அத்தியாயம் 1
“என்ன பொண்ணு வளர்த்து வச்சுருக்க அன்னம், பாரு உன் பொண்ணு அடிக்கிற கூத்தை பொட்டைப் பிள்ளையை ஒழுங்கா படிக்க வச்சோமா காலா காலத்தில் நல்ல மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் கட்டி வச்சோமான்னு இல்லாமல் மைதானம் மைதானமா சுத்த அனுப்பி இருக்க”.
“அந்த டீவி பெட்டியை பாரு உன் மகள் அந்த கிரிக்கெட் விளையாடுற பையனை பார்த்து ஐ லவ் யூ னு போர்டு காட்டிட்டு இருக்கா” என்று பொரிந்து தள்ளினார் கல்யாணி பாட்டி.
“நான் கண்டிச்சா அவள் கேட்கிறாளா எல்லாம் உங்க மகன் கொடுக்கிற இடம் தான்” என்று கூறினார் அன்னபூரணி.
“அப்பன்காரன் செல்லம் கொடுக்க தான் செய்வான் அம்மா காரி நீதான் அவளை இறுக்கி பிடிக்கனும்” என்று மருமகளுக்கு தூபம் போட்டு விட்டு சென்றார் கல்யாணி பாட்டி.
“என்ன அன்னம்” என்ற சக்கரவர்த்தியிடம், “உங்க பொண்ணு தான் கிரிக்கெட் பைத்தியம் பிடித்து ஸ்டேடியத்தில் தான் போயி மேட்ச் பார்க்கனும்னு அடம் பிடிக்கிறாள்னா அப்பாவா நீங்க அவளை கண்டிக்க வேண்டாமா? நீங்களும் அவளுக்கு காசு கொடுத்து ஊர் ஊரா அனுப்பி வைக்கிறீங்க அவள் அங்கே போயி அந்த கிரிக்கெட் விளையாடுற பையனை பார்த்து ஐ லவ் யூனு அட்டையை காட்டிட்டு இருக்கிறாள். இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை சொல்லிட்டேன்” என்று பொரிந்து தள்ளினார் அன்னலட்சுமி.
“அன்னம் நீ ஏன் ஒரு விஷயத்தை புரிஞ்சுக்க மாட்டேங்கிற அவள் ஐ லவ் யூனு அட்டையை காட்டினால் மட்டும் அந்த கிரிக்கெட்டர் உன் மகளை கல்யாணம் பண்ணிக்க போறானா? கண்டிப்பா இல்லை. அவனை தன்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாதுங்கிற விஷயம் உன் பொண்ணுக்குமே நல்லாவே தெரியும்” என்றார் சக்கரவர்த்தி.
“அது தெரிஞ்சும் ஏன் அவள் அப்படியே தொடர்ந்து செய்கிறாள். மேட்ச் நம்ம நாட்டுல நடந்தால் மட்டும் இல்லை வெளிநாட்டில் நடந்தால் கூட பார்த்தே ஆகனும்னு அடம் பிடித்து போயி அங்கேயும் அட்டையை தூக்கி வச்சுட்டு தான் நிற்கிறாள். இது தப்புன்னு அவளுக்கு சொல்லி புரிய வைங்க அவளுக்கு நல்ல மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணி வைத்தால் தான் அடங்குவாள்” என்ற அன்னலட்சுமி சென்று விட மகளிடம் பேச வேண்டும் என்று நினைத்தார் .
“மச்சி உன் ஆளுடீ” என்ற தோழியிடம், “எங்கே எங்கே” என்ற மங்கை அவளோ தன் கையில் இருந்த போர்டை அவனை நோக்கி காட்டுவதற்காக பார்வையை சுழல விட அவனோ வேறு ஒரு பெண்ணுக்கு கை காட்டி விட்டு மைதானத்திற்குள் இறங்கினான்.
“அதோ பாருடீ உன் ஆளோட ஆளு” என்று சிரித்த தோழியை பார்த்து புன்னகைத்தவளோ, அவன் பெயரைச் சொல்லி “ரோஹன் ரோஹன்” என்று கத்தியபடி தன் கையில் இருந்த “ஐ லவ் யூ ரோஹன்” என்ற போர்டை தூக்கி காட்டிய படி அவன் அடித்து விலாசிய சிக்ஸர்களுடன் அந்த அழகனையும் ரசித்தபடி அமர்ந்திருந்தாள்.
அவன் ரோஹன் லுகாஸ் மார்ட்டின். இளம் கிரிக்கெட் வீரன். அவனது தீவிர ரசிகை நம் நாயகி அதிதி. அவன் கலந்து கொள்ளும் மேட்ச் எங்கே நடந்தாலும் சென்று விடுவாள். அவன் மீது அவளுக்கு அப்படி ஒரு பைத்தியம். ஏன் என்று கேட்டால் அவளுக்கே தெரியாது. அவன் விளையாடிய போட்டியை மைதானத்தில் கண்டு களிப்பது மட்டும் இல்லாமல் வீட்டிலும் டவுன்லோட் செய்து போட்டு போட்டு பார்ப்பாள். எங்கே போட்டி நடந்தாலும் கையில் “ஐ லவ் யூ ரோஹன்” என்ற அட்டையை தூக்கி கொண்டு சென்று விடுவாள்.
இத்தனைக்கும் அவள் மனம் கவர்ந்த அந்த ரோஹன் லுகாஸ் மார்ட்டின் என்ற பெயர் கொண்ட இளம் கிரிக்கெட் வீரனுக்கு விரைவில் வேறு பெண்ணுடன் திருமணம் என்ற செய்தி நீயூஸ் சேனல், சோசியல் மீடியா என்று வைரலாகிக் கொண்டு இருக்கிறது. அது உண்மை என்று அவனுமே அறிவித்து இருந்தான் ஆனாலும் நம் நாயகியோ சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல அவன் விளையாடும் இடங்கள் எல்லாம் அவனை விரட்டி சுற்றிக் கொண்டு இருந்தாள். தினமும் அவனது முகவரிக்கு கடிதங்களும், மாதம் ஒரு முறை பரிசுப் பொருளும் தவறாமல் அனுப்பி வைப்பாள்.
அவன் அதை கண்டு கொண்டானா இல்லை அவனுக்கு வரும் நூறு கடிதங்களில் அவளுடைய கடிதமும் ஒன்று என்று கடந்து செல்வானா என்றால் அவனுக்கே வெளிச்சம்.
“ஏன் டீ அவன் உன்னை ஒரு ஈ , காக்கா வை பார்க்கிறது போல கூட பார்க்க மாட்டேங்கிறான் நீ என்னடான்னா பைத்தியம் மாதிரி அவனோட மேட்ச் நடக்கிற இடத்திற்கு எல்லாம் வந்துடுற தேவையா இது. உன் அப்பாவோட சொத்தை எல்லாம் கிரிக்கெட் பார்த்தே அழிச்சுருவ போல” என்றாள் அதிதியின் தோழி ஆருஷி.
அவளைப் பார்த்து புன்னகைத்தவள் “லவ்ங்கிறது கொடுக்கிறது டீ நீ லவ் கொடு, நானும் லவ் கொடுக்கிறேன்னு சொல்லுறது பிசினஸ். நான் லவ் பண்றேன் பிசினஸ் இல்லை. அவனை நான் உருகி உருகி லவ் பண்றேன் அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன். அவன் என்னை கண்டுக்கவே இல்லை என்றாலும் நோ ப்ராப்ளம் ரோஹன் மட்டும் தான் என்னோட லவ் இந்த ஜென்மத்தில்” என்ற அதிதியை பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள் ஆருஷி.
“அவனுக்கு இன்னும் இரண்டு வாரத்தில் கல்யாணம் அதி” என்ற ஆருஷியிடம், “அதனால் என்ன அவர் மேல் லவ் வச்சுருக்கிறது குத்தம் இல்லை இன்னொருத்திக்கு சொந்தமான பிறகு எனக்கும் சொந்தமாக்கிக்க நினைத்தால் தான் தப்பு” என்றாள் அதிதி. “பைத்தியம் டீ நீ” என்ற ஆருஷி தோழியுடன் அந்த ஸ்டேடியத்தை விட்டு வெளியேறினாள்.
“ஹாய் பேபி இன்னைக்கு மேட்ச் சூப்பரா விளையாடின” என்று அவனைக் கட்டிக் கொண்டாள் மெர்லின். “தேங்க்ஸ் பேபி” என்ற ரோஹன் ஏதோ சொல்ல வர, “யாரு பேபி அவள் நீ விளையாடுற எல்லா மேட்ச்சுக்கும் சரியா வந்து ஐ லவ் யூ ரோஹன்னு போர்டு காட்டிட்டு இருக்கா” என்றாள் மெர்லின்.
“யாரு நான் பார்க்கவே இல்லையே” என்றான் ரோஹன். “ஸ்டேடியமே அவளை தான் பார்த்துச்சு” என்ற மெர்லினிடம், “நான் பார்த்தேனா” என்றான் ரோஹன்.
“இல்லை” என்ற மெர்லினிடம் , “அப்பறம் என்ன உன் பிரச்சினை அவ்வளவு பொசசிவ்வா” என்று சிரித்தான் ரோஹன் லுகாஸ் மார்ட்டின் கண்ணக்குழி தெரிய.
“சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்க ரோஹன்” என்ற மெர்லினிடம் , “சரி இன்னும் இரண்டு வாரத்தில் நமக்கு கல்யாணம் ஸோ ஷாப்பிங் எல்லாம் முடிக்கனும்ல” என்றதும், “கிளம்பலாம் பேபி” என்றாள் மெர்லின் புன்னகையுடன்.
மெர்லின் ஒரு விளம்பர மாடல். ரோஹனுடன் ஒரு விளம்பரத்தில் சேர்ந்து நடிக்கும் பொழுது நட்பாகி, நட்பு காதலாகி இப்போது திருமணம் வரை வந்திருக்கிறது.
“என்ன பண்ணிட்டு இருக்க அதிதி” என்ற சக்கரவர்த்தியிடம், “சாக்லேட் சாப்பிட்டுட்டு இருக்கேன் அப்பா” என்றாள் அதிதி. “நான் இதை சொல்லவில்லை ஸ்டேடியத்தில் என்ன பண்ணிட்டு இருக்க, நீ ஆசைப் பட்டு அப்பா எதையும் இல்லை என்று இதுவரை சொன்னது கிடையாது. எங்கே மேட்ச் நடந்தாலும் நான் ஸ்டேடியத்தில் இருந்து தான் கிரிக்கெட் பார்ப்பேன்னு நீ கேட்டதால் தான் வெளிநாட்டில் மேட்ச் நடந்தாலும் உன்னை அனுப்பி வைக்கிறேன் அதற்காக நீ செய்யுறது” என்ற சக்கரவர்த்தி, “இதோ பாரு அதிமா வானத்தில் உள்ள நட்சத்திரத்தை உனக்கு சொந்தமாக்கிக்க முடியுமா சொல்லு அது போல தான் அந்த ரோஹனும் நீ அவனோட ரசிகைங்கிறதை தாண்டி அவன் மேல உனக்கு ஒரு விருப்பம் இருக்குன்னு அப்பாவுக்கு தெரியும். ஆனால் அது சரிப்பட்டு வராது அது உனக்கும் தெரியும். அவனோட உயரம் வேற நம்ம வாழ்க்கை வேற. நம்ம கிட்ட வசதி இருக்குது தான் ஆனாலும் அவன் உனக்கு கிடைப்பான்னு நம்புறியா?” என்றார் சக்கரவர்த்தி.
“அப்பா எனக்கு ரோஹனை ரொம்பவே பிடிக்கும். அவர் எனக்கு கிடைக்க மாட்டாருன்னும் எனக்கு தெரியும் ஆனால் அவர் மேல் நான் வச்சுருக்கிற அன்பு ரொம்ப அதிகம் அப்பா. நிதர்சனம் புரியாமல் இல்லை ஆனால் என்னோட சந்தோஷம் மேட்ச் நடக்கும் போது அவரை நேரில் பார்க்கிறது ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்க” என்ற அதிதியிடம் என்ன பதில் சொல்வார் மகளை கவலையுடன் பார்த்து விட்டு சென்று விட்டார் சக்கரவர்த்தி.
“என்ன சொல்லுறா உங்க செல்லப் பொண்ணு” என்ற அன்னலட்சுமியிடம், “அன்னம் என் பொண்ணு அந்த ரோஹனோட ஃபேன் அவ்வளவு தான் சும்மா நீயும், அம்மாவும் எதையாவது பேசி அவளை காயப் படுத்தாமல் இருங்க” என்று விட்டு சக்கரவர்த்தி சென்று விட்டார்.
“அப்பாவுக்கு என்ன தெரியும் ரோஹன் நான் உன் மேல எவ்வளவு காதல் வச்சுருக்கேன்னு ஆனால் அப்பா என்னை புரிஞ்சுப்பாரு” என்று அவனது புகைப்படத்திற்கு முத்தமிட்டாள் அதிதி.
உறக்கத்தில் பச் என்று முகத்தை துடைத்தான் ரோஹன் லுகாஸ் மார்ட்டின். வின்சென்ட் மார்ட்டின், ஜெசிக்கா மார்ட்டின் இருவரின் இளைய மகன். வின்சென்ட் ஒரு தொழிலதிபர். அவரது மனைவி ஜெசிக்கா ஹோம் மேக்கர். அவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் ஆரோன் லுகாஸ் மார்ட்டின். அவன் தந்தையின் தொழிலை கவனித்துக் கொள்கிறான். இளையவன் ரோஹன் லுகாஸ் மார்ட்டின் இளம் கிரிக்கெட் வீரன்.
நிறைய போட்டிகளில் மேன் ஆஃப் தி மேட்ச் எடுத்தவன் கடந்த சில போட்டிகளில் இருபது ரன்கள் கூட எடுக்காமல் அவுட் ஆகிக் கொண்டு இருந்தான்.
காதலித்த பெண்ணையே மணந்து கொள்ளும் கனவுகளில் மிதப்பதாலோ என்னவோ அவனது கவனம் விளையாட்டில் இல்லை என்ற கிசு கிசுக்கள் வந்த வண்ணம் இருந்தன. அதை எல்லாம் அவன் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து போட்டிகளில் சொதப்பினால் அடுத்த அடுத்த போட்டிகளில் அணியில் அவன் பெயர் இடம் பெறுவது கடினம் என்பதை உணர விடாமல் அவனை தன் காதல் மயக்கத்தில் வைத்திருந்தாள் மெர்லின்.
காதலைச் சொன்ன நாளில் இருந்தே இருவரும் நெருங்கி பழகினர். திருமணம் முடிவான பிறகு நெருக்கம் இன்னும் அதிகமானது.
இருவரும் இரவுகளில் ஒருவர் இன்றி ஒருவர் உறங்குவதே இல்லை எனலாம். அவன் பெற்றோருடன் இல்லாமல் தனியாக ஒரு ஃப்ளாட்டில் வசித்துக் கொண்டிருப்பது மெர்லின் அவனோடு தங்குவதற்கு தோதாக அமைந்து விட்டது.
…. தொடரும்…
மெர்லின் உடன் திருமண பந்தத்தில் இணைய இருக்கும் நாயகன் ரோஹன் அதிதியின் காதலைப் பற்றி அறிவானா என அடுத்தடுத்த பாகங்களில் தெரிந்து கொள்ளுங்கள் ஃப்ரெண்ட்ஸ். தினமும் கதையின்
பதிவுகள் தவறாமல் வர தொடர்ந்து விமர்சனங்கள் கொடுத்து ஊக்குவிக்கவும்…