19. காதலோ துளி விஷம்

4.7
(80)

விஷம் – 19

எட்டு நாட்களின் பின்பு.

அழகிய இரவுப் பொழுது அது.

நீர்வீழ்ச்சி நீரைக் கொட்டுவது போல நடுவானில் வெண்மையைக் கொட்டிக் கொண்டிருந்தது அந்த அழகிய முழு நிலவு.

அந்த முழு நிலவைச் சுற்றி இருந்த நட்சத்திரங்களோ சிறு தீபங்கள் ஏற்றி வைத்தாற் போல வானத்தை ஜொலிக்கச் செய்து கொண்டிருந்தன.

அந்த இரம்யமான பொழுதில் யாழவனின் அழைப்புக்காக தன்னுடைய வீட்டிற்கு வெளியே இருக்கும் மரத்தின் கீழே அலைபேசியுடன் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.

அவளால் எதையுமே நம்ப முடியவில்லை.

பின்னே இப்போதுதான் காதலை பரிமாறிக் கொண்டார்கள் இதோ விடிந்தால் அவர்களுக்கு மிகவும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடக்க இருக்கின்றது.

திருமணத்தைப் பற்றி நினைத்ததுமே அவளுடைய விழிகளில் ஆனந்தத்தின் ஜொலிப்பு.

அன்று சொன்னதைப் போலவே யாழவன் அடுத்த நாள் அவனுடைய பெற்றோரை வீட்டிற்கு அழைத்து வந்துவிட அனைத்தும் சுமூகமாகவே பேசி முடிவானது.

என்னதான் அனைத்தும் நன்றாக நடந்தாலும் யாழவனின் தந்தை மட்டும் அன்று பேசாமல் இருந்தது அவளுடைய மனதில் உறுத்தத்தான் செய்தது.

அதை யாழவனிடம் கேட்டபோது “பீ கூல் அச்சு..” என்ற வார்த்தைகளோடு அந்த உரையாடலை முடித்துவிட்டானே.

அதுமட்டுமின்றி இன்னும் சில நாட்களில் அவன் லண்டன் செல்ல வேண்டுமாகையால் உடனடியாகவே திருமண‌ நாளும் பார்த்தாயிற்று.

பாஸ்போர்ட் விசா வேலைகள் யாவும் அவளுக்கும் சேர்த்து பார்த்து முடித்து விட்டான் யாழவன்.

திருமணம் முடிந்து இரண்டு நாட்களில் அவள் அவனுடன் லண்டன் போயாக வேண்டும்.

அவளுக்கு மலைப்பாக இருந்தது.

அனைத்தும் அசுர வேகத்தில் கடகடவென நடப்பது போல இருக்க சற்றே தடுமாறியவள் அன்னையையும் தங்கையையும் பிரிவதை எண்ணியும் வேதனை கொண்டாள்.

அதே கணம் யாழவன் அவளுக்கு அழைத்து விட சிறு புன்னகையோடு அந்த அழைப்பை ஏற்றவளுக்கு,

“ஹலோ பேபி..” என்ற அவனுடைய குரல் கேட்டதும் மகிழ்ச்சி மனதினுள் பொங்கி எழுந்தது.

“யாழன் இன்னைக்கு காலைல இருந்து காலே பண்ணலையே.. ரொம்ப பிசியா இருந்தீங்களா..?” எனக் கேட்டாள் அவள்.

“ஆமா பேபி.. டிக்கெட் போட்டுட்டேன்.. நம்ம ஹாஸ்பிடல்ல மாத்த வேண்டிய விஷயம் நிறைய இருந்துச்சு.. அதையும் ஓரளவுக்கு சரி பண்ணி பொறுப்பை வேறொருத்தங்ககிட்ட கொடுத்திருக்கேன்.. இனி பேக் பண்ற வேலை மட்டும்தான் பாக்கி..” என்றான் அவன்.

“ஐயோ நானும் பேக் பண்ணனும்ல..?” என அவள் கேட்க,

“ஹலோ மேடம் இன்னைக்கு மட்டும்தான் நீங்க உங்க வீட்ல தூங்குவீங்க.. நாளைல இருந்து நீ என்கூடதான் இருக்கணும்..” என வசிகரமான சிரிப்புடன் அவன் கூற,

“ஹலோ சார்.. அது எனக்கும் தெரியும்.. ஆனா இதுக்கும் நான் பேக் பண்றதுக்கும் என்ன சம்பந்தம்..?” என அவனைப் போலவே சிரித்தவாறு கேட்டாள் அவள்.

“நம்ம ரெண்டு பேரும் ஒன்னா ஒரே ரூம்ல இருப்போம்ல.. ரொமான்டிக்கா பேக் பண்ணிக்கலாம்..” என அவன் கூற இவளுக்கோ கன்னங்கள் சிவந்தன.

“இது புதுசா இருக்கே.. அதென்ன ரொமான்டிக் பேக்கிங்..?”

“சொல்லவா..?”

“ம்ம்.. சொல்லுங்களேன்..”

“நீ ட்ரஸ் எல்லாம் மடிச்சு வைக்கும் போது அப்படியே உன் பின்னாடி வந்து உன்னை டைட்டா ஹக் பண்ணி உன்னோட பின் கழுத்துல குட்டிக் குட்டி கிஸ் நிறைய பண்ணுவேன்… அப்படியே உன்னோட முதுகுல… அப்புறம் உன்னோட இடுப்புல…” என அவன் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போக,

“ஐயோ போதும் போதும்.. உங்க ரொமான்டிக் பேக்கிங் பத்தி எல்லாம் என்கிட்ட சொல்லவே வேணாம்.. தெரியாம கேட்டுட்டேன்..” என அவனுடைய பேச்சை சட்டென நிறுத்தினாள் அவள்.

அவளுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது.

அவள் அலறியதும் மறுபக்கம் தொடர்பில் இருந்தவனோ குலுங்கிச் சிரித்தான்.

“ஹேய் நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சத்தியமா நினைச்சுக் கூடப் பாக்கவே இல்லடி.. இந்தியா வந்ததே நாலு நாள் அம்மா கூட இருந்து அவங்களை எப்படியாவது சமாதானப்படுத்தணும்னுதான்… ஆனா உன்னப் பார்த்தது.. லவ் பண்ணது.. கல்யாணம் பண்ணிக்கப் போறதெல்லாம் எனக்கே ஷாக்கிங்காதான் இருக்கு..”

“எங்கம்மா அடிக்கடி மாப்பிள்ளை பார்க்கலாமான்னு கேட்கும் போதெல்லாம் இப்போ கல்யாணமே வேண்டாம்.. மாப்பிள்ளை பார்த்தா ராமன் மாதிரி மாப்பிள்ளை வேணும்னு கல்யாணத்த தள்ளிப் போட்டுக்கிட்டே இருந்தேன்… ஆனா இப்போ ஒரே வாரத்துல உங்களை பிடிச்சிருக்குன்னு எங்க அம்மாகிட்டயே என்ன பேச வச்சுட்டீங்க..”

“ஹா.. ஹா.. அது சரி… ராமனா அது யாருடி..?” என ஆச்சரியமாகக் கேட்டான் அவன்.

“என்னது உங்களுக்கு ராமனைத் தெரியாதா..? ஸ்ரீராமன்.. நம்ம இதிகாசத்துல வர்ற கடவுளுங்க… கிருஷ்ண பரமாத்மாவோட இன்னொரு அவதாரம்..”

“ஓஹ்.. தெரியலையேடி இதிகாசமெல்லாம் எனக்குத் தெரியாது..”

“எனக்குத் தெரியும் நான் சொல்லவா.”

“அடியேய் புதுசா கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க இதிகாசத்தைப் பத்தியா பேசுவாங்க..? நாம நம்ம ஃபர்ஸ்ட் நைட் பத்தி பேசலாம்டி..” என அவன் கூறியதும் அவளுக்கோ முகம் குப்பென சிவந்தது.

“அச்சோ போங்க யாழன்… உங்களுக்கு எப்போ பார்த்தாலும் இதே எண்ணம்தான் பேட் பாய்..”

“அடியே பொண்டாட்டி.. இவ்வளவு நாளும் ஒத்த கிஸ்ஸுக்கு என்ன அலைய விட்டல்ல.. நாளைக்கு பாரு நீ வேணாம்னு சொன்னாலும் நான் உன்னை விடவே மாட்டேன்..” என்க,

அவளோ தன் கீழ் உதட்டை வெட்கத்துடன் மடித்து கடித்துக் கொண்டாள்.

“ஓகே ஓகே.. இப்பவே வெட்கப்பட்டு சைலண்டா இருந்தா எப்படி..? இன்னும் கொஞ்ச வெட்கத்த மிச்சம் வச்சுக்கோ.. உன்னோட எல்லா வெட்கத்தையும் நானே போக வைக்கிறேன்…”

“யாழன் ப்ளீஸ்..” என அவள் சிணுங்க அந்த சிணுங்களில் அவனுக்கோ சித்தம் சிதைந்தது.

“மிஸ் யூ டி..” என பெருமூச்சுடன் கூறினான் அவன்.

“நானும்தான்..” என ஏக்கத்துடன் கூறினாள் அவள்.

“சரிமா நீங்க எல்லாரும் கிளம்ப ரெடி ஆயிட்டீங்களா..? இன்னும் அரை மணி நேரத்துல உங்க எல்லாரையும் பிக்கப் பண்ண எங்களோட வேன் வந்துரும்.. இன்னைக்கு மண்டபத்துல தூங்கினாதான் காலைல நேரம் சரியா இருக்கும்..”

“நாங்க எல்லாரும் கிளம்பி ரெடியாதான் இருக்கோம் யாழன்..”

“உன்னோட சாரி ஜுவல்ஸ் எல்லாமே ரெடியா இருக்கு.. பியூட்டிஷியன் எல்லாத்தையும் மண்டபத்துக்கு கொண்டு வந்துருவாங்க.. உனக்கு எல்லாமே புடிச்சிருக்கு தானே..?”

“ம்ம்.. நீங்களும் நானும்தானே சலக்ட் பண்ணோம்.. பிடிக்காம இருக்குமா..? என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

“ஓகே பேபி..”

“பியூட்டிஷியன் யாருங்க..?”

“சாரி அச்சும்மா.. சத்தியமா எனக்குத் தெரியல… என்னோட கோ சிஸ்டர்ஸ்தான் அதெல்லாம் பாத்துக்கிறாங்க.. உனக்கு புடவை கட்டுறதுக்கு ஒருத்தர்.. மேக்கப் போட ஒருத்தர்.. ஹேர் டிசைன் பண்ண ஒருத்தர்னு ஏகப்பட்ட பேர அரேஞ்ச் பண்ணி வச்சிருக்காங்க… கல்யாண கோலத்துல நீ எப்படி இருப்பேன்னு பாக்க இப்பவே ரொம்ப ஆவலா இருக்குடி..”

“என்ன ரெடி பண்றதுக்கு இத்தனை பேரா..?” என அதிர்ந்து விட்டாள் அவள்.

“இந்த யாழவன் பிரான்சிஸ்ஸோட பொண்டாட்டி நாளைக்கு உலகமே பார்த்து அசந்து போற மாதிரி இருக்கணும்…”

“அழகா இல்லனா வேணாம்னு விட்ருவீங்களா..?”

“வாட்..? இடியட் மாதிரி பேசாத பேபி… இந்த உலகத்துலயே எனக்கு நீ மட்டும் தான்டி பேரழகு..”

“நல்லா பேசுறீங்க.. சரி ரொம்ப நேரம் ஆயிடுச்சு.. நான் கிளம்பி ரெடியா இருக்கேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க வேன் வந்துரும்ல..?”

“ஆமாடி… ஓகே பேபி.. நேரத்துக்கே தூங்கு..‌ நானும் இன்னும் கொஞ்ச நேரத்துல மண்டபம் இருக்க ஹாலுக்கு வந்துருவேன்.. முடிஞ்சா மிட் நைட்ல சந்திக்கலாம்..”

“கொன்னுடுவேன் காலைலயே மீட் பண்ணவோம்..” எனாறவள் சிரிப்போடு அழைப்பைத் துண்டித்து விட்டு வீட்டிற்குள் எழுந்து சென்றாள்.

*****

இயற்கை தன்னுடைய வயிற்றினுள் சுமந்த சூரியனைப் பிரசவித்த அழகிய காலைப் பொழுது அது.

அந்த மிகப் பிரம்மாண்டமான திருமண மண்டபமோ ஆடம்பரமான அலங்காரங்களில் மிக அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தது.

வேலைக்காகவும் அங்கே வரும் விருந்தினர்களை கவனிப்பதற்காகவும் பல வேலையாட்களை யாழவனின் குடும்பம் நியமித்திருக்க ஒவ்வொருவரும் நிற்க நேரமில்லாமல் அங்குமிங்கும் ஓடியாடி தத்தமது வேலையை சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.

இன்னும் சற்று நேரத்தில் இந்த திருமண மண்டபமே பல கோடீஸ்வரர்களின் வருகையால் நிரம்பி வழியப் போகின்றது அல்லவா..?

ரூபாவதிக்கோ எந்தப் பிரச்சினையும் இன்றி இந்த திருமணம் நன்றாக நடந்து முடிந்து விட வேண்டும் என்ற தவிப்பு.

அன்னத்திற்கோ யாழவனின் தந்தை இதுவரையிலும் கூட ஒரு வார்த்தை பேசாதது மனதிற்குள் சற்று பயத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது.

அவருடைய பயத்தை தன்னுடைய இனிய பேச்சால் கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்து எறிந்து கொண்டிருந்தார் ரூபாவதி.

அவர் மட்டும் இல்லை என்றால் நிச்சயம் இந்த திருமணத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கக் கூடும்.

அர்ச்சனாவிற்கோ மனம் முழுவதும் இனிய படபடப்பு மட்டுமே.

சற்று நேரத்தில் அவளுடைய மகிழ்ச்சி அப்படியே துணி கொண்டு துடைத்தாற் போல காணாமல் போகப் போகின்றது என்பதை அறியாமல் குளித்து முடித்தவள் முகூர்த்த புடவையை கட்டுவதற்காகத் தயாரானாள்.

புடவை கட்டுவதற்குரியவர் வந்திருக்கிறார் என அர்ச்சனாவை அழைத்துச் சென்று ஒரு அறையில் விட,

புடவையுடன் உள்ளே நுழைந்தவள் “யாரையும் காணோமே..?” என யாழவனின் சகோதரிகளிடம் கேட்டாள்.

யாழவனின் பெரிய அன்னையின் இரு மகள்களும் “அண்ணி நீங்க சாரி ஸ்கர்ட் பிளவுஸ்ஸை போடுங்க.. கொஞ்ச நேரத்துல புடவை கட்டுறவங்க வந்துருவாங்க..” என்றனர்.

அவர்கள் இருவரும் அறைக்குள் நிற்பதைக் கண்டவளோ சிறு சங்கடத்துடன் “நீங்க கொஞ்சம் வெளிய இருக்க முடியுமா..?” எனக் கேட்க,

அவளைப் புரியாமல் பார்த்தவர்கள் “ஓகே அண்ணி..” என்றவாறு வெளியேறிவிட அப்போதுதான் அவளுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

இவர்களின் முன்பு அவளால் எப்படி ஆடை மாற்ற முடியும்..?

அவர்கள் சென்றதும் வேகமாக சாரி ஸ்கர்ட்டையும் அழகிய வேலைப்பாடுகளுடன் ஆரி ஒர்க் செய்து தைக்கப்பட்ட ஜாக்கெட்டையும் அணிந்து துவாலை ஒன்றை எடுத்து தன் மார்பின் மீது போட்டவாறு புடவை கட்டி விடுபவருக்காக அவள் காத்திருக்க,

அந்த அறைக்குள் சிரித்தவாறு உள்ளே நுழைந்தான் ஒரு ஆடவன்.

ஒரு கணம் அவளுக்கோ தலை சுற்றிப் போனது.

அதிர்ந்து உறைந்து போய்விட்டாள் அவள்.

அந்த ஆடவனின் பின்பு யாழவனின் சகோதரிகளும் உள்ளே நுழைய,

அடுத்த நொடியே அவனைப் பார்த்து “கெட் அவுட்..” என கத்தினாள் அர்ச்சனா.

அவளுக்கு அவமானமாக இருந்தது.

உடல் நடுங்கியது.

“அண்ணி வாட் இஸ் திஸ்..? இவர் யார் தெரியுமா..? எல்லா ஹீரோயின்ஸுக்கும் இவர்தான் புடவை கட்டிவிடுவாரு.. இவரோட வேல்யூ என்னன்னு தெரியாம திட்டுறீங்க..”

“ஐயோ ப்ளீஸ் தயவு செஞ்சு எல்லாரும் வெளியே போங்க..” நடுங்கிய குரலில் கூறினாள் அர்ச்சனா.

“ஐயோ அண்ணி ஏன் இப்படி பிஹேவ் பண்றீங்க..? இவர் சூப்பரா புடவை கட்டுவாரு.. நீங்க வேறு யாரோ வந்துட்டாங்கன்னு நினைச்சு தப்பா கத்திட்டீங்க போல..” எனக் கூற அவளுக்கோ தலை சுற்றவே தொடங்கிவிட்டது

விழிகளில் கண்ணீர் வழிய அந்தக் கோலத்தில் ஒரு ஆடவனின் முன்பு நிற்க முடியாது அழுதவாறே சட்டென அந்த அறையின் குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டவள் கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு அழத் தொடங்கி விட்டாள்.

💜💜

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 80

No votes so far! Be the first to rate this post.

1 thought on “19. காதலோ துளி விஷம்”

  1. ஐயோ ஐயோ ஐயோ அடுத்து விஷக் குட்டி என்ன‌ ட்விஸ்ட் வச்சிருக்காங்க ஹோ தெரியலையே. 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏😍😍😍😍😍🥰🥰🥰🥰🤩🤩🤩❤️❤️❤️❤️❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!