June 2024

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 4

அத்தியாயம் – 4   அவள் நேரே சென்றது என்னவோ  வருணின் கார் அருகே தான்.    கார் அருகே சென்ற பின் தான் வருணிடம் காரின் திறப்பை வாங்கிக் கொண்டு வராதது உரைக்க, ஒரு பெரு மூச்சுடன் அப்படியே  காரில் சாய்ந்து நின்றாள்.   அவளையே பின் தொடர்ந்து வந்த காஷ்யபன் அவள் வருணின் காரில் நிலத்தை பார்த்து கொண்டே சாய்ந்து நிற்பதை ஒரு புருவ முடிச்சுடன் பார்த்துக் கொண்டு சற்று மறைவாகத் தள்ளி நின்றான். […]

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 4 Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-07 லியாவும் மதியும் அந்த வீட்டை விட்டு தப்பிச் செல்லும் நோக்கோடு அன்று இரவு வெளியேறியவர்கள் வீட்டைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் போது மதி திடீரென்று எதன் மீதோ மோதி நின்றாள். தலை கிறுகிறுக்க தன் தலையில் வலது கையை வைத்து பிடித்துக் கொண்டே என்னவென்று நிமிர்ந்து பார்த்தவளுக்கோ உடல் தூக்கி வாரிப் போட்டது. பின்னே இருக்காதா..? அங்கே நின்றது சாட்சாத் மித்ரனே தான். அவனைப் பார்த்ததும் மதியின் கண்களோ தெறித்து வெளியே விழுந்து விடுவது போல

வதைக்காதே என் கள்வனே Read More »

வருவாயா என்னவனே : 17

காத்திருப்பு : 17 “என்ன ரதி நன்றி சொல்லணுமா?” என்று கமலேஷ் கேட்டதும் ரதி அதிர்ந்தாள். ஆம் தேவி நன்றி சொல்லத்தான் கமலேஷ்கூட வந்தாள். “உங்களுக்கு எப்பிடித் தெரியும்?” “முதல்ல கார ஓரமா நிறுத்து ரதி” அவள் காரை நிறுத்தியதும். “உங்களுக்கு எப்பிடித் தெரியும்?” “வீட்ல நான் வதனாவ தங்கச்சினு சொல்லி உன்ன பார்த்ததும் உன்னோட கண்கள் என்னை நன்றியோட பார்த்துச்சிடா அதுதான்” “ஆமாங்க வதனா கிராமத்தில வளர்ந்தவ. ரொம்ப நல்லவ. கோவப்படக்கூட மாட்டா. அவள இங்க

வருவாயா என்னவனே : 17 Read More »

வருவாயா என்னவனே : 16

காத்திருப்பு : 16 வதனாவை யார் உள்ளே வரவேண்டாம் என்பது என்று பார்த்த பாட்டி புன்னகைத்தார்.  “என்ன கல்யாணப் பொண்ணே ஏன் வதனாவை உள்ள வரவேண்டாம் என்று சொல்ற?” “இருங்க பாட்டி முதல் முதல் நம்ம வீட்ட வர்ற வதனாவ வரவேற்க வேண்டாமா?” என்றவள் அவளுக்கு ஆரத்தி எடுக்க வதனா குழப்பத்துடன் இருந்தாள். அனைவரும் புன்னகைத்துக்கொண்டிருக்கும் போது அதை கலைப்பதற்காகவே வந்தார் மல்லிகா. (மல்லிகா பானுமதியின் ஒன்றுவிட்ட அண்ணனின் மனைவி. பானுமதியின் சொந்தங்களில் இவர் மட்டுமே மதியுடன்

வருவாயா என்னவனே : 16 Read More »

வருவாயா என்னவனே : 15

காத்திருப்பு : 15 தூக்கத்தில் பயந்து எழுந்தாள் வதனா. எழுந்த வதனாவின் உடல் சில்லிட்டு இருந்தது. அருகில் இருந்த நீரைக் குடித்தவள் சிறிது தெளிந்தாள். மீண்டும் தூங்குவதற்கு மனம் வராமையினால் ஜன்னல் ஓரத்தில் நின்று நிலாவைப் பார்த்தாள். அவளது கனவே மீண்டும் மீண்டும் வந்தது. ஆம் வதனா பயந்து எழக் கனவே காரணம். அது என்ன கனவு என்று பார்ப்பம். வதனா ஓர் அறையில் வேலை செய்து கெண்டிருக்கிறாள். அப்போது யாரோ அழைக்க வேகமாக வந்தவள் புடவை

வருவாயா என்னவனே : 15 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 3

பேராசை – 3   காலை 11.00 மணியைப் போல தாஜ் சமுத்ரா ஹோட்டலை அடைந்தனர்.   செல்வந்தக் குடும்பத்தில் நடக்கும் ஒரு விழா என்றால் அங்கு ஆடம்பரத்திற்கு பஞ்சம் ஏது!?   ஆம், அவ்வளவு அழகாகவும் பிரம்மாண்டமாகவும் மிக நேர்த்தியாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.   இவர்கள் முன்னரே ஏற்பாடு செய்ய சொல்லி இருந்த திருமண நாள் கொண்டாட்ட விழா நடக்க இருக்கும் அந்த ஹோட்டலின் இவெண்ட் நடக்கும் பரந்த ஹாலில் கிட்டத்தட்ட 300 பேர்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 3 Read More »

வருவாயா என்னவனே : 14

காத்திருப்பு : 14 சிறிது நேரம் யோசனை செய்த சுந்தரம் மகள் போவதற்கு அனுமதி வழங்கினார். “நீ இப்பிடி சொல்லுவனு எதிர்பார்க்கல நன்றிப்பா” “என்னம்மா இது வதனா உங்க கூடதானே வர்றா இதுல சொல்றத்துக்கு என்ன இருக்கு” “வதனா நீ என்கூட வர்றியாமா?” “நீங்க சொல்லி நான் என்ன பாட்டி மறுத்திருக்கன் நான் உங்ககூட வர்றன் பாட்டி” “சரிடாமா வேலை கிடக்கு அதெல்லாம் சீக்கிரமா முடிக்கணும் அப்போதான் அங்க நிம்மதியா வேலை பாக்கலாம் நான் வர்றன்மா” “சரிமா

வருவாயா என்னவனே : 14 Read More »

வருவாயா என்னவனே : 13

காத்திருப்பு : 13 சூர்யா கமலேஷ்க்கு போன் பண்ணினான். “சூர்யா என்னடா இந்த நேரத்தில போன் பண்ணிருக்கா?” “மச்சான் வேலையா இருக்கியா? இல்ல வீட்லயாடா?” “இப்பதான் மச்சான் வீட்டுக்கு வந்தன்டா சொல்லுடா” “மச்சான்….. நான்…. ஒண்ணு…..சொல்லுவன்…. நீ…. என்ன…. தப்பா……. நினைக்கக்கூடாது” எப்பவும் குரலில் கம்பீரமாக பேசும் தன் நண்பன் இன்று தடுமாற்றத்துடன் பேசுவதை உணர்ந்தவன்” மச்சான் உன்னப் போய் நான் ஏண்டா தப்பா நினைக்கப்போறன்? நான்ன இப்பிடி நல்லா வாழ்றத்துக்கு நீதானேடா காரணம். என்னாச்சிடா உனக்கு

வருவாயா என்னவனே : 13 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 2

பேராசை – 2   ஓரளவு தன் கைகளிலும் கழுத்துப் பகுதியிலும் தேய்த்து கழுவி அதன் நிறம் சற்றுக் குறைந்து போக கழுவி விட்டு தான் ஓய்ந்தான்…. அவனின் வெண்ணிறத்திற்கு  தேய்த்து கழுவியதன் பயனாக அவ்விடங்கள் சிவந்தும் விட்டது.   ஒரு வன்மத்துடனேயே கண்ணாடியை வெறித்து தன்னையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தவன் ஒரு முடிவை எடுத்தவனாய் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வந்தான்.   திருமண நாள் விழாவுக்காக தனக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு  இருந்த வெண்ணிற

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 2 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 01

காதல் : 01 பச்சைப் பசேல் என்று நான்கு திசைகளிலும் பரந்து காணப்படும் வயல்வெளிகள் பார்ப்போரின் கண்களை வியக்க வைக்கும். காற்றின் திசைக்கேற்ப தமது மெல்லிய உடலை அசைத்தாடும் நெற்கதிர்களை பார்த்தாலே போதும் எவ்வாறான குழப்பத்திலோ கவலையிலையோ இருந்தாலும் சட்டென்று நமது மனம் அமைதியடையும். எப்போதும் வயலைச் சுற்றியோடும் வாயக்கால்களில் ஓடும் நீர் குளிர்ச்சியாகவே இருக்கும். வயல்களில் சோம்பலன்றி சுறுசுறுப்புடனும் மகிழ்ச்சியுடனும் வேலை செய்யும் ஆட்கள் என அந்த சுற்றுவட்டாரமே பார்க்க அத்தனை அழகாக இரம்மியமாக இருந்தது.

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 01 Read More »

error: Content is protected !!