September 2024

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 13

Episode – 13   தமயந்திக்கோ, ஒவ்வொரு நாளும் பத்து மணிக்குப் பிறகு உறங்கிப் பழகியதன் விளைவாக,    நேரத்துக்கு தூக்கம் வர மறுக்க, சற்று நேரம் காலாற தோட்டத்தில் நடந்து விட்டு வரலாம் என எண்ணி வெளியில் வந்தவள் சற்று தூரம் மென்னடை பயின்றாள்.   அவளின் உடல் பலவீனம் காரணமாக, அவளால் தொடர்ந்து நடக்க முடியாது போனது.   ஆகவே, வழமையாக தான் அமரும் கல்லில் அமர்ந்து தன் நினைவுகளில் மூழ்கிப் போனாள் பெண்ணவள்.  […]

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 13 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 36🔥🔥

பரீட்சை – 36 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மனதில் வஞ்சம்  வைத்து மாதுருவில் வந்த அரக்கி அவள்..   இல்லாததும்  பொல்லாததும்  சொல்லி  என்னவளை மயக்க..   இதயத்தில்  இருப்பவளும்  அவள் பின்னிய சதி வலையில்   எளிதாய்  விழுந்து  சிக்கி  மாட்டிக் கொண்டு..   தீயாய்  என்னை  பார்வையால் தீண்டி எரித்து   தண்டனை  வாங்கி தந்துவிட துடித்தாள் பாவை…   ###############   எரிக்கும் பார்வை..!!   கண்களில் முதலை

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 36🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 35🔥🔥

பரீட்சை – 35 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   சதி மேல் சதி  பின்னி  சதிகாரி அவள்    என்னை நீ வெறுக்க  ஏதுவாய்  ஏதேதோ சொல்ல..   மதிமுகம் கோபத்தில்  மின்ன  வதனமலர்  வேதனையில் வாட..   தீச்சுடர் பார்வையால்  என்னை தீய்த்து எரித்து விட்டாய்..   #################     சுடும் விழிச்சுடரே..!!   அருணின் சட்டையை உலுக்கி தேஜூ கேள்வி கேட்க அவனோ அவள் கேட்பது  எதுவும் புரியாமல் கண்கள்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 35🔥🔥 Read More »

23. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 23 என்னதான் போலியாக திருமணம் செய்து கொள் என அரவிந்தன் கூறியிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது தவிப்புடனேயே நேரத்தை செலவழிக்கத் தொடங்கி இருந்தாள் மோஹஸ்திரா. அமெரிக்காவில் வளர்ந்தாலும் வாழையடி வாழையாக வரும் பண்பாட்டு கலாச்சாரங்கள் அவளுடைய இரத்தத்தில் ஊறி இருக்க விளையாட்டுக்கு திருமணம் என்பதை அவளால் நினைத்துப் பார்க்கவே முடியாது போனது. தந்தையின் உடல் நிலையை கவனிப்பதா..? இல்லை உடைந்து போன தன்னுடைய மனநிலையை சரி செய்வதா..? அங்கே இருக்கும் அரவிந்தனுக்காக ஏக்கம்

23. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

22. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 22 தன்னுடைய அலைபேசியோடு வெளியே வந்த மோஹஸ்திராவிற்கு பதற்றத்தில் கரங்கள் நடுங்கத் தொடங்கின. உண்மையை மட்டுமே கூறியிருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது என எண்ணி தன்னையே நொந்து கொண்டவள் அலைபேசியில் அரவிந்தனின் இலக்கத்தை அழுத்தி அவனுக்கு அழைப்பு எடுக்க அவனோ அவளுடைய அழைப்பை ஏற்கவே இல்லை. மீண்டும் மீண்டும் அவனுக்கு முயன்று கொண்டே இருந்தவள் ஒரு கட்டத்தில் சோர்ந்து போனவளாய் அவனுடைய அலைபேசி இலக்கத்தை வெறித்துப் பார்த்தாள். “ஓ மை காட்.. இப்போ அங்க

22. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

21. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 21 தந்தை கூறியதை எவ்வளவோ மறுத்துக் கூற முயன்றும் முடியாது பரிதாபகரமாக தோற்றுப் போனாள் மோஹஸ்திரா. அவளுக்கோ அந்த ஏசி அறையிலும் வியர்த்து வழியத் தொடங்கியது. உடல் நிலை இவ்வளவு மோசமாக இருந்த போதும் கூட தன்னுடைய திருமணத்தைப் பார்த்து விட வேண்டும் என தந்தை கெஞ்சிக் கேட்டது அவளுடைய மனதை கசக்கிப் பிழிந்தது. நிஜமாகவே அரவிந்தன் அவளோடு வந்திருந்தால் அக்கணமே அவருடைய மன நிம்மதிக்காக திருமணத்தை அவரின் முன்பு முடித்திருப்பாள் அவள். ஆனால்

21. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

20. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 20 ஷர்வாதிகரனின் முகத்திலோ புன்னகை நிலைத்திருந்தது. அரவிந்தனின் பெயரைச் சொல்லி தன்னைக் கூப்பிடக்கூடாது என அவன் கட்டளை போல் கூறியதும் அவளுடைய முகம் சட்டென மாறிய விதத்தை எண்ணி மீண்டும் அவனுடைய முகத்தில் புன்னகை பெரிதாக விரிய தன் தலையை இடம் வலமாக அசைத்து அந்த நினைவை தன்னை விட்டு விலக்க முயன்றாள் அவன். அவள் அங்கிருந்து சென்றதும் அறைக் கதவைப் பூட்டிவிட்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான். இப்போதெல்லாம் அடிக்கடி அவளுடைய கண்ணீரைக்

20. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

19. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 19 வீட்டுக்குள் நுழைந்த அடுத்த கணமே தன் தந்தையைத் தேடி விரைந்து அவருடைய அறைக்குள் மோஹஸ்திரா நுழைய அவளைப் பின்தொடர்ந்து வந்த ஷர்வாவும் அந்த அறைக்குள் நுழைந்தான். உள்ளே நின்ற வைத்தியரோ அவர்களுக்கு தனிமையைக் கொடுத்து விட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்று விட படுக்கையில் தளர்ந்து போய் சோர்வாக படுத்திருந்த தன் தந்தையைக் கண்டு முற்றிலுமாய் உடைந்து போனாள் அவள். சில தினங்களுக்குள் அவருடைய உடலில் இப்படி ஒரு மாற்றமா..? மிகப்

19. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 34

பேராசை – 34   ஆம், அங்கு நதி ஓடிக்கொண்டு இருக்க, கீழே விழுந்த வேகத்தில் நதியில் விழுந்து இருந்தாள் ஆழினி. அவன் விழிகள் வெறித்தது வேறு எதையும் அல்ல, நதியில் ஆழினி ஒரு பக்கம் வீழ்ந்து இருக்க அவளுக்கு சற்றே தள்ளி அவன் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே பிரானா  மீன்கள் தன் கூர் போன்ற பற்களால் உயிருள்ள ஒரு மிருகத்தின் உடலை  துளைத்து மின்னல் வேகத்தில் உண்ண, அணுவணுவாக உயிருடன் கதறலோடு இறந்த அந்த

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 34 Read More »

Mr and Mrs விஷ்ணு 3

பாகம் 3 ப்ரதாப் கல்யாணத்தை பேசி முடிங்க என்று சொன்னதாலும், பவித்ராவின் பிடிவாதத்தாலும் வேறு வழியில்லாமல் பாட்டி ரங்கநாயகியே இறங்கி வர வேண்டி இருந்தது.. “அவங்களை முறைப்படி வந்து பேச சொல்லு” என்று பவித்ராவிடம் கூறினார்.. பவித்ராவும் பார்த்திபனிடம் விஷயத்தை சொல்ல, பார்த்திபன் தந்தை உதயகுமாரிடம் வந்து கூறினான்.. உதயகுமார்க்கு எதிர்த்த வீட்டுக்கு செல்வது நெருடலாகவும் சங்கடமாகவும் இருந்தது.. இருந்தாலும் மகனுக்காக மகனின் காதலுக்காக, காதல் ஒருவரை எவ்வளவு பலவீனமாக்கும் எங்கு கொண்டு நிறுத்தும் என்பது அவருக்கு

Mr and Mrs விஷ்ணு 3 Read More »

error: Content is protected !!