விதியின் முடிச்சு..(41)

4.3
(7)

யாருக்கா இவங்க இவங்களுக்கு என்ன தெரியும் என் மாமா பற்றி என்றவள் என் மாமாவுக்கு மெரூன் கலர் பிடிக்காது என்ற வெரோனிகா அக்கா வேற கலர் எடுங்க என்றாள். ஓஓ அப்போ உன் மாமாவுக்கு என்ன கலர் பிடிக்கும் என்றாள் ஸ்ரீஜா.

 

என் சந்துரு மாமாவுக்கு பர்பிள் கலர் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்ற வெரோனிகா திரும்பிட அவளை நக்கலாக பார்த்தாள் ஸ்ரீஜா. அவள் ஒரு பர்பிள் கலர் சுடிதாரை செலக்ட் செய்தாள்.

 

அம்மா என்று அழைத்த குரலில் ஸ்ரீஜா, வெரோனிகா இருவருமே திரும்பிட கையில் குழந்தையுடன் தேவ் வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்ட வெரோனிகா உதயச்சந்திரன் என்று நினைத்தவள் ஸ்தம்பித்து நிற்க ஸ்ரீஜா குழந்தை அம்மா, அம்மானு அழறாள் என்ற தேவ் குழந்தையை அவளிடம் கொடுத்து விட்டு இந்திரஜாவைப் பார்த்து என்ன இந்து டிரஸ் செலக்ட் பண்ணிட்டிங்களா என்றான்.

 

ஏன் நிலா உன் அப்பாகிட்ட தானே இருந்த என்ற ஸ்ரீஜா தன் மகளுக்கு உடை எடுக்க ஆரம்பிக்க வெரோனிகாவின் இதயம் சுக்குநூறாக உடைந்து விட்டது. ஊர்மிளா ஒருமுறை ஸ்ரீஜா அண்ணி என்று சொன்னது ஞாபகம் வர அப்போ மாமா இவங்க கூட என்று அவளால் நினைத்து கூட பார்க்க முடியாமல் தலையைப் பிடித்துக் கொண்டு பொத்தென்று மயங்கி விழுந்தாள்.

 

ரோனி, ரோனி என்று பதறிய இந்திரஜா அவளை மடியில் கிடத்தி கன்னம் தட்டிட என்னாச்சு இந்து என்ற தேவ் அவளது நாடியை சோதித்து பார்த்தவன் ஒன்றும் இல்லை அதிர்ச்சியில் மயக்கம் தான் என்றவன் ஏன் அதிர்ச்சி என்றிட உங்களை அவள் உதய் மாமான்னு நினைச்சுட்டா போல என்ற இந்திரஜா அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தாள்.

 

அந்த நேரம் சரியாக உதயச்சந்திரனும் அங்கு வந்து விட என்னாச்சு என்றான். அதிர்ச்சியில் மயங்கிட்டாங்க போல என்ற தேவச்சந்திரனை கண்டு கொள்ளாமல் மனைவியின் கன்னம் தட்டி அவளை எழுப்பினான் உதயச்சந்திரன்.

 

 

மாமா அவளுக்கு ஒன்றும் இல்லை தேவ் மாமாவை பார்த்து நீங்க தான்னு நினைச்சு அதிர்ச்சியில் மயங்கிட்டாள் என்ற இந்திரஜாவிடம் சரி என்றவன் அவளை வீட்டிற்கு அழைத்து வந்தான்.

 

என்னாச்சு உதய் ஏன் ரோனியை தூக்கிட்டு வர என்ற சுசீலாவிடம் ஒன்றும் இல்லை சித்தி என்றவன் அவளை அறையில் படுக்க வைத்தான்.

 

தனது தோழி ரூபிணிக்கு போன் செய்தவன் அவளை வீட்டிற்கு வரச் சொல்ல அவளும் வந்து வெரோனிகாவை பரிசோதித்து விட்டு ஒன்றும் பிரச்சனை இல்லை இது அதிர்ச்சியால ஏற்பட்ட மயக்கம் தான் என்றாள்.

 

ஸாரி மாமா என்ற இந்திரஜாவிடம் பரவாயில்லை என்றான் உதயச்சந்திரன். மெல்ல கண் விழித்தவள் தான் எங்கிருக்கிறோம் என்று சுற்றும், முற்றும் பார்த்து விட்டு எழுந்து கொள்ள ரோனி என்று வந்தான் உதயச்சந்திரன்.

 

அவனது சட்டையைப் பிடித்த வெரோனிகா ஏன் மாமா என்னை ஏமாத்துனிங்க என்றாள். என்ன சொல்லுற வெரோனிகா என்ற உதயச்சந்திரனிடம் என்ன மாமா ஒன்றும் தெரியாத மாதிரி நடிக்கிறிங்களா யாரு மாமா அந்தக் குழந்தை உங்களை ஏன் அது அப்பானு கூப்பிடுது என்று அழுதவளிடம் ரோனி ப்ளீஸ் நான் சொல்லுறதைக் கொஞ்சம் காது கொடுத்து கேளு என்றான் உதய்.

 

என்ன பொய் சொல்லப் போறிங்க மாமா என்றவளிடம் பொய்யா , நானா நான் உன்கிட்ட பொய் சொல்லுவேனா ரோனி என்று அவன் ஏதோ சொல்ல வர என் மேல சத்தியம் அந்தப் பொண்ணு யாரு, அவங்க குழந்தை ஏன் உங்களை அப்பானு சொன்னுச்சு சொல்லுங்க மாமா என்றவளிடம் அது என்னோட குழந்தை தான் என்றான் உதயச்சந்திரன். அவனது கன்னத்தில் மாறி, மாறி அறைந்தவள் ஏன் மாமா என்னை ஏமாத்தினிங்க என்று அழுது புலம்பிட ஏய் வாயை மூடுடி. சும்மா அழுது சீன் போட்டுட்டு நான் என்ன ஆசைப் பட்டாடி உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேன். என் அப்பத்தாவோட கட்டாயம் தான் என்றவன் இந்த பத்தரை மாதத்தில் உன்னை ஒருமுறையாவது நெருங்கி வந்திருப்பேனா எனக்கு உன் மேல எந்த ஆசையும் இல்லை. அவளைத் தான் காதலிச்சேன். வீட்டிற்கு தெரியாமல் அவள் கூட குடும்பம் நடத்தினேன். எங்களுக்கு ஒரு குழந்தை என்று அவன் கூறிட நொந்து போனவள் ஓடிச் சென்று பால்கணியில் இருந்து கீழே குதித்தாள்.

 

குப்புற பாய்ந்து விழுந்ததால் அவளது முகம் தரையில் வேகமாகப் பட்டு சிதறி விழ அம்மா ஆஆ என்று அலறியபடி எழுந்தாள் வெரோனிகா.

 

 

அவளுடைய சத்தம் கேட்டு ஓடி வந்த உதயச்சந்திரன் ரோனி என்னாச்சுடா என்று அவளை அணைத்துக் கொள்ள அவனிடம் இருந்து திமிறி விலகியவள் அவனையே கோபமாக பார்த்தாள். ஒருவேளை நான் அந்தப் பொண்ணை பற்றி கேட்டு என் கனவுல கண்டது போல எதாவது சொல்லிட்டிங்கனா என்னால அதை தாங்கிக்கவே முடியாது மாமா என்று நினைத்தவள் அமைதியாக எழுந்து கொண்டாள்.

 

என்னாச்சுமா ஏன் மயங்கி விழுந்த என்றவனிடம் ஒன்றும் இல்லை மா என்று கூற வந்தவள் மாமா என்று அழைக்காமலே வார்த்தையை முடித்து விட்டாள்.

 

அவன் ஏதோ சொல்ல வர அவளோ எனக்கு தூக்கம்வருது என்று சொல்லி விட்டு படுத்துக் கொண்டாள். சாப்பிட்டு படு ரோனி என்றவனிடம் எனக்கு பசிக்கவில்லை ப்ளீஸ் என்ற வெரோனிகா சென்று படுத்துக் கொண்டாள்.

 

என்ன ரோனி ஏன் என்கிட்ட எதுவும் பேச மாட்டேங்கிற என்று நினைத்தவன் உறங்கும் அவளது தலையை கோதி விட்டான். அவள் அவன் செல்லும் வரை உறங்குவது போல படுத்திருந்தாள். அவன் சென்ற பிறகு எழுந்து அழ ஆரம்பித்தாள். எவ்வளவு நேரம் அழுதாளோ தெரியவில்லை அப்படியே உறங்கிப் போனாள்.

 

என்னப்பா ரோனி என்ன சொன்னாள் என்ற மலர்கொடியிடம் அவளுக்கு ஒன்றும் இல்லைம்மா நீங்க கவலைப் படாமல் சாப்பிட்டு தூங்குங்க என்று சொல்லி விட்டு அறைக்கு வந்த  உதயச்சந்திரன் உறங்கும் அவளது முகத்தை பார்த்திட கண்கள் எல்லாம் வீங்கி இருப்பது போல இருக்கவும் அழுதிருப்பாள் போல என்று நினைத்தவன் அவளருகில் படுத்துக் கொண்டான்.

 

 

அடுத்தடுத்து வந்த நாட்களில் அவள் தனது பரீட்சையில் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்து பெரும்பாலும் படித்துக் கொண்டே இருந்தாள். அவள் படித்துக் கொண்டே இருப்பதைக் கண்ட உதயச்சந்திரனும் அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய முற்படவில்லை. அதற்கு இரண்டு காரணம் ஒன்று அவள் ஏற்கனவே ஒருமுறை அவனிடம் சொல்லி இருக்கிறாளே உங்களைப் போல வேற ஒருத்தர் என் முன்னே நின்றால் என்னால் கண்டு பிடிச்சுற முடியும் என்று அதனால் அவள் முன் நின்றவன் உதய் இல்லை என்று அவள் யூகித்திருப்பாள் என்று நம்பினான்.

 

 

அவளோ சின்னப் பொண்ணு. அந்த நேரத்தில் அவளது மனநிலை குழப்பத்தில் இருந்தது. ஸ்ரீஜா வேறு அவளை சீண்டிக் கொண்டிருந்தாள். அதனால் அவள் யோசிக்கவே இல்லை. எதிரில் நிற்பவன் தன் கணவன் தான் என நம்பி அவள் ஏமாந்து விட்டாள். அதைப் பற்றி எங்கே அவனிடம் கேட்கப் போயி அவள் கனவு பலித்து விடுமோ என்ற பயத்திலே அவளும் அவனிடம் அதைப்பற்றி பேசவில்லை.

 

 

இரண்டாவது காரணம் அவளது பரீட்சை சமயத்தில் அவளுக்கு ஸ்ரீஜா பற்றி ஏதேனும் கூறினால் அவளது பரீட்சையில் அவள் கோட்டை விட்டு விட்டால் அதனாலே உதய் அவளிடம் எதையும் பேசவில்லை.

 

 

நாட்கள் கட கடவென ஓடியது. ப்ராக்டிகல் எக்ஸாம் முடிந்த சில நாட்களிலே பப்ளிக் எக்ஸாமும் ஆரம்பமானது. வெரோனிகா வீட்டிலும் யாருடனும் பழையபடி பேசுவதில்லை. பரீட்சைக்கு அதிகம் படிக்கிறாள் அதனால் தான் அவள் யாரிடமும் பேசுவதில்லை என்று நினைத்த அனைவரும் அதை ஒரு விசயமாகவே நினைக்கவில்லை.

 

என்ன ரோனி என்னாச்சு என்ற அர்ஜுனிடம் ஒன்றும் இல்லையே என்றாள் வெரோனிகா. இல்லை ரோனி நீ முன்னே மாதிரி இல்லை என்றவனிடம் நான் முன்னே மாதிரி தான் இருக்கேன் என்றவள் கோபமாக பரீட்சை அறைக்கு சென்று விட்டாள். என்ன தான் மனதில் கோபம், கவலை இருந்தாலும் பரீட்சை நன்றாக எழுதினாள் வெரோனிகா.

 

 

 

கடைசி பரீட்சையும் முடிந்து விட்டது. வீட்டிற்கு வந்த வெரோனிகா தன் மாமியாரின் அருகில் வந்தாள். அத்தை என்ற வெரோனிகாவிடம் வா ரோனி என்ன வேண்டும் ஜூஸ் வேண்டுமா என்றார் மலர்கொடி. எக்ஸாம் முடிஞ்சுருச்சு என்றவளிடம் ஆமாம்டி எக்ஸாம் முடிஞ்சுருச்சு என்றார் மலர்கொடி.

 

நான் என் அம்மா வீட்டுக்கு போகட்டுமா என்றவளிடம் அட இது கேட்கத் தான் தயங்கினாயா தாராளமா போயிட்டு வா. உதய்கிட்ட சொன்னாலே போதுமே அவனே உன்னை அழைச்சுட்டு போவானே என்ற மலர்கொடி உதய் என்றிட என்னம்மா என்று வந்தான்.

 

சொல்லுங்கம்மா என்ற உதயச்சந்திரனிடம் ரோனிக்கு தான் லீவு விட்டாச்சே அவளை கொஞ்ச நாளைக்கு உன் மாமனார் வீட்டில் விட்டுட்டு வாயேன் என்றார் மலர்கொடி. என்னம்மா நீங்க அவளுக்கு தான் எக்ஸாம் முடிஞ்சு லீவு எனக்கு ஸ்கூல் முடிய ஒரு மாதம் இருக்கு என்னால எப்படி அவள் கூட ஊருக்கு போக முடியும் என்றான் உதயச்சந்திரன்.

 

உங்களுக்கு வேலை இருந்தால் நீங்க வர வேண்டாம் என்னை மட்டும் பஸ்ல அனுப்பி வைங்க என்றாள் வெரோனிகா. உன்னை எப்படி தனியா அனுப்ப முடியும் ரோனி சம்மந்தி என்ன நினைப்பாங்க என்ற மலர்கொடி ஒரு மாதம் தானே ரோனி உன் சந்துரு மாமாவும் உன் கூடவே வருவான். இரண்டு பேரும் ஊருக்கு போயிட்டு வாங்க என்ற மலர்கொடி தன் வேலையை கவனித்துக் கொண்டார்.

 

 

அவள் சோகமாக தன்னறையில் அமர்ந்திருந்தாள். வெரோனிகா என்ற உதயச்சந்திரனிடம் என்ன என்பதைப் போல ஒரு பார்வை பார்த்தாள். இப்போ ஏன் ஒரு மாதிரி இருக்க. இப்போ எல்லாம் நீ ஏன் யார்கிட்டையும் பேசவே மாட்டேங்கிற. உனக்கு என்ன பிரச்சனைனு என்கிட்டையாவது சொல்லலாமே என்றான் உதயச்சந்திரன்.

 

எனக்கு என் அம்மாவை பார்க்கனும் போல இருக்கு என்றவளிடம் நானும் உன் அம்மானு தானே சொல்லுவ அதான் என்னை பார்க்கிறாயே என்றான் உதயச்சந்திரன்.

 

 

என்ன தான் நீங்க என்னை அம்மா மாதிரி  பார்த்தாலும் என்னோட அம்மா ஆக முடியாது என்று சொல்ல வந்த வார்த்தைகளை முழுங்கியவள் எனக்கு என் அம்மாவை பார்க்கனும் என்றாள்.

 

சரி ஒரு பத்துநாள் பொறுத்துக்கோ அப்பறம் இரண்டு பேரும் போகலாம் என்றவனிடம் எனக்கு நாளைக்கே என் அம்மாவை பார்க்கனும். நீங்க கூட

வர வேண்டாம் நான் பஸ்ல போயிக்கிறேன. என்றாள் வெரோனிகா.

 

 

…..தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!