அரட்டை எல்லாம் ஒன்றும் இல்லை மாமா சும்மா பேசிட்டு இருந்தோம் என்ற வெரோனிகா மாமா முறுக்கு சாப்பிடுங்க என்று அவனிடம் பலகாரத் தட்டை நீட்டினாள். நீ சாப்பிடு எனக்கு வேண்டாம்
என்றவன் ரோனி உன்னை அம்மா கூப்பிடாங்க என்றிட சரி அண்ணி நான் அப்பறம் வருகிறேன் என்று ஓடி விட்டாள் வெரோனிகா.
சொல்லு அர்ச்சனா என்ன விசயம். ஏன் இப்போ எல்லாம் முன்னே மாதிரி நீ இருக்கிறதில்லை. எப்போ பாரு எதையாவது யோசிச்சுட்டே இருக்கிற என்றான் உதயச்சந்திரன்.
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா என்றவளிடம் பொய் சொல்லாதே என்ன விசயம் என்றிட அண்ணா நான் ஒருத்தரை விரும்புகிறேன். என்னோட காலேஜ் சீனியர் . இப்போ அவங்க அப்பாவோட பிசினஸ் பார்த்துட்டு இருக்கிறார் என்ற அர்ச்சனா இதை எப்படி வீட்டில் சொல்லுறதுனு தான் தயக்கமா இருக்கு என்றாள் அர்ச்சனா. இவ்வளவு தானா இதற்கு என்ன தயக்கம். உன்னோட அவரைப் பத்தின டீட்டெய்ல்ஸ் சொல்லு நான் விசாரிச்சு பார்த்துட்டு அப்பா, சித்தப்பா , அப்பத்தா எல்லோர்கிட்டையும் கலந்து பேசி நல்ல முடிவா சொல்கிறேன் என்றான் உதயச்சந்திரன்.
ரொம்ப தாங்க்ஸ் அண்ணா என்றவளிடம் அர்ச்சனா நீ என்னோட தங்கச்சி உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என்னுடைய கடமை என்றவன் தங்கையின் கன்னத்தில் செல்லமாக அடித்து விட்டு கிளம்பினான்.
என்ன அத்தை கூப்பிட்டிங்களா என்ற வெரோனிகாவிடம் நாங்க கூப்பிடவில்லையே என்றனர் மலர்கொடி, சுசீலா இருவரும். அப்பறம் மாமா ஏன் நீங்க கூப்பிட்டதா சொன்னாங்க என்றவளிடம் அதை உன் மாமாகிட்ட தான் நீ கேட்கனும் என்ற சுசீலா ரோனி இந்த வெங்காயத்தை மட்டும் வெட்டிக் கொடுக்கிறியா என்றதும் சரி கொடுங்க என்று வெங்காயம் வெட்ட ஆரம்பித்தாள் வெரோனிகா.
என்ன ரோனி ஏன் அழுதுட்டு வர என்ற ஊர்மிளாவிடம் மாமியார் கொடுமை என்று அவள் கூறிட ஓஓ வெங்காயம் வெட்ட சொல்லுறது தான் மாமியார் கொடுமையா என்ற ஊர்மிளா சிரித்திட சிரிக்கிறியா நல்லா சிரி உன் மாமியார் உன்னை பச்சைமிளகாய் வெட்ட சொல்லி கொடுமை படுத்துவாங்க என்றாள் வெரோனிகா.
ஓஓ அய்யோ அண்ணியாரே நான் பாவம் இப்படி எல்லாம் சபிக்காதீர்கள் என்றாள் ஊர்மிளா. நாத்தனாரே நீங்கள் ரொம்ப நடிக்காதீர்கள் என்ற வெரோனிகா சிரித்திட ஊர்மிளாவும் சிரித்து விட்டாள்.
ஏய் வாயாடிகளா என்னடி நாடகம் நடிக்கிறிங்க என்ற கல்யாணியிடம் வள்ளி திருமணம் என்றாள் வெரோனிகா. நீ தான் வள்ளியா எங்கே உன் முருகன் என்ற கல்யாணியிடம் ஹும் அவரு தெய்வானையை தேடி போயிருக்காராம் என்றாள் ஊர்மிளா. எதேய் தெய்வானையா என் முருகருக்கு வள்ளி, தெய்வானை இரண்டும் நான் தான். வேற சக்காளத்தி வந்தாள் என்றால் ஆஞ்சுபுடுவேன் ஆஞ்சு என்றாள் வெரோனிகா. அவளைப் பார்த்த கல்யாணிதேவி சிரித்திட அவரை முறைத்து விட்டு சென்றாள் வெரோனிகா.
ஏய் குட்டி நில்லுடி என்ற கல்யாணியிடம் உங்க கிட்ட பேச மாட்டேன் போங்க என்று ஓடி விட்டாள் வெரோனிகா. என்ன மேடம் ஏன் ஒரு மாதிரி இருக்கிங்க என்ற உதயச்சந்திரனிடம் ஒன்றும் இல்லை என்றாள்.
நீ ஒன்றும் இல்லைனு சொல்லுற தோரணையே சரி இல்லையே சொல்லு என்ன விசயம் என்றான் உதயச்சந்திரன்.
எல்லாம் இந்த ஆச்சி தான் மாமா நீங்க முருகனா இருந்தால் உங்க வள்ளி, தெய்வானை இரண்டும் நான் தானே என்றவளிடம் என்ன சொல்லுற நீ புரியுற மாதிரி சொல்லு என்ற உதயச்சந்திரனிடம் நடந்தவற்றைக் கூறினாள்.
அவனை முறைத்தவன் இப்போ இந்த பேச்சு எல்லாம் ரொம்ப முக்கியமா என்ன உனக்கு இன்னும் கொஞ்ச நாளில் எக்ஸாம் ஸ்டார்ட் ஆகப் போகிறது அது ஞாபகத்தில் இருக்கா இல்லையா என்றவனிடம் எல்லாம் இருக்கு என்றவள் முனகி விட்டு சென்று படுத்திட ஓய் என்ன சேட்டையா போயி படுத்துட்டு இருக்க வா வந்து படி என்றவன் அவளுக்கு பாடம் நடத்த ஆரம்பித்தான்.
அவள் அமைதியாக கவனித்தவள் அவனிடம் தன் சந்தேகங்களை கேட்டிட அவனும் அவளுக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்தான். மாமா எனக்கு தூக்கம் வருது என்றிட சரி தூங்கு என்றவன் அவளைத் தூங்கச் சொல்லி விட்டு தன் வேலையை கவனித்தான்.
என்ன தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு தூங்காமல் வேடிக்கை பார்த்திட்டு இருக்க என்றவனிடம் மாமா லைட் ஆஃப் பண்ணினால் தானே தூங்க முடியும் என்று அவள் கூறிட சரி ஓகே என்றவன் தனது லேப்டாப்பை மூடி வைத்து விட்டு விளக்கை அணைத்திட அவள் போர்வையை போர்த்திக் கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.
என்ன மாமா யோசனை என்றவளிடம் ஒன்றும் இல்லை நீ கிளம்பு உனக்கு ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கு தானே என்றவனிடம் நான் ரெடி மாமா என்றாள்.
அவளை தன்னுடன் அழைத்துச் செல்ல என்ன மாமா இந்த டிரஸ்ஸோட வரிங்க என்றாள் வெரோனிகா. ஏன் இந்த டிரஸ்க்கு என்ன ஷார்ட்ஸ் போட்டுட்டு வொர்க்கிங் ஹவர்ல தான் வரக்கூடாது. வொய்ப்பை டிராப் பண்ண வரலாம் என்றவன் அம்மாகிட்ட காபி வாங்கி குடிச்சுட்டு கிளம்பு என்றான்.
அத்தை என்றவளிடம் காபியை நீட்டினார் சுசீலா. தாங்க்ஸ் அத்தை என்றவள் காபி குடித்து விட்டு கிளம்பினாள். அவன் போகலாமா என்றிட போகலாம் மாமா என்றாள் வெரோனிகா.
மாமா என்றவளிடம் என்ன என்றான் உதயச்சந்திரன். உங்களை பார்க்கும் போது எனக்கு சிரிப்பு வருது ஏதோ ஸ்கூல் பையன் போல இருக்கிங்க என்றிட ஷார்ட்ஸ் போட்டா உங்க மாமா ஸ்கூல் பையன் ஆகிட்டானா நல்லது நல்லது என்று சொன்னவன் சிரிச்சது போதும் மகாராணி உங்க ஸ்கூல் வந்துருச்சு இறங்கி உள்ளே போங்க என்றவனைப் பார்த்து புன்னகைத்தபடி பாய் மாமா என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பினாள்.
என்ன மேடம் சிரிச்சுட்டே வரிங்க என்ற கிஷோரிடம் ஒன்றும் இல்லை என்றாள் வெரோனிகா. என்னது ஒன்றும் இல்லையா என்னனு சொன்னினா நாங்களும் சிரிப்போம்ல என்றான் கிஷோர்.
கொஞ்சம் பர்சனல் கிஷோர் ப்ளீஸ் என்றவள் சென்று அமர்ந்திட ப்ரண்ட்ஸ்க்கு கூட தெரியாமல் என்ன பர்சனல் என்ற கிஷோரிடம் வெரோனிகா ஏதோ சொல்ல வர அதற்குள் அர்ஜுன் பேச ஆரம்பித்தான்.
ஏன் ப்ரண்ட்ஸ்க்கு தெரியாமல் பர்சனல் இருக்க கூடாதா ஏன் ரோனியை போட்டு கொஷ்டீன் கேட்டு இம்சை பண்ணுற வேதா வரப் போறாரு கொஞ்சம் சைலண்ட்டா இரு என்றான் அர்ஜுன்.
என்னடா வர வர ரொம்ப தான் ஓவரா பண்ணுறிங்க என்று முணங்கிய கிஷோர் சென்று விட ஏன் அர்ஜுன் அவன் கிட்ட இப்படி சொன்ன அவனும் என் ப்ரண்ட் தானே என்றாள் வெரோனிகா.
சரி சரி சொல்லு அது ஒரு ஓட்டை வாய் ஊரெல்லாம் சொல்லட்டும் என்று அர்ஜுன் கூறிட சரி சரி கோவிச்சுக்காதே என்றவள் அவனது கையில் அடித்திட அம்மா வலிக்குது ரோனி என்று சிரித்தான் அர்ஜுன்.
லூசு வலிச்சா அழனும்டா என்றவள் சிரித்திட அவனும் அழுவது போல் நடித்திட அசிங்கமா இருக்க என்றாள் வெரோனிகா.
இங்கே பாருடி இது இரண்டும் இப்படி விளையாடுதுங்க. இந்த அர்ஜுன் சரியான உம்முனாமூஞ்சி இவள்கிட்ட இப்படி சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கிறான் என்ற கார்த்திகாவிடம் ஆமாம்டி எல்லாம் சரியான கல்லுளிமங்கன் தான் போல என்றாள் சிவரஞ்சனி.
அப்போ இவளோட ஆளு பிரகாஷ் சார் இல்லையோ என்ற கார்த்திகாவிடம் நான் உதய் சாருனு நினைச்சேன் கடைசியில் அர்ஜுன் என்று இருவரும் சிரித்திட என்னங்கடி சிரிப்பு என்று வந்தாள் பூர்ணிதா.
இல்லை பூர்ணி உன் ஆளு அவகிட்ட எப்படி பேசிட்டு இருக்கிறான் பாரு இனிமேல் இவன் உனக்கில்லை என்று சிரித்தனர் கார்த்திகா, சிவரஞ்சனி இருவரும்.
பேச தானே செய்கிறான். போங்கடி போயி வேற வேலையைப் பாருங்க என்ற பூர்ணிதா வேதா சார் வந்துட்டாரு என்றிட அவளை முறைத்து விட்டு தங்களின் இடத்தில் அமர்ந்தனர் கார்த்திகா, சிவரஞ்சனி இருவரும்.
என்ன ரோனி திரும்ப வீட்டுக்கு போகலையா என்ற விஷாலிடம் எப்படி போறது சந்துருமாமாகிட்ட நான் சொல்லவே இல்லையே என்றாள் வெரோனிகா.
மணி ஏழரை தானே ஆகுது இன்னும் ஒன்றரைமணி நேரம் நீ தனியாகவா இருப்ப என்றாள் நிகிலா. தனியாக பள்ளியில் இருப்பதா நினைக்கவே அவளுக்கு பயமாக இருந்தது.
நீ சாப்பிடனுமே ரோனி என்ற ஊர்மிளா நாம டபிள்ஸ் அடிச்சு வீட்டுக்கு போகலாமா என்றாள். சரி வா என்று ஊர்மிளாவுடன் வெளியே வர உதயச்சந்திரன் நின்றிருந்தான்.
மாமா என்று அவனருகில் ஓடியவள் நான் உங்க கிட்ட கிளாஸ் முடியுற டைம் சொல்லவே இல்லையே என்றிட நீ சொல்லவில்லை என்றால் எனக்கு தெரியாதா பைக்ல உட்காரு என்றான் உதயச்சந்திரன்.
எப்படி மாமா தெரியும் ஊர்மி சொன்னாளா என்றவளிடம் நானும் இந்த ஸ்கூலில் தான் படிச்சேன். அதுவும் உங்க வேதா சார் கிட்ட தான். அதனால எனக்கு எல்லாம் தெரியும் என்றவன் என்ன சாப்பிடுற என்றான்.
வீட்டுக்கு போயி அத்தை என்ன வச்சுருக்காங்களோ அதைத் தான் என்றவளிடம் நாம ஹோட்டலுக்கு போறோம் என்றவன் ஒரு ஹோட்டலின் முன் வண்டியை நிறுத்திட அவள் இறங்கி அவனுடன் கடைக்குள் சென்றாள்.
மாமா நீங்க வீட்டுக்குப் போயி டிரஸ் மாத்திட்டிங்களா என்றவளைப் பார்த்தவன் மேடம் தான் என்னை கிண்டல் பண்ணி சிரிக்கிறிங்களே அதான் என்றிட ஸாரி மாமா நான் விளையாட்டுக்கு தான் சிரிச்சேன் என்றாள்.
பரவாயில்லை ரோனி என்றவன் சாப்பிடு என்றிட அவளும் சாப்பிட ஆரம்பித்தள். அந்த நேரம் அவன் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்க யாரையோ தேடிட்டு இருக்கிங்களா மாமா என்றாள் வெரோனிகா.
ஆமாம் ரோனி ப்ரண்ட் ஒருத்தர் வருவதா சொன்னாரு என்றவன் அர்ச்சனா வரவும் ரோனி நீ அர்ச்சனா கூட ஸ்கூல் போயிரு எனக்கு ஒரு வேலை இருக்கு என்றான்.
அவளும் அர்ச்சனாவுடன் கிளம்பிட என்ன அண்ணி ஏன் பதற்றமாவே இருக்கிங்க என்றாள் வெரோனிகா. ஒன்றும் இல்லை ரோனி என்றவள் வேகமாக பைக்கை ஓட்டிட ஏன் அண்ணி இவ்வளவு வேகமா பைக் ஓட்டுறிங்க என்றிட எனக்கு ஒரு வேலை இருக்கு ரோனி உன்னை விட்டுட்டு நான் சீக்கிரம் திரும்பனும் என்றாள்.
இவங்க என்ன இவ்வளவு வேகமா போறாங்க அவங்க ஹெல்மெட் போட்டிருக்காங்க ஆனால் நான் என்று நினைத்தவள் அண்ணி பார்த்து என்று சொல்லி முடிக்கும் முன் இருவரும் பொத்தென்று கீழே விழுந்தனர்.
…..தொடரும்…