நான் பேசிட்டு இருக்கேன் நீ அதை கவனிக்காமல் என்ன பண்ணுற தேனு என்ற சக்தியிடம் என்ன பண்ணனும் உங்க கூட சேர்ந்து என் அண்ணனை திட்டனுமா. அதான் அவங்களுக்கும், எனக்கும் எந்த உறவும் இல்லைனு சொல்லிட்டிங்களே. ஒரே ஊரில் இருந்தும் அவங்க யாரோ, நான் யாரோங்கிற மாதிரி தானே இருக்கேன் . அப்பறம் என்ன. வெரோனிகா சந்தோசமா தலை ஆடி கொண்டாட அவள் புருசனோட வந்திருக்கிறாள். உங்க அம்மா தான் என் அத்தை கூட சண்டை போட்டு அவள் சந்தோசத்தைக் கெடுத்துட்டாங்க. நீங்களும் இப்போ என் கூட சண்டை போட்டு அந்தச் சின்னப் பொண்ணோட அமைதியை கெடுக்கனுமா என்றாள்.
அம்மா, சித்தி கூட சண்டை போட்டுச்சா ஏன் என்றவனிடம் உங்க அம்மா தானே ஏன்னு அவங்க கிட்டையே போயிக் கேளுங்க. பேசுறது எல்லாம் பேசிட்டு நான் என்ன தப்பா பேசினேன்னு கேட்பாங்க என்ற தேன்மொழி எனக்கு தூக்கம் வருது என்று படுத்துக் கொண்டாள்.
என்ன செல்வம் ஏன் அவன்கிட்ட வம்பு பண்ணுற என்ற கந்தசாமியிடம் என்னப்பா அவன் என் மச்சுணன் வம்பு பண்ணுகிறேன் என்றான் செல்வம். நம்ம அவங்க கூட உறவை வளர்க்கலாம்னுதான் நினைக்கிறோம். அவனுங்க தானே முறிச்சுட்டு போயி முறுக்கிகிட்டு நிற்கிறானுங்க. நீ உன் தங்கச்சி புருசன்னு அவன்கிட்ட வம்பு பண்ணுற அதை உன்னோட திமிருனு சொல்லி நம்ம தேனுகிட்ட அவன் சண்டை போடுவான். இதெல்லாம் தேவையா கள்ளுக் குடிக்கப் போனினா அந்த வேலையை மட்டும் பாரு என்ற கந்தசாமி வள்ளி உன் மகனுக்கு சோத்தைப் போடு என்று கூறிவிட்டு சென்றார்.
என்ன சொக்கு என்ற கந்தசாமியிடம் இல்லை அண்ணே நீங்க ஏன் நம்ம செல்வத்தை திட்டுறிங்க என்றார் சொக்கலிங்கம். நம்ம பொண்ணு அங்கே தானே வாழனும். இவன் விளையாட்டுக்கு பேசினாலும் அவன் விரனமாத் தான் எடுத்துப்பான். அது அவனுங்க குடும்ப புத்தி. சரி சொக்கு புள்ளை எதுவும் பேசினிச்சா என்ற கந்தசாமியிடம் ஏன் அண்ணே நீங்க வேற பார்த்தாலே பேசாது. அவனுக்கு பயந்துகிட்டு தான் ஊமையா இருக்கு.
சும்மாவே ஆடுவாங்க போதாக்குறைக்கு பிரபு வேற வினோதாவை கூட்டிட்டு ஓடிப்போயிட்டான். விடுங்க நம்ம பொண்ணை விரட்டாமலாச்சும் வச்சுருக்கானுங்களே என்ற சொக்கலிங்கம் தன் வீட்டுக்கு கிளம்பினார்.
என்ன ரோனி கிளம்பலாமா என்ற உதயச்சந்திரனிடம் சரிங்க மாமா என்றவள் தன் அம்மா, பெரியம்மா, அப்பா, பெரியப்பா, அண்ணன்கள், அண்ணி என அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினாள்.
என்ன மேடம் சோகமா என்றவனிடம் இல்லை மாமா என்றிட அவளது கண்ணீரைத் துடைத்தவன் எக்ஸாம் எல்லாம் முடிச்சுட்டு வந்து இங்கே நீ தாராளமா இருக்கலாம் என்றான் . பரவாயில்லை மாமா என்றவளைப் பார்த்து சிரித்தவன் சரி ரோனி உங்க பேம்லிக்கும், பிரபு பேம்லிக்கும் என்ன பிரச்சனை என்றான்.
என்ன பிரச்சனைனா என்ன சொல்ல என் பெரியம்மாவுக்கு எங்க அம்மா குடும்பத்தை பிடிக்காது. அம்மாவை விட பெரியம்மா நகை ,சீர் எல்லாம் கம்மியா கொண்டு வந்துட்டாங்கனு எப்பவோ எங்க அம்மாச்சி அவங்களை கிண்டல் பண்ணி பேசிட்டாங்களாம். அதில் இருந்தே பெரியம்மாவுக்கு அம்மாவோட குடும்பத்தை பிடிக்காமல் போயிருச்சு.
சக்தி அண்ணனுக்கு தேனு அண்ணியை கல்யாணம் பண்ணி வச்சதே அவங்களை பழிவாங்கத் தான். தேனு அண்ணியோட வளைகாப்பில் சின்ன பிரச்சனையை பெரிசாக்கி அவங்களையும் தாய் வீட்டிற்கு அனுப்பாமல் சண்டை வளர்த்துட்டாங்க. வார்த்தை தடிச்சு கை கலப்பில் தான் முடிஞ்சது. அது தான் சாக்குனு இரண்டு குடும்பத்திற்கும் உள்ள உறவை அறுத்து விட்டுட்டாங்க என்றாள் வெரோனிகா.
இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்றவனிடம் மாமா இது உங்களுக்கு சின்ன விசயமா தெரியும். ஆனால் அவங்களுக்கு பெரிய விசயம். தன்னை விட ஓரகத்தி ஒசத்தியா இருக்காளேன்னு ஒரு குறை. அதான் விடுங்க என்றவள் நேற்று ஏதோ நம்ம வீட்டுக்கு போயி சொல்கிறேன்னு சொன்னிங்களே அது என்ன விசயம் என்றாள் வெரோனிகா.
நீ சொன்னது தப்பு ரோனி என்றவனிடம் நான் என்ன சொன்னேன் மாமா என்றாள் வெரோனிகா. உன் அக்கா கர்ப்பமா இருக்கிற விசயத்தை வீட்டில் சொல்லி இருந்தால் அவங்களுக்கும், பிரபுவுக்கும் உங்க வீட்டாளுங்க கல்யாணம் பண்ணி வச்சுருவாங்கனு சொன்னியே அது தப்பு என்றான் உதயச்சந்திரன்.
உன் அண்ணா என்ன சொன்னாரு தெரியுமா உன் அக்காவை கண்டம், துண்டமா வெட்டிப் போட்டுருவேன்னு சொன்னாரு என்று நேற்று சக்தியிடம் பேசிய நிகழ்வைப் பற்றி கூறினான் உதயச்சந்திரன்.
அப்போ எப்பவுமே அவங்களை பற்றி பேச வேண்டாம் மாமா. அக்காவுக்கு நீங்க தான் கல்யாணம் பண்ணி வச்சிங்கனு எப்பவுமே தெரிய வேண்டாம். அவகிட்டையும் சொல்லி வைங்க எக்காரணத்தைக் கொண்டும் அவள் இந்த ஊருக்கு திரும்பி வரவே வேண்டாம் என்ற வெரோனிகா எனக்கு நீங்க வேண்டும் மாமா. உங்களை விட்டு என்னால பிரிஞ்சு இருக்க முடியாது. நம்ம வீட்டில் அத்தை, சின்னத்தை, மாமா, சின்னமாமா, ஆச்சி, பிரகாஷ்மாமா, அர்ச்சனா அண்ணி, ஊர்மி உங்க யாரையும் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது. அதனால தான் சொல்கிறேன் அக்கா கிட்ட சொல்லிருங்க அவங்க எப்பவும் இங்கே வரவே வேண்டாம் என்றாள் வெரோனிகா.
உன்னையை யாரும் என்னை விட்டு பிரிக்க மாட்டாங்க பயப்படாதே என்றவன் நீ கண்டதையும் போட்டு மனசை குழப்பிக்காதே ஒழுங்கா படி. இப்போ உன்னோட ஒரே வேலை படிக்கிறது மட்டும் தான் என்றவன் எதாச்சும் சாப்பிடுகிறாயா என்றான்.
இல்லை மாமா ஒன்றும் வேண்டாம் என்றாள் வெரோனிகா. எனக்கு பசிக்குது என்றவனிடம் பலகாரம் இருக்கே சாப்பிடுறிங்களா என்றவள் ஒரு சில்வர் சம்படத்தை திறந்து அதில் இருந்த சுசியத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
எப்படி வாங்குவேன் கார் ஓட்டிட்டு இருக்கேன்ல என்றிட அப்போ நான் ஊட்டி விடுகிறேன் என்றவள் அவனுக்கு சுசியத்தை ஊட்டி விட்டாள். வடை கூட இருக்கு மாமா என்றவள் அவனுக்கு ஊட்டி விட அதை சாப்பிட்டுக் கொண்டே வண்டியை ஓட்டினான்.
என்ன மாமா நல்லா இருக்கா என்றவளிடம் நல்லா இருக்கு என்றான். இருவரும் பேசிக் கொண்டே ஒரு வழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
சீர் பலகாரம் எல்லாம் எடுத்து வைத்தவள் அத்தை இதை எல்லாம் எங்கே வைக்க என்றிட சுசீலா என்னடி இவ்வளவு பலகாரம் என்று சொல்லியபடி எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தார்.
என்ன மேடம் உங்க அத்தைங்க இரண்டு பேருகிட்டையும் இரண்டு நாள் கதை எல்லாம் பேசியாச்சா என்ற உதயச்சந்திரனிடம் போங்க மாமா என்று சிணுங்கியவள் அமைதியாக படுத்து உறங்கினாள்.
அடுத்த நாள் காலை எழுந்தவள் கடகடவென பள்ளிக்கு கிளம்பிட ரோனி என் கூடவே வா என்றான் உதயச்சந்திரன். இல்லை மாமா நான் அர்ச்சனா அண்ணி கூட வரேன் என்றவளிடம் அதான் சொல்றேன்ல இனி காலையிலும் சரி, சாயங்காலமும் சரி நானே உன்னை அழைச்சுட்டுப் போறேன் என்றான் உதயச்சந்திரன்.
அவளுக்குத் தான் மனது குத்தாட்டம் போட்டது. இருந்தும் மௌனமாக அவனுடன் பைக்கில் சென்றாள்.
என்ன மேடம் இன்னைக்கு உங்க சந்துரு மாமா கூட வந்துருக்கிங்க போல என்ற நிகிலாவிடம் இனிமேல் தினமும் சந்துரு மாமா தான் என்னை அழைச்சுட்டு வருவாங்க என்றாள்.
சரி சரி நீ நேற்று வராததால் எழுத வேண்டியது நிறைய இருக்கு எழுது என்ற ஊர்மிளாவிடம் நோட்புக்கை வாங்கியவள் கட கடவென எழுத ஆரம்பித்தாள்.
என்ன ரோனி பயங்கரமா எழுதுற போல என்ற கிஷோரிடம் நேற்று நான் லீவுடா அதான் என்றவள் தன் வேலையை பார்த்தாள்.
அன்றைய வகுப்புகள் எல்லாம் நல்லபடியாக முடிந்து விட தன் கணவனுடன் அவள் வீட்டிற்கு வந்தாள். நாட்கள் அழகாகவும், வேகமாகவும் கடந்தது. மாமா அர்ச்சனா அண்ணி ஏன் இப்போ எல்லாம் ரொம்ப யோசனையாவே இருக்காங்க என்றாள் வெரோனிகா.
அப்படியா என்றவனிடம் நீங்க அவங்களை கவனிக்கவே இல்லையா என்றாள். நீ கவனிச்சியா என்றவனிடம் ஆமாம் மாமா என்றாள். படிக்கிறதை தவிர மத்த எல்லாமே மேடமோட கவனத்தில் இருக்கும் காலாண்டு பரிட்சையில் மேடம் உங்க கிரேடு என்ன என்றவனிடம் மாமா நான் எல்லாமே நல்லா தான் எழுதினேன் என்றவளிடம் உங்க பிசிக்ஸ் சார் தவிர மற்ற யாரும் மேடத்தை திட்டாமல் இல்லை.
நீ இந்த ஸ்கூலில் சேர்ந்த புதிதில் வேதா சார் வெளியில் நிற்க வச்சாருன்னு கிளாஸ்க்கு போக மாட்டேன் . ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அழுத ஆனால் இப்போ அந்த வானரக் கூட்டத்தோட சேர்ந்து நீதான் பெரிய வானரமா மாறிட்ட என்றான் உதயச்சந்திரன்.
மாமா என்றவளிடம் அப்போ நீ வானரம் இல்லைன்னு சொல்ல வறியா என்றான் உதய். மாமா ப்ளீஸ் நாங்க ஒன்றும் வானரப்படை இல்லை ராட்சசக்கூட்டம் என்றவள் அவனது கன்னத்தில் கிள்ளி விட்டு ஓடிச் சென்றாள்.
ஏய் வெரோனிகா இங்கே வா என்றவனிடம் சாரி மாமா நான் எதாச்சும் சாப்பிட்டு வரேன் பசிக்குது என்றவள் ஓடியே விட்டாள்.
என்ன அண்ணி இப்போ எல்லாம் ரூமுக்குள்ளே அடைஞ்சு கிடக்கிறிங்க என்ற வெரோனிகா அர்ச்சனாவிடம் முறுக்கை நீட்டிட அதை வாங்கிக் கொண்டவள் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே என்றாள்.
என்ன அண்ணி நீங்க எனக்கு உங்களைத் தெரியாதா நானும் கொஞ்ச நாளா கவனிச்சுட்டு தான் இருக்கிறேன். நீங்க எப்போ பாரு எதையோ யோசிச்சுட்டே இருக்கிங்க. இப்போ தான் சந்துரு மாமாகிட்ட சொன்னேன்.
அர்ச்சனா அண்ணி எப்போ பாரு எதையோ யோசிச்சுட்டே இருக்காங்கனு என்றவளிடம் ரோனி உட்காரு என்றாள் அர்ச்சனா.
உட்கார்ந்துட்டேன் சொல்லுங்க என்றவளிடம் லவ் பற்றி என்ன நினைக்கிற என்றாள் அர்ச்சனா. உங்க கிட்ட ஒரு சீக்ரெட் சொல்லுவேன் அதை நீங்க யார்கிட்டேயும் சொல்ல மாட்டிங்கனா நான் சொல்கிறேன் என்றாள் வெரோனிகா.
ப்ராமிஸ் நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன் என்ற அர்ச்சனா அப்படி என்ன சீக்ரெட் என்றாள். லவ் பற்றி எனக்கு தெரியாது ஆனால் நான் என் சந்துரு மாமாவை ரொம்ப லவ் பண்ணுறேன் என்றாள் வெரோனிகா.
ஏன்டி அவர் உன்னோட ஹஸ்பண்ட் தானே அவரை லவ் பண்ணுறதில் என்ன சீக்ரெட் இருக்கு என்றாள் அர்ச்சனா. பின்ன இல்லையா அண்ணி. எங்க கல்யாணம் எப்படி நடந்துச்சுனு உங்களுக்கு தெரியும் தானே என்ற வெரோனிகா ஏதோ சொல்ல வர என்ன இங்கே அரட்டை என்று வந்தான் உதயச்சந்திரன்.
…..தொடரும்….