வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ?! – ௰௯ (19)

5
(11)

அம்பு – ௰௯ (19)

அறைக்குள் வந்ததுமே அறைக்கதவை கோவமாய் அடைத்த விழி இந்தர் புறம் திரும்பி

 “நீங்க என்னதான் நினைச்சுகிட்டு இருக்கீங்க? அன்னைக்கு அந்த காம்பெட்டிஷன்ல  அதுவரைக்கும் பொண்ணுங்களையே பார்த்ததில்லைங்கிற மாதிரி அப்படி ஒரு லுக்கு..  இப்போ அதை பத்தி எல்லாம் எந்த கவலையும் இல்லாம எங்க அக்காவை பொண்ணு பார்க்க கிளம்பி வந்தாச்சு.. எங்க அக்காவை உங்க தம்பிக்கு புடிச்சிருச்சுன்னு இப்ப சார் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியாச்சு.. உங்க அப்பா என்னடான்னா இப்படி நேரத்துக்கு ஒரு பொண்ணுன்னு லுக் விட்டுட்டு திரிகிற உருப்படாத பிள்ளைக்கு எங்க அப்பா கிட்ட பெரிய உத்தமர் காந்தி பட்டம் கொடுத்திட்டு போறார்..” வார்த்தையால் வதக்கினாள் அவனை..

அவ்வளவுதான்.. அவ்வளவு நேரம் தன்னை வாய்க்குள் போட்டு அரைத்துக் கொண்டு இருந்த அந்த உதடுகளையே கடித்து தின்று விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் இறுதியாய் சொன்ன வார்த்தையில் பொங்கி எழுந்து விட்டான்..

அவள் கன்னங்களை ஒற்றை கையால் அழுத்தமாய் பிடித்து இழுத்தவன் அவள் கண்களுக்குள் பார்த்து “என்னடி ரொம்ப ஓவரா பேசுற..?” என்று கேட்டவன் அடுத்த நொடி அவனை வன்சொற்களால் வதைத்த அந்த இதழ்களை வன்மையாகவே தண்டித்திருந்தான்..

அவளோ விழிகளை சாசர் போல் விரித்த படி அவன் கைகளை கன்னத்தில் இருந்து பிடித்து இழுத்து அவனிடமிருந்து திமிறி விலக பார்க்க அவன் கைகளும் இதழ்களும் அவளின் அதரங்களை தங்கள் உடமையாய் எண்ணியதோ என்னவோ.. உடும்புப்பிடியாய் அல்லவா பிடித்திருந்தன அவளின் மெல்லிய இதழ்களை..?!

பெண்ணவளால் தன் இதழ்களை சிறை பிடித்து தண்டித்துக் கொண்டிருந்த அவனின் காதல் ஆயுதங்களை ஒன்றுமே செய்ய முடியவில்லை..

சிறிது நேரம் போராடியவள் ஒரு நிலைக்கு மேல் அந்த முத்தத்தின் கட்டிலிருந்து வெளிவர முடியாமல் அதனுள்ளேயே மாட்டிக் கொண்டு பதிலுக்கு தானும் அவன் இதழ்களை துவைக்க ஆரம்பித்திருந்தாள்..

நொடிகள் தாண்டி நிமிடங்கள் வரை இரு பக்கமும் ஒருவரை ஒருவர் பழிவாங்க அந்த முத்தக்கலை என்னும் இனிமையான யுத்தக்கலையை மற்றவர் மேல் பிரயோகித்துக் கொண்டு இருந்தார்கள்..

சில நிமிடங்களுக்கு பிறகு அவள் இதழை விடுவித்தவனின் கண்களிலோ மதுக் குவளைக்குள் விழுந்த வண்டாய் போதை ஏறி கிடந்தது..

மூச்சு வாங்கியபடி “ஹ்ஹ..ஹ.. அடியேய்.. என்ன தான்டி வச்சிருக்க அந்த லிப்ஸ்ல.. அதை என் வாய்க்குள்ளேயே வச்சுக்கணும்னு தோணுது.. என்னை ஒரு ஜென்டில்மேனா  இருக்க விட மாட்டே போலயே..”

சொன்னவன் அதோடு நிறுத்தாமல் அவளை இதழ்கள் நோக்கி மீண்டும் படையெடுக்க இம்முறை சுதாரித்தவள் சற்று பின்னால் சென்று “தோணும்.. விருப்பம் இல்லாத பொண்ணை ஃபோர்ஸ் பண்ணி கிஸ் பண்ணிட்டு இதுல ஜென்டில்மேன்னு பெருமை வேறயா..?”

அவள் மீண்டும் காளியவதாரம் எடுக்க அவனோ அதை எல்லாம் சட்டை செய்யாமல் “என்னவோ அந்த சைடு கிஸ் கொடுத்ததுனால ரொம்ப கஷ்டப்பட்ட மாதிரி சீன் போடுற.. நீயும் என்ஜாய் பண்ணிட்டு தானே இருந்த.. என் லிப்ஸை புண்ணாக்கிட்டு பேசுற பேச்சை பாரு..” தன் தடித்த இதழ்களை வருடிக்கொண்டே

அவளை ஒரு மார்க்கமாய் பார்த்தபடி “இவ்வளவு அழகா உன் மனசுக்கு பிடிச்ச மாதிரி இருக்கறதனால தானே நான் முடிச்சப்புறம் கூட நீ முடிக்காம கண்டினியூ பண்ணிக்கிட்டே இருந்த..” என்றவனை எரித்து விடுவது போல் முறைத்தாள் அவள்..

“ஆமா.. இவர் பெரிய மன்மதன்.. இவரை பார்த்து மயங்கி முத்தம் குடுத்தாங்க..”

“நீ ஒத்துக்கலன்னாலும் அதான்டி உண்மை.. இதுவரைக்கும் எந்த போட்டியிலயும் தோக்காதவ அன்னைக்கு ஐயாவோட ஒத்த பார்வையில சுத்தி இருந்த உலகத்தையே மறந்து அந்த டார்கெட் போர்டை தாண்டி ஷூட் பண்ணுன தானே..?”

அவன் அப்படி கேட்டதும் சற்று தடுமாறியவள் “அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. அன்னைக்கு ஏதோ ஃபார்ம்ல இல்ல நானு.. அதனால மிஸ் ஆயிடுச்சு..” என்றவளை மேலிருந்து கீழ் ஒரு மார்க்கமாய் பார்த்தவன்

“ஓஹ்.. அன்னைக்கு ஃபார்ம்ல இல்லையா? ஆனா இன்னைக்கு செம ஃபார்ம்ல இருக்க போல..” என்றவனின் மண்டையை பிளந்தால் என்ன என்று தோன்றியது அவளுக்கு…

“டேய்.. அசிங்கமா பேசாத டா..”

“அப்படின்னா என்னை லவ் பண்றேன்னு உண்மையை ஒத்துக்கோ..”

“என்னது.. லவ்வா..? யாரு லவ் பண்றா..? அதெல்லாம் யாரும் இங்க லவ் பண்ணல.. நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத.. ஓவர் கற்பனை உடம்புக்காகாது”

“இங்க பாருடி.. பாக்குற பொண்ணை எல்லாம் கிஸ் அடிக்கிறதுக்கு நான் ஒன்னும் ப்ளே பாய் இல்ல.. என் வாழ்க்கையில நீ ஒருத்தி தான் இருக்க முடியும்.. உன்னை தவிர வேற எவளும் இங்க நுழைய முடியாது..” என்று தன் நெஞ்சப் பகுதியை காட்டியவன்

“அங்கேயும் அதே நிலைமை தான்.. எனக்கு தெரியும்.. சும்மா எதுக்குடி நடிக்கிற? கிஸ் அடிச்சுட்டாங்களாம்.. கிஸ் மட்டும் இல்ல.. எனக்கு உன்னை இப்ப என்னென்னவோ பண்ணனும்னு தோணுது..” என்றவனின் கண்களை பார்த்தவளுக்கு இரண்டு நொடிகளுக்கு மேல் அந்த கண்களை பார்த்து பொய் பேசவும் முடியவில்லை..

சட்டென தலையை வேறு புறம் திருப்பியவள் “இல்ல.. நான் லவ்லாம் பண்ணல..” என்றாள்..

“சோ மேடம் ஒத்துக்க மாட்டீங்க.. அப்படித்தானே?”

“லவ்வே இல்லைங்கிறேன்.. அப்புறம் எப்படி ஒத்துக்க முடியும்?” அவள் கேட்க

“ஓகே.. ஒரு சின்ன பெட் வச்சுக்கலாம்.. இன்னைக்குதான் நீ ஃபுல் ஃபார்ம்ல இருக்கல்ல..?” அவன் கேட்ட கேள்வியில் மறுபடியும் அதிர்ந்து முறைத்தவளை “ஏய்.. நீ ஏண்டி இவ்ளோ டர்ட்டியா யோசிக்கிற? நான் ஆர்ச்சரில இருக்கிற ஃபார்மை பத்தி தான்டி சொல்றேன்..”

அவன் கீழ் உதட்டை கடித்து புன்னகைத்தபடியே கேட்க “அதெல்லாம் நாங்க ஃபார்ம்ல தான் இருக்கோம்” என்றாள் இறுக்கமாக..

“இப்படி சும்மா நீ வாயால சொல்றதெல்லாம் என்னால ஏத்துக்க முடியாது.. நெஜமாவே உனக்கு என் மேல லவ்வு இல்லைன்னு ப்ரூவ் பண்ணு..”

அவள் புரியாமல் அவனை கேள்வியாய் பார்க்க “உங்க வீட்ல தான் இப்போ ரேஞ்ச் செட் பண்ணி இருக்க இல்ல..? மொத்தம் த்ரீ ஷாட்ஸ்.. நீ த்ரீ ஏரோஸ் ஷுட் பண்ணு.. நான் த்ரீ ஏரோஸ் ஷூட் பண்றேன்… யாரு வின் பண்றாங்கன்னு பார்க்கலாம்.. ஒருவேளை நீ வின் பண்ணிட்டேனா உனக்கு என் மேல லவ் இல்லன்னு நான் ஒத்துக்குறேன்.. இந்த கல்யாணம் நடக்காது.. ஆனா ஒருவேளை நீ தோத்துட்டனா என்னை கல்யாணம் பண்ண நீ சம்மதிக்கணும்.. அதுவும் அங்க சுத்தி இருக்கிற எல்லார் முன்னாடியும் என்னை கட்டிப் பிடிச்சு உன் லவ்வை சொல்லி கல்யாணத்துக்கு சம்மதிக்கணும்.. ஓகேன்னா சொல்லு.. இப்பவே போய் இந்த சேலஞ்ச் பத்தி உங்க அப்பா கிட்ட சொல்லி ஸ்டார்ட் பண்ணிடலாம்..”

அவன் அவளை கூர்ந்து பார்த்தபடி அவள் பதிலுக்காக காத்திருக்க “முடியாது.. அப்படி எல்லாம் எல்லார் முன்னாடியும் கட்டிக்கிட்டுல்லாம் என்னால சொல்ல முடியாது..”

அவள் சொன்னதை கேட்டு சத்தமாக சிரித்தவன் “அப்போ நீ என்னை லவ் பண்ற.. என் கண்ணை பார்த்தா இந்த சேலஞ்சில தோத்துடுவன்னு பயம் உனக்கு.. அப்ப லவ்வை ஒத்துக்கோ.. அப்படி பயம் இல்லன்னா நீ என்னை கட்டிக்கிட்டு லவ் சொல்ல வேண்டிய அவசியமே வராதே.. அப்போ நீ என்னை லவ் பண்றதானே..?”

“இல்ல.. நான் உன்னை லவ் பண்ணல.. நான் சேலஞ்சை அக்செப்ட் பண்றேன்..” என்றாள் அவள்..

“மாட்டிக்கிட்டா மலரு..” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் அவளை ஒரு மார்க்கமாய் பார்த்து “அப்ப ஓகே.. உனக்கு அவ்ளோ கான்ஃபிடன்ஸ் இருக்குன்னா வா.. போய் உங்க அப்பா கிட்ட சொல்லிட்டு நடக்க வேண்டியதை பார்க்கலாம்..” என்று கதவை திறந்து கொண்டு “வாடி வாடி நாட்டுக்கட்டை.. வசமா வந்து மாட்டிக்கிட்ட..” பாடியபடி வெளியே சென்றான் இந்தர்..

வில்விழிக்கோ “அய்யய்யோ தெரியாத்தனமா இப்படி ஒரு சேலஞ்சுக்கு ஒத்துக்கிட்டேனே.. என்னை வச்சு செய்யப் போறான்.. இன்னைக்கு நீ காலி  டி மலரு..” என்று புலம்பியபடி அவன் பின்னாலேயே அவளும் சென்றாள்..

இங்கே மான்வழி அறைக்குள் வந்த பிருத்வி உள்ளே வந்ததும் “மானு..” என்றழைக்க அவன் புறம் திரும்பியவள் கண்களோ கண்ணீரில் நிறைந்திருக்க அவள் விழிகள் அவனிடம் தனக்கு அவ்வளவு நேரமாய் ஏற்பட்டிருந்த அவஸ்தைகளை ஒன்று விடாமல் சொல்லிக் கொண்டிருந்தது..

அவள் அருகே வந்தவன் அவள் நாடி பிடித்து நிமிர்த்தி “ஹேய் எதுக்குடி கண்ணெல்லாம் கலங்கி இருக்கு.. என்ன ஆச்சு மா?” அவன் ஆதூரமாய் அவள் தலையை வருடியபடி கேட்டது தான் தாமதம்..

அவன் மார்பில் முகம் புதைத்து கண்ணீர் மழையால் அவன் மார்பை நனைக்க ஆரம்பித்தாள் பாவை அவள்..

“என்னடா..? எதுக்கு இப்போ அழற? என்னை பிடிக்கலையா?” அவன் அப்படி கேட்டதும் சட்டென அவனை ஏறிட்டுப் பார்த்தவள் அவன் இதழ்களை தன் கரத்தால் மூடி “உங்களைப் பிடிக்காதவ தான் இப்படி உங்களை கட்டிப்பிடிச்சுக்கிட்டு அழுதுகிட்டு இருக்கேனா? உங்களை பிடிக்கலைன்னு சொன்னா இந்த உலகத்துல இருக்கற யாரையுமே எனக்கு பிடிக்கலைன்னு சொல்றதா அர்த்தம்.. என்னையும் உட்பட..”

அதைக் கேட்டு அழகாய் புன்னகைத்தவன் “ம்ம்.. அதான் பிடிச்சிருக்கு இல்ல..? நம்ம கல்யாணமும் ஃபிக்ஸ் ஆயிடுச்சு.. அப்புறம் எதுக்கு அழற?” என்றான்..

“உயிரே போயிடுச்சு பிருத்வி.. உங்க அண்ணாவுக்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சிருவாங்களோன்னு பயந்தே போயிட்டேன்.. இந்த ரூம் ஜன்னல்ல இருந்து உங்களை பார்த்த அந்த நிமிஷம் உங்க கிட்ட மொத்தமா என் மனசை இழந்துட்டேன்.. உங்க அண்ணன் தான் மாப்பிள்ளைன்னு உங்க அம்மா சொன்ன அத்த நிமிஷத்தில இருந்து உங்கண்ணா இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ற அந்த நிமிஷம் வரைக்கும் என் உயிரே என்கிட்ட இல்ல..”

“அப்பவே உனக்கு  என்னைதான் புடிச்சிருக்குன்னு சொல்ல வேண்டியது தானடி..”

“அது எப்படி அவ்வளவு பேர் முன்னாடி..”

“மானு.. இது உன் வாழ்க்கை.. இதுக்கு கூட நீ பேசலனா அப்புறம் உனக்கு தானடி கஷ்டம்.. வாயை திறந்து உன்னோட இஷ்டத்தை சொன்னாதானே அடுத்தவங்களுக்கு புரியும்..”

“என் தங்கச்சி மலரும் இப்படித்தான் சொல்லுவா.. ஆனா நான் அப்படி கிடையாது.. சட்டுனு எல்லார் முன்னாடியும் பேச மாட்டேன்..”

அவனுக்கு புரிந்தது “சரி. இப்போ உனக்கு சந்தோஷம் தானே..? நம்ம கல்யாணம் நடக்கிறதுல உனக்கு எந்த..”

அவன் முடிக்கும் முன் அவனை இறுக்கமாய் அணைத்தவள் “நான் ஒன்னு சொன்னா என்னடா ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ண உடனேயே இப்படி சொல்றாளேனு தப்பா நினைப்பிங்களா..?”

“அப்படி தோணுதா உனக்கு? நீ எது சொன்னாலும் அப்படி நினைக்க மாட்டேன்.. நீ என்கிட்ட என்ன வேணா பேசலாம்டி பொண்டாட்டி..” என்க..

அவன் பொண்டாட்டி என்று அழைத்ததில் இதழ் மலர்ந்து சிரித்தவள் அவன் அணைப்புக்குள் இருந்து கொண்டே “ஐ லவ் யூ ப்ருத்வி.. ஐ லவ் யூ டு த கோர்..”

என்றவள் தன் அணைப்பை இன்னும் இறுக்க அவனுக்கோ உள்ளுக்குள் ஆனந்த பூகம்பம் ஒன்று அடியில் இருந்து முடி வரை அதிர்வுகளை கொடுத்தபடி ஓடிக் கொண்டிருந்தது..

அவனும் அவள் தோளில் முகம் புதைத்து “ஐ லவ் யூ மோர் கண்ணம்மா..” என்றான்..

திடீரென ஏதோ தோன்ற அவனில் இருந்து விலகியவள் அவன் முகம் பார்த்து “அப்படினா நீங்க ஆர்ச்சர் இல்லையா?”

அவள் கேட்கவும் புருவம் சுருக்கியவன் “இல்லடி.. இந்தர்தான் ஆர்ச்சர்.. நான்  ஆர்ச்சரி ஃபேக்டரியை அப்பாவோட சேர்ந்து பாத்துட்டு இருக்கேன்..”

அவன் சொன்னதும் முகம் மலர்ந்து பெரிதாய் சிரித்தவளை ரசனையாய் பார்த்தவன் “ஏன்.. உனக்கு ஆர்ச்சர்னா பிடிக்காதா?” என்று கேட்க

“இல்ல.. எனக்கு இந்த மாதிரி கொஞ்சம் விபரீதமா இல்லனா முரட்டுத்தனமான விளையாட்டெல்லாம் பிடிக்காது.. உங்களை மாதிரி அமைதியா இருக்கறவங்களை தான் பிடிக்கும்..” உண்மை தெரியாமல் அப்போது சொல்லி இருந்தாள் அவள்..

“சோ மேடம் நான் ஆர்ச்சரா இருந்தாலும் பரவாயில்லைன்னு தான் முதல்ல ஓகே சொல்லி இருக்கீங்க.. பார்த்த உடனே அவ்வளவு லவ் ஆயிடுச்சா டி என் மேல..” அவளை மோக கண்களோடு ஊடுருவி பார்த்தவன் அடுத்த நொடியே அவள் இதழ்களை தன் இதழுக்குள் சிறை செய்திருந்தான்..

இந்தர் வில்விழியின் இதழ் ஆக்கிரமிப்புக்கு மாறாக அழகான ஆழமான நிதானமான முத்தமாய் இருந்தது அது.. வெகு நேரம் அவள் இதழை தன் இதழால் வருடி கொண்டிருந்தவன் சற்றே விலகி “உன் தங்கச்சி இந்தரோட கல்யாண பிரபோஸலுக்கு என்ன பதில் சொன்னான்னு தெரியல.. வா போய் பார்ப்போம்..” என்றவனை புரியாமல் பார்த்தாள் அவள்..

வெளியே நிகழ்ந்ததை சொன்னவன் “இந்த முடிவை அவன் இன்னைக்கு எடுக்கல.. ரெண்டு நாள் முன்னாடி உன் தங்கச்சி ஒரு காம்பெடிஷனுக்கு போயிருந்தால்ல? அங்கேயே அவளைப் பார்த்து மொத்தமா ஆஃப் ஆகிட்டான்..”

அவன் சொன்னதைக் கேட்டு விழி விரித்தவள் “இன்ட்ரஸ்டிங்கா இருக்கே.. வாங்க போய் பார்க்கலாம்..” என்றாள்..

இருவரும் வெளியே வர அங்கே ஏற்கனவே பெரியவர்களிடம் தாங்கள் போட்டுக் கொண்ட சவால் பற்றி சொல்லி அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி இருந்தார்கள் இந்தரும் வில்விழியும்..

அவர்கள் வீட்டு தோட்டத்தின் மறுபகுதியில் வில்வித்தைக்கான களத்தை உருவாக்கியிருந்தார்கள்.. அங்கே ஒரு இலக்கு பலகை அதன் பின்னால் ஒரு பெரிய தடுப்பு சுவர் மற்றும் வில் அம்பு அம்பறாத்தூணி எல்லாம் இருந்தன..

அங்கே சென்றவன் அந்த அமைப்பை பார்த்து ஆச்சரியப்பட்டு போனான்..

“ம்ம்.. பெர்ஃபெக்ட்.. அப்பா ரேஞ்ச்  செட் பண்ண பர்ஃபெக்ட்டா கைடு பண்ணி இருக்காரு.. எங்க வீட்டில இருக்கிறதை விட இங்க நல்லா இருக்கு..” என்றவன்..

விழி பக்கம் திரும்பி “என்ன மலர் மேடம் தொடங்கலாமா? நீங்க தொடங்குறீங்களா இல்ல நான் தொடங்கவா?”

அவன் அவளை மேல் கண்ணால் பார்த்த படி கேட்க அவளும் “நீங்களே தொடங்குங்க.. நான் அப்புறம் ஷூட் பண்றேன்..” என்றாள்..

“ஒன் ஆன் ஒன் ஷாட்ஸ்.. ஓகேவா?”

அவளும் சரி என தலையாட்ட வில்லையும் அம்பையும் எடுத்த இந்த்ரதனுஷ் பெயருக்கேற்றார் போலவே அதில் லாவகமாய் நாணை கட்டி அதில் அம்பை பொருத்தி இலக்கு பலகையை கூர்மையாய் நோக்கியபடி அம்பை செலுத்த அதுவும் சரியாக தங்க நிற வளையத்தில் சென்று பாய்ந்து நின்றது..

அதைப் பார்த்து புன்னகைத்தவன் “உங்க டர்ன் மேடம்..” என்று அவளுக்கு பின்னால் போய் நின்று கொண்டான்..

அவளும் அவனை ஓரவிழியால் நோட்டமிட்டபடியே தன் இடத்தில் போய் நின்றவள் நடுப்புள்ளிக்கு மிக அருகில் தன் அம்பை எய்திருந்தாள்..

அவன் அவளுக்கு பின்னால் நின்றிருந்ததால் அவள் கவனம் சீராக இலக்கு பலகை மேலே தான் குவிந்து இருந்தது.. தங்க வளையத்தில் தன் பார்வையை பதித்தவள் எய்த அம்பு சரியாக அதன் நடுப்புள்ளியை நோக்கி பாய்ந்து இருந்தது..

இந்தர் கையை தட்டியபடி “வாவ்.. பர்ஃபெக்ட் ஷாட்.. பரவாயில்லையே.. நேரா இதயத்து நடுல போய் குத்துற ஏரோ போல கோல்டன் ரிங்கோட நடுவுல பாய்ஞ்சுருச்சு.. ம்ம்.. குட் ஷோ” என்று

அவள் கையில் இருந்து வில்லை வாங்கிக் கொண்டவன் அவளை அளவிடும் ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி இலக்கு நோக்கி தன் பார்வையை திருப்பினான்..

அவளோ அவன் பக்கவாட்டில் சென்று நின்று கொள்ள அடுத்த அம்பை நாணில் பொருத்தியவன் அதை எய்யவிருந்த நேரம் அவள் பக்கம் திரும்பி அவளை ஆழமாய் பார்க்க வில்விழியோ “ஒழுங்கா டார்கெட் பார்த்து ஷூட் பண்ணுங்க.. ஒழுங்கா ஷூட் பண்ணலைனா அப்புறம் கல்யாணம் நடக்காது” என்றாள்..

அவள் சொன்னதை கேட்டு சத்தமாக சிரித்தவன் அவள் புறம் திரும்பிய படியே அம்பை எய்ய அது நேராக இலக்கு பலகையின் தங்க வளையத்தில் சென்று குத்திக் கொண்டு நின்றது..

அந்த புறம் திரும்பாமலேயே கண்களால் இலக்கு பலகையை பார்க்கச் சொல்லி அவளுக்கு அவன் சைகை காட்ட திரும்பி இலக்கு பலகையை பார்த்தவளின் கண்களோ பெரிதாய் விரிந்து கொண்டது..

அம்பு பாயும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!