12. சிந்தையுள் சிதையும் தேனே..!

4.7
(6)

தேன் 12

“ஹலோ பாஸ்..”

“சொல்லு கண்ணாயிரம்..” என்று ஒரு திடமான குரல் அதிர்ந்து ஒலித்தது.

அந்தக் குரல் ஒருவரின் மனதில் பயத்தை உண்டு பண்ண கூடிய அளவு மிகவும் கனமான குரலாகும்.

அந்தக் குரலுக்கு தெரியும் கண்ணாயிரம் முக்கியமான விடயத்துக்கு மட்டும்தான் தனக்கு அழைப்பு எடுப்பான் என்று,

“என்ன கண்ணாயிரம் சொல்ல வந்த விஷயத்தை நேரடியா சொல்லு என்ன பிரச்சனை..?” என்று அவனது குரலின் தொணியை வைத்து ஏதோ பிரச்சனை நடந்திருக்கிறது என்று அந்த குரல் ஊகித்தது.

கண்ணாயிரத்துக்கு தெரியும் அவனது முதலாளி மிகவும் புத்திசாலி அதோடு  சாமர்த்தியமானவர் என்று அதனால் அவன் கூற முன்னே நடந்தது என்ன என்று இந்நேரம் அவரது காதுக்கு எப்படியாவது போய் சேர்ந்திருக்கும் அதனை ஊர்ஜிதப்படுத்தவே தன்னிடம் அந்த விடயத்தை வினவுகிறார் என்பது அவன் அறிந்ததே.

“ந…ம்….ம நம்ம சேகர்..” என்று சொல்ல வந்த விடயத்தை சொல்ல முடியாமல் அவன் திக்கில் திணறி நிற்க,

“போலீஸ் கிட்ட மாட்டிட்டானா..?”

“ஆமாங்க பாஸ் அவனை காப்பாத்துறதுக்கு ரொம்ப முயற்சி பண்ணினேன் ஆனா என்னால முடியல..”

“வாய மூடுடா பிளடி மு*****  இந்த முடியல, இயலாது என்ற வார்த்தை நம்மளோட அகராதியிலேயே இருக்கக் கூடாது..”: என்று அந்த குரல் இடித்துக் கூறியது.

அந்த கோபம் கொண்ட குரலால் சில நிமிடம் எதுவுமே பேச முடியாமல் பயத்தில் ஆழ்ந்தவன்,

“இல்ல பாஸ்…” என்று தனது முதலாளியை சமாளிப்பதற்காக வழி தேடினான்.

“கண்ணாயிரம் அடுத்தது என்ன..?”

“அதுதான் என்ன பண்றதுன்னு தெரியல சேகர் ரொம்ப விசுவாசமானவன் அவன் எப்படியும் போலீஸ் கிட்ட உளறி இருக்க மாட்டான்..”

“ஹா… ஹா… ஹா..” என்று வானமே இடிந்து விழும் அளவு பெரிதாக சிரித்தது அந்தக் குரல். ஏனோ தெரியவில்லை கண்ணாயிரத்துக்கு அந்த சிரிப்பின் ஓசை காதில் விழுந்ததும் உடல் முழுதும் உதறல் ஏற்பட்டது.

“அதெப்படி நீ சொல்லுவ இந்த உலகத்துல எல்லாருமே உயிருக்கு பயந்தவன் தான்..”

“அப்போ இப்பபோ என்ன பண்றது பாஸ்..?”

“பிளான் டி..” என்று கூறியதும் அந்தப் பக்கம் இருந்த கண்ணாயிரத்துக்கு நாடி நரம்பெல்லாம் சுர் என்று உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல உடல் அதிர்ந்து அடங்கியது.

“அது வந்து..” என்று கண்ணாயிரம் எதையோ கூற வர அவனது அழைப்பு உடனே துண்டிக்கப்பட்டது.

என்னதான் கண்ணாயிரம் விளக்கம் கொடுத்தாலும் பாஸின் முடிவுக்கும், பேச்சுக்கும் மறு பேச்சு கிடையாது என்பது அவர்களின் முதலாளி, தொழிலாளி என்ற பிணைப்பு அறிந்த உண்மையே.

ஒரு தடவை அவனுடைய பாஸ் முடிவெடுத்தால், உலகமே அழிந்தாலும் அதில் மாற்றம் எதுவும் கிடையாது. அதோடு தொழிலில் இவன் பெரியவன், இவன் சிறியவன் என்ற ஏற்றத்தாழ்வு எதுவும் அவனுடைய பாஸ் யாரிடமும் காட்டியதில்லை.

யார் பிழை செய்தாலும் ஒரே தண்டனை தான். யார் சிறப்பாக வேலை செய்தாலும் அவர்களுக்கு ஒரே ரொக்க பணம்தான் அப்படி ஏற்றத்தாழ்வு இல்லாமல் அவர் அவர்களை வழி நடத்துவது கண்ணாயிரத்திற்கு முதலாளி மேல் மிகுந்த பிடிப்பும், ஈடுபாடும் ஏற்படும் முதல் காரணமாகும்.

அதனால் தான் அவன் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தனது முதலாளியுடன் விசுவாசமாக இணைந்து வேலை செய்து வருகின்றான்.

 

***********************

காயத்ரி அழைப்பு எடுத்ததில் இருந்து கார்த்திகேயனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. உடனே புறப்பட்டு நிவேதாவை தேடத் தொடங்கியவன் காலை 4 மணி ஆன பின்பும் நிவேதாவை எங்கு தேடியும் காணவில்லை.

அங்கு கருணாகரனின் பாடு பெரும்பாடாகிப் போனது. தனது ஒரே மொத்த அன்பின் வடிவமான மகளை காணவில்லை என்றதும் அவரது சிந்தனை, செயல் அனைத்தும் ஆடி அடங்கிப் போனது.

இவ்வளவு வருடங்களாக தொழிலில் எவ்வளவு தோல்விகள் வந்தாலும் கூட உடைந்து போகாத மனிதன் தனது ஒற்றைப் புதல்வியின் பிரிவினை தாங்க முடியாமல் சோகக் கடலில் மூழ்கியபடி தவித்துக் கொண்டிருந்தார்.

அதைவிட பத்து மடங்கு மேலாக காயத்ரி நள்ளிரவில் இருந்து சுவாமி அறைக்குள் தஞ்சம் புகுந்தவர் இதுவரை வெளியே வரவே இல்லை. கடவுளை வேண்டி வேண்டி அழுது தீர்த்தவர் வேறு வழி அறியாது கடவுளின் பாதத்தை இறுகப் பற்றிக் கொண்டார்.

கல்யாணத்துக்காக முகூர்த்த நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. வீட்டிலும், கல்யாணம் மண்டபத்திலும் சொந்தங்கள் புடை சூழ்ந்தன.

கருணாகரனுக்கும் காயத்ரிக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மணப்பெண்ணை காணவில்லை என்று சொல்வது எவ்வளவு பெரிய  விமர்சைக்குரிய விடயம்.

அதனை சொந்தங்கள் முன்னும், தொழில் வட்டாரங்கள் முன்னும் தெரியாமல் எத்தனை மணித்தியாலத்திற்கு தான் பாதுகாத்து வைப்பது.

எப்படியும் முகூர்த்த நேரம் நெருங்கியதும் தெரியத்தானே போகின்றது. அவர்களின் அவச்சொல்லை எவ்வாறு தாங்குவது எப்படி தாங்குவது என்று எண்ணம் எல்லாம் அவர்களுக்கு இல்லை.

அவர்களின் ஒரே சிந்தனை நிவேதாவிற்கு என்ன ஆயிற்று..? நிவேதா கோபித்துக் கொண்டு சென்றாளா..? இல்லையென்றால் நிவேதாவை யாராவது கடத்தி விட்டார்களா..? என்ற சிந்தனை மட்டுமே அந்த பெற்ற தாய் தந்தையின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

பணக்காரர்களின் மகளை கடத்துவது ஒன்றும் புதிதல்லவே அந்த சிந்தனைகளால் திணறிய கருணாகரன் முதலில் சென்றது காவல் நிலையத்திற்கு தான்.

ஒரு மணத்தியாலத்திற்கு மேலாக நிவேதாவை தேடி கிடைக்கவில்லை என்று தெரிந்த பின்பு காவல்துறையிடம் தஞ்சம் புகுந்தார் கருணாகரன்.

கமிஷனர் ஆபீஸில் நேரடியாக சென்று மகளின் புகைப்படத்தை காட்டி காணவில்லை என்று புகார் கொடுத்தவர், யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தேடும்படி கமிஷனரிடம் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி விசேட போலீஸ் அதிகாரிகளை நியமித்து உடனடியாக நான்கு பக்கங்களும் நிவேதா தேடப்பட்டாள்.

காலை ஆறு மணி ஆகிவிட்டது ஆனால் இன்னும் நிவேதா கிடைக்கவில்லை கார்த்திகேயனுக்கோ இரவு நடந்த சம்பவத்தால்தான் இப்படி ஒரு விபரீதம் நடந்து விட்டதோ என்ற குற்ற உணர்வு வேறு அவனது நெஞ்சை அரித்துக் கொண்டு இருந்தது.

அந்த எண்ணம் மீண்டும் மீண்டும் வந்து போக நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது. காலையிலிருந்து தனது அன்னை எடுக்கும் அழைப்புகளை ஏற்க முடியாமலும் நிவேதாவை தேடி அவள் கிடைக்காமலும் போக கார்த்திகேயனுக்கு வாழ்க்கையே வெறுத்தது.

அவனது நிலையோ நீர் இன்றி நிலத்தில் தவிக்கும் மீனினைப் போல மனதளவில் மிகவும் வேதனையுடன் ஒவ்வொரு நொடியும் கடத்திக் கொண்டிருந்தான்.

முகூர்த்த நேரமும் நெருங்க மண்டபத்தில் விருந்தினர்கள், சொந்தங்கள், தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என்று அனைவரும் மண்டபத்தில் புடை சூழ்ந்து நின்றனர்.

அங்கு காயத்ரியும், கருணாகரனும் இல்லாத போக சிலர் வீட்டையே தேடி வந்து விட்டனர். கருணாகரன் காவல் அதிகாரியை சந்தித்த பின்பு சோர்ந்தபடி வீடு வந்து சேர்ந்தவர் காயத்ரியின் நிலையை கண்டு பரிதவித்துப் போனார்.

என்னவென்று சொல்வது. யாரை யார் சமாதானப்படுத்துவது. என்ன காரணம் கூறி தேற்றுவது, எப்படி தேற்றுவது என்று தெரியாமல் ஒருவருக்கொருவர் தங்களது வதனத்தை பார்த்து ஆறுதல் தேடிக் கொண்டிருந்தனர்.

கார்த்திகேயன் அவ்விடத்திற்கு வர காயத்ரியும் உற்சாகத்துடன் கார்த்திகேயனின் வதனத்தை எதிர் நோக்கினார். அவனது முகவாட்டமே பறைசாற்றியது நிவேதா எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று.

அனைவரும் வீட்டுக்குள் வந்து ஏன் கல்யாணம் நடக்கவில்லை என்ன நடந்தது என்று ஒவ்வொருவராக விசாரிக்க காயத்ரிக்கும் கருணாகரனுக்கும் தர்ம சங்கடமாகிப் போனது. உண்மையை சொல்வதா பொய் சொல்வதா என்று புரியாமல் இருவரும் தவித்துக் கொண்டிருந்தனர்.

அதில் ஒருவர்,

“என்ன காயத்ரி உன்னோட பொண்ணு எங்க..? ஏன் கல்யாண மண்டபத்துக்கு இன்னும் நீங்க வரல..? நீ இன்னும் புறப்படலையா..? பழைய சேலைய கட்டிக்கிட்டு நிக்கிற..” என்று அருகில் வந்து விசாரிக்க,

அனைவர் முன்பும் பதில் கூற முடியாமல் கூனிக்குறுகியபடி கருணாகரனை காயத்ரி கண்ணீருடன் பார்க்க, தனது காதல் மனைவியின் கண்ணீரை கண்டதும் மனதை திடப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினார்.

“எங்களது அன்பான அழைப்பை ஏற்று திருமணத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி..” என்று பலத்த குரலில் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் கருணாகரன்.

“இங்கு பலர் ஏன் கல்யாணம் நடக்கல என்று ஒவ்வொருத்தர் ஒவ்வொரு கோணத்தில் ஊகித்திருப்பீர்கள் உங்களுக்குள் பேசியும் இருப்பீர்கள் அந்த விடயங்கள் இந்நேரம் வதந்திகளாக காட்டுத்தீ போல் பரவி இருக்கும்.

ஆனா உண்மை என்னன்னு நீங்க நீங்க அறிந்து கொள்வதற்கான நேரம் நெருங்கிடுச்சு இந்த கருணாகரனோட ஒன் அண்ட் ஒன்லி டாக்டரான நிவேதாவை நேத்து நைட்ல இருந்து காணல

தொழில் வட்டாரங்களில் எனக்கு அதிக அளவு எதிரிகள் இருக்கிறதால அவங்க யாராவது கடத்திருப்பாங்கன்னு நாங்க நினைக்கிறோம் உன்னோட மகளை என்கிட்ட கொண்டு வந்து சேர்க்க உங்களுக்கு ரெண்டு கோடி ரூபா பணப்பரிசு சன்மானம் கொடுப்பேன்னு போலீசுக்கு  கூறி இருக்கேன் அது உங்கள்ல ஒருவாக இருந்தாலும் எனக்கு சந்தோசம் தான் என்னோட மகள் இன்னும் 24 மணி நேரத்தில் என் கண் முன்னுக்கு நிக்கணும்..” என்று கருணாகரன் கட்டளை இடுவது போல கூற,

அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பெண்மணி,

“என்ன சார் இப்படி சொல்றீங்க ஆனா எங்க காதுக்கு வந்தது என்னென்னா உங்க மகள் கல்யாணத்துல விருப்பம் இல்லாம ஓடி போயிட்டான்னு சொன்னாங்க

நீங்க இந்தப் பையன கட்டாய திருமணம் பண்ணி வைக்கிறதால தான் அந்த பொண்ணு ஓடிப் போயிட்டாளாமே..!” என்று கூறியதும் கருணாகரனின் பின்பு தடார் என்ற சத்தம் கேட்டது.

அந்தச் சத்தம் வந்ததற்கான காரணத்தை ஊகித்தக் கருணாகரன் உடனே திரும்பி பாய்ந்து காயத்ரியின் அருகில் ஓடிச் சென்றார்.

ஆம் அவரது ஆசை அன்பு மனைவி அந்த பெண் கூறிய செய்தியை கேட்டதும் அப்படியே மயங்கி சரிந்து விழுந்தார்.

நிவேதா அப்படி எங்கு தான் சென்றிருப்பாள்..?

எங்க கண்டுபிடிங்க பார்ப்போம்..?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!