பல வருட காதல் கை கூடும் என்ற கனவோடு, தன் மனம் கவர்ந்தவளை கை பிடிக்க போகும் அந்த தருணத்திற்காக மணமேடையில் முகம் முழுக்க புன்னகையோடு அமர்ந்திருந்தான் மித்ரன்… அந்நேரம் தேவலோக பெண்ணாக குனிந்த தலை நிமிராமல் மணமேடையில் தேவ் மித்ரனின் அருகில் வந்து அமர்ந்தாள் நம் கதையின் நாயகி ஆதினி என்னும் ஆதிலட்சுமி..
பெரிய வீட்டு திருமணம் என்பதால் மொத்த ஊரும் அங்கு கூடி இருக்க, அவ்வளவு நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்த ஆதினியோ சரியாக தாலி கட்டும் நேரத்தில்…
“எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல” என்று கூறி மணமேடையில் இருந்து எழுந்து நின்றாள், கடைசி நேரத்தில் அவள் இப்படி கூறியதும் அங்கிருந்த அனைவரும் குழம்பி போயினர். ஏன் பிடிக்கவில்லை என்று அவளிடம் கேள்வி கேட்க…
“எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல, நான் வேறொருத்தரை விரும்புறேன்…” என்றவள் கூற, அதை கேட்டு அவளின் மொத்த குடும்பமும் கோபமடைந்தனர்.. அது யார்?, எங்கு இருக்கிறான்? என்று பெண்ணவளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க..
“நான் இவரை தான் விரும்புறேன்” என்று அவள் கை காட்டியவனை கண்டு மொத்த குடும்பமும் அதிர்ந்து நிற்க, இங்கு அவள் கை காட்டியவனே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்..
ஆதினி ஏன் திருமணத்தை கடைசி நேரத்தில் நிறுத்த வேண்டும்? அப்படி அவள் யாரை காதலிக்கிறாள்? அவனை கண்டு ஏன் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாக வேண்டும்? இனி மித்ரனின் நிலை என்ன? இந்த கேள்விகளுக்கான விடையங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்க…
யாருக்கு இங்கு யாரோ?
காதல், மோதல், காமெடி, பாசம், கோபம், வெறுப்பு இத்துடன் அவ்வப்போது சிறு சிறு ரோமேன்ஸுடன் கூடிய ஒரு காதல் கதை…
ஹாய் டியர்’ஸ் என்னை உங்களுக்கு தெரியுமா இல்லையான்னு எனக்கு தெரியல, இதுக்கு முன்ன நான் ஒரு சில கதைகள் எழுதி இருக்கேன். ஆனா இந்த ஏந்திழை தளத்தில் இப்போது தான் நான் முதல் முறையாக எழுதுகிறேன். அதனால் இங்கு இருக்கும் என்னுடைய அன்பான வாசகர்களாகிய நீங்க தான் எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்…
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்தால் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க… ஏதேனும் தவறுகள் இருந்தால் கூட சொல்லுங்க நான் கண்டிப்பா என் தவறுகளை திருத்திக் கொள்ளேன்..
https://shorturl.fm/N6nl1
https://shorturl.fm/6539m
https://shorturl.fm/N6nl1