2.சிந்தையுள் சிதையும் தேனே..!

4.3
(10)

தேன் 2

அந்தப் புகைப்படத்தை பார்த்து திகைத்து நின்ற நிவேதாவினை உற்று நோக்கிய கருணாகரன், ஏன் இப்படி நிவேதா  அதிர்ச்சியின் விளிம்பில் நிற்கின்றாள் என்று புரியாமல் அவளது முகத்தில் தோன்றும் மாற்றங்களை பார்த்த பின்பு அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் யாராக இருக்கும் என்ற கேள்வி அவர் மனதினுள்ளும் எழுந்தது.

அது ஆர்வத்தைத் தூண்ட உடனே நிவேதாவின் கையில் இருந்த புகைப்படத்தை வாங்கிப் பார்த்தவரது கண்கள் திகைப்பில் லேசர் போல விரியத்தான் செய்தன.

இருவரையும் அவதானித்தபடி காயத்ரி,

“என்னங்க என்னோட முடிவுக்கு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இன்னைக்கு பதில் சொல்லிட்டு இங்கே இருந்து கிளம்பலாம்..” என்று திடமாகக் கூறிவிட்டு அவர்களுக்கு முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்து அருகில் இருக்கும் பத்திரிகையை எடுத்துப் புரட்டினார்.

“அம்மா நீங்க கல்யாணம் பண்ணிக்க சொல்றது சரி ஆனா இவனப் போய் எனக்கு செலக்ட் பண்ணி இருக்கீங்க இவன் யாருன்னு உங்களுக்கு நல்லா தெரியும் தானே..!”

“ஏன் இவனுக்கு என்ன குறை..?”

“அம்மா என்னோட எதிர்ல நின்னு பேசுறதுக்கே நான் ஸ்டேட்டஸ் பார்க்கிறனான் அப்படி இருக்கும்போது நம்மளோட கம்பெனில வேலை செய்ற மேனேஜர்யா போய் எனக்கு கட்டி வைக்கப் போறீங்க அதுவும் எனக்கு கீழ வேலை செய்றவனை கொஞ்சம் கூட உங்களுக்கு அறிவே இல்லம்மா..”

கருணாகரனும் அதனை ஆமோதிப்பது போல,

“அவனப் போய் எப்படி நம்மளோட மகளோட சரி சமமா வைச்சு பாக்குறது..?”

“என்னங்க நீங்களும் உங்க பொண்ணு மாதிரி ஸ்டேட்டஸ் பாக்கறீங்களா 30 வருஷத்துக்கு முன்னுக்கு இந்த ஸ்டேட்டஸ் எல்லாம் அங்க போச்சு..?” என்று கேட்டதும் முகத்தில் அடித்தார் போல் அவனது முகம் சில நிமிடம் பழைய ஞாபகங்களில் இருண்டு போனது.

“நிவேதா இங்க பாரு ஒரு அம்மாவா எனக்கு நிறைய ஆசை இருக்கு உன்னை நான் இந்த விஷயத்துல கட்டாயப்படுத்துறேன்னு நீ கோவிச்சாலும் எனக்கு பரவாயில்லை உன்னுடைய எதிர்காலத்தை நினைத்து எனக்கு ரொம்ப கவலையா இருக்கு

நீ போற வழி ரொம்பவும் பிழை அம்மாவா என்னால அதை பார்த்துகிட்டு இருக்க முடியல உனக்கு கால் கட்டு போட்டா தான் சரி வரும்

அஞ்சு வருஷம் கழித்து பிறந்த ஒரே ஒரு புள்ளன்னு உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தது ரொம்ப தப்பா போயிடுச்சு

நீ அஞ்சு வயசுல சரியாயிடுவ பத்து வயதானதும் சரி ஆயிடுவ 15 வயசு வயசாகினதும் பக்குவப்பட்டுருவ 20 வயசாகினதும் தெளிவாகிடுவ என்று எதிர்பார்த்தது எல்லாம் போதும்

இதுக்கு மேலயும் உன்ன விட்டா நீ கை மீறி போய்டுவ அதனால உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதான் சரி என்று நான் முடிவு எடுத்துட்டேன்

இதுக்கும் உங்க அப்பாவுக்கும் சம்பந்தம் இல்லை நான் போனதுக்கு அப்புறம் உங்க அப்பாக்கு சாம்பிராணி போட்டு இந்த கல்யாணத்தை நிறுத்தனும்னு நினைச்ச நான் உயிரோடு இருக்கும் வரைக்கும் அது நடக்காது

இதுதான் என்னோட கடைசி முடிவு அப்பாவும், மகளும் இந்த போட்டோல இருக்கிற பையனை மாப்பிள்ளையா ஏத்துக்க தான் வேணும்..” என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு வேகமாக நகர்ந்து சென்று விட்டார் காயத்ரி.

கருணாகரனும், நிவேதாவும் அழைக்க காதில் விழாதது போலவே அங்கிருந்து வேகமாக கோபத்துடன் நகர்ந்து விட்டார்.

தனது அறையில் வந்து கதவை சாத்திவிட்டு ஒரு நிமிடம் கண் மூடி இருந்த காயத்ரியின் மனதில் நிவேதாவை பற்றிய அதீத கவலையே அழுத்திக் கொண்டிருந்தது.

துக்கம் தொண்டையை அடைப்பது போல அவ்வளவு வேதனை அவரை வாட்டி வதைத்தது.

இவளது போக்கும், பழக்கவழக்கமும், நடை உடை பாவனைகள் ஏன் இப்படி என்னதான் ஐந்து வருடங்கள் கழித்து கிடைத்த குழந்தையாக இருந்தாலும் இப்படி தடம் மாறி போற அளவுக்கா அன்பை கொட்டி வளர்ப்பது எல்லாம் கைமீறிப் போனது போல தோன்றியது.

பணத்தை நீரை அள்ளி இறைப்பது போல செலவழிக்கும் தன் மகளிடம் எவ்வாறு அதன் மதிப்பை விளக்குவது

பிறந்த பொழுதே கருணாகரனின் தாய் வேதவள்ளியைப் போல் குழந்தை பிறந்திருக்கிறது என்று கருணாகரனுக்கு பெரும் கொண்டாட்டம்

அதோடு தனது தாயின் நினைவாகவே வேதவள்ளி என்ற பேரிலிருந்து முதல் பாதிப்பெயரான வேதா என்பதை எடுத்து நிவேதா எனப் பெயர் சூட்டினார்.

அதற்கு ஏற்றால் போல் தனது அன்னை போன்று முக ஜாடையுடன் வளர்ந்ததால் கருணாகரன் தன் அருமை மகளுக்கு பணத்தைக் கொட்டிக் கொட்டி அதிக அன்பையும் பொழிந்து தள்ளினார்.

இப்போது அதன் பிரதிபலனோ மிகவும் மோசமான பாதையை நோக்கி பயணிப்பது காயத்ரிக்கு நன்கு விளங்கியது.

அதற்காகத்தான் அவளது கம்பெனியில் வேலை செய்யும் மேனேஜரான கார்த்திகேயனை தனது மகளுக்கு திருமணம் முடித்து வைக்க எண்ணினார்.

கார்த்திகேயன் மிகவும் நல்ல பையன், பொறுப்பானவன், அனைத்திலும் அதீத அக்கறை கொண்டவன், அவன் நஷ்டத்தில் மூழ்கி இருந்த கம்பனியை அதிலிருந்து உயர்த்தி இப்போது சரியான நிலைமையில் கொண்டு நடத்துவது காயத்ரியின் மனதை மிகவும் கவர்ந்தது.

அதேபோல் தனது மகளையும் சரியான பாதையில் கொண்டு நடத்துவான் என்று நம்பியே அவனைத் தேர்ந்தெடுத்தாள்.

முதலில் கார்த்திகேயனிடம் கேட்டபோது முற்றாக மறுத்தவன் பின்பு காயத்ரியின் கட்டாயத்தாலும் அவரிடம் மறுத்துப் பேச முடியாமலும் ஒத்துக்கொண்டவன் 2 கண்டிஷனை மட்டும் அவரிடம் தெரிவித்திருந்தான்.

“மேடம் நீங்க சொல்றபடி உங்க மகளை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனால் உங்களோட சொத்தில் இருந்து எனக்கு ஒரு பைசா கூட தேவையில்லை வேண்டுமென்றால் உங்க மகள் விரும்பினால் மகளோட பேர்ல எழுதி வையுங்க அதோட இந்த கல்யாணம் நடக்கணும்னா கருணாகரன் சாரும் முக்கியமா நிவேதா மேடமும் சம்மதம் தெரிவிக்கனும் அவங்க இரண்டு பேர் சம்மதமும் இல்லாம நான் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள மாட்டேன்..” என்ற இரண்டு கண்டிஷனையும் அவன் தெரிவிக்க அந்த இரு விடயங்களிலே அவனது நேர்மையான குணத்தை எண்ணி அவருக்கு அவன் மீது அதீத மதிப்பு பெருகியது.

வெயில் அமர்ந்திருந்த கருணாகரனுக்கும், நிவேதாவிற்கும் ஒரே மனநிலை தாயை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியாமல் இருவரும் அவரவர் சிந்தனையில் சிந்தித்துக் கொண்டிருக்க நிவேதா,

“அப்பா அம்மா ரொம்பத்தான் ஓவரா போய்கிட்டு இருக்காங்க நீங்களாவது பேசி புரிய வைங்க எனக்கு இப்போ கல்யாணம் வேணாம் அதோட இவனயா போயும் போயும் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்..” என்று நிவேதா வெறுப்புடன் கூற,

இதுவரையில் தன் மனைவியை ஒரு பொழுதும் குரல் உயர்த்தி பேசாத கருணாகரனுக்கு நிவேதாவின் தாய் மீதான வெறுப்பான வார்த்தைகள் மீது கோபம் துளிர்த்தது.

“நிவேதா அம்மாவை அப்படியெல்லாம் பேசக்கூடாது அம்மா எப்பவுமே உன்னோட நல்லதத்தான் யோசிப்பாங்க

அந்தப் பையன்கிட்ட காசு இல்லன்னா என்ன நம்ம கிட்ட காசு இருக்கு தானே அதோட அவன் நான் பார்த்து விசாரிச்ச வகையில ரொம்ப நல்ல பையனாத்தான் தெரிகிறான்

உன்னைய எப்பவும் சந்தோசமா வெச்சிருப்பேன் உங்க அம்மாவை கல்யாணம் கட்டும் போது என்கிட்ட மட்டும் என்ன கோடிக்கணக்குல பணமா இருந்துச்சு நீ பிறந்ததுக்கு அப்புறம் இந்த சொத்து பங்களா எல்லாம் கிடைச்சது

எப்பவுமே பழைய விஷயங்களை நாங்க மறக்கக்கூடாது நிவேதாம்மா நீ என்னோட அம்மா இல்ல அப்பா சொல்றத கொஞ்சம் கேளுமா..?” என்று கருணாகரன் மகள் மீது அன்பைப் பொழிய,

“சரிங்கப்பா ஆனா நான் அவனை நேரில் மீட் பண்ணனும் அவனோட பேசிட்டு தான் என்னோட முடிவ நான் சொல்லுவேன்..”

“அதுக்கு என்ன தாராளமா நீ மீட் பண்ணு தாராளமா பேசு ரெண்டு பேரும் பேசி ஒருத்தர் புரிந்து கொள்ளுங்க பார்த்ததும் யாரையும் பிடிக்காதும்மா பழகப் பழகத்தான் பிடிக்கும் நீ வேணும்னா அவனோட பழகிப் பாரு பிடிச்சிருந்தா கல்யாணம் கட்டிக்கோ பிடிக்கலைன்னா..”

“பிடிக்கலைன்னா டாடி..”

“கட்டாயமா உனக்கு பிடிக்கும்மா இந்த கம்பெனியில எப்பவுமே உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பது அந்த கார்த்திகேயன் மட்டும்தான் உங்க அம்மா சொன்ன பிறகு தான் நானே யோசிக்கிறேன் அவனைப்போல ஒரு நல்ல மாப்பிள்ளை எங்கே தேடினாலும் கிடைக்காது நீ எதுக்கும் யோசிச்சுட்டு அவனோட பேசிட்டு என்னன்னு சொல்லு..” என்று பாசத்துடன் நிவேதாவின் தலையைத் தடவினார் கருணாகரன்.

“சரி டாடி நான் இன்னைக்கு ஈவ்னிங்கே அவன மீட் பண்ணி பேசிட்டு உங்க கிட்ட முடிவ சொல்றேன் ஓகேயா..?” என்று நிவேதா கேட்டதும் கருணாகரனுக்கு மனதளவில் ஒரு புத்துணர்ச்சியும், சந்தோசமும் தவழ்ந்தது.

இவர்களின் முதல் சந்திப்பே மோதலில் தொடங்கினால் காதல் மலருமா..?

பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில்…

உங்கள் ஆதரவை எதிர்பார்த்த வண்ணம்

உங்கள் தோழி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!