வில்விழியை பார்த்தபடி சரியாக இலக்கை நோக்கி அம்பை செலுத்தி இருந்தான் இந்தர்..
“எங்க அப்பா அவர் மகனாவே இருந்தாலும் செய்யற வேலைக்கான தகுதி இருந்தா தான் அந்த பொறுப்பை ஒருத்தர் கிட்ட ஒப்படைப்பார்.. இந்தர் ஒன் ஆஃப் தி பெஸ்ட் ஆர்ச்சர்ஸ்.. அதனாலதான் அவன் அகாடமில கோச்சா மட்டும் இல்ல அதோட மேஜர் ஷேர்ஹோல்டராவும் இருக்கான்..”
பிருத்வி சொல்ல இப்போது வில்விழிக்கும் அவனுடைய ஆற்றல் எத்தகையது என்று புரிந்தது.. அந்நேரம் பிரமித்து தான் போனாள் அவனுடைய திறனை எண்ணி..
அடுத்ததாய் விழியின் முறை வர இந்த முறை இந்தர் பக்கவாட்டில் நின்று கொண்டிருக்க ஒரு கண்ணால் அவனை கவனித்தபடி அம்பு செலுத்த தயாரானவளின் கவனம் வழக்கம் போல் சிதறத் தொடங்கியது..
அவளின் பார்வை அவள் ஆணையை கேட்காமல் அலைபாய்ந்து கொண்டிருக்க மிகவும் சிரமப்பட்டு அதனை இழுத்து பிடித்து இலக்கு பலகையின் மேல் தன் கவனத்தை மொத்தமாய் குவிக்க முயன்றாள்..
பலவாறு முயன்றும் தங்க நிற வளையத்துக்குள் அம்பை செலுத்த முடியாமல் போனது அவளால்..
அம்பு சிவப்பு நிற வளையத்துள் பாய அவளோ கண்ணை இறுக்கமாய் மூடி “எவ்ளோ ட்ரை பண்ணியும் ஃபோக்கஸ் பண்ண முடியல.. இந்த மலைமாடு என்னை என்ன தான் செய்யறானோ தெரியல.. இவனை பார்த்தாலே என் கான்சென்ட்ரேஷன் மொத்தமும் பாழா போகுது..” தனக்குள் முனகிக்கொண்டாள் அவள்..
அவளை நெருங்கி வந்து நின்று கொண்டவன் “இந்த முறை உன்னோட எய்ம் கொஞ்சம் தவறி போயிடுச்சு போல.. அடுத்த ஏரோ நான் சரியா அடிச்சுட்டேன்னா ஜெயிச்சிடுவேனே.. ம்ம்.. பார்க்கலாம்.. எப்படியும் இந்த மலர்விழி எனக்கு தான்..” அவள் செவிகளில் ரகசியமாய் சொல்லி கையில் ஒரு முடிவோடு வில்லை ஏந்தினான் அவன்..
ஏனோ அவன் சொன்னதை கேட்டவளின் எண்ணத்தில் பெரிய மாற்றம்.. அவன் எப்படியும் இந்த போட்டியில் வென்று விட வேண்டும் என்று அந்த கணம் எண்ணினாள் பாவை அவள்..
எப்படியும் அம்பை அதற்குரிய இடத்தில் சரியாக அடித்து விடுவான்.. இந்த முறை தான் தோற்பது உறுதி என்று நினைத்து அவள் அவனை பார்த்திருக்க அவள் அதிரும்படி அவன் செலுத்திய அம்பு தங்க நிற வளையத்துக்குள் பாயாமல் கருப்பு நிற வளையத்தில் பாய்ந்தது..
எப்படியும் இனி வெற்றி அவளுக்கு தான் என்று சந்தோஷப்பட வேண்டியவளின் முகத்தில் மருந்துக்கு கூட மகிழ்ச்சியின் அறிகுறி கொஞ்சமும் இல்லாது ஏதோ ஒரு பதட்டம் சூழ்ந்து கொண்டது..
ஆம்.. இந்தர் இந்த போட்டியில் தோற்று விட்டால் அவளுக்கும் இந்தருக்கும் திருமணம் நடக்காதே… இதனாலேயே அந்த பதட்டம்..
இத்தனை நேரம் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே அவள் குறியாய் இருந்தது.. ஆனால் அப்படி வெற்றி பெற்றால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்ற விஷயம் இப்பொழுது தான் அவளுக்கு உறைத்தது..
போட்டியில் வெற்றி பெற்றால் இந்தரை இழந்து விடுவாளே.. அந்த நினைவே அவளை மெல்ல அழுத்த தொடங்கியது..
இந்தரோ அவள் புறம் திரும்பி “மிஸ் ஆயிடுச்சு..” என்றான்.. அவன் இதழிலே ஒரு குறும்பு சிரிப்பு.. வேண்டும் என்றே இலக்கை தவற விட்டு இருந்தான் கள்ளன் அவன்..
“நீ நெனச்சபடியே இந்த கல்யாணம் நடக்காது போல.. ஆனா இந்தக் கல்யாணம் நடக்குதோ இல்லையோ என்னை பொறுத்த வரைக்கும் நீ மட்டும் தான் என் பொண்டாட்டி.. ஒருவேளை இந்த கல்யாணம் நடக்கலனா வாழ்க்கை முழுக்க கல்யாணமே பண்ணாம இருப்பேனே தவிர நிச்சயமா இன்னொருத்தி இந்த இந்தர் வாழ்க்கையில வர முடியாது..”
மறுபடியும் அவளுக்கு மட்டும் கேட்குமாறு அவள் செவிகளில் அவன் உரைக்க அதை கேட்டவள் இதயத்திலோ குளிர் காற்றின் சாரல்.. அவன் தனக்கானவன் மட்டுமே என்ற எண்ணம் அவளையும் அறியாமல் அவள் இதழில் ஒரு குறு நகையை தோற்றுவித்திருந்தது..
“ம்ம்.. கமான் பேபி.. அடுத்த ஏரோவை ஷூட் பண்ணி கேமை வின் பண்ணிடு..” என்றவனை ஆழமாய் பார்த்தவள் சட்டென திரும்பி வில்லை தன் கைகளில் எடுக்க அவள் கைகளோ அம்பை நாணேற்ற முடியாமல் தடுமாறியது..
அதை கவனித்தவன் அவள் அருகே வந்து “என்னடி.. டென்ஷனாகுதா? நான் வேணா ஹெல்ப் பண்ணவா?” என்று அவள் பின்னால் ஒட்டி நின்றபடி அவள் கைகளை தன் கைகளால் பிடித்துக் கொண்டு அம்பை எடுத்து நாணேற்றியவன்
“இந்த ஷாட் மிஸ் ஆகவே ஆகாது.. ரெண்டு பேரும் சேர்ந்து அடிக்கிறோம் இல்ல? நிச்சயமா நீ வின் பண்ணிடுவ..” என்றவனின் முகத்தை தலையை தூக்கி பார்த்தவள்
“நிஜமாவே நான் வின் பண்ணனும்னு நினைக்கிறீங்களா?” என்று கேட்டாள்..
“நீ அதானே ஆசைப்படுற.. நான் விரும்புற பொண்ணு ஆசைப்படுறதை அவளுக்கு கொடுக்கணும் இல்ல..?” அவன் சொல்ல அவளுக்கோ அதைக் கேட்டு ஏனோ கோபம் வந்தது..
அதெப்படி அவன் தன்னை விட்டுக் கொடுக்கலாம் என்ற கோவம் அது.. ஆனால் அவனா விட்டுக் கொடுப்பான்.. அவள் வாய்மொழியாக அவனுக்கான அவளின் காதலை சொல்லி கேட்க வேண்டும் என்று தவம் இருந்தான் அவன்..
இது புரியாமல் “ஓகே ஐ அம் ரெடி..” என்றாள் அவள் வீம்பாக..
இறுகிய குரலில் முகத்தை இலக்கு பலகையை நோக்கி திருப்பிய படி அவள் சொல்ல.. இருவருமாய் சேர்த்து அந்த அம்பை செலுத்தி இருந்தார்கள்..
அம்பை செலுத்திய நேரம் நாணை இழுத்து விட்ட அந்த நொடி அவள் வில்லை சிறிது நகர்த்தி இருந்தாள்.. வேண்டும் என்றே தான் செய்திருந்தாள்.. அம்பு இலக்கு பலகையில் பட கூட இல்லை.. எங்கேயோ போய் அநாதையாய் விழுந்திருந்தது..
அவனோ அவள் கையைப் பிடித்து இருந்தபடியே இலக்கை நோக்கி பார்வையை செலுத்தியவன் தன் நாவை உட்கன்னத்தில் துழாவியபடி “எனக்கு தெரியும்டி நீ இதான் பண்ணுவன்னு..” இதழுக்குள் புன்னகைத்துக் கொண்டவன்
“அச்சச்சோ.. ஷாட் மிஸ் ஆயிடுச்சே..” அவன் கிண்டலாக சொல்ல “அது.. நீங்க என் கைய புடிச்சி ஏதோ பண்ணிட்டீங்க.. அதான் ஷாட் மிஸ் ஆயிடுச்சு..” என்று அவன் மீதே பழி போட்டாள் அவள்..
“ஆஹான்.. அப்படியா? சரி நீ வேணும்னா இன்னொரு சான்ஸ் எடுத்துக்க.. நீ தனியாவே ஷூட் பண்ணு..” என்க
“ஒன்னும் தேவை இல்ல” என்றாள் அவள்..
“அது எப்படி? போட்டினா கரெக்ட்டா இருக்கணும் இல்ல..? அப்புறம் நான் உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நீ சொல்ல கூடாது இல்ல..?” என்றவனை முறைத்துப் பார்த்தவள்
“அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன்.. நான் ஒத்துக்குறேன் நான் தோத்துட்டேன்” என்றவளை கூர்ந்து பார்த்தவன் “அப்போ வான்ட்டடா தோக்கறயாடி..?”என்று கேட்டான்..
ஆம்.. வேண்டுமென்றேதான் தானே மனம் உவந்து அவனிடம் தோற்கிறாள்.. காலம் முழுவதும் தன் வாழ்க்கை துணையாக அவனை வென்றெடுப்பதற்காக அவன் வேண்டும் என்று தான் தோற்கிறாள்..
நினைத்ததை சாதித்து விட்டானே.. அவனை முறைத்தபடியே அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் “சேலஞ்ச் படி நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்..” என்று அவனை மேற்கண்ணால் பார்த்த படி சொன்னவளின் செவியோரம்
“தோத்துட்டா இதை வேற மாதிரி சொல்லணும்னு இல்ல கண்டிஷன்..”
அவன் அவளுக்கு நினைவு படுத்த அவளோ சுற்றும் முற்றும் பார்த்தபடி மெதுவாய் அவனை நெருங்கி வந்தாள்.. மறுபடியும் பதட்டம்.. இதயத்துடிப்பு எண்ணிக்கையில் எல்லை கடந்து போனது..
சங்கடமாய் சுற்றி இருந்தவர்களை பார்த்தபடியே தயங்கி தயங்கி அவனை கட்டி அணைக்கும் தூரத்தில் வந்து நின்றவளை ஆழ்ந்து பார்த்தவன் சட்டென நிமிர்ந்து பரிமேலழகரிடம்
“மாமா எங்க கல்யாணம் நடக்கும்.. மலர் ஓகே சொல்லிட்டா.. ஆனா நான் மலரோட கொஞ்சம் தனியா பேசணும்..” அவள் விழிகளை ஆழமாய் பார்த்துக் கொண்டே சொன்னவனிடம்
இதழை பெரிதாய் விரித்து அவரை பார்த்து புன்னகைத்தவன் “என்ன மேடம்.. தனியா பேசலாமா?” என்று மலரிடம் கேட்க அவளும் பதட்டம் தணிந்து ஒரு பெருமூச்சோடு வேகமாய் ஆமோதிப்பாய் தலையாட்டினாள்..
அங்கே இருந்த மான்விழியும் பரிமேலழகரும் வாசுகியும் மலர்விழியை வியந்து பார்த்திருந்தார்கள்.. அவள் தான் எப்போதும் அதிரடியாய் செயல்படுபவள் ஆயிற்றே.. முதல் முறையாய் ஒருவன் சொல்லுக்கு மறுபேச்சு பேசாது அவன் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டு நடக்கும் அமைதியான வில்விழியை பார்க்க அவர்களுக்கெல்லாம் ஆச்சரியமாய் இருந்தது..
அவனோடு அவள் தன் அறைக்குள் சென்ற அடுத்த நொடி கதவை தாழிட்டவள் அவனை நெருங்கி வர அவனோ அவள் விழிகளுக்குள்ளேயே ஊடுருவி பார்த்து இருந்தான்..
அவன் பார்வைக்கு பதில் பார்வையாய் கண்கள் நிறைய காதலுடனும் மோகத்துடனும் அவனை ஏறிட்டவள் அவன் கழுத்தை சுற்றி கைகளை மாலையாய் போட்டு அவன் முகத்தை தன் புறம் இழுத்து அவன் இதழோடு தன் இதழை அழுத்தமாய் சேர்த்திருந்தாள்..
அவள் இதழ் சேர்த்த நொடி அவள் இதழை தன் இதழுக்குள் உணவாய் வாங்கிக் கொண்டவன் அந்த முத்தத்தின் ஊடாகவே மனம் நிறைந்து புன்னகைத்திருந்தான்..
வாய் திறந்து எதுவும் பேசவில்லை அவள்.. மனதில் இருந்த அத்தனை காதலையும் இதழ் வழியாக தான் சொல்லி இருந்தாள்.. ஆனால் வேறு விதமாக மௌன மொழியில் சொல்லியிருந்தாள்..
அவன் உயிரோடு சேர்ந்து ஒட்டி இருந்தாள் அந்த இதழணைப்பின் மூலம்..
அவன் ஆளுமையோடு கொடுத்த வன்மையான இதழணைப்பில் கூட அவ்வளவு காதலும் தாபமும் மோகமும் ஏக்கமும் இருந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.. பெண்ணவள் இதழ் வழியாகவே அவனுக்குள் சென்று குடி கொண்டு விட எண்ணியது போல இருந்தது அவளின் முத்தம்.. நீண்ட நெடிய இதழ் கலப்பு..
நேரம் கரைந்து கொண்டு இருக்க பதினைந்து நிமிடங்களுக்கு பிறகும் அறையை விட்டு வெளியே வரவில்லை இந்தரும் வில்விழியும்..
வாசுகி பரிமேலழகரிடம் “என்னங்க.. இவ்வளவு நேரம் ஆகுது.. ரூமுக்குள்ள போனவங்களை இன்னும் காணோமே..” கவலையோடு கேட்க
“ஏய் வரட்டும் டி.. இப்ப எதுக்கு நீ இவ்வளவு டென்ஷன் ஆகுற? ஒன்னும் ஆகாது.. அவரு மார்க்கண்டேயனோட புள்ள.. தப்பா எதுவும் நடக்காது..”
சொன்னவருக்கு தெரியும் வில்விழி எவ்வளவு தான் வெளியே இந்தரைப் பற்றி கோபமாக பேசினாலும் அவள் மனதில் முழுமையாய் இந்தர் நிறைந்திருக்கிறான் என்று.. அவரின் செல்ல மகளை பற்றி அவருக்கு தெரியாதா.. அது தெரிந்து தானே அவர் அந்த போட்டிக்கே சம்மதித்திருந்தார்..
இங்கு அறையிலோ பல நிமிடங்களுக்குப் பிறகு இதழ்கள் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்த போது இருவர் முகத்திலும் வெகு காலமாய் பிரிந்து இருந்த தங்கள் இணை உயிரோடு வந்து ஒன்றிவிட்ட ஆர்ப்பரிப்பு.. இதழ்கள் பிரிந்தனவே தவிர விழிகள் இன்னும் இறுக்கமாய் ஒருவரை ஒருவர் பார்வையால் ஆற தழுவிக் கொண்டுதான் இருந்தன..
இந்தர் அவள் கன்னங்களை தன் கைகளில் தாங்கி “ஓய் சண்டி ராணி.. வாயை திறந்து லவ்வை சொல்லணுங்கறது தான் சேலஞ்ச்.. சொல்லுடி..” என்க
அவளோ அவன் கன்னத்தில் தன் விரலை வைத்து வருடியபடி ஒரு கிறக்கமான பார்வையுடன் “அதான் சொல்லிட்டேனே..” என்க
புருவம் சுருக்கி அவன் அவளை புரியாமல் பார்க்க அவன் நெஞ்சத்தை விரலால் சுட்டிக்காட்டி “இங்க கேளுடா.. நான் சொல்லிட்டேன்னு தெளிவா சொல்லும்..” என்றவள் அழகாய் பெரிதாய் இதழ் விரித்து புன்னகைத்தபடி அவன் கன்னத்தை பிடித்து இழுத்து மறுபடியும் அவன் உதட்டில் அழுத்தமாய் “ம்ம்ம்ம்ம்…” என்று சத்தத்தோடு தன் இதழ்களின் தடம் பதித்து கதவை திறந்து கொண்டு வேகமாய் வெளியே சென்றாள்..
தன் நெஞ்சில் கையை வைத்து படபடக்கும் இதயத்தை பிடித்துக் கொண்ட இந்தரோ “ஐயோ கொல்றாளே..” என்றபடி தேன் குடித்த குள்ளநரியாக உள்ளுக்குள் ஒருவித ஆனந்த பரபரப்பு பரவ முகம் முழுக்க புன்னகையை தாங்கி அந்த அறையை விட்டு வெளியேறினான்..
அதன் பிறகு மார்க்கண்டேயனிடம் விஷயத்தை சொல்லி ப்ருத்வி அவரோடு பல விவாதங்கள் செய்து அவரை சம்மதிக்க வைத்து ஒரு வழியாய் இரண்டு திருமணமும் நடந்தேறியது..
நினைவடுக்குகளில் இந்த அழகான காதல் நிமிடங்கள் நகர்ந்து போக இன்று விழி சொன்னது எதுவுமே காதில் விழாதது போல் அந்த பழைய நாட்களில் அவன் மனம் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது..
“இந்தர்.. நான் சொல்றது கேக்குதா இல்லையா?” என்று விழி அவனை கேட்க இந்தர் தன் நினைவில் இருந்து மீண்டவன் “ஓகே வில்லி.. நீ போ..” என்றான்..
வில்விழியோ அவனை பார்த்தபடியே மான்விழியை தொடர்ந்து இதழில் புன்னகை தவழ உள்ளே சென்றாள்..
அப்போது மான்விழியின் அறைக்குள் இருந்து ட்ர்ர்ர்ர்.. என்று வண்டி ஓட்டுவது போல் சத்தமிட்டபடி வெளியே ஓடி வந்தான் சின்ட்டூ..
வில்விழியை பார்த்ததும் தன் வண்டியை சடன் ப்ரேக்கிட்டு நிறுத்தியவன் “அம்மா யாருமா இந்த ஆன்ட்டி..?” என்று கேட்க
அவன் உயரத்திற்கு முட்டி போட்டு அமர்ந்த வில்விழிக்கோ கண்கள் நிறைந்து போக அவன் தலையை வருடி
“ஏய் சின்ட்டூ.. எவ்ளோ வளர்ந்துட்டே நீ.. நான் போகும் போது ஆறு மாச குழந்தையா இருந்தான்.. எவ்வளவு அழகா க்யூட்டா இருக்கான் மானு இவன்.. சின்ட்டூ.. நான் உன் அம்மாவோட யங்கர் சிஸ்டர்.. உன் இந்தர் பெரிப்பாவோட வொய்ஃப்..”
அவள் சொன்னதைக் கேட்டு தன் சிறிய விழிகளை உருட்டி விழித்த சின்ட்டூ “அப்போ நான் உங்களை எப்படி கூப்பிடணும்..? அம்மாவோட சிஸ்டர்னா சித்தின்னு கூப்பிடவா? என் ஃபிரண்ட் பிரக்ருதி கூட அவ அம்மாவோட சிஸ்டரை அப்படித்தான் கூப்பிடுவா..”
இப்போதுதான் அங்கு பக்கத்திலிருந்த நர்சரிக்கு போக ஆரம்பித்து இருந்தான் அவன்.. ஓரளவு உறவு முறைகள் இப்போதுதான் அவனுக்கு தெரிய ஆரம்பித்திருந்தது.. அப்போது அங்கே வந்த இந்தர்
“ஹே.. சின்ட்டூ.. நீ பயங்கர ஸ்மார்ட் டா கண்ணா.. ஆனா அவ பெரியப்பாவோட வொய்ஃப் இல்லையா? அதனால நீ பெரியம்மான்னு கூப்பிடு.. ஓகேவா?”
“ஹே பெரிப்பா” என்று விழிகளை பெரிதாய் விரித்து தாவி இந்தரை அணைத்துக் கொண்டவன் “பெரிமான்னு கூப்பிடுறேன்..” சொன்னவனிடம் “ஏன்.. சித்தின்னே கூப்பிடலாமே..” வில்விழி சொல்ல
“இல்ல.. பெரிம்மான்னு தான் கூப்பிடுவேன்.. இந்தர் பெரியப்பா சொன்னா அதுதான் கரெக்ட்” என்று இந்தருக்கு ஹைஃபை கொடுக்க இந்தரோ விழியை கிண்டலாய் பார்த்தபடி புருவத்தை ஏற்றி இறக்கினான்..
அதன் பிறகு சின்ட்டூவுக்கு பொறுமை இருக்கவில்லை..
“ஹேய்.. இந்தர் பெரிப்பா.. வாங்க போலாம்” என்க..
“போலாம்.. ஆனா அதுக்கு முன்னாடி உனக்கு ஒரு முக்கியமான ஆளை இண்ட்ரடியூஸ் பண்ண போறேன்.. உன்னோட சிஸ்டர் சக்தி வந்திருக்கா.. வரியா போய் பார்க்கலாம்..”
இந்த சொல்ல ஆர்வமாய் விழிகளை விரித்த படி “ஹேய்.. என்னோட சிஸ்டரா.. விஷாலுக்கு இருக்கிற மாதிரி எனக்கும் ஸ்வீட் சிஸ்டரா?” அவன் கேட்க அவனை தூக்கிக் கொண்டு சக்தியை பார்க்க போய்விட்டான் இந்தர்..
விழியோ ஆச்சரியமாக மானுவிடம் “இவன் என்னடி.. அவன் அப்பாவை பத்தி கூட கேட்கல.. இந்தரோட ஒட்டிக்கிட்டு இப்படி ஓடுறான்..” என்று கேட்க
மான்விழியோ ஒரு பெருமூச்சை விட்டு “அதை ஏன்டி கேக்குற? எனக்கு வந்து வாய்ச்சதெல்லாம் இப்படித்தான் இருக்கு.. ப்ருத்வி தான் ஒரு குதிரையை வச்சுக்கிட்டு என்னை டென்ஷன் பண்றாருன்னு பார்த்தா இவன் எந்த நேரமும் ஆர்ச்சரி ஆர்ச்சரின்னு அந்த நெனைப்பாவே சுத்திக்கிட்டு இருக்கான்.. இந்தர் எப்ப இங்க வந்தாலும் அவரோட உன்னோட அந்த ஆர்ச்சரி ரேஞ்சுக்கு போய் அம்பு விட ஆரம்பிச்சுடுவான்.. அவரும் இவனுக்கேத்த மாதிரி சின்னதா ஒரு வில்லும் அம்பும் வாங்கி கொடுத்திருக்கிறார்..”
அவள் புலம்பியதை கேட்டு சத்தமாக சிரித்து விட்டாள் வில்விழி..
“மவளே நீ இனி எஸ்கேப் ஆக முடியாதுடி.. எதுக்குடி தேவை இல்லாம இன்னும் பயந்துகிட்டே இருக்கே.. அப்ப எதோ அது நடந்து போச்சு.. அது ஒரு ஆக்சிடென்ட்.. அதிலிருந்து வெளியில வா மானு.. அதையே நெனச்சுக்கிட்டு இப்படியே நீ பயந்துகிட்டு இருந்தா உன்னை சுத்தி இருக்கிறவங்களுக்கு எல்லாம் அது வலியை கொடுக்குதடி..”
அந்த நிகழ்வைப் பற்றி பேசும்போதே மான்விழி கொஞ்சம் படபடத்து தான் போனாள்..
“என்னால அன்னைக்கு நடந்ததை மறக்கவே முடியல டி..”
“ஏய் நீ எவ்ளோ சூப்பர் ஹார்ஸ் ரைடர் தெரியுமா? அப்பாவோட நீ குதிரை ஓட்டும் போது எனக்கு பாத்துகிட்டே இருக்கணும்னு தோணும்.. ஆனா இப்போ ஷ்யாம் கர்ணாவை பார்த்து பயப்படற அளவுக்கு அப்படியே அந்த இன்ஸிடன்ட் உன்னை மாத்திருச்சு இல்ல..?”
“நான் என்னடி பண்ணுவேன்..? அன்னைக்கு நடந்தது ஒன்னும் சாதாரண விஷயம் இல்லையே.. எனக்கும் அப்பாவுக்கும் உயிர் போய்ட்டு உயிர் வந்தது டி..”
அவள் சொன்ன அந்த கொடுமையான நிகழ்வு வில்விழி கண்களுக்குள் நிழல் படமாய் ஓடியது..