“கன்னுக்குட்டி உன் பேர் என்னடி கண்ணூ.. ரெண்டு வயசு ஆயிடுச்சு.. உன் பேரை கூட தெரிஞ்சுக்க விடாம பண்ணிட்டா பாரு உன் ஆத்தாக்காரி..” என்று பல்லை கடித்துக் கொண்டு விழியை முறைத்தார் வாசுகி..
“குட்டி பேர் என்னம்மா?” என்று மறுபடி கேட்க
“ச்சத்தீ..” என்று மழலை பேசியவள் அவர் கைநீட்டி அழைக்க அவரிடம் வருவதற்கு தயங்கினாள்..
“பாட்டிடா.. சக்தியோட பாட்டி..” என்று கண்களில் நீர் தழும்ப மறுபடியும் அழைக்க
“பாத்தீய்..” என்று கூவி அழைத்தபடி இயல்பாக அவரிடமும் தாவி இருந்தாள் சக்தி..
“அம்மா.. அவளை ஆஸ்திரேலியாவில இருக்கும் போது அகாடமிக்கு கூட்டிட்டு போய் தான் வச்சுட்டு இருந்தேன்.. அங்க ஸ்டூடண்ட்ஸ் கோச்சுன்னு வித்தியாசம் இல்லாம எல்லார்கிட்டயும் இப்படி தான் வாயடிச்சிட்டு இருப்பா.. இவ பேசறது புரியுதோ இல்லையோ அங்க எல்லாரும் இவளோட கதை அளநாதுக்கிட்டு இருப்பாங்க.. ஒரு ஸ்டேஜ்ல இவளுக்கு கால் முளைச்சு அகாடமியை தாண்டி பக்கத்துல இருக்குற ரோடுல எல்லா இடத்துக்கும் ஓட ஆரம்பிச்சிட்டா.. அப்புறம் தான் தன்வி முழுக்க முழுக்க இவளை பார்த்துக்க ஆரம்பிச்சா..”
“ஆமா.. அந்தத் தன்வி தான் உனக்கு கிடைச்சாளா இவளை பார்த்துக்கறதுக்கு.. நல்லா பாத்துக்கிட்டா அவ.. இன்னிக்கு நான் மட்டும் டைமுக்கு வரலைன்னா சக்தி வண்டியில அடிபட்டு இருப்பா.. ஷீ இஸ் ஸோ இர்ரெஸ்பான்சிபிள்..” இந்தர் கடுகடுவென பேச
“பாவம் அவ.. நல்லாத்தான் பாத்துக்குவா.. உங்க பொண்ணரசி தான் எல்லா இடத்திலயும் இஷ்டத்துக்கு ஓடுவா.. இவளுக்கு கால் முளைச்சதிலிருந்து இவளை பிடிக்க மூணு ஆள் வேண்டியிருக்கு.. எனக்கு காம்படிஷனுக்கெல்லாம் போகும்போது இவளை பார்த்துக்கறது பெரும் பிரச்சனையா இருக்கும்..”
விழி அலுத்துக்கொள்ள வாசுகியோ “இதெல்லாம் ஓடிப்போய் புள்ள பெத்துக்கறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்.. புள்ளனா அப்படித்தான் இருக்கும்.. நீ ஓடாத ஓட்டமா.. 15 வயசு ஆன அப்புறம் கூட அப்பப்ப ஃபிரண்ட்ஸோட போய் ஆட்டம் போட்டவ தானே நீ.. உன் புள்ள எப்படி இருப்பா? உன்னை மாதிரி தானே இருப்பா…”
அதை பார்த்த விழி “ஐயோ போதும்மா.. ரொம்ப டேமேஜ் பண்ணாத.. இதுக்கு மேல தாங்காது..” என்றாள்
அப்போது உள்ளே இருந்து சத்தம் கேட்டு வந்த பரிமேலழகர் “வாசு.. யாருடி வந்திருக்கிறது..?”
கேட்டுக் கொண்டே வந்தவர் வில்விழியை பார்த்ததும் அப்படியே கண் கலங்கி உறைந்து நின்று விட்டார்..
“அம்மாடி.. மலரூஊஊஊ.. எங்கடா போயிருந்த?” கேட்டவர் வேகமாய் வந்து தன் பெண்ணை அணைத்துக் கொண்டார்..
அவளுக்கும் கண்கள் நிறைந்து போயின.. பின்னே அவள் அப்பாவின் செல்ல மகள் ஆயிற்றே.. முன்பெல்லாம் விழி தன் தந்தையோடு இப்படி அதிக ஒட்டுதலாய் நடந்து கொள்ளும் போது இந்தருக்கு பொறாமையாக இருக்கும்.. தனிமையில் அவளோடு இதை பற்றி சண்டை பிடிப்பான்..
“என் கூட இருக்கும் போது நீ இவ்வளவு ஹேப்பியா இருக்கமாட்டேங்குற.. அது என்ன? உங்க அப்பா முகத்தை பார்த்த உடனே அவ்ளோ எக்சைட்மென்ட் உன் கண்ணுல.. அவரு என்ன சொன்னாலும் கேட்டுக்குறே.. அவர் இருந்தா சுத்தி யாரு இருக்காங்கன்னு கூட நீ பாக்குறது இல்ல.. ரெண்டு பேரும் உங்க உலகத்துக்கே போயிடறீங்க.. பக்கத்துல ஒருத்தன் இருக்கறது கூட தெரியல.. அதான் மாப்பிள்ளை நான் வந்துட்டேன் இல்ல.. இதுக்கு அப்புறம் உங்க அப்பா உங்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி இருக்க வேண்டியதுதானே? இங்க பாரு.. நீயும் உங்க அப்பாவும் தனியா இருக்கும்போது உங்க அப்பா உன்னை எவ்வளவு வேணா கொஞ்சிக்கட்டும்.. ஆனா நான் இருக்கும்போது அவரை கொஞ்சம் தள்ளி இருக்க சொல்லு.. இல்லன்னா நான் சொல்ல வேண்டியதா இருக்கும்.. அது அவ்வளவு நல்லா இருக்காது.. சொல்லிட்டேன்” பொறாமையில் வெந்து நொந்து ரொம்பவும் தான் கோபப்படுவான் அவன்..
அவன் பேசியதெல்லாம் எவ்வளவு அபத்தமான விஷயம் என்று இப்போது புரிந்தது இந்தருக்கு.. நியாயமே இல்லாத கோபம் அது.. இப்போது சக்தியை கண்டதும் விழிக்கும் அவள் தந்தைக்கும் எப்படிப்பட்ட பிணைப்பு இருந்திருக்கும் என்று உள்ளுக்குள் உணர்ந்திருந்தான் அவன்..
சக்திக்கு இரண்டு வயது கூட முடியவில்லை.. இப்போதே அவளுக்கு திருமணம் ஆனால் தன் நிலை என்ன என்று கவலைப்பட ஆரம்பித்து விட்டான் தந்தை அவன்..
“அத்தை.. நீங்க உங்க பேத்தியை கூப்பிட்டுக்கிட்டு உள்ள வாங்க.. இந்த பாசமழை இப்போதைக்கு முடியாது.. மூணு வருஷமா விட்டதெல்லாம் இன்னைக்கு ஒரு நாள்ல முடிச்சுடுவாங்க அப்பாவும் பொண்ணும்..”
இந்தர் சொல்ல தன் தந்தையின் அணைப்பில் இருந்து கொண்டே “போடா பொறாமை புடிச்சவனே..” என்றாள் விழி அவரை இன்னும் இறுக்கி அணைத்தபடி..
பரிமேலழகர் அவள் கன்னத்தை தாங்கி “என் தேவதை மாப்பிள்ளை அவ.. அப்படியே என்னை மாதிரி அவ.. எதுக்கும் பயப்படமாட்டா.. எதுவா இருந்தாலும் முகத்துக்கு நேரா பளிச்சுன்னு பேசுவா.. மான்விழி அப்படியே அவங்க அம்மா மாதிரி.. சரியான பயந்தாங்கொள்ளி..” அவர் சொன்னதும் வாசுகி அவரை முறைக்க
அவரோ “போடி போ.. உன் முறைப்பெல்லாம் என்கிட்ட தான்.. அந்த கோடி வீட்டு கனகா கொஞ்சம் குரலை ஒசத்தி பேசினா அவ கால்ல விழறவ தானே நீ.. முறைக்கிறதை நிறுத்திட்டு பேத்தியை ஆரத்தி எடுத்து உள்ள கூட்டிட்டு போ..”
அவர் சொல்லவும் வாசுகி சென்று ஆரத்தி கரைத்து எடுத்து வந்தவர் வரும்போது மான்விழிக்கும் விஷயத்தை சொல்லி அழைத்து வந்தார்..
வெளியே வந்து அவளை பார்த்த மான்விழியோ “மலரு வந்துட்டியாடி? இது கனவில்லல்ல..?” என்று கேட்க
“ஹேய் மானு.. நெஜமா தான் வந்திருக்கேன்.. இரு.. உனக்கு உள்ள வந்து வச்சிக்கிறேன் கச்சேரி.. என்னடி வேலை பண்ணி வெச்சிருக்க நீ?” என்று அவள் திட்ட ஆரம்பிக்க அப்படியே அமைதியாகினாள் மான்விழி..
ஆரத்தி எடுத்து மூவரும் உள்ளே வந்ததும் இந்தர் பக்கம் திரும்பிய விழி “இந்தர்.. நீங்க அப்பாவோட பேசிகிட்டு இருங்க.. நான் கொஞ்சம் மானுவோட பேசிட்டு வரேன்..” என்க அவனோ ஏதோ ஒரு சிந்தனையில் இருந்தான்..
ஏனோ இப்போது அந்த வீட்டுக்குள் வரும்போது முதன் முதலில் பெண் பார்ப்பதற்காக அந்த வீட்டுக்குள் அவன் வந்த நிகழ்வுக்கு தாவி இருந்தது அவன் மனம்..
விழி இந்திரதனுஷ் அகாடமியில் போட்டியில் கலந்து கொண்டு முதல் முறையாய் இந்தரின் பார்வை வீச்சால் தோற்றுப் போய் அங்கிருந்து சென்ற பிறகு அடுத்த இரண்டு நாட்களுக்குள் மார்க்கண்டேயர் இந்தருக்கு ஒரு பெண் பார்த்திருப்பதாக சொல்லவும் அதிர்ந்து போனான் இந்தர்..
அவன் மனதை தான் வில்விழி மொத்தமாய் பறித்து கொண்டாளே.. இனி வேறு ஒரு பெண் அவன் வாழ்வில் நிச்சயம் வர முடியாது.. அவளை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவன் அவள் தான் தன் வாழ்க்கை துணை என்று உறுதியாக முடிவே எடுத்திருந்தான்..
இந்நிலையில் மார்க்கண்டேயன் இந்தருக்கு பார்த்திருப்பது தன் நண்பனுடைய பெண்தான் என்றும் அவள் பெயர் மான்விழி என்றும் சொன்னவர் பெண் பார்க்க அன்று நல்ல நாளாக இருப்பதால் அன்றே செல்ல வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்..
இந்தரோ மான்விழி என்ற பெயர் மலர்விழி என்று இருந்திருக்கக்கூடாதா என்று ஏக்கம் கொண்டான்..
அவள் யார்.. எங்கிருக்கிறாள் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி இருந்தவன் தந்தையின் திடீர் முடிவில் கதி கலங்கி போனான்.. அவன் தான் அவரை எதிர்த்து பேசாதவன் ஆயிற்றே.. என்ன செய்வது என்று தெரியாமல் வழக்கம்போல பிருத்வியிடம் அடைக்கலம் புகுந்தான்..
“டேய் பிருத்வி.. எனக்கு இந்த பொண்ணு பாக்க போறதுல இஷ்டமே இல்லடா.. ஏதாவது பண்ணி இதை நிறுத்தணும்டா..”
“ஏன்டா.. எப்படியும் யாரையாவது கல்யாணம் பண்ணிக்க தானே போற.. ஒரு வேளை அவர் பார்க்கிற பொண்ணை உனக்கு பிடிச்சிருந்தா.. போய் பொண்ணு பாத்துட்டு வா.. பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ.. பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லிரு..”
அவன் ரொம்பவும் சாதாரணமாக சொல்லி விட்டான்.. இந்தருக்கு தான் அது முடியாத காரியம் ஆயிற்றே.. தந்தை சொல் அவனுக்கு உயிரையும் மிஞ்சிய மந்திரம் ஆயிற்றே..
“இல்லடா.. அந்த பொண்ணை எனக்கு பிடிக்காது டா..”
“அதெப்படிடா பார்க்காமயே சொல்றே..” என்று ஒரு நொடி நிறுத்தியவன் “ஹேய்.. வேற யாரையாவது லவ் பண்றியா டா?” நம்ப முடியாமல் விழி விரித்து கேட்டான் அவன்..
“ம்ம்.. என் மனசுல வேற ஒருத்தி இருக்கா..”
அவன் சொன்னதைக் கேட்டு அவனை ஆச்சரியமாய் பார்த்து இருந்தான் பிருத்வி.. தந்தையிடம் மட்டுமே பம்முவானே தவிர மற்ற இடங்களில் அதிகம் சிரித்து கூட பேசாமல் விறைப்பாய் திரிபவனாயிற்றே.. அவனுக்கு காதல் என்றால்..
“என்னடா சொல்ற? நிஜமாவே லவ் பண்றியா?”
“ஆமாம்டா.. ஒன் சைடு லவ் தான்.. அந்த பொண்ணு கிட்ட இன்னும் சொல்ல கூட இல்லை.. இன்னும் சொல்லப்போனா அந்த பொண்ணு யாருன்னே தெரியாது.. பேர் மட்டும் தான் டா தெரியும்.. அவ பேரு மலர்விழி.. எனக்கு மலர்விழி வேணும்டா.. ஆனா அப்பா மான்விழியை கொண்டு வந்து என் தலையில் கட்டுறேங்கிறார்..”
“எங்கடா பார்த்த அவளை.. மொத்தமா உன்னை இப்படி சாய்ச்சு போட்டு இருக்கா..”
“அவ விஷ்வஜித் அகடமியோட ஸ்டூடண்ட் டா..”
அதிர்ந்து போனான் ப்ருத்வி..
“டேய்.. அந்த விஷ்வாக்கும் உனக்கும் ஆகவே ஆகாதேடா.. அவன் அகாடமியில போய் நீ எப்படிடா பொண்ணை புடிச்ச..”
“அடிச்சு மண்டைய பொளந்துடுவேன்.. உனக்கு அண்ணி ஆகப் போறவ.. மரியாதையா பேசுடா.. பொண்ணு புடிச்ச.. மண்ணு புடிச்சன்னு ஏதோ கோழி பிடிக்கிற மாதிரி சொல்றே.. அவனோட அகாடமிக்கெல்லாம் நான் போகல.. அந்த டிஸ்ட்ரிக்ட் லெவல் காம்பெடிஷன் நடந்ததுல்ல? அந்த இவன்ட்டுக்கு வந்து இருந்தா..”
“ஓ.. ஓகே ஓகே..”
“இப்ப எனக்கு இந்த பொண்ணு பாக்குறதை நிறுத்தணும்.. என்ன பண்ணலாம்னு ஏதாவது ஐடியா சொல்லுடா..”
“எதுக்குடா நிறுத்தணும்? போய் பாத்துட்டு புடிக்கலைன்னு சொல்லுடா..”
“டேய் அப்பா கிட்ட முடியாதுன்னு சொல்ற கட்ஸ் இருந்தா நான் ஏன்டா இப்படி இருக்கேன்..?”
“ம்ம்.. உன்னை திருத்தமுடியாது.. இது உன் வாழ்க்கை டா.. இதுக்கு கூட வாயை திறந்து பேச மாட்டியா? ஆனா கவலைப்படாதே.. இன்னிக்கு அப்பா வர மாட்டார்.. அவருக்கு முக்கியமான கிளையன்ட் மீட்டிங் ஒன்னு இருக்கு.. அதுக்குதான் பெங்களூர் கிளம்பிட்டு இருக்கார்.. நாளைக்கு காலையில தான் வருவார்.. அதனால இன்னைக்கு பொண்ணு பார்க்கறதுக்கு அவர் நிச்சயமா வரமாட்டார்.. அநேகமா நம்ம அம்மா கூட தான் போவோம்..”
சிறிது யோசித்து “ஏய் வெயிட் வெயிட்.. பிடிக்கலைன்னு எதுக்கு சொல்லணும்..? என்னோட நீயும் வர தானே போற? நீயும் பொண்ணை பாரு.. உனக்கு புடிச்சிருந்ததுன்னா நீ கட்டிக்க.. இந்த பொண்ணை என் தம்பிக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. அதனால என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லி நான் கழண்டுக்கிறேன்..”
இந்தரை முறைத்தான் பிருத்வி.. “டேய் அடி வாங்குவ நீ.. நீ எஸ்கேப் ஆகணும்ங்கிறதுக்காக என்னை மாட்டி விட பாக்குற பாத்தியா? இதான வேணாங்கறது.. இங்க பாரு.. நான் உன்னோட வரேன்.. உனக்கு பொண்ணு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லு.. என்னை இதுல கோர்த்து விடாதே..”
“ம்ம்.. ஒரு நல்ல ஆஃபர் கொடுக்கலாமேன்னு நினைச்சேன்.. வேணாம்னா போ.. இவ்வளவு தூரம் பொண்ணை பார்க்க போறோமே அனாவசியமா வேஸ்ட் பண்ண வேண்டாம்.. ஒரு சின்ன சமூக சேவை செய்யலாம்னு பார்த்தா ரொம்ப தான் சீன் போடற… போடா போ..”
“யப்பா நீ உன் கல்யாணத்தை மட்டும் பாருப்பா… எனக்கு கல்யாணம் பண்றேன்னு இந்த சமூக சேவை எல்லாம் வேண்டாம்.. நான் இன்னும் கொஞ்ச நாள் நல்லா ஜாலியா இருக்கிறேன்..”
“ம்ம்.. அதுவும் சரிதான்.. ஆனா எதுக்கும் நீ பொண்ணை பாரு.. ஒருவேளை புடிச்சிருந்தா கல்யாணம் பண்ணலாம் தானே? நான் மலர்விழியை தேடி கல்யாணம் பண்ணிக்கிறேன்.. நீ அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ..”
இங்கே இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்க அங்கே மான்விழியோ தன் தங்கை மலர்விழியிடம் புலம்பிக்கொண்டு இருந்தாள்..
“ஏய் மலரு.. உன்னை மாதிரியே மாப்பிள்ளையும் ஒரு ஆர்ச்சராம் டி.. எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம்.. வாழ்க்கை முழுக்க என்னால பயந்துகிட்டே வாழ முடியாது”
அவள் சொன்னதை கேட்ட விழியோ “இங்க பாரு மாப்பிள்ளைய பாரு பிடிக்கலன்னா பிடிக்கலைன்னு சொல்லிட்டு போ.. அன்னைக்கு அப்பா ஃபிரண்டு நம்ம வீட்டுக்கு வந்து உன்னை பாத்து புடிச்சு போய் தன் மகனுக்கு பொண்ணு கேட்டிருக்கிறார்.. இப்ப என்ன.. பொண்ணு பாக்க தானே வராங்க.. பிடிச்சிருந்தா ஓகே சொல்லு.. பிடிக்கலைன்னா வேண்டாம்னு சொல்லு.. இதுக்கு எதுக்கு இவ்வளவு கவலைப்படற..?”
“இல்ல டி அந்த அங்கிள் அப்பாக்கு ரொம்ப க்ளோஸ் போல இருக்கு.. எனக்கு பிடிக்கலன்னு சொல்லி அவங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனை வந்துருச்சுன்னா..”
மான்விழியை முறைத்த வில்விழி “ஏய் லூசு.. உன் வாழ்க்கையோட பெரிய டெசிஷன் இது… இதுல உனக்கு பிடிச்சிருக்காங்கிறது தான் முக்கியம்.. அவங்க ஃப்ரெண்ட்ஷிப் கெட்டு போகக்கூடாதுன்னு உன் லைஃப்பை ஸ்பாயில் பண்ணிப்பியா? நம்ம லைஃபபை நம்ம தான் டிசைட் பண்ணனும்.. வேற யாரும் எதுவும் நம்ம லைஃப் டெசிஷன்ஸை அஃபெக்ட் பண்ண விடக்கூடாது.. யாரோ ஒருத்தருக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு அவரு மகனை நீ எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்? உனக்கு பிடிச்சிருக்கணும்.. உன் இஷ்டப்படி தான் நீ கல்யாணம் பண்ணணும்.. தயக்கமா இருந்தா சொல்லு.. நான் வேணா அப்பா கிட்ட சொல்லிடறேன்..”
“அப்பாக்கு தெரியும் தானே எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு.. ஆனாலும் ஏற்பாடு பண்ணி இருக்காரு இல்ல..?”
“ஏய்.. நம்ம அப்பா விஷயத்தை சொல்லும் போது என்ன சொன்னாரு..? அந்த பையனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை.. குடும்பமும் ரொம்ப நல்ல குடும்பம்னு சொன்னாரு இல்ல..? இந்த சின்ன விஷயத்துக்காக அந்த பையனை பார்க்காம வேண்டாம்னு சொல்ல வேண்டாம்ன்னு தானே சொன்னாரு.. அவனை பார்த்த அப்புறமும் உனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லு.. அதுக்கெல்லாம் தயங்கிட்டு இருக்காத.. அப்பா நிச்சயமா நமக்கு ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாரு”
ஆனால் மான்விழி முகத்தில் குழப்பம் அகலவே இல்லை.. தனக்குள் இருக்கும் அந்த பயத்திற்காக ஒரு நல்ல வரனை வேண்டாம் என்று சொல்ல அவளுக்கே யோசனையாக தான் இருந்தது.. மாப்பிள்ளையை பார்த்து விட்டு சொல்லலாம் என்று அப்போதைக்கு முடிவுக்கு வந்திருந்தாள் அவள்..
அன்று மாலை இந்தர் சகுந்தலா ப்ருத்வி மூவரும் வில்விழியின் வீட்டிற்கு மான் விழியை பெண் பார்க்க வந்திருந்தனர்.. முழு அலங்காரத்துடன் தேவதையாய் மிளிர்ந்தாள் மான்விழி..
வீட்டு வாசலில் பரிமேலழகர் பரபரவென வருபவர்களை வரவேற்க செல்வதை பார்த்த வில்விழி அறைக்குள் வந்து மான்விழியிடம் “ஹே மானு… மாப்பிள்ளை வந்துட்டாரு.. இரு.. நான் அந்த ஜன்னல் வழியா பார்த்துட்டு வரேன்..” என்று சொல்லி சாளரத்தின் பக்கம் விரைந்து போனாள்..
ஜன்னலின் வழியாக வெளியே பார்த்தவளின் கண்களோ அதிர்ந்து விரிந்தது.. அங்கே இந்திர தனுஷ் பிருத்வியோடும் சகுந்தலாவோடும் வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தான்..