விதியின் முடிச்சு…(6)

4.4
(9)

உன்கிட்ட நான் என்ன சொன்னேன் ஊர்மிளாகிட்ட நோட்ஸ் வாங்கி எழுதுனு சொன்னேன் செய்தியா என்ற உதயச்சந்திரனிடம் இல்லை ஆச்சி கூப்பிட்டாங்க அதான் என்று இழுத்தால் வெரோனிகா.

 

 

ஆச்சி கூப்பிட்டால் எனக்கு படிக்கிற வேலை இருக்கு ஆச்சினு சொல்லிட்டு வந்து நான் சொன்ன வேலையை செய்திருக்கனும் அதை விட்டுட்டு இரண்டுமணி நேரமா இப்படி கதை பேசிட்டு இருக்க நீ எப்படி உருப்படப் போற உதவாக்கரை.

 

எல்லாம் உங்களை சொல்லனும் அப்பத்தா கொஞ்சம் கூட பொறுப்புனா என்னனே தெரியாத ஒரு முட்டாளை கல்யாணம் பண்ணி வச்சு இது கூட போராட என்னால முடியலை என்றான் உதயச்சந்திரன்.

 

உதய் என்ன பேசுற அவள் சின்னப் பொண்ணு என்ற மலர்கொடியிடம் ஆமாம் சின்னப் பொண்ணு தான் ஆனால் பெரிய மனிஷி போல பெரியவங்களோட உட்கார்ந்து வாயடிச்சா நாளைக்கு எக்ஸாமில் அப்பத்தா சொன்ன கதையையா எழுதி வைப்பாள் என்றவன் இப்போ இவள் ப்ளஸ்டூ போகிறாள்.

 

அவங்க ஊரு ஸ்கூலில் என்ன படிச்சாளோ எனக்கு தெரியாது நம்ம ஸ்கூலில் எல்லாமே அட்வான்ஸ் இவள் அதற்கு ஏற்ற மாதிரி அவளை டெவலப் பண்ணிக்கனும் என்றான். எனக்கு இவள் ஸ்டேட் பர்ஸ்ட், ஸ்கூல் பர்ஸ்ட் வர வேண்டும்னு எல்லாம் கிடையாது ஜஸ்ட் பாஸ் பண்ணினாலே போதும்.

 

இவள் படிச்ச ஸ்கூலில் எல்லாம் விசாரிச்சாச்சு மேடம் ஒன்னா நம்பர் மக்கு அதனால தான் நோட்ஸ் எழுது,படினு சொன்னது என்றவன் கோபமாக பேசிக் கொண்டிருக்க வெரோனிகா அழ ஆரம்பித்தாள்.

 

ஏய் இப்போ உன்னை என்ன சொல்லிட்டாங்கனு  இப்படி டிராமா பண்ணிகிட்டு இருக்க. உன்னை நான் வீட்டு வேலை பார்க்க சொல்லவில்லை படிக்க தான் சொல்லிருக்கேன் அதை ஒழுங்கா செய் சும்மா சும்மா அழுத அவ்வளவு தான் என்று கோபமாக திட்டி விட்டு சென்றான் உதயச்சந்திரன்.

 

அவள் அழுது கொண்டே இருந்தாள். ரோனி என்ற மலர்கொடியைக் கட்டிக் கொண்டவள் நான் என்ன தப்பு பண்ணினேன் அத்தை அவரு என்னை இப்படி திட்டிட்டு போறாரு. ஸ்கூல் ஆரம்பிக்க இன்னும் மூன்று நாள் இருக்கே நாளைக்கு எழுதலாம்னு இருந்தேன் என்றவளிடம் அழாதம்மா அவன் அப்படித் தான்.

 

அவன் படிக்கும் போது அவன் ஸ்கூல் பர்ஸ்ட் அதான் இப்படி என்ற மலர்கொடி அவன் உன் நல்லதுக்கு தானே திட்டுறான் என்று மருமகளை சமாதானம் செய்தார்.

 

ஊர்மிளா என்ற மலர்கொடியிடம் சொல்லுங்க பெரியம்மா என்றாள் ஊர்மிளா. நோட்ஸ் எல்லாம் உன் அண்ணிகிட்ட கொடு அவள் எழுதட்டும் என்றார் மலர்கொடி.

 

ரோனி அழக்கூடாது ஊர்மிகிட்ட நோட்ஸ் வாங்கி எழுது என்றவர் மருமகளை அனுப்பி வைத்தார்.

 

என்ன அத்தை இந்தப் பையன் இப்படி பண்ணுகிறான் என்ற மலர்கொடியிடம் தப்பு பண்ணிட்டேனோன்னு தோணுது மலர். அவள் சின்னப் பொண்ணு சின்ன சின்ன விசயத்திற்கு கூட இவ்வளவு கோபம் படுகிறான். ஒருவேளை அவளைப் பிடிக்காமல் இவன் இப்படி நடந்துக்கிறானோ என்ற கல்யாணிதேவியிடம் எனக்கு புரியவில்லை அத்தை உங்க மகன் கிட்ட சொல்லி அவன் கிட்ட பேச சொல்கிறேன் என்றார் மலர்கொடி.

 

அறைக்குள் வந்த வெரோனிகா மெத்தையில் சரிந்தவள் அழுது அழுது கரைந்தாள். இந்த மனுசனுக்கு என்ன தான் பிரச்சனை எதற்கு பேய் மாதிரி கத்துறாரு அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்.

 

மக்காமே மக்கு ஆமாம் நான் மக்கு தான் என்று அவள் அழுது அழுது கரைந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.

 

என்னாச்சு அண்ணா ஏன் இப்படி கோபம் படுறிங்க அவங்க சின்னப் பொண்ணு என்ற பிரகாஷிடம் சின்னப் பொண்ணு தான் இப்போ யாரு இல்லைனு சொன்னது என்றவன் மௌனமாகினான்.

 

அண்ணா தப்பா எடுத்துக்காதிங்க உங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லைனு எனக்கு நல்லாவே தெரியும் ஆனால் அண்ணி பாவம் உலகம் தெரியாத பொண்ணு கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க. உங்களுக்கு நான் அட்வைஸ் பண்ணவில்லை என்றான் பிரகாஷ்.

 

நீங்க ஸ்கூலில் தான் டீச்சர் வீட்டில் இல்லை என்று சிரித்த பிரகாஷைப் பார்த்து தானும் சிரித்த உதயச்சந்திரன் தன்னறைக்கு சென்றான்.

 

என்ன ஊர்மி வாசலில் நிற்கிற என்ற உதயச்சந்திரனிடம் அண்ணா அது ரூம் சாத்தி இருக்கு அதான் என்றாள் ஊர்மிளா.  சரி வா என்றவன் கதவைத் திறந்திட வெரோனிகா உறங்கிக் கொண்டிருந்தாள்.

 

இவளை என்ன சொல்லுறது இப்போ தான் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி அவ்வளவு திட்டினேன் பொறுப்பே இல்லாமல் தூங்கிட்டு இருக்கிறாள் என்றவன் சரி நோட்ஸ் எல்லாம் வச்சுட்டு போ என்று கூறி விட்டு அவளை முறைத்தபடி அமர்ந்திருந்தான்.

 

அழுது , அழுது அவளது முகமே வீங்கிப் போயிருந்தது. அவளைக் கண்டவன் மௌனமாக அமர்ந்திருந்தான். அவன் மனதில் என்ன தான் இருக்கிறது என்று அவனைத் தவிர யார் அறிவார்.

 

அவன் எங்கோ கிளம்பிச் சென்று விட்டான். அவன் மனதில் பல குழப்பங்கள் இருந்தன. அவனால் அவளை தன் மனைவியாக பார்க்க முடியவில்லை.

 

ஒவ்வொருவருக்கும் திருமணம் பற்றிய கனவுகள் இருக்கும் அப்படித் தான் உதயச்சந்திரனுக்கும் ஒரு கனவு இருந்தது. அவன் மனதிலும் ஒருத்தி இருந்தால் சந்தர்ப்பம் ,சூழ்நிலை அவன் வாழ்வில் இன்று மனைவியாக வெரோனிகா இருக்கிறாள்.

 

வெரோனிகாவின் வயது ஒரு காரணமாக இருந்தாலும் அவன் மனதை அரித்துக் கொண்டிருந்த வேறு ஒருத்தியின் நினைவும் தான் வெரோனிகாவின் பக்கம் அவனால் திரும்ப முடியவில்லை.

 

அவளை அவனால் மனைவியாக பார்க்க முடியவில்லை என்றாலும் அவளது எதிர்காலம் தன்னால் கெட்டு விடக்கூடாது என்பதால் தான் அவளது படிப்பு விசயத்தில் அவன் இவ்வளவு கண்டிப்புடன் இருக்கிறான்.

 

அவளது கவனம் வீட்டு மனிதர்களின் அன்பைப் பெறுவதில் இருந்து விட்டால் அவளால் நிச்சயம் இந்த வாழ்க்கையை விட்டு போக முடியாது. அதனாலேயே அவளை முழுக்க முழுக்க படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வைக்க நினைத்து தான் அவளை அவ்வளவு திட்டினான்.

 

என்ன வினி ஏதோ யோசனையில் இருக்க என்ற தோழி பவித்ராவிடம் ஒன்றும் இல்லைடி இன்னைக்கு ஷாப்பிங் போனோமே அப்போ உதய் சாரைப் பார்த்தேன் என்றாள் வினித்ரா.

 

என்ன மேடம் உதய் சார் மேல எதுவும் பீலிங்க்ஸா என்ற பவித்ராவிடம் தப்பு என்ன என்றாள் வினித்ரா. தப்பே இல்லை தப்பே இல்லை என்று பாட்டு பாடினாள் பவித்ரா.

 

அவரு ஒரு ஜென்டில்மேன் டி அதான் ஒரு அபிப்ராயம் இருக்கு. வீட்டில் வேற கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி ஒரே டார்ச்சர் என்ற வினித்ராவிடம் உன்னோட அபிப்ராயத்தை அவர்கிட்ட சொல்லு அவருக்கும் ஓகே என்றால் நல்லது தானே என்ற பவித்ரா வாடி சாப்பிட என்று தோழி வினித்ராவை அழைத்துச் சென்றாள்.

 

 

வீட்டிற்கு வந்த உதயச்சந்திரனை சாப்பிட அழைத்தார் சுசீலா. வெரோனிகா சாப்பிட்டாளா சித்தி என்ற உதயச்சந்திரனிடம் இல்லை உதய் அவள் தூங்கிட்டு இருக்கிறாள் என்றார் சுசீலா.

 

இன்னுமா தூங்கிட்டு இருக்கிறாள் என்றவன் இருங்க அவளையும் அழைச்சுட்டு வரேன் என்று எழுந்தவன் தன்னறைக்கு செல்ல வெரோனிகா குளிரில் நடுங்கிக் கொண்டு படுத்திருந்தாள் . ஏசியை குறைத்து வைத்தவன் வெரோனிகா , வெரோனிகா என்று அவளை எழுப்பிட அவன் எழுந்தபாடில்லை.

 

என்ன இவள் என்றவன் அவளருகில் கையை கொண்டு போக அனலடித்தது. அவளது நெற்றியில் கை வைத்து பார்த்திட காய்ச்சல் நெருப்பாக கொதித்தது.

 

அவளைத் தூக்கிக் கொண்டவன் பிரகாஷ் என்றிட சொல்லு அண்ணா என்று வந்தான் பிரகாஷ். வண்டியை எடு இவளுக்கு உடம்பு சரியில்லை என்றதும் என்னாச்சுப்பா என்று வந்தார் சுசீலா .

 

 

காய்ச்சல் அடிக்குது சித்தி என்றவனிடம் சரி நானும் வரேன் என்ற சுசீலாவும் அவர்களுடன் மருத்துவமனைக்கு கிளம்பினார்.

 

கல்யாணிப்பாட்டி சாப்பிட்டு உறங்கி விட்டார். மலர்கொடி, அர்ச்சனா இருவரும் அர்ச்சனாவின் தோழிக்கு நிச்சயதார்த்தம் அங்கு சென்றிருந்தனர். இளமாறனும், நெடுமாறனும் இன்னும் வீட்டிற்கு வரவில்லை. அதனால் ஊர்மிளாவிடம் வீட்டை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு சுசீலாவும் மருத்துவமனைக்கு கிளம்பினார்.

 

 

மருத்துவமனையில் அவளைப் பரிசோதித்த மருத்துவர் ஹெவி பீவரா இருக்கு என்றவர் இன்சக்சன் போட்டு விட்டு மாத்திரை, மருந்துகள் எழுதிக் கொடுத்தார்.

 

காய்ச்சல் அதிகமா இருக்கு. ஹீட் குறைய  வீட்டிற்கு போனதும் காட்டன் துணியை நீரில் பிழிந்து எடுத்து   நெற்றியில் வைத்து விட சொன்னார்.

 

அவள் மெல்ல கண்விழித்திட அவளை நடந்துருவ தானே என்றான் உதயச்சந்திரன். நான் வீட்டில் தூங்கிட்டு தானே இருந்தேன் என்றவளிடம் அழுது அழுது காய்ச்சலே வர வச்சுட்ட என்ற சுசீலா வா என்றிட அவள் அமைதியாக வந்தாள்.

 

உன் புருசன் தான் பதறிப் போயிட்டான் என்ற சுசீலாவிடம் அவரால தானே நான் அழுதேன் என்று சொல்ல  நினைத்தவள் மௌனமாக வண்டியில் அமர்ந்தாள்.

 

வீட்டிற்கு வந்த பிறகு அவளை கைத்தாங்கலாக அழைத்து வந்த சுசீலா இட்லியை அவளுக்கு கொடுத்தார். அத்தை போதும் என்றவளிடம் சரிம்மா நீ போயி படுத்துக்கோ என்றவர் என்னடி பெரியம்மா இன்னும் வரவில்லையா என்று ஊர்மிளாவிடம் கேட்டார்.

 

என்ன சுசீ என்று அந்த நேரம் சரியாக மலர்கொடி வந்தார். அவருடனே அர்ச்சனாவும் வந்தாள். மலர்கொடியிடம் ரோனிக்கு காய்ச்சல் என்றதும் மருமகளை சென்று பார்த்தார்.

 

என்ன பண்ணுறிங்க என்றவளை முறைத்தவன் அவள் நெற்றியில் ஈரத் துணியை வைத்தான். காய்ச்சல் குறையனும்ல அமைதியா படுத்து தூங்கு என்றான் உதயச்சந்திரன்.

 

மகன் மருமகளை கவனித்துக் கொள்வதைப் பார்த்த மலர்கொடி காலையில் பார்க்கலாம் என்று திரும்பி வந்தார்.

 

என்னக்கா அவளைப் பார்த்திங்களா பாவம் புள்ளை ரொம்ப சோர்ந்து போயிட்டாள் என்றார் சுசீலா.

 

இல்லை சுசீ உதய் அவளை பார்த்துக்கிறான். நீ கவலைப் படாமல் சாப்பிடு என்று விட்டு சுசீலாவிற்கு பரிமாறினார் மலர்கொடி.

 

நோட்ஸ் எழுதனும் என்றவளை முறைத்தவன் நீ இப்போ இருக்கிற நிலைமையில் எப்படி எழுத முடியும். நான் சொன்ன உடனே எழுதி இருந்தினா இப்போ இந்த காய்ச்சலே வந்திருக்காது என்றவன் எதற்கெடுத்தாலும் அழாதே எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்றான்.

 

ஹும் என்றவளிடம் மாத்திரைகளை கொடுத்திட அவள் அமைதியாக அதை விழுங்கினாள். சரி நான் கீழே படுத்துக்கிறேன் என்றவளை முறைத்தவன் உனக்கு உடம்பு சரியில்லை கீழே படுத்தால் உடம்பு ரொம்ப வலிக்கும். நீ பெட்லையே படுத்துக்கோ நான் அந்த ஷோபாவில் படுத்துக்கிறேன் என்றான்.

 

அது எப்படி உங்களுக்கு சரியா இருக்கும் உங்க ஹைட்டிற்கு என்றவளிடம் அதெல்லாம் நாங்க படுத்துப்போம். நீங்க தூங்குங்க மகாராணி என்றவன் சென்று ஷோபாவில் படுக்கச் சென்றான்.

 

இந்த பெட் பெரியதா தானே இருக்கு நீங்க வேண்டும் என்றால் அந்தப் பக்கம் படுத்துக்கோங்களேன் என்றவளிடம்

உன் வேலையைப் பாரு எனக்கு தெரியும் என்றவன் சென்று ஷோபாவில் படுத்துக் கொண்டான்.

 

 

 

….தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!