தில் சென்றது…
“ஏன் இவ்ளோ பாஸ்ட்டா போற, கொஞ்சம் மெதுவா போகலாம்ல” என்று காரை ஓட்டி கொண்டு இருந்த ஹர்ஷவர்தன் பார்த்து சொன்னான் திவேஷ்…
அவன் பதில் கூற வில்லை திரும்பி திவேஷை ஒரு பார்வை பார்த்தான்… அந்த பார்வை “நீ இவ்வளோ பயந்தா கோழியா” என்ற கேலி பார்வை…
திவேஷிற்கு அந்த பார்வையின் அர்த்தம் புரிய “சே சே பயமா எனக்காக, நான் இதை விட பாஸ்ட்டாவே டிரைவ் பண்ணுவேன்… ஆனா இது பீக் ஹவர்ஸ் நிறைய வண்டி வரும்…முன்னாடி பின்னாடி வர ஏதாவது வண்டியில்ல இடிச்சுற போறேன்னு உன் மேல்ல இருக்க ஒரு அக்கறையில்ல சொன்னேன்” என்று தைரியமாக திவேஷ் காட்டி கொள்ள, அருகே இருந்தவனோ இன்னும் கேவலமான பார்வையை பார்த்துவிட்டு முன்பை விட காரின் வேகத்தை கூட்டினான்..
.
திவேஷ் மனதிற்குள்ளே இவனை பத்தி தெரியாமா இந்த கார்ல்ல ஏறிட்டேன் பேய் புடிச்ச மாதிரி கார் ஓட்றானே, இவன் போற வேகத்தை பார்த்தா, ஹாஸ்பிடலுக்கு முழுசா இந்த கார்ல்ல போய் சேர மாட்டோம் போல, ஆம்புலன்ஸ் தான் வந்து அள்ளி போட்டுட்டு போகும் போலேயே, கடவுளே முழுசா என்னை என் பொண்டாட்டி கிட்ட உயிரோட சேர்த்திருப்பா” என்று ஒரு கோரிக்கையை வைத்து கொண்டே வந்தான்…
“ஹர்ஷா காரை ஸ்லோவ் பண்ணு, ஏன் இவ்வளோ பாஸ்ட்டா டிரைவ் பண்ற?உனக்கு என்னாச்சு ஹர்ஷா” என்று மகேஸ்வரன் கேட்க,
“அதே தான் மாமா நானும் கேட்கிறேன். என்னாச்சு ஏன் இப்புடி? இதுவரை கோவையில்ல ஏன் தமிழ்நாட்டுலையே நம்பர் ஒன் இடத்தில் இருந்த நம்ம ஹாஸ்பிடல் ஷேர் ரேட்டிங் இப்ப கொஞ்ச நாள்ல கீழ் இறங்கி இருக்கு… அது மட்டும் இல்ல லாஸ்ட் 25 இயர்ஸா தமிழ்நாடு மருத்துவ சங்க தலைவர் நீங்க தான்… இத்தனை வருஷத்தில்ல சங்க தேர்தல்ன்னு ஒன்னு நடந்ததே இல்லை…. உங்களுக்கு எதிராக நிற்கிறதுக்கு யாருக்குமே தைரியம் இருந்தது இல்லை.. ஆனா லாஸ்ட் வீக் நடந்த தேர்தல்ல அந்த நலம் ஹாஸ்பிடல் டீன் உங்களுக்கு எதிராக நின்னு ஜெய்ச்சு இருக்கான்.. அந்த தேவா சூர்யா சப்போர்ட்டால்.. அவனுங்க வேணும்னே உங்களையும் நம்ம ஹாஸ்பிடல் பேரையும் அசிங்க படுத்துறானுங்க… நீங்க ஏன் மாமா இதை எல்லாம் பார்த்துட்டு அமைதியா இருக்கீங்க… எனக்கு அவனுங்க இரண்டு பேர் மேலேயும் கொலை வெறி வருது” என்றான்…
ஹர்ஷவர்தன் மகேஸ்வரனின் தங்கை மாலினியின் ஒரே மகன்… ஹர்ஷாவிற்கு மகேஸ்வரன் தாய்மாமான் மட்டுமல்ல காட்பாதர், ரோல்மாடல்.. ஹர்ஷா தேவா 2.0 என்று தான் சொல்ல வேண்டும்.. அவ்வளவு மகேஸ்வரன் மேல் மதிப்பும் பாசமும் வைத்து இருக்கின்றான்.. எப்படி தேவா மகேஸ்வரனை பார்த்து மருத்துவனாக வர ஆசைப்பட்டானோ, அதே போல தான் ஹர்ஷாவும் மகேஸ்வரனின் சேவைகளை பார்த்து மருத்துவனாக வர ஆசைப்பட்டு லண்டன் சென்று எம்.டி முடித்து விட்டு இப்போது தான் கோவை வருகிறான்…
ஹர்ஷாவிற்கு மகேஸ்வரன் மேல் அதீத பாசம் என்பதை விட பக்தி அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்… மகேஸ்வரன் மருத்துவமனையில் ஏழை எளியவர்களுக்கு செய்யும் சேவையை பார்த்து ஹர்ஷா தன் மனதில் கடவுள் ஸ்தானத்தையே மாமனுக்கு அளித்துள்ளான்.. அதனால் தான் மகேஸ்வரனின் சிறு தோல்வியை கூட ஹர்ஷாவால் ஏற்க முடியவில்லை…
சங்க தேர்தலில் தோற்றது மகேஸ்வரனுக்கு வருத்தம் தான்.. இத்தனை வருடம் தன்னிடமிருந்த பதவி பறி போனதில், ஆனால் தேவாவிற்கு தான் செய்த துரோகத்திற்கான சிறு தண்டனையாக அதை ஏற்று கொண்டார்…
“நீங்க எதுக்கும் கவலை படாதீங்க மாமா நான் வந்துட்டேன்ல, அவனுங்களை நான் சும்மா விடவே மாட்டேன்.அந்த தேவாவிற்கும் சூர்யாவிற்கும் இருக்கு என்று அவர்கள் மேல் இருந்த கோவத்தில் தனது காரின் ஸ்டீயரிங்கை குத்தினான்…
ஹர்ஷா எனக்கு என்ன பண்ணணும் ரொம்ப நல்லா தெரியும்… நீ இதுக்கா தான் லண்டன்ல இருந்து இங்க வந்தியா, இது எல்லாம் உனக்கு எப்புடி தெரியும் என கேட்டவருக்கு திருட்டு முழி முழித்து கொண்டு இருந்த திவேஷ் தான் காரணம் என்பது புரிந்தது.. அவனை முறைத்தார்.. அவனை முறைக்க மட்டும் தான் அவரால் முடியும்.. வேறு எதுவும் செய்ய முடியாதே, அவரின் ரகசியம் அறிந்தவனாயிற்றே,
“ஹர்ஷா நீ எதிலும் தலையீடாம நல்ல படியா அமைதியா இருக்க மாதிரி இருந்தா என் கூட இங்க இருக்கலாம். ஆனா நீ இப்ப சொன்ன மாதிரி ஏதாவது வம்பு பண்ற ஐடியா இருந்தா உடனே கிளம்பி லண்டன்ல இருக்க உன் அம்மா கிட்டேயே போயிரு.. உன்னால் சூர்யா, தேவாவுக்கு மட்டுமில்ல யாருக்கும் எந்த தொந்தரவும் வர கூடாது… அப்புடி ஏதாவது நடந்தது அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று ஹர்ஷவர்தனை கடுமையாக எச்சரித்தார் மகேஸ்வரன்…
அவருக்கு தெரியும் திவேஷ் ஹர்ஷாவை வைத்து தேவாவுக்கு தொல்லை கொடுக்க தான் இங்கு அவனை வரவழைத்து இருக்கிறான் என்று, அவன் பேச்சை கேட்டு ஹர்ஷா எதுவும் செய்து விடுவானோ என பயமாக இருந்தது.. தேவாவிற்கு எதுவும் ஆகிவிடுமோ என்றல்ல, ஹர்ஷாவிற்கு எதுவும் ஆகி விடுமோ என, அதனாலாயே மீண்டும் மீண்டும் மகேஸ்வரன் எச்சிரிக்க,
ஹர்ஷா காதில் மகேஸ்வரன் கூறிய எதுவுமே விழ வில்லை… நான் வந்துட்டேன் தேவா கோவில் மாதிரி வச்சு இருந்த எங்க ஹாஸ்பிடலை களங்கப்படுத்தும் மட்டுமில்லாம, என் மாமாவையே அசிங்கபடுத்துறியா, இனிமே தான் இருக்கு உனக்கு, உன்னோட கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் கெடுக்கிறது தான் என்னோட ஒரே வேலை என்று தன் மனதிற்குள் சூளுரைத்து கொண்டு வந்தான்…
ஆனால் ஹர்ஷா செய்ய போகும் முட்டாள் தனத்தால் போக போவது மகேஸ்வரனின் நிம்மதி தான் என்பது அவன் அறியவில்லை…
“டாக்டர் பேஷண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்றாங்க, அவங்க ஃபைல்ஸ் டேபிள் மேலே இருக்கு, நீங்க ரெடின்னா உள்ள அனுப்பட்டுமா” என்று நர்ஸ் கேட்க,
ம்… ஓகே ஒரு ஃபைவ் மினிட்ஸ் கழிச்சு அனுப்புங்க என்றான் தேவா… அவன் அமர்ந்திருந்த கேபினில் இருந்த டேபிளின் மீது சூர்யபிரகாஷ் MBBS என்று இருந்தது… இது சூர்யாவின் கேபின் இன்று சூர்யா பார்க்க வேண்டிய op பேஷண்டை சூர்யாவிற்கு பதிலாக தேவா பார்க்க வந்துள்ளான்…
சிறைறிலிருந்து வெளி வந்த பிறகு தேவா எந்த மருத்துவமனைக்கு கீழும் வேலை செய்யவில்லை… எதுவுமே வேண்டாம் என்று இருந்தவனை சூர்யா தான் நீ படிச்ச படிப்பை வேஸ்ட் பண்ணாத தேவா என வற்புறுத்த இதயம் சம்பந்தமான அறுவை சிகிச்சைக்கு மட்டுமே அவனை அழைக்கும் மருத்துவமனைக்கு செல்வான்… அதுவும் நோயாளி அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து சென்று அனதீஸ்யா கொடுத்து மயக்க நிலைக்கு சென்று பிறகு தான் செல்வான்… அதனால் இந்த ஐந்து ஆண்டுகளில் அவனுக்கும் நோயாளிக்களுக்குமான நேரடி தொடர்பு கிடையாது…
மாலை சூர்யா கால் செய்து தான் பார்க்க வேண்டிய பேஷண்டை இன்று ஒரு நாள் மட்டும் பார்க்கும்படி கேட்க, முதலில் தேவா “என்னால் எல்லாம் முடியாது போடா” என்று மறுத்தான்… சூர்யா ஏதேதோ சொல்லி போடா என கெஞ்ச, முடியாது முடியாது உங்க ஹாஸ்பிடல்ல வேற டாக்டரை மாத்தி விட சொல்லுடா என மறுத்தான்.. இறுதியாக சூர்யா “நட்புன்னா என்னனு தெரியுமா தேவா, நண்பன்னா என்னனு தெரியுமா தேவா” என்று தளபதி பட டயலாக்கை ஆரம்பிக்க,
“யப்பா சாமி போய் தொலைறேன்டா உடனே ஆரம்ப்பிக்காத” என்று ஒத்துக் கொண்டான்… ஏனெனில் சூர்யா இதுவரை இந்த மாதிரி எந்த ஒரு உதவியையும் தேவாவிடம் கேட்டது இல்லை… அத்தோடு ஒரே மாதிரி போகும் வாழ்க்கையில் தேவாவிற்கு சலிப்பு தட்டியது.. அதனால் சின்ன மாறுதலுக்காகவும் ஒத்து கொண்டான்..
ஒரு நீண்ட மூச்சை வெளியிட்டவன் பேஷண்டை கவனிக்க தயாரானான்.. உதட்டில் ஒரு மில்லிக்கும் குறைவான சினேக புன்னகையுடன், முதலாவதாக ஒரு நடுத்தர வயது ஆண் ஒருவர் வர அவருக்கு சர்க்கரை வியாதி தொந்தரவு, அவருக்கு தேவையான மருந்தையும் கூடவே எப்புடி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரையும் வழங்கினான்..
இரண்டாவதாக மூன்று வயது குழந்தை ஒன்று காய்ச்சல் தொந்தரவுடன் வர, அந்த குழந்தையை பரிசோதித்து மருந்து எழுதி கொடுத்து அனுப்பி விட
மூன்றாவதாக வந்தவரை அமர சொல்லி விட்டு “சொல்லுங்க உங்களுக்கு என்ன தொந்தரவு” என்று கேட்டான்… அந்த பேஷண்ட்டின் முகம் பார்க்காமல், முதலாவதாக வந்த சர்க்கரை நோயாளியின் இரத்த பரிசோதனையை பார்த்து கொண்டே,
“ஹார்ட்ல தான் டாக்டர் ப்ராப்ளம்… கொஞ்ச நாளாவே ஹார்ட்க்குள்ள பட்டாம்பூச்சியா பறக்குது என்ன பண்ணா சரியாகும்” என்று சொன்ன பதிலிலும் குரலிலுமே முகம் பாராமல் அது யார் என்று தேவாவிற்கு புரிய, ரிப்போர்ட்டை பார்த்து கொண்டு இருந்தவன் கோவமாக நிமிர்ந்து திட்ட வாயெடுக்க,
எதிரே டேபிளின் மேல் இரு கைகளையும் ஊன்றி தேவா முகத்திற்கு அருகே குனிந்து இருந்தவளோ தேவாவை பார்த்து முதலில் கண்ணை சிமிட்டி பின்பு தனது இரண்டு புருவத்தையும் வில்லாய் வளைத்து மேலேற்றி கீழ் இறக்கி மேலேற்றி கீழ் இறக்க அந்த இரு புருவங்களும் விழிகளும் செய்யும் மாயாஜாலத்தில் ஒரு வினாடிக்கும் குறைவாக தன்னையறியாமல் தியாவை ரசித்த தேவா, அடுத்து அவள் “பாவா” என்று அழைப்பில் நினைவுக்கு வந்தான்…
‘அறிவு கெட்ட தேவா தீடிர்னு உனக்கு என்னாச்சு, ஏன்டா இப்புடி பண்ற’ என்று சற்று நேரத்திற்கு முன்பு தியாவை ரசித்தற்கு தன்னை தானே மனதிற்குள் கடிந்து கொண்டவன்,
“இவ எப்புடி இங்க வந்தா, நான் இங்க இருக்கிறது இவளுக்கு எப்புடி தெரியும் என்று எல்லாம் கஷ்டப்பட்டு யோசிக்கவில்லை அனைத்தும் தன் நண்பனின் கை வண்ணம் என்பது புரிந்தது..
இதற்கு தான் அந்த எருமை அந்த குழை குழைஞ்ச்சானா, டேய் எட்டப்பா உனக்கு இருக்குடா மனதிற்குள் சூர்யாவை அர்ச்சித்து கொண்டு இருக்க,
“ஹாய் எப்புடி இருக்கீங்க பாவா?”
“ஏய் உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரனைங்கிறது கிடையாதா, எத்தனை வாட்டி திட்டினாலும் விரட்னாலும் திரும்ப திரும்ப பின்னாடி வந்து பாவா பாவான்னு இம்சை பண்ற” என்றான் பல்லை கடித்து கொண்டு,
“எனக்கு சூடு சொரனை நிறையவே இருக்கு பாவா. ஆனா என் மனசுக்கு தான் அது எல்லாம் கிடையாது. அதுவும் உங்க கிட்ட மட்டும் தான்”…
ஆமா பாவா நமக்கு கல்யாணம் ஆகிட்டா அதுக்கு அப்புறம் நான் நீங்க போற பக்கம் எல்லாம் பின்னாடி வந்து இம்சை பண்ண மாட்டேன்ல, சமத்தா நீங்க வேலையை முடிச்சிட்டு வரது வரைக்கும் வீட்டுலேயே இருப்பேன்”
“ஏதேதததத “கல்யாணமா என்று அதிர்ந்த தேவாவிடம்,
“லவ் பண்ணா கல்யாணம் பண்ணி தானே ஆகனும் பாவா”..
“பைத்தியம் பைத்தியம் நான் உன்னை லவ் பண்ணவே இல்லை”…
“அப்புடின்னா பர்ஸ்ட் என்னை லவ் பண்ணுங்க. அப்புறமா கல்யாணம் பண்ணுங்க” என்று தியா கண்ணடித்து கொண்டு கூற,
இதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த தேவாவின் பொறுமை காற்றில் பறக்க தியா கழுத்தை பிடித்து சுவற்றில் சாய்த்தபடி, “சொல்ற எதையுமே புரிஞ்சிக்காமா காதல், கல்யாணம்னு கண்டபடி உளறிட்டு இருக்க,
என்னை பத்தி உனக்கு என்னடி தெரியும்.. ஹான் என்ன தெரியும்… தெரிஞ்சதுக்கு அப்புறம் நீ” … என்று கூற வந்தவனின் பேச்சு பாதியில் நின்றது தியா சொன்ன பதிலில்,
“தெரியும் எனக்கு எல்லாமே தெரியும்… அது எல்லாம் தெரியறதுக்கு முன்னாடி இருந்தே லவ் யூ தான். தெரிஞ்சதுக்கு அப்புறமும் லவ் யூ தான். ஏன் நான் சாகற வரைக்கும் லவ் யூ மட்டும் தான்… அது எப்பவும் மாறவே மாறாது” என்று கூறியவளின் கண்களில் தெரிந்த காதலில், உறுதியில் பாறையாய் இறுகி இருந்தவனின் இருதயம் ஒரு நொடி தடுமாற, அதை விரும்பாதவன் மேலும் தன்னை தானே கடிந்து கொண்டு, முன்பை விட பலமாக இறுகியவன்,
ஐ ஹேட் யூ, இப்பவும் எப்பவும் ஏன் சாகற வரைக்கும் ஐ ஹேட் யூ மட்டும் தான்… இதுவும் எப்பவுமே மாறாது. என கோவமாக உறும,
நீங்க என்ன சென்ட் யூஸ் பண்றீங்க.. ம்.. வாசனை செமையா இருக்கு என மூச்சை உள்ளுழுத்து தியா கூற,
தேவாவின் கோவம் இன்னும் கூட தான் செய்தது.. அவளை கையாள முடியாமல் உண்மையில் திணறினான்.. நான் பொறுக்கி என வாய் வார்த்தையாலும் செய்கையில் காண்பித்தும் கூட அவள் விலகாமல் விடாமல் துரத்துக்கிறாளே எரிச்சலாக இருந்தது..
அடிக்கவோ அசிங்க பேசவோ மனம் வரவில்லை.. “இங்க பாரு இது தான் உனக்கு நான் தர லாஸ்ட் வார்னிங் இனிமே ஏன் கண்ணு முன்னாடி வந்தேன்னு வை அவ்ளோ தான். நானே பார்க்காத தேவாவ நீ பார்ப்ப” என்றவன் இதுவரை லேசாக பிடித்திருந்த தியா கழுத்தில் அழுத்தம் கொடுத்தான், இதிலாவது பயப்படாமல் என, அதில் அவளுக்கு லேசாக இருமல் வர, அவள் கழுத்தில் இருந்து கையை விடுவித்தவன் விறு விறு வென அந்த அறையில் இருந்து வெளியேறினான்…
‘சூர்யா பரதேசி மாமா வேலையாடா பார்க்கிற, என் கையில்ல சிக்குடா அப்புறம் இருக்கு உனக்கு’ என்று வசைப்பாடி கொண்டே அந்த வராண்டாவை கடந்தவனை ஒளிந்து இருந்து பார்த்த சூர்யா, ஒரு மூணு மாசத்துக்கு இவன் கண்ணுலயே சிக்க கூடாது… அப்புடி சிக்குனா உயிருக்கு உத்தரவாதம் இல்லை என நெஞ்சில் கை வைத்து சொல்லி கொண்டான்…