தன்னை முறைத்து பார்த்துக் கொண்டிருந்த வில்விழியின் கோபத்தை அலட்சியப்படுத்திய இந்தர் அவன் கூட வந்த பெண்ணின் பக்கம் திரும்பினான்..
“ஹான்.. மிஸ்..”
“தன்வி சார்..”
“ஹான்.. மிஸ்.தன்வி.. நான் என் வைஃப்கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும்.. நீங்க சக்தியை கொஞ்ச நேரம் வெளிய கூட்டிட்டு போய் வச்சு இருக்கீங்களா? 1 ஹவர்க்கு எங்களை யாரும் டிஸ்டர்ப் பண்ண கூடாது..”
அவளோ அவன் சொன்ன விஷயங்களை எல்லாம் கேட்டு அரண்டு போயிருந்தாள்..
“ஐயோ.. இந்த முரட்டு சிங்கம் இவங்களோட ஹஸ்பென்டா.. மேடம் ரொம்ப பெரிய இடம் தான் போல.. அப்புறம் ஏன் அங்க வந்து அவ்ளோ கஷ்டப்பட்டு வேலை பார்த்தாங்க..”
அவள் தலைக்குள் பல்வேறு கேள்விகள் ஓடிக்கொண்டிருக்க பெரும் யோசனையுடனேயே மலங்க மலங்க விழித்தபடி நின்று கொண்டிருந்தாள் அவள்..
அவள் முகத்திற்கு நேராக சொடக்கிட்டவன் “ஹலோ.. என்ன.. திடீர்னு உங்களுக்கு காது கேட்காம போயிடுச்சா? சொன்னது காதுல விழல..? குழந்தையை வாங்கிட்டு போய் ஒரு ஒன் ஹவருக்கு பாத்துக்கோங்க.. பத்திரமா பாத்துக்கணும்.. அவ என் பொண்ணு.. அவ மேல ஒரு தூசு படக்கூடாது..”
உறுமலாய் வந்த அவன் குரலில் அரண்டு போனவள் “ஓகே சார்.. என் பக்கத்திலேயே உட்கார வெச்சு பாத்துக்குறேன் சார்..” என்க வில்விழியோ “தன்வி.. நில்லு.. இங்கே யாரும் யாருக்கும் பொண்டாட்டியும் கிடையாது.. ஒன்னும் கிடையாது.. நீ எங்கேயும் போக வேண்டாம்.. மிஸ்டர் இந்திர தனுஷ்.. நீங்க கிளம்பலாம்.. நான் இந்த மீட்டிங்கையே கால் ஆஃப் பண்றேன்.. உங்களோட எந்த டீலும் எங்களுக்கு வேண்டாம்..”
இறுகி போன முகத்தோடு அவள் சொல்லி முடித்த வேளை அவளை ஆழ்ந்து பார்த்தவன் சட்டென திரும்பி தன்வியை ஒற்றை புருவம் உயர்த்தி இன்னும் நீ கெளம்பலையா என்ற ரீதியில் பார்க்க “அய்யோ.. நான் கிளம்பிட்டேன் சார்..” என்றவள் குழந்தையை படபடவென வாங்கி அங்கிருந்து தப்பித்து ஓடியே போயிருந்தாள்..
அவள் சென்றதும் வில்விழி பக்கம் திரும்பியவன் கண்களை அவள் முகத்தினின்று சிறிதும் அகற்றாமல் கூர்ந்து பார்த்தபடி மெல்ல அவளை நோக்கி அடியெடுத்து வைக்க எவ்வளவுதான் இறுக்கமாயும் அழுத்தமாயும் தன்னை தானே வெளிப்புறத் தோற்றத்தில் அவள் காட்டிக் கொண்டாலும் அவன் அவளை நோக்கி வைத்த ஒவ்வொரு காலடியினுடைய ஓசையும் ஒருவித நடுக்கத்தையும் அதே நேரம் இன்னொரு புறம் ஒரு வகை சிலிர்ப்பையும் இனிய படபடப்பையும் ஒருங்கே அவளுக்குள் உண்டாக்கி கொண்டிருந்தது..
சுவாசம் தொடும் தூரத்தில் அவளோடு நெருங்கி நின்றவன் தன்னையே எரிப்பது போல் பெரிதாய் விழித்து பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தருகே குனிந்து அவள் பார்வையோடு தன் பார்வையை கலக்க விட்டான்..
அவன் பார்வையின் தீட்சண்யத்தை தாங்கமுடியாது முகத்தை வேறு புறம் திருப்பியபடி அவள் அவனிலிருந்து விலகி பின்னால் நகர முயல சட்டென அவள் பின்னால் தன் கையை கொண்டு போய் கொத்தாய் அவள் தலை முடியை இறுகப்பற்றி அவள் முகத்தை தன் புறமாய் திருப்பினான்..
அதற்கு மேல் அவளின் இருவிழிகளுக்கிடையே அலைபாய்ந்து ஊடுருவிய அவனின் விழிகளால் அவன் தொடுத்த கேள்விகளுக்கு பதில் இருக்க முடியாமல் அவளின் விழிகள் தனிச்சையாய் தன் இமைகளை மூடிக்கொள்ள அவனோ அவள் முகத்தில் எங்கு முத்தம் வைக்கலாம் என்று தேடுவது போல் முகமெங்கும் பட்டும் படாமல் உரசிவிடும் இடைவெளியில் இதழால் ஊர்வலம் நடத்தினான்..
அவள் சருமத்தில் அவன் சுவாசத்தின் தீண்டல் அவளையும் மோகப்பெருக்கில் செயலற்றுப் போக வைத்திருக்க அவ்வளவு கோபத்தோடும் ஆத்திரத்தோடும் பேசிக் கொண்டிருந்தவள் ஒரே நொடியில் அவன் கைப்பாவையாய் மாறி இருந்தாள்..
ஒரு மெல்லிய இதழ்விரிப்போடு அவள் தலை முடியை பற்றி இருந்த விரல்களை தளர்த்தி விடுவித்தவன் அடுத்த நொடி அவளிடம் இருந்து தள்ளி நின்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தான்..
அவ்வளவு நேரம் அவன் மூச்சுக் காற்றின் வெப்பத்தில் அவன் வசம் சிறை பட்டு கிடந்தவள் அவன் கொடுத்த அந்த அறையில் திடுக்கிட்டு கண் திறந்து அவனை விழித்து தீப்பார்வை பார்க்க “என்னடி.. கோவம் வருதா..? வரணும் டி.. இந்த ஒரு அடி கொடுத்ததுக்கு உனக்கு இவ்வளவு கோவம் வருதுன்னா இவ்வளவு நாளா என் குழந்தை உருவானதிலேர்ந்து எல்லாத்தையும் என்கிட்ட இருந்து மறைச்சு அவளை என் கண்ணுல கட்டாம ஒளிச்சு வச்சு வளர்த்திருக்கியே.. எனக்கு எவ்வளவு வலிக்கும்? உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கணும்? என்கிட்ட இருந்து உன்னை பிரிச்சு கொண்டு போறதுக்கே உனக்கு உரிமை இல்லைன்னு நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.. என்ன திமிர் இருந்தா என் பொண்ணை என் கண் பார்வையில இருந்து மறைச்சு வளர்த்து இருப்பே.. அவளுக்கு ரெண்டு வயசு ஆகற வரைக்கும் அவளோட இருப்பே தெரிய விடாம என்னை இப்படி இருட்டில வச்சிருந்திருக்கியேடி..?”
அவள் எதுவும் பேசாமல் மௌனமாய் இருக்கவும் “நீ என்னை விட்டு போன ரெண்டு வருஷம் 8 மாசம் நான் எவ்வளவு துடிச்சிருக்கேன் தெரியுமா? ஒவ்வொரு நிமிஷமும் நீ கூட இல்லாத வெறுமை என்னை அணு அணுவா சித்திரவதை செஞ்சிருக்கு.. என் மக.. என்னுடைய இளவரசிடி அவ.. உனக்குள்ள அவ வளர்ந்த ஒவ்வொரு நொடியும் எனக்கு உரிமையான நேரம்.. அதை என்கிட்டே இருந்து அநியாயமா பறிச்சிட்டியேடி.. உனக்கு யாருடி அந்த உரிமையை கொடுத்தா.. அவ பிறந்த நேரம் அவ வளரும் போது செஞ்ச சின்ன சின்ன விஷயங்கள்னு இந்த சந்தோஷம் எதையுமே என்னை உணர விடாம பண்ணிட்டியேடி.. உன் அகராதி படி நான் தப்பு பண்ணினவனாவே இருந்துட்டு போறேன்.. எனக்கு தண்டனை கொடுத்தது உன்னை பொறுத்த வரைக்கும் நியாயமாவே இருக்கலாம்.. ஆனா நமக்கு பொறந்ததை தவிர அவ என்னடி தப்பு பண்ணா? அவளுக்கு இந்த ரெண்டு வருஷம் அப்பாங்கற உறவு இல்லாம பண்ணிட்டியேடி.. என்னோட பாசத்தை அவளுக்கு கிடைக்காம பண்ணி அவளுக்கு நீ எவ்வளவு பெரிய கொடுமை பண்ணி இருக்கேன்னு உன் மரமண்டைக்கு புரியுதா? ராட்சசி..” ஆக்ரோஷமாய் தொடங்கியவன் கரகரத்த குரலில் தொடர்ந்து சீறலாய் முடித்திருந்தான்..
“அவ உங்க பொண்ணு இல்ல.. அவ என் பொண்ணு மட்டும்தான்..”
“அது எப்படி மேடம்? குந்தி தேவிக்கு கொடுத்த மாதிரி சூரிய பகவான் உங்களுக்கு வரம் கொடுத்தாரா..?”
அவன் கிண்டலாக கேட்க அவனை தீவிரமாய் முறைத்தவள் “உங்க இரத்தம் அவ உடம்புல ஓடுதுங்கறதுக்காக மட்டும் நீங்க அவளோட அப்பா ஆகிட முடியாது.. போதும்.. பொண்ணுங்களை அடிமையா நடத்துற ஆம்பிளைங்க இருக்கற அந்த குடும்பத்துல என் பொண்ணு வளர்ந்து கஷ்டப்பட வேண்டாம்.. அவ என் கூட சுதந்திரமா வளர்ந்து அவ கனவுகளை அடையட்டும்..”
அவள் தீர்க்கமாய் சொல்லிவிட “இப்படி பேசறதுக்கு உனக்கு வாய் கூசவே இல்லையா மலரு.. சாரி.. ஹா..ன்.. அதென்ன பேரு.. ஹான்.. வில்விழி.. மலர்விழியை சுருக்கி செல்லமா உன்னை மலருன்னு கூப்பிட்டேன்.. வில்விழியை சுருக்கி எப்படி கூப்பிட..? வில்லுன்னா.. ஹான்.. இல்ல.. வில்லின்னு கூப்பிடறேன்.. சைலண்டா என்னையும் என் பொண்ணையும் பிரிச்சு கூலா இப்படி ஒரு வில்லத்தனமான வேலை எல்லாம் பண்ணி இருக்க இல்ல.. உனக்கு அந்த பேரு நல்லாவே சூட் ஆகும்டி..”
அவன் முன்னே சுட்டு விரலை நீட்டி அவனை எரிப்பது போல் பார்த்து “மிஸ்டர். இந்திரதனுஷ்.. மைண்ட் யுவர் வர்ட்ஸ்..” அவளும் சீறினாள்..
அவளின் நீட்டிய விரலை பிடித்து மடக்கி அவள் கையை அப்படியே அவளுக்கு பின்னால் கொண்டு போய் அவள் முதுகோடு ஒட்டி நின்றவன் “என் முன்னே விரலை நீட்டி பேசினே விரலை ஒடச்சிடுவேன்.. இங்க நடக்கிறது அஃபீஷியல் மீட்டிங்கில்ல.. இப்படி நீ கையை நீட்டி பேசுறதுக்கு.. நான் இப்போ என் பொண்டாட்டி கிட்ட பேசிகிட்டு இருக்கேன்.. அது ஞாபகம் இருக்கட்டும்..”
அவளோ அவன் முகத்தை திரும்பி தலை தூக்கி மேல் கண்ணால் பார்த்தவள் “இதை தான் சொல்றேன்.. இதுக்காக தான் என் பொண்ணை அங்க விட மாட்டேன்னு சொன்னேன்.. பொண்டாட்டின்னு சொல்லும்போதே எதிர்த்து பேசக்கூடாது.. அவளோட கனவுகள்.. அவளோட உணர்ச்சி.. அதை எல்லாம் அவ வெளிப்படுத்தவே கூடாது.. இதோ இப்ப கூட மிருகத்தனமா என் கையை பின்னாடி பிடிச்சுகிட்டு என்னை அடக்கிக்கிட்டு இருக்கீங்களே.. இந்த அடக்குமுறை தான் என் பொண்ணுக்கு வேணான்னு நான் முடிவு பண்ணேன்.. இப்ப கூட என் பொண்ணுக்காக நான் எந்த முடிவும் பண்ண கூடாதுன்னு தானே நீங்க நினைக்கிறீங்க..?”
அவன் கையால் இழுபட்டு அவனுடைய இறுகிய பிடியில் வலி எடுத்துக் கொண்டிருந்த தன் கையை விடுவிக்க போராடியபடி அவள் பேச அவள் கையை இழுத்து அவளை சற்று முன்னே தள்ளி விடுவித்தவன் அவள் தோள் பற்றி தன் புறம் திருப்பினான்..
தன் பின் தலையை அழுத்தமாய் கோதியப்படி கண்ணை மூடித் திறந்தவன் ஒரு கையை இடுப்பில் குற்றி மறுகையை அவள் முகத்துக்கு நேராக நீட்டி “அடியேய்.. என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற டி.. அறிவு கெட்டவளே.. அதிகாரத்துக்கும் அன்பு தொல்லைக்கும் வித்தியாசம் தெரியாதவளா நீ.. உன் பொண்ணுக்காக நீ முடிவு எடுக்கறதை இங்க யாரும் தப்பு சொல்லல.. ஆனா அவளுக்கு அப்பா நான் இருக்கேன்.. இந்த முடிவுல என்னோட பங்கும் இருக்கணும்னு தான் நான் சொல்றேன்.. புரியுதா இல்லையா?”
அவள் கன்னங்களை தன் கைவிரலால் அழுத்தி அவள் முகத்தை பார்த்து சொல்லிக் கொண்டிருந்தவன் சட்டென தான் அறைந்த அறையில் சிவந்திருந்த அவள் கன்னங்களை கட்டை விரலால் மெல்ல வருடி “சாரிடி.. என் குட்டிப்பொண்ணை என்கிட்டே இருந்து பிரிச்சுட்டேன்ற கோவத்துல அடிச்சிட்டேன்..”
பேசிக்கொண்டே இருந்தவன் சட்டென அவள் முகத்தருகே குனிந்து கன்னத்தில் அழுத்தமாய் தன் இதழ் பதித்து விட அவன் அறைந்த போது அதிர்ந்ததை விட அதிகமாக அதிர்ந்து போனாள் பாவை அவள்..
“என்ன பண்றீங்க நீங்க?”
அவனைப் பிடித்து தன்னில் இருந்து விலக்கி தள்ளி விட்டவள்.. “இப்படி எல்லாம் அத்துமீறி நடந்துக்கிட்டீங்கன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துடுவேன்.. உங்க மேல ஆக்சன் எடுக்க வேண்டி இருக்கும்..”
அவள் அவனை ஆழமாய் உருத்து பார்த்தபடி எச்சரிக்கை செய்ய அவனோ உள்பக்க கன்னத்தில் நாவை வைத்து பதிலுக்கு ஆழ பார்த்தபடி மெல்லிய முறுவலோடு இன்னும் அவளை நெருங்கி வந்தவன் “ஓ.. கம்ப்ளைன்ட் கொடுப்பிங்களா மேடம்..? ம்ம்.. அப்போ இதையும் சேர்த்து கொடுடி..” என்றவன் அவள் பின் தலையில் தன் கையை வைத்து அவள் நகர முடியாமல் அழுத்தமாய் பிடித்து அவள் இதழோடு இறுக்கமாய் தன் இதழை பிணைத்துக் கொண்டான்..
அவள் அவனிடமிருந்து தன் அதரங்களை பிரிக்க முதலில் துள்ளி திமிறி அவன் மார்பில் கை வைத்து தன்னிலிருந்து அவனை விலக்கி தள்ள முயன்று போராடிக் கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில் அவனுடைய தடித்த உதடுகளின் ஆளுமைக்கு ஈடு கொடுக்க முடியாமல் தன் மென் உதடுகளை
மனமுவந்தே அவன் இதழ்களுக்கு உணவாய் கொடுத்திருந்தாள்..