அங்கே அவள் ஒருத்தி இருப்பதையே கவனத்திற் கொள்ளாது அவன் அணிந்திருந்த ஷார்ட்ஸின் மீதும் அவன் கையை வைக்க அவளோ அலறியே விட்டாள்.
கொஞ்சம் கூட லட்ஜை இன்றி மொத்த ஆடையையும் இக்கணமே கழற்றி விடுவானோ எனப் பயந்து போனவள் அலறியவாறு திரும்பி நின்று விட,
அவளையும் தன்னையும் குனிந்து பார்த்தவன் “என்னாச்சு..?” என எதுவுமே பெரிதாக நிகழாததைப் போல இயல்பாகக் கேட்டான்.
அவனுடைய கேஷுவலான கேள்வியில் அவளுக்குத்தான் ஐயோ வென்றிருந்தது.
“என்ன இவ்வளவு கேஷுவலா கேக்கறீங்க..? நான் இங்க இருக்கும்போதே ட்ரெஸ் மாத்தினா எப்படி..?” என அவள் திணறியவாறு பதில் கூற,
அவளைப் புரியாத ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் கூறாது தன்னுடைய ஆடையை மாற்றியே முடித்திருந்தான்.
அப்போதும் கூட அவள் அவன் புறம் திரும்பாது நிற்க சிரித்தவாறு அவள் அருகே சென்றவன், “எதுக்காக நின்னுக்கிட்டே இருக்க ப்ளீஸ் சிட்…” என்றான்.
அவன் ஆடை மாற்றிவிட்டதை உணர்ந்து அவளுக்கு முகம் சிவந்துவிட்டது.
இந்த ஆண்களுக்கு எல்லாம் கூச்சம் இருக்கின்றதா இல்லையா..?
அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்தவள் “இன்னைக்கு ஏன் நீங்க ஹாஸ்பிடல் வரல..?” எனக் கேட்டவாறு அவனை ஆழ்ந்து பார்க்க,
“இவ்ளோ நாளா வரணும்னு தோணல.. இன்னைக்கு பொண்ணு பார்க்க போயிருந்தோம்.. அதனால வர முடியல..”
“ஓஹ்…? பொண்ணு பார்த்தாச்சா..?”
“பாத்தாச்சு பேரு ஆர்த்தி..” என்றான் அவன்.
அவளுடைய முகமோ நொடியில் வாடிப் போனது.
அதற்கு மேல் அங்கே இருக்க முடியாது போக இருக்கையில் இருந்து எழுந்து கொண்டவள்,
“ஓகே கிளம்பலாமா..?” எனக் கேட்டாள்.
“கொஞ்ச நேரம் பேசலாமே..” என்றான் அவன்.
“என் கூட பேசுறதுக்கு இனி என்ன இருக்கு..?” அவளுடைய வார்த்தைகள் யாவும் இறுக்கமாகவே வெளிவந்தன.
“வாட் புரியல..?”
“அதான் பொண்ணு பாத்துட்டு வந்துட்டீங்களே.. அந்த பொண்ணு உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கப் போறாங்க.. அவங்க கூட பேசுங்க… நான் வீட்டுக்கு கிளம்புறேன்..”
“பட் எனக்குத்தான் அந்தப் பொண்ண பிடிக்கலையே..” என கைகளை விரித்து தன் உதடுகளை பிதுக்கிக் கூறினான் அவன்.
சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
“ஏன்..? அவ கூட வாழ்ந்தா சுவாரஸ்யமா இருக்கும்னு தோணலையா..?”
எனக் கேட்டவளுக்கு அதிகமாகப் பேசுகின்றோமோ என்றும் தோன்றியது.
“சத்தியமா இல்ல.. உண்மைய சொல்லணும்னா எனக்கு உன்னத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு அர்ச்சனா.. பட் அதுக்காக உன்கிட்ட கெஞ்ச நான் கொஞ்சம் கூட தயாரா இல்லை.. இதுவரைக்கும் நான் எந்த பொண்ணுகிட்டயும் கெஞ்சுனதும் கிடையாது..”
“ஈகோ பாக்குறீங்களா…?”
“நோ வே… எனக்கு மட்டும் பிடிச்சா போதுமா..? உனக்கும் பிடிக்கணும்ல..? அந்தப் பிடித்தம் கெஞ்சி வரக்கூடாதுன்னு நினைக்கிறேன் அவ்வளவுதான். ஆனா உன்ன மட்டும் ஏன் இவ்வளவு பிடிக்குதுன்னு தெரியல அச்சு..” என்றவன் அவளை நெருங்கி வந்தான்.
“இப்போ எல்லாம் அடிக்கடி உன்னோட முகம்தான் என்னோட மைண்ட்ல வந்து போகுது.. பியூட்டிஃபுல் ஃபேஸ்..” என்றவனின் விரல்கள் மெல்ல அவளுடைய நெற்றி ஓரத்தை தீண்ட பதறிப் பின்னால் நகர்ந்தாள் அவள்.
“இந்த கண்ணு என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது..” என அவன் கூறிக் கொண்டே போக அவளோ தடுமாறிப் போனாள்.
“எ… என்கிட்ட இப்படி எல்லாம் பேசாதீங்க யாழன்..”
“ஏய் என்ன எப்படி கூப்பிட்ட..?”
“ஏன்..? யா.. யாழன்னு கூப்பிட்டேன்..”
“எல்லாரும் என்ன யாழவன்னுதான் கூப்பிடுவாங்க.. இந்த யாழன் ரொம்ப ஸ்பெஷலா டிஃபரண்டா இருக்கு..” என்றான் அவன்.
“இப்போ அதுவா முக்கியம்..? என்கிட்ட இப்படி எல்லாம் பேசாதீங்க…” எனத் தான் கூறியதை மீண்டும் கூறினாள் அவள்.
“பிடிச்ச பொண்ணுகிட்ட வேற எப்படிப் பேச முடியும்..?”
“ஏன்னு தெரியல பட் நீ ரொம்ப கோபமா இருக்கேன்னு மட்டும் புரியுது.. சரி வா போகலாம்..” என்றவன் அந்த அறையில் இருந்த சுவிட்சை ஆப் செய்யும் பொருட்டு அதனை அழுத்த,
அந்த நொடி நேரத்தில் அவனை பலமாகத் தாக்கியது மின்சாரம்.
அதில் அவனுடைய உடல் உதறி யாழவன் தரையில் விழுந்து விட யாஆஆஆஆஆழன்ன்…” என அலறினாள் அர்ச்சனா.
தரையில் விழுந்து மூச்சுப் பேச்சற்றுக் கிடந்தவனை ஒரு கணம் வெறித்துப் பார்த்தவளுக்கு சர்வமும் நடுங்கியது.
இதயம் நொறுங்கியதைப் போன்ற வலியில் துடித்துப் போனவள் ஓடிச் சென்று தரையில் விழுந்து கிடந்தவனின் முகத்தை தன்னுடைய இரு கைகளாலும் பற்றினாள்.
அவளுடைய கரங்களோ அச்சத்தில் நடுங்கிக் கொண்டே இருந்தன.
“யா…யாழன் கண்ணைத் திறந்து என்னை பாருங்க.. உங்… உங்களுக்கு என்ன ஆச்சு..? ப்ளீஸ் எந்திரிங்க.. எனக்கு பயமா இருக்கு யாழன்… தயவு செஞ்சு கண்ணைத் திறந்து என்னப் பாருங்க..” என்றவளின் குரல் அழுகையில் குழறியது.
நடுக்கத்தோடு அவனுடைய மூக்கின் அருகே தன்னுடைய விரலை வைத்து அவனுடைய சுவாசத்தை சரி பார்த்தவள் அது நின்று போய் இருப்பதை உணர்ந்து விக்கித்துப் போனாள்.
உள்ளம் பதறி முகம் வெளிறிப் போனது அவளுக்கு.
உடனடியாக முதலுதவி செய்தாக வேண்டும்.
அது ஒன்றும் அவளுக்கு புதிதல்லவே.
எத்தனையோ நோயாளிகளுக்கு முதலுதவியை அவள் செய்துதான் இருக்கின்றாள்.
ஆனால் இப்போது நோயாளியாக இருப்பவன் அவளுக்கு பிரியமான உயிராற்றே.
அந்த உயிர் மூச்சுப் பேச்சின்றி அசைவற்றுக் கிடப்பதைக் கண்டதும் இதயத்தை யாரோ பிளந்தது போன்ற வலியில் அவளால் சிகிச்சையைக் கூட அளிக்க முடியாது போனது.
கரங்கள் நடுங்க கண்ணீரில் கன்னங்கள் நனைய விட்டால் கதறி விடுவேன் என்பதைப் போல அவனுடைய முகத்தைப் பற்றிக் கொண்டு அழுது கொண்டிருந்தாள் அர்ச்சனா.
அக்கணம் சட்டென விழிகளைத் திறந்து ஒற்றைக் கண்ணை சிமிட்டி தரையில் படுத்திருந்தவாறு யாழவன் சிரிக்க அவளுக்கோ எதுவும் புரியவே இல்லை.
“யா.. யாழ…ன்..?” ஈனக் குரலில் அழைத்தாள் அவள்.
“ஹேய் பயந்துட்டியா..? அவ்ளோ பெரிய ஷாக் எல்லாம் அடிக்கல.. லைட்டா கரண்ட் பாஸ் ஆச்சு.. பட் ஐ அம் ஓகே சும்மா ஆக்ட் பண்ணினேன்..” என அவன் சிரித்தபடியே கூற அவளுக்கு முகம் கோபத்தில் சிவந்தது.
சட்டென அவன் மீது இருந்த தன்னுடைய கரங்களை விலக்கிக் கொண்டவள் அவனுடைய முகத்தைக் கூடத் திரும்பிப் பார்க்காது அழுதவாறு வேகமாக அவனுடைய அறையை விட்டு வெளியேற அவளுடைய உணர்வுகளுடன் விளையாடிவிட்டோம் என்பதை புரிந்து தன்னையே நொந்து கொண்டான் யாழவன்.
“அச்சு சாரி… நீ இந்த அளவுக்கு பயப்படுவேன்னு சத்தியமா நான் நினைச்சுக் கூடப் பாக்கல… சாரி அச்சு.. ரியலி உன்ன ஹர்ட் பண்ணனும்னு நான் பண்ணல..” என்றவன் தன்னுடைய கார் சாவியை எடுத்துக்கொண்டு அவளின் பின்னே செல்ல,
அவளோ அவனுடைய குரலுக்கு செவி சாய்க்கவே இல்லை.
அவளுக்கு அத்தனை ஆத்திரமாக இருந்தது.
சில நிமிடங்களுக்கு முன்பு அவளுடைய உயிரே அவளை விட்டுப் பிரிந்து சென்றதைப் போல அல்லவா உணர்ந்தாள்.
எப்படிப்பட்ட வலி அது.
அதைத் தனக்குக் கொடுத்துவிட்டு நடித்தேன் என்கின்றானே அவளால் அதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளவே முடியவில்லை.
அர்ச்சனாவோ அவனுடைய காரில் ஏறாமல் வெளியே செல்ல முயல சட்டென அவளுடைய கரத்தைப் பிடித்து நிறுத்தியவன்,
“நான்தான் சாரி கேட்டுட்டேன்ல.. இப்படி நடந்துக்கிட்டா என்ன அர்த்தம்..? கார்ல ஏறு..” என அவன் அழுத்தமாகக் கூற,
எதுவும் பேசாமல் அவனுடைய காரில் ஏறி அமர்ந்தவளுக்கு கண்களை கரித்துக் கொண்டு வந்தது.
வீதியின் ஓரத்தில் தன்னுடைய பார்வையை பதித்துக் கொண்டவள் அவன் புறம் திரும்பவே இல்லை.
சற்று நேரம் காரை அமைதியாக செலுத்தியவன்
“ஓகே சாரி போதுமா..” எனக் கேட்க அவ்வளவுதான் கோபத்தில் வெடித்து விட்டாள் அவள்.
“இதெல்லாம் உங்களுக்கு ஃபன்னா தெரியுதா..? கொஞ்ச நேரத்துல நான் எப்படி பயந்தேன்னு தெரியுமா..? உங்க மூச்ச டெஸ்ட் பண்ணப்போ ஒரு நிமிஷம் நானே செத்துட்டேன்.. இப்படித்தான் விளையாடுவீங்களா..? ஹவ் டேர் யூ யாழன்..?” எனக் கோபத்தோடு கேட்டவளுக்கு விழிகளில் இருந்து கண்ணீர் பொல பொலவென வழிய,
அவனோ அதிர்ந்து போய்விட்டான்.
“உங்களுக்கு ஏதாவது ஆயிருந்தா சத்தியமா என்னோட ஹார்ட் பீட் நின்னே போயிருக்கும்..” என்றவள் தேம்பி அழுதே விட அவளுடைய வார்த்தைகளில் உறைந்து விட்டான் அவன்.
“அ.. அச்சு…?”
“டோன்ட் கால் மீ லைக் தட்..” என கோபத்தில் சீறியவாறு தேம்பித் தேம்பி அழுதவளைப் பார்த்தவனுக்கு நெஞ்சம் தாளவில்லை.
காரை வீதியின் ஓரமாக நிறுத்தியவன் அடுத்த நொடியே தனக்காகத் தேம்பி அழுதவளை இழுத்து தன் மார்போடு இறுகணைத்துக் கொண்டான்.
இம்முறை அவள் அவனுடைய அணைப்பில் முதலில் அதிர்ந்தாலும் பின் பாந்தமாக அந்த அணைப்பில் அடங்கிக் கொண்டாள்.
ஏனோ அவனை விட்டு விலக வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றவில்லை.
அவன் இத்தனை நாட்கள் மருத்துவமனைக்கு வராதது.. இன்னொரு பெண்ணை திருமணத்திற்காக பார்க்கச் சென்றது.. மின்சாரம் தாக்கி மூச்சு நின்றதைப் போல நடித்தது என வரிசையாக நடந்த அத்தனை நிகழ்வுகளும் அவளுடைய நிதானத்தை முழுதாக அழித்திருந்தன.
அழுதவாறே அவனுடைய நெஞ்சில் அவள் தன்னுடைய முகத்தைப் புதைத்துக் கொள்ள இன்னும் இறுக்கமாக அவளை அணைத்து அவளுடைய உச்சந் தலையில் தன்னுடைய நெற்றியை சாய்த்தவனுக்கு உள்ளே தோன்றும் ஒரு விதமான உணர்வை புரிந்து கொள்ள முடியவே இல்லை.
அவனுக்காக அவனுடைய அன்னையைப் போலவே துடிக்கும் ஒரு பெண்ணை இப்போதுதான் அவன் முதன்முறையாக பார்க்கின்றான்.
அந்த நிமிடம் அவனுடைய நெஞ்சம் நெகிழ்ந்துதான் போனது.
காற்றுக் கூட நுழையாத அளவு இறுக்கமாக அவளை அணைத்து வைத்திருந்தவன் அவள் அழுது முடித்த பின்பும் கூட அவளை தன்னிடம் இருந்து விலக விடவே இல்லை.
கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய சுயத்திற்கு வந்தவளுக்கு நெஞ்சம் பதறியது.
அவனிடமிருந்து விலக முயன்று தோற்றுப் போனவள் பலவீனமான குரலில் “யா.. யாழன் ப்ளீஸ்.. எ… என்ன விடுங்க..” என முனகலாகக் கூறினாள்.
மெல்ல அவளை விடுவித்து அவளுடைய பட்டு போன்ற கன்னங்களைத் தன்னுடைய இரு கைகளாலும் ஏந்தியவன் அவளுடைய அழுது சிவந்திருந்த விழிகளை ஆழ்ந்து பார்த்து,
“எனக்கொன்னுன்னா இப்படி துடிக்கிறியே.. இதுதான் காதலா அச்சு..?
லவ்னா இப்படித்தான் இருக்குமா..?
அப்போ நீ என்ன லவ் பண்றியா..?” என அடுத்தடுத்த கேள்விகளை கேட்க அவளுக்குத்தான் சட்டென பதில் கூற முடியவில்லை.
அவனுடைய ஆழ்ந்த பார்வையை எதிர்கொள்ள முடியாது விழிகளை அவள் மூடிக்கொள்ள மெல்ல அவளுடைய அழகிய முகத்தை நெருங்கியவன் அவளுடைய உதடுகளை உரசும் அளவுக்கு அவளை நெருங்கினான்.
அவளுடைய இதயமோ படு வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.
“அச்சும்மா என்ன லவ் பண்றியாடி..?” கிசுகிசுப்பான குரலில் கேட்டான் அவன்.
அவளுடைய இதழ்களோ நடுங்க ஆரம்பித்து விட்டன.
அவளுடைய ஒற்றைப் பக்க கன்னத்தைப் பற்றி இருந்த அவனுடைய கரம் அப்படியே நகர்ந்து அவளுடைய பின்னந் தலையை அழுத்தமாகப் பற்றிக்கொள்ள,
பதறி விழிகளைத் திறந்து அவள் அவனைப் பார்த்த அடுத்த கணம் அவளுடைய சிவந்த உதடுகளில் தன்னுடைய தடித்த அதரங்களை அழுத்தமாகப் புதைத்திருந்தான் அவன்.
ஆடவனின் உதடுகள் மாதுவின் இதழ் சுவையை உணரத் தொடங்கியது.
Supero super.
























