விதியின் முடிச்சு…(23)

4.9
(8)

என் தங்கச்சியை என்ன பேசி மயக்கினானோ படுபாவி என்று புலம்பிய சக்தியிடம் ஏன் உங்க மாமா பையன் தானே அந்த பிரபு நீங்க அவங்களை ஏற்றுக் கொள்ளலாமே என்றான் உதயச்சந்திரன். எப்படி ஏத்துக்குறதாம் என் அப்பாவால வெளியே தலை காட்ட முடியலை மச்சான். அவள் ஓடிப் போனதால எங்க அப்பாவையும், என்னையையும், தம்பியையும் முன்னே யாரும் பேசுறதில்லை முன்னே விட்டு பின்னாடி பேசுறாங்க. ஓடிப்போனவளோட அப்பன், அண்ணன்னு எம்புட்டு அசிங்கமா இருக்கு தெரியுமா மச்சான்.

 

இது பட்டிக்காடு இங்கே எல்லோரும் என்னதான் ஒற்றுமையா இருக்கிறது போல தெரிந்தாலும் சொந்தக்காரனுங்க புத்தி எப்போ எவன் கீழே விழுவான் ஏறி மிதிக்கலாம்னு தான் நினைப்பாங்க. உங்களுக்கு அதெல்லாம் புரியாது மச்சான் என்ற சக்திவேல் கண் கலங்கிட அன்று ரோனி சொன்ன விசயம் தான் உதய்க்கு ஞாபகம் வந்தது.

 

அவங்க ஓடிப்போகாமல் அக்கா கர்ப்பமா இருக்கிற விசயத்தை வீட்டில் சொல்லி இருந்தால் கூட அவங்க கல்யாணம் நடந்திருக்கும். அவங்களை அனுப்பி வச்சு பெரிய தப்பு பண்ணிட்டிங்க மாமான்னு அவள் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை என்று நினைத்தவன் சக்தியிடம் ஏங்க மச்சான் ஒருவேளை அந்த பிரபுவும், விநோதாவும் காதலிச்ச விசயம் எனக்கு நிச்சயம் பண்ணுவதற்கு முன்னமே தெரிந்தால் நீங்க அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுருப்பிங்களா என்றான்.

 

அவளை அடிச்சு அவளோட மனசை மாற்றி எங்க விருப்பம்படி தான் அவளோட கல்யாணம் நடந்திருக்கும் என்றான் சக்திவேல். அவங்க ஒருவேளை கல்யாணத்திற்கு முன்னமே கர்ப்பமாக இருந்தால் என்றவனிடம் அவளை வெட்டி புதைச்சுருப்போம் என்றான் சக்திவேல். என்ன வெட்டிப் புதைச்சுருப்பிங்களா என்ன மச்சான் பேசுறிங்க என்ற உதய்யிடம் வேற என்ன பண்ண மச்சான் அந்த பிரபு கூட அவளை சேர்த்து வச்சுருக்கனுமா.

 

இப்பவும் சொல்கிறேனே அவள் மட்டும் அவன் கூட இந்த ஊருக்கு வந்தாள்னா அவனையும், அவளையும் வெட்டிக் கொலை பண்ணாமல் விட மாட்டேன் என்றவன் அவங்க குடும்பத்தோட உறவை என் சித்தியும் சரி, தேன்மொழியும் சரி அறுத்து விட்டுட்டாங்க. அவங்களோட எப்பவும் எந்த உறவும் கிடையாது  என்றான் சக்திவேல்.

 

 

என்ன மாமா ஏன் ஒரு மாதிரி இருக்கிங்க என்ற வெரோனிகாவிடம் ஒன்றும் இல்லை என்ற உதயச்சந்திரன் என்னாச்சு வீட்டில் எல்லோரும் ஏன் ஒருமாதிரி இருக்காங்க என்றான்.

 

மாமா அநை விடுங்க நாம தோட்டத்து வீட்டுக்கு போகலாம் வாங்க என்று கணவனை அழைத்துச் சென்றாள் வெரோனிகா. என்னாச்சு ரோனி என்றவனிடம் நீங்க காரை எடுங்க மாமா என்றவளிடம் நடந்து போகலாமே என்றான் உதய்.

 

மாமா இப்போ கவுச்சி கொண்டுகிட்டு வயல்காட்டு வழியில் போக முடியாது. ஊரைச் சுத்தி ரோடு வழியாக போகலாம் என்று அவள் கூறிட அவனும் சரியென்று அவளுடன் சென்றான்.

 

 

சரி அதான் வீட்டுக்கு வந்துட்டோமே இப்பவாச்சும் சொல்லு ரோனி என்றவனிடம் அம்மாக்கும், பெரியம்மாவுக்கும் சண்டை என்றவள் நடந்த்தைக் கூறினாள். இதற்கெல்லாமா சண்டை போடுவாங்க என்றவன் சரி நீ சாப்பிட்டாயா என்றிட இல்லை மாமா என்றாள். சாப்பிடு என்று அவன் கூறிட அவளும் அவனுடன் சேர்ந்து சாப்பிட்டாள்.

 

நீங்க ஏன் மாமா ஒரு மாதிரி இருந்திங்க என்றவளிடம் நம்ம வீட்டுக்கு போனதும் சொல்கிறேன் என்றான் . நீங்க கள்ளு குடிக்கவில்லை தானே என்றவளிடம் சத்தியமா நான் குடிக்கவில்லை என்றவன் ஆனால் வாத்துக்கறி சாப்பிட்டேன் என்றான். அதை விடுங்க என்றவள் ஏன் மாமா கல்யாணம் பண்ணிக்கிறது குழந்தை பெத்துக்கத் தானா என்றவளைப் பார்த்தவன் யார் சொன்னது.

 

குழந்தை பெத்துக்க ஒரு வயசு இருக்கு. உன் அம்மா சொன்ன விதம் வேண்டுமானால் தப்பா இருக்கலாம். ஆனால் சொன்ன விசயம் சரி. உன் வயசு என்ன பதினேழு. இன்னும் பதினெட்டு கூட ஆகவில்லை. அதற்குள்ள என்ன குழந்தை. இப்போ உனக்கு தேவை குழந்தை இல்லை நல்ல படிப்பு. உனக்கு என்ன எல்லாம் படிக்கனும்னு ஆசை இருக்கோ சொல்லு படிக்க வைக்கிறேன். மற்றது எல்லாம் அப்பறம் தான் என்றவன் நல்லவேளை நீயே இங்கே அழைச்சுட்டு வந்துட்ட அந்த சின்ன ரூம்ல இரண்டு பேரும் எப்படி தூங்குறதுனு யோசிச்சேன் என்ற உதயச்சந்திரன் அறையில் இருந்த மெத்தையில் படுத்து உறங்கினான்.

 

 

 

 

 

அவளுக்கு உறக்கமே வரவில்லை. ஒருவேளை அவன் தான் வினோதாவை பிரபுவுடன் அனுப்பி வைத்தான் என்று தெரிந்தால் என்ன நடக்கும். ஒரஉவேளை எனக்கு ஒரு குழந்தை இருந்தால் கூட அதற்காக இரக்கப் பட்டு நம்மளை பிரிக்க மாட்டாங்க மாமா என்று நினைத்தவள் எது எப்படியோ என் உயிரே போனாலும் சரி உங்களை விட்டு பிரியவே மாட்டேன் மாமா என்று உறங்கும் கணவனின் முகத்தையே பார்த்திருந்தாள்.

 

 

என்ன வினோ தூங்காமல் என்ன பண்ணிட்டு இருக்கிற என்ற பிரபுவிடம் நாம நம்ம ஊருக்குப் போகலாமா பிரபு என்றாள் வினோதா. ஊருக்குப் போகிறது பிரச்சனை இல்லை ஆனால் அதனால் நமக்கு கல்யாணம் பண்ணி வச்சு வாழ்றதுக்கு ஒரு வீடு, வேலைனு ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாரே உதய் அவருக்கு பிரச்சனை வந்து விடக்கூடாது. அதையும் மனசுல வச்சுக்கனும். உன் குடும்பத்தை பற்றி நல்லா தெரியும் தானே உனக்கு.

 

என் அத்தையையும், தங்கச்சியையுமே எங்க வீட்டோட பேச விடாமல் வச்சுருக்காங்க. அவங்களுக்கே  அப்படி இருகும் பொழுது நமக்கு கல்யாணம் பண்ணி வச்ச பாவத்திற்கு உதய்யை தண்டிக்கிறேன்னு ரோனியோட வாழ்க்கையை அழிச்சாலும் அழிச்சுருவாங்க என்றான் பிரபு. ஆம் பிரபு சொல்வது உண்மை தான் தனது அம்மா, அப்பா பற்றி அவள் அறிந்ததே.

 

சித்தப்பாவும் , அப்பா பேச்சுக்கு மறுவார்த்தை பேச மாட்டாரே என்று நினைத்த வினோதா மௌனமாகினாள்.

 

 

இது கொஞ்சம் கூட சரியில்லை பூங்கொடி நீ ஏன் அண்ணி சொல்வதை எல்லாம் தப்பாவே எடுத்துக்கிற கல்யாணம் ஆன பொண்ணு சந்தோசமா இருக்கிறாளான்னு தெரிஞ்சுக்கத் தானே அண்ணி அப்படி கேட்டாங்க என்ற கதிரேசனிடம் என்னங்க நீங்களும் உங்க அண்ணி மாதிரியே பேசிட்டு இருக்கிங்க அவங்க கேட்டது தப்பில்லை. அதை யார்கிட்ட கேட்கனும்னு விவஸ்தை இல்லையா. அவள் வயசு என்ன பதினேழு இவங்க பொண்ணு ஓடிப் போனதால படிச்சுட்டு இருந்த பச்சைமண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்.

 

அவளுக்கு வாழ்க்கைனா என்னனே இன்னும் புரியாத சின்னக் குழந்தை அவகிட்ட என்ன பேசனுமோ அதை மட்டும் தான் பேசணும். உங்க அண்ணிக்கு இங்கிதம் கூடவா தெரியாது. எல்லாம் வயிற்றெரிச்சல் என்ற பூங்கொடியிடம் நீ ஏன் இப்படி நடந்துக்கிற நம்ம பொண்ணு நல்லா இருக்கனும். நீ அவங்களோட சண்டை போட்டுகிட்டு இருந்தினா அவங்க எப்படி நம்ம பொண்ணு நல்லா இருக்கனும்னு நினைப்பாங்க.

 

நமக்கு இருக்கிறது ஒரே பொண்ணு. நாளைக்கு நமக்கு பின்னாலே அவளுக்கு அண்ணன், தம்பி துணை வேண்டாமா. இரண்டு அண்ணன்களும் அவளுக்கு துணையா இருக்கனும்னா நீ என் அண்ணியை அனுசரிச்சு போகத் தான் வேண்டும் என்றார் கதிரேசன்.

 

உங்க பொண்ணுக்கு அண்ணன் , தம்பி துணை வேண்டும்னு நினைக்கிறிங்களே எனக்கு என் அண்ணன், தம்பியோட உறவையே அறுத்து விட்டிங்களே அதற்கு உங்க அண்ணி தானே காரணம் என்ற பூங்கொடியிடம் நீ என்ன முட்டாளாடி நான் சொல்லுறதை புரிஞ்சுக்கோ.

 

அவங்க மேல உனக்கு ஆயிரம் வருத்தம் இருந்தாலும் அதை ஒரு இரண்டு,  மூன்று நாளைக்கு தள்ளி வை. நம்ம மகளும், மருமகனும் தலை ஆடிக்கு வீட்டுக்கு வந்திருக்கும் இந்த நேரம் எந்த பஞ்சாயத்தும் வேண்டாம். நம்ம பொண்ணு மன நிம்மதியோட அவள் வீட்டிற்கு போக வேண்டும் என்றார் கதிரேசன்.

 

புரிஞ்சுக்கோ என்ற கதிரேசன் ரோனியும், மாப்பிள்ளையும் சாப்பிட்டாங்களா என்றார். தேனு அவங்களுக்கு சாப்பாடு கொடுத்து விட்டிருக்கிறாள் என்று பூங்கொடி கூறிட சந்தோசம் என்று சென்று விட்டார் கதிரேசன்.

 

 

ஏன்டி உனக்கு என்னடி பிரச்சனை உன் மகள் கொழுப்பெடுத்து ஓடிப் போனாள். அதற்கு  ரோனியும், பூங்கொடியும் என்ன பண்ணுவாங்க. உனக்கு ஏன் இந்த பொறாமை அன்னைக்கு நம்ம குடும்ப மானத்தை காப்பாத்தினது நம்ம ரோனி தான்.

 

அவள் சின்னப் பொண்ணுனு உனக்கும் தெரியும். ஸ்கூலுக்குப் போகிறாள்னும் தெரியும். பள்ளிக்கூடம் போகும் பொண்ணு வயிற்றைத் தள்ளிட்டு போக முடியுமா ஏன் முட்டாள் போல பேசிருக்க என்றார் கணேசன். அதானே உங்க தம்பி குடும்பத்திற்கு வக்காளத்து வாங்கத் தானே வருவிங்க.

 

அந்த பூங்கொடி எவ்வளவு பேசிட்டாள். எனக்கு நல்ல நாள் , பெரிய நாள் ஆனால் வம்பு இழுக்கிறது தான் வேலையாம் என்ற வசந்தியிடம் சரியா தானே சொல்லிருக்கு உன் பழக்கம் அது தானே என்றார் கணேசன்.

 

 

நீங்களும் ஏன் இப்படி என்னை சங்கடப் படுத்துறிங்க என்ற வசந்தியிடம் நீ தான் எல்லோரையும் சங்கடப் படுத்துற வசந்தி. உன்னோட ஆதங்கம் புரியுது உன் மகள் வாழ வேண்டிய வாழ்க்கையை ரோனி வாழ்ந்துட்டு இருக்கிறாள்னு உன் மனசு  தவிக்கிறது. ஆனால் அதற்கு யாரு காரணம் நீயே யோசி . உன் பொண்ணு வினோதா தான் திமிரெடுத்து பிரபு கூட ஓடிப் போனாள்.

 

நாம எல்லோரும் சேர்ந்து தானே ரோனிக்கு கல்யாணம் பண்ணி வச்சோம். இப்போ நாமளே அவளை பார்த்து பொறாமைப் படலாமா. வினோதா, வெரோனிகா இரண்டு பேரும் நம்ம பொண்ணுங்க தான் அதனால இனிமேல் எதுவும் வித்தியாசமா நினைக்காதே என்ற கணேசன் எழுந்து சென்று விட்டார்.

 

 

என்ன தம்பி ஏன் இங்கே உட்கார்ந்திருக்க என்ற கணேசனிடம் எல்லாம் நம்ம வீட்டு பொம்பளைங்க பத்தி தான் அண்ணா கவலையா இருக்கு. ஏன் தான் அண்ணிக்கும் , பூங்கொடிக்கும் எப்பவுமே ஒத்துப் போகவே மாட்டேங்குதோ. இத்தனை வருசமா ஒரே வீட்டில் இருக்காங்க ஒரு நேரம் சண்டை போட்டாலும் உடனே சமாதானம் ஆவாங்க. ஒரு நேரம் இப்படி என்ற கதிரேசன் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்திருக்கிற நேரம் ஒருத்தருக்கு ஒருத்தர் முகத்தை திருப்பிட்டு திரிந்தால் மாப்பிள்ளை தான் என்ன நினைக்க மாட்டாரு என்று வருந்தினார் கதிரேசன்.

 

 

விடுடா தம்பி அது நாம வாங்கிட்டு வந்த வரம் என்ற கணேசன் நீ சாப்பிட்டியா என்றிட சாப்பிட்டேன் அண்ணா என்றார் கதிரேசன். சரி கொஞ்ச நேரம் காத்தாட அப்படியே நடந்துட்டு கோவில் மண்டபத்தில் போயி படுக்கலாம் வா என்று தன் தம்பியுடன் சென்றார் கணேசன்.

 

என்னடி ஏன் ஒரு மாதிரி இருக்க என்ற சக்தியிடம் ஒன்றும் இல்லை என்றாள் தேன்மொழி. உன் அண்ணன்காரனுக்கு இருக்கிற திமிரு என்கிட்ட வம்பு இழுக்கிறதே பிழைப்பா போச்சு என்றான் சக்திவேல். அவள் பதிலே பேசவில்லை. பதில் பேசினால் தன் குடும்பத்தைப் பற்றி ஏதாவது சொல்வான் என்று அறிந்தவள் மௌனமாக மகனைத் தட்டிக் கொடுத்து உறங்க வைக்க ஆரம்பித்தாள் தேன்மொழி.

 

 

 

…..தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!