July 2024

6) செந்தனலாய் பொழிந்த பனிமழை

இங்க பாரு சும்மா ஓவர் ரியாக்ட் பண்ணாத…நான் தெரியாமல் தான் கடிச்சிட்டன்…. உங்கிட்ட சாரி சொல்லனுன்னுலாம்  எனக்கு அவசியம் இல்லை…பட் உன்கிட்ட மன்னிப்பு கேட்டாதான் எங்க அம்மா எங்கிட்ட பேசுவன்னு சொல்லிட்டாங்க…அதனால்ல தான்‌ உங்கிட்டலாம் வந்து பேச வேண்டியதா போச்சு. ஆதிரன் செய்த காரியத்தை தவறென அவனுக்கு புரிய வைத்து விட்டு அன்பினியிடம் மன்னிப்பு கேட்டாள் மட்டும் தான் இனிமே மம்மி உன்கிட்ட பேசுவன். அன்பரசி ஆதிரனிடம் அதட்டி புரிய வைத்தவளின் கட்டளை இது தான். சரி […]

6) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

5) செந்தனலாய் பொழிந்த பனிமழை

சிசிவி ப்ளே ஸ்கூல் அண்ட் சி.பி.எஸ்.சியில் ஆதிரன் அவனது விளையாட்டு சாமான்களோடு உறங்கி கொண்டிருந்தான்.   அன்பினி அவனை பார்த்த வகையில் அமர்ந்து அவனை குண்டு விழிகள் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் களைப்பில் அவனது விளையாட்டு சாமான்களின் அருகாமையில் அவளும் தூங்கி விட்டாள்.   குழந்தைகளின் பருவத்தில் மாற்றுப்படுத்தாமல் அவர்களை கவனித்து கொள்வது தான் பிளே ஸ்கூல்.   இருவரையும் அங்கே சேர்த்து விட்டு தங்களது வருங்கால திட்டத்தில் இறங்கினார்கள் அன்பரசியும் ஸ்ரீஜாவும். இருவரும் சேர்ந்து

5) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

4) செந்தனலாய் பொழிந்த பனிமழை

சங்கீதா பறபறப்பாக முன் வாசலில் நின்று தனது சேலையின் நுனியை திருகி கொண்டிருந்தாள்.   அவர்கள் போட்ட திட்டத்தின்படி முதலில் பாஸ்கரன் வந்து சேர்ந்தான்.  பிறகு இன்பரசன் அவரது காரில் வந்தார்.   அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த அன்பரசி பேசாமல் குழந்தையை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.   காரை நிறுத்தி விட்டு நடந்த போது முன்பாகவே நின்றிருந்த பாஸ்கரனின் முகத்தைப் பார்த்து இன்பரசன் சுழித்துக்கொண்ட நகர்ந்தார்.   என்ன இது என்பது போல ஸ்ரீஜாவும் அன்பரசி விழித்தார்கள்.

4) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

3) செந்தனலாய் பொழிந்த பனிமழை

மூன்று  மாதத்தில் ஶ்ரீயின் உடல் நலமும் ஓரளவு தேர்ந்து இருந்தாள்.  பாஸ்கரனும் அவளுக்கு துணையாக இருந்து அனைத்தையும் கவனித்து கொண்டார்.  மேலும் ஶ்ரீக்கு கற்ப பை வீக்கமாக உள்ளதால் அவற்றை அகற்றி மேலும் குழந்தை பெற்று கொள்ள வாய்ப்பில்லை என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். அன்பரசியின் அதட்டலால் பாஸ்கரனும் ஶ்ரீயும் மூன்று மாதமாக அன்பரசியின் வீட்டிலே இருந்து கொண்டனர்.  சங்கீதாவிற்கும் இவர்கள் இருவரையும் பார்த்து கொள்ளுவதிலே பொழுது வேகமாக கழிந்தது. மருத்துவர் சொன்ன அறிவுரைகளை கடைபிடிப்பது தான்

3) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

2) செந்தனலாய் பொழிந்த பனிமழை

“குடும்ப உணவக ரெஷார்ட்டின் பணியாளர்கள் அனைவரும் அன்பரசியின் வீட்டிற்கு வந்திருந்தனர்.  அன்பரசி மற்றும் இன்பரசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மூன்று வாரம் கடந்துவிட்டது.   தன்னுடைய இளம்பிஞ்சு கையை சற்று முன்பும் பின்புமாக அசைத்து கொண்டிருந்தான்‌ ஆண்பிஞ்சு.   பாருங்களே…இன்பா ஐயா மாதிரி எப்படி துடுக்கா கைகால அசச்சிட்டு இருக்கான்…   ரெஷார்ட்டின் பணியாளர்கள் ஒருவர் கூறி அந்த பிஞ்சிற்கு முத்தம் இட்டார்.   ஹான் அப்படிதான் போல…என்று இன்பரசரும் நெகிழ்ந்தார்.   குழந்தை தொட்டிலில்

2) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

செந்தனலாய் பொழிந்த பனிமழை

கோயம்புத்தூரில் இருந்து நூற்று இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அழகிய செழிப்பான சுற்றுலா தளத்தில் யாவரும் அறிந்து திகைத்த பகுதி வால்பாரி.   பார்ப்பவர்களின் கண்களை வருடியதோடு தேயிலை தோட்டத்தில் விநியோகிக்கும் முறையையும் கொண்ட தளம் அவை.   நெழுநெழுவென இருந்த பாதைகளும் கூட வியக்க வைப்பதில் தவறில்லை. இயற்கையினிடையே வளைந்து செல்லும் நாகேந்திரன் போலவே அழகு வடிவமைப்பு கொண்ட வால்பாரி உலக அதிசயங்களில் ஒன்றாக கூட வைத்திருக்கலாம். ஆனால் ஏழாவது சொர்க்கம் என்று சொல்வதிலும்

செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

சித்திரம் – 2

“முடியவே முடியாது…. ” ஒற்றை முடிவாய் மறுத்து நின்றவளை பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தான் தரணி.. அவனும் வேறு என்னதான் செய்வது… நண்பன் இவர்களிடமே கேட்க சொல்லி அடம் பிடிக்க இவனின் நிலைதான் கவலைக்கிடம்…. அவனை  சமாளிப்பானோ… இதோ இவர்களை சமாளிப்பானா… “போன தடவையே சொல்லிட்டோம்…‌ மறுபடியும் வந்து நின்னா என்ன அர்த்தம்….” கோபமாய் மிரா கேட்க நான்கு நண்பர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்… “அடுத்த பொண்ண பாத்துட்டான்னு அர்த்தம்….” நேரம் கெட்ட நேரத்தில் ஆவன்யன் கவுண்டர்

சித்திரம் – 2 Read More »

நாணலே நாணமேனடி – 08

அந்த உணவகத்தில் யதுநந்தனின் வருகைக்காக காத்திருந்தாள் சம்யுக்தா. ‘நேற்றிரவு அழைப்பு விடுத்து இவ்விடத்தில் தானே சந்திக்க வேண்டும் என்பதாய் சொன்னார்?’ என நினைத்தவள் கண்களை சுழற்றி, சுவற்றில் அழகுக்காக பொறிக்கப்பட்டிருந்த ரெஸ்டாரண்ட் பெயரைப் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொண்டாள். அன்று சாந்தனா தன் காதலனை அறிமுகப்படுத்தவென அழைத்து வந்த அதே உணவகம் தான்! அன்றிருந்த தயக்கமும், பிரமிப்பும் சற்றே அடங்கியிருந்தது அவளின் பார்வையில்.. “மிஸ்..” என்ற நயமான அழைப்புடன் அருகே வந்து நின்ற வெயிட்டரைப் பார்த்து சிறு

நாணலே நாணமேனடி – 08 Read More »

நாணலே நாணமேனடி – 07

கூடத்தில் அமர்ந்து, சத்யாவின் பாடம் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை தீர்த்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா. அவள் ஒன்றும் அவ்வளவு பெரிய படிப்பாளி இல்லை தான் என்றாலும் கல்வியறிவு அறவே இல்லாதவள் அல்ல என்பதால், டியுஷன் செலவுகளுக்கு பணத்தைக் கரைக்க வழியின்றி தன்னால் இயன்ற அளவு தங்கைக்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறாள். சொல்லிக் கொடுத்ததை கவனம் சிதறாமல் உள்வாங்கிக் கொண்ட சத்யா, சரியென்ற தலை அசைப்புடன் புத்தகத்தில் மூழ்கி விட, அவளைப் பார்த்தபடி சுவற்றில் முதுகு சாய்த்தவளின் மனம், காலைநேர யதுநந்தனின்

நாணலே நாணமேனடி – 07 Read More »

நாணலே நாணமேனடி – 06

உடலோடு மிகக் கச்சிதமாய் பொருந்தியிருந்த வெள்ளை நிற சட்டையின் மேலிரு பொத்தான்களை மூடி, கழுத்துப் பட்டியை நேர்த்தியாக கட்டிக் கொண்டு நிமிர்ந்தான், யதுநந்தன். மணிக்கட்டில் கட்டப்பட்டிருந்த கைக்கடிகாரத்தை சரி செய்தபடி கண்ணாடியில் தன் தோற்றத்தைப் பார்த்து திருப்தி அடைந்தவன், நெற்றியில் தவழ்ந்த கேசத்தைக் கோதி விட்டபடி மெத்தையில் வந்தமர்ந்தான். கழுத்து வரையான நேரிய குட்டை முடி தலையணையில் பரவிக் கிடக்க, தந்தை என நினைத்து ஆளுயர டெடிபியரை கட்டி அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள் யுவனி. அவளது முகம்

நாணலே நாணமேனடி – 06 Read More »

error: Content is protected !!