விதியின் முடிச்சு…(67)

4.7
(6)

சொல்ல வார்த்தையே இல்லை மாமா இன்னைக்குத் தான் நான் ரொம்ப சந்தோசமா இருக்கிறேன். என்னோட சந்தோசத்தை எப்படி சொல்லுறதுனே தெரியலை மாமா என்றாள் வெரோனிகா. பாருடா என் வாயாடி பொண்டாட்டிக்கு வார்த்தை தொண்டையில் சிக்கிட்டு வர மாட்டேங்குதாமே என்றவன் சிரித்திட மாமா என்று சிணுங்கினாள் வெரோனிகா.

 

நீ தானே கேட்ட நாம திரும்ப கல்யாணம் பண்ணிக்கலாமா மாமானு அதனால தான் இந்த கல்யாணம் என்றவனிடம் பொய் சொல்லாதிங்க ஆச்சி ஏதோ ஜோசியர் சொன்னதா அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தாங்களே அது என்ன விசயம் என்றாள் வெரோனிகா. அதுவா அது ஒன்றும் இல்லை ஏதோ நம்ம ஜாதகத்தில் சின்ன பிரச்சனையாம் அதனால தான் திரும்ப கல்யாணம் பண்ணி வைக்க ஜோசியர் சொன்னாராம். அதை அப்பத்தா  என்கிட்ட சொன்னாங்க நீ வேற நாம திரும்ப கல்யாணம் பண்ணிக்கலாமா மாமானு கேட்டியா அதான் அப்பத்தா கேட்டப்போ நானும் ஓகே சொல்லிட்டேன் என்றான் உதய்.

 

ஐ லவ் யூ சந்துரு மாமா என்றவளிடம் நானும் ஐ லவ் யூ சோ மச் ரோனி என்றவன் அவளது கன்னம் கிள்ளிட க்குக்கும் என்று சிருமினான் பிரகாஷ். என்ன அண்ணா கோவில்லையே ரொமான்ஸா என்ற பிரகாஷின் காதை திருகினாள் ரோனி. என்ன கொளுந்தனாரே கிண்டலா என்றிட அடப்பாவத்த நேற்று வரை பிரகாஷ் மாமா இன்னைக்கு கொளுந்தனாரா நல்ல முன்னேற்றம் தான் அண்ணியாரே என்றான் பிரகாஷ்.

 

அட இது கூட நல்லா இருக்கே கொளுந்தனாரே, அண்ணியாரே இனிமேல் நீங்க இப்படியே கூப்பிட்டுக்கோங்க இது தான் எனக்கு பிடிச்சுருக்கு என்றாள் இந்திரஜா. இந்து அக்கா என்றவளிடம் ரோனி இல்லை இல்லை ரோனி அக்கா என்ற இந்திரஜா இனிமேல் உன்னை ரோனி அக்கானே கூப்பிடவா என்றிட அக்கா என்று சிணுங்கினாள் வெரோனிகா.

 

என்னடி சிணுங்கிட்டே இருக்க என்று வந்த தேன்மொழியிடம் அண்ணி நீங்களுமா என்ற வெரோனிகாவிடம் உங்க அண்ணி மட்டும் இல்லை அண்ணியாரே நாங்களும் தான் என்று அர்ச்சனாவும், ஊர்மிளாவும் வந்துவிட மாமா பாருங்க என்று தன் கணவனின் கைகளை பிடித்துக் கொள்ள அட விடுங்கப்பா பாவம் குழந்தைப் புள்ளை என்றான் உதய்.

 

சரி, சரி விளையாட்டு எல்லாம் போதும் வீட்டுக்கு போகலாமா என்று வந்தார் சுசீலா.

 

அனைவரும் வீட்டிற்கு வந்தனர். அர்ச்சனா, ஊர்மிளா இருவரும் உதய், ரோனி இருவருக்கும் ஆரத்தி எடுத்தனர். வீட்டிற்கு வந்தவளுக்கு ஆனந்த அதிர்ச்சியாக வீடு முழுவதும் வண்ண , வண்ண பலூன்களும், தோரணங்களும் அழகாக அலங்கரிக்கப் பட்டிருக்க ஹாப்பி அனிவர்சரி ரோனி என்றான் உதயச்சந்திரன். வீட்டின் ஹாலில் இதய வடிவிலான ரெட் வெல்வட் கேக் இருந்திட அதில் ஹாப்பி அனிவர்சரி உதய், ரோனி என்றிருக்க அதைக் கண்டவள் தன் கணவனைக் கட்டிக் கொண்டாள்.

 

அனைவரும் வாழ்த்து பாடிய பிறகு இருவரும் ஒன்றாக கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டனர். அன்றைய தினம் மகிழ்ச்சியாக கழிந்தது.

 

தேவ் தன்னறையில் மௌனமாக ஜன்னலை வெறித்தபடி அமர்ந்திருக்க ஸ்ரீஜாவும் எதையும் கண்டுகொள்ளாமல் மேகசின் படித்துக் கொண்டிருந்தாள். கீழே நடக்கும் செலிபரேசன் அவளை பாதித்தது போல் தெரியவில்லை. அவள் மனம் மாறிவிட்டாளா என்றால் தெரியவில்லை ஆனால் இனிமேல் உதயச்சந்திரனின் வாழ்வில் என்ன நடந்தாலும் அதைப் பற்றி சிந்திக்க கூடாது என்று முடிவு செய்திருந்தாள்.

 

அவனுக்கு அண்ணனின் விசேசத்தில் கலந்து கொள்ள ஆசை தான். ஆனால் அன்று ஸ்ரீஜா பேசிய வார்த்தைகளின் தாக்கம் அவன் மறந்தும் வெரோனிகாவின் பக்கம் திரும்புவதில்லை. தன்னிடம் பேசியதை எங்கு தன் அண்ணியிடம் இவள் பேசி விட்டால் என்ன நடக்குமோ என்ற பயம் தான் அவனுக்குள் இருந்தது. ரோனியின் தற்கொலை முயற்சியை அவனால் மறக்க முடியவில்லை அதனாலே அவன் வீட்டில் யாரிடமும் பேசுவது கூட இல்லை. மலர்கொடி இப்பொழுது அவனுடன் பேசுவதே அவனுக்கு மனத்திருப்தியாக இருந்தது.

 

 

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டவுடன் ஸ்ரீஜா எழுந்து கதவைத் திறந்தாள். வாங்க என்றிட வசந்தி, பூங்கொடி, கணேசன், கதிரேசன் , சக்திவேல், சரவணன், தேன்மொழி என வெரோனிகாவின் குடும்பத்தினர் வந்தனர். அவர்களுடன் மலர்கொடியும் வந்தார்.

 

தேவ் என்ற மலர்கொடி அவர்களை வெரோனிகாவின் குடும்பத்தினர் என்று அறிமுகம் செய்து வைத்தார். கணேசன், கதிரேசன் இருவரும் அவனிடம் நலம் விசாரிக்க , பூங்கொடி, வசந்தி இருவரும் ஸ்ரீஜாவிடம் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் என்ன ஆச்சர்யமோ ஸ்ரீஜா மிகவும் தன்மையாக பேசினாள்.

 

அவர்கள் சென்ற பிறகு தேவ் உனக்கு எதுவும் கொண்டு வரணுமா என்றார் மலர்கொடி. இல்லைம்மா எதுவும் வேண்டாம் என்றவனிடம் சரிப்பா என்று கிளம்பினார் மலர்கொடி.

 

என்ன சம்மந்தி நீங்க அதற்குள்ள கிளம்புறேன்னு சொல்லிட்டு இருக்கிங்க என்ற இளமாறனிடம் இல்லை சம்மந்தி பெரிய பொண்ணு வீட்டுக்கும் போகணுமே கோவிச்சுக்காதிங்க பூங்கொடியும், தம்பியும், தேனும், சக்தியும் இருப்பாங்க என்றார் கணேசன்.

 

சரிங்க சம்மந்தி என்ற இளமாறனும், நெடுமாறனும் வசந்தி, கணேசன், இருவரையும் வழியனுப்பி வைத்தனர்.

 

தேவ் மெல்ல எழுந்து வெளியே வந்தான் அடடே வாங்க மச்சான் என்ற சரவணனைப் பார்த்து புன்னகைத்தான் தேவ். தங்கச்சி சொல்லும் போது நம்பவில்லை உங்களை நேரில் பார்த்த பிறகு தான் நம்பினேன். நீங்க அச்சு அசலா உதய் மச்சான் போலவே இருக்கிங்க என்ற சரவணனிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தான் தேவ்.

 

 

 

சக்திவேலும் வந்து விட மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். என்ன மச்சான் அண்ணா கூட பேசிட்டு இருக்கிங்களா என்று வந்த பிரகாஷ் சக்தியின் காதில் ஏதோ ரகசியம் சொல்லிட ஐயோ, வேண்டாம் மச்சான் நான் கள்ளு மட்டும் தான் குடிப்பேன். மத்தபடி சரக்கெல்லாம் பழக்கம் இல்லை. பழகவும் மாட்டேன் என்றான் சக்திவேல். அண்ணிக்கு பிடிக்காது அதனால குடிக்க மாட்டனு சொல்லு என்றான் சரவணன். நால்வரும் சிரித்து விட்டனர். சரவணன், தேவ் இருவருமே நல்ல நெருக்கமாக பேசி பழக ஆரம்பித்தனர்.

 

என்ன மாமா இங்கே நிற்கிறிங்க என்ற உதய்யிடம் ஒன்றும் இல்லை உதய் சும்மா தான் என்ற நெடுஞ்செழியன் திருமண நாள் வாழ்த்துக்கள் உதய் என்றார். தாங்க்ஸ் மாமா என்றவன் அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அவன் சென்று விட்டான்.

 

பூங்கொடி, மலர்கொடி, சுசீலா, வசுந்தரா நால்வரும் சமையல் வேலையை கவனித்துக் கொண்டிருந்தனர். உங்களை பற்றி ரோனி சொன்ன பிறகு தான் எனக்கு தெரியும் மாப்பிள்ளைக்கு அத்தை நீங்க இருக்கிங்கனே என்றார் பூங்கொடி. உதய் கல்யாணத்தப்போ வெளிநாட்டில் இருந்தோம் அதனால தான் வர முடியவில்லை என்றார் வசுந்தரா.

 

அதனால என்னக்கா அதான் இன்னைக்கு அவங்க கல்யாணத்தை பார்த்துட்டிங்களே என்ற பூங்கொடியுடன் சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தார. வசுந்தரா.

 

என்ன அண்ணியாரே என்ன யோசனை என்ற அர்ச்சனாவிடம் அவளுக்கு எப்பவுமே அவளோட சந்துரு மாமா பற்றிய யோசனை தான் என்றாள் இந்திரஜா.  வேற யோசனை வந்துட்டாலும் என்ற தேன்மொழியை பார்த்து அர்ச்சனாவும், இந்திரஜாவும் சிரித்திட அண்ணி என்றாள் வெரோனிகா.

 

ஆமாம் போனில் பேசும் போது கூட சந்துரு மாமா, சந்துரு மாமானு ஒரு ஆயிரம் தடவை சொல்லுவாள். ஏன்டி அவ்வளவு லவ்வா என்ற தேன்மொழியிடம் ஆமாம் என் சந்துரு மாமா மேல எனக்கு பயங்கர லவ் என்றாள் வெரோனிகா.

 

ஓஓ அப்படியா அப்போ பத்து மாசத்தில் உன் சந்துரு மாமாவுக்கு குட்டி ரோனியை பெத்துக் கொடு என்றாள் தேன்மொழி. அவள் அப்படி சொன்னதும் வெட்கத்தில் கன்னம் சிவந்தாள் வெரோனிகா. பாருடா ரோனிக்கு வெட்கம் எல்லாம் வருது என்று அவளை அர்ச்சனா, இந்திரஜா, தேன்மொழி மூவரும் கிண்டலடித்தனர். கிண்டலும், கேலியுமாக அவளை அலங்காரம் செய்தனர் மூவரும்.

 

ரோனி சும்மா தேவதை மாதிரி இருக்கிறாய் என்ற தேன்மொழி அவளது கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைத்து விட்டாள். மலர்கொடி, சுசீலா இருவரும் என் செல்லம் சேலை கட்டினதும் பெரிய பொம்பளை மாதிரி இருக்க ரோனி என்று அவளது கையில் பால் சொம்பினை கொடுத்தனர்.

 

பூங்கொடி மகளுக்கு அவள் கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி அவளை பயப்படக் கூடாது என்றார். அவளும் தலையாட்டி விட்டு அந்த அறைக்குள் நுழைந்தாள்.

 

 

அறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மெத்தையில் அவளது கணவன் அமர்ந்திருக்க அவள் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து அவனருகில் சென்றாள்.

 

அவளை வைத்த கண் எடுக்காமல் பார்வையாலே பருகியவனைக் கண்டு வெட்கத்தில் கன்னம் சிவந்தாள். மாமா என்றவளிடம் என்ன ரோனி என்றிட பால் என்று பால் சொம்பினை அவனிடம் நீட்டினாள். அதை வாங்கி ஓரமாக வைத்தவன் அவளது கையைப் பிடித்து இழுத்து தன்னருகில் அமர வைத்தான்.

 

என்ன ரோனி இது நம்ம ரூம் தானே. ஒரு வருசமா இரண்டு பேரும் இந்த ரூம்ல தானே இருக்கோம். ஏன் நீ இவ்வளவு பதட்டமா இருக்க. உன் கை எல்லாம் எப்படி நடுங்குது பாரு என்று அவளது கையை தன் கைக்குள் வைத்தான்.

 

இல்லை மாமா இத்தனை நாளா நாம என்றவளுக்கு பேச்சே வரவில்லை. என்ன ரோனி என்னாச்சு ஓயாமல் பேசிட்டே இருக்கிற இந்த வாய் வார்த்தைகளை மென்று, முழுங்கி என்னடி இது. நான் உன்னோட சந்துரு மாமா தானே ரிலாக்ஸா இரு ரோனி என்றான் உதய்.

 

உனக்கு பிடிக்கவில்லை, பயமா இருக்குனா இதெல்லாம் வேண்டாம் ரோனி. இதெல்லாம் நடந்தால் தான் நாம கணவன், மனைவினு இல்லை. எப்பவும் போல தூங்கலாம் என்றவனிடம் இல்லை மாமா எனக்கு பயம் எல்லாம் இல்லை என்றாள் வெரொனிகா. அவளைப் பார்த்து சிரித்தவன் அப்போ உனக்கு சம்மதமா ரோனி என்றிட வெட்கம் கொண்டவள் தரையை பார்த்தபடி தலையை ஆட்டினாள். தரையை பார்த்து சொன்னா என்ன அர்த்தம் என் முகத்தைப் பாரு என்றான். அவள் மாமா ப்ளீஸ் என்னவோ தெரியலை இன்னைக்கு உங்களை என்னால பார்க்க முடியவில்லை என்றாள் வெரோனிகா.

 

 

 

அவளது கை விரலில் அவன் முத்தமிட மாமா பால் என்று அவள் கூறிட பாலை எடுத்தவன் கொஞ்சம் குடித்து விட்டு அவளிடம் கொடுத்தான். அவளும் அதைக் குடித்தாள். அவளது கையில் இருந்த காலி சொம்பினை ஓரமாக வைத்தவன் அவளது நெற்றியில் முத்தமிட்டான். ஐ லவ் யூ ரோனி என்றவனது மார்பில் அவள் சாய்ந்து கொள்ள  அவள் முகத்தை நிமிர்த்தியவன் அவளது இதழில் , தன் இதழைப் பதித்து மங்கை அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். விளக்கினை அணைத்தவன் அவளில் தன் தேடலைத் தொடங்கினான். இனிய இல்லறம் இனிதே தொடங்கியது.

 

 

…..தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!