November 2024

22. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎 நேசம் 22   “டேய் துருவா” எனும் அழைப்போடு தனது வீட்டினுள் நுழைந்த தேனுவிற்கு அங்கு தம்பியோடு உரையாடிக் கொண்டிருந்தவனைக் கண்டதும் விழிகள் விரிந்தன. “வெளியே எங்கேயும் போயிருப்பீங்கனு நெனச்சா இங்கே என்ன பண்ணுறீங்க?” என்று கேட்டவளுக்கு, “என் மாமியார் வீட்டுக்கு நான் வந்தேன். உன் கிட்ட பர்மிஷன் கேட்டுத் தான் வரனுமோ?” புருவம் உயர்த்தினான் அவளது கண்ணாளன். “அங்கே வரப் போனவரை நான் தான் உள்ளே இழுத்துட்டு வந்தேன். ஒரு […]

22. நேசம் நீயாகிறாய்! Read More »

21. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎 நேசம் 21   ராகவ் யூ.எஸ் சென்று வந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தன. என்றுமில்லாத அன்னியோன்யம் இருவரிடமும் இருந்தது. சண்டைகள் ஆயிரம் நடந்தன. ஆனால் விட்டுக் கொடுத்து நடந்ததால் யாவும் சமாதானத்தில் நிறைவுற்றன. நாளை லிரிஷா மற்றும் நகுலின் திருமணம். அவள் அமெரிக்காவைச் சேர்ந்தவள் என்றாலும் நகுலின் சொந்த ஊர் கொடைக்கானல். எனவே அங்கு தான் திருமண வைபவம் நடைபெற இருக்கிறது. “ட்ரெஸ் எல்லாம் எடுத்து வெச்சிட்டியா?” எனக் கேட்டவாறு வந்தான்

21. நேசம் நீயாகிறாய்! Read More »

20. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 20   மயக்கத்தின் விளிம்பிற்குச் சென்ற தேன் நிலாவின் செவிப்பறையில் யாரினதோ இதயத் துடிப்பு இரட்டிப்பாய்க் கேட்டது போல் இருந்தது. நாசி தீண்டிய வாசனை அவளுக்கு சுயம் உணர்த்த, “ரஷ்யாக்காரா” எனும் அழைப்போடு நிமிர்ந்தவளுக்கு அவனது மார்பில் தான் தலை சாய்த்து இருப்பதையும், அவன் மயக்கத்தில் இருப்பதையும் கண்டவுடன் மயக்கமெல்லாம் தெளிந்து போயிற்று. தன்னவன்! தன் உயிரில் கலந்தவன். சுவாசமாய் ஆனவன். தன் நேசத்தின் சொந்தக்காரன். “ராகவ்! ரா..ராகவ்”

20. நேசம் நீயாகிறாய்! Read More »

19. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎 நேசம் 19 கண்களை மூடி தோட்டத்தில் இருந்த பூக்களை ஸ்பரிசித்த தேன் நிலாவுக்கு இதயம் இரட்டிப்பாக துடிக்கலானது. பூக்களின் வாசத்தையும் தாண்டி, அவளுக்குப் பரிச்சயமானதொரு வாசம் நாசியைத் தீண்டிச் சென்றது. திடீரென்று அவள் கண்களைப் பின்னிருந்து மூடியது ஒரு கரம். அந்த வாசம் மிக அருகாமையில் வீச, அக்கரத்தின் தொடுதல் கூறியது அதன் சொந்தக்காரன் யாரென்று. கையை விலக்கி, சடுதியில் திரும்பி “ராகவ்” எனும் கதறலோடு அவனை அணைத்துக் கொண்டாள் தேன்

19. நேசம் நீயாகிறாய்! Read More »

18. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎 நேசம் 18   ராகவேந்திரனை வழியனுப்பும் ஆவலுடன் கிழக்கில் குதித்து வந்தான் கதிரவன். கோர்ட் சூட் அணிந்து கண்ணாடி முன் வந்து நின்று முகம் பார்த்தவனை முறைப்போடு பார்த்திருந்தாள் தேனு. காலையில் எழுந்த நிமிடமே கல்லும் கல்லும் உரசிக் கொள்ள, சண்டைத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. காதருகே கேட்ட அலாரம் ஓசையில் இருவரும் ஒரே நேரத்தில் விழித்தெழ, தாமிருந்த நிலை கண்டு திகைத்துப் போயினர். தலையணை அணையைத் தகர்த்து ஒருவர்

18. நேசம் நீயாகிறாய்! Read More »

17. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 17   “யாரோ ஒரு தனுஜா சொன்னதுக்காக அவ்ளோ யோசிக்கிற நீ, உனக்கு தாலி கட்டுன நான் சொன்னதை துளியும் யோசிக்க மாட்ட?” அவன் கேட்ட கேள்வி செவிப்பறையில் மோதி உள்நுழைந்தது எனில், இதயப்பறையில் பெருத்ததொரு அதிர்வை ஏற்படுத்தியது. என்ன சொன்னான்? தனுஜாவா? அப்படியென்றால் அவள் பேசியது இவனுக்குத் தெரியுமா? பேசும் போது கேட்டிருப்பானா? மனம் கேள்விக் கணைகளை காற்று வேகத்தில் எய்தது. “த..தனுஜா சொன்னது உங்களுக்குத் தெரியுமா?”

17. நேசம் நீயாகிறாய்! Read More »

16. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 16   விடியலின் பூரிப்பில் பரவசம் கொண்ட பட்சிகளின் இன்னிசை கானம், பாரில் பரந்தொலித்த காலைப்பொழுது அது. தோட்டத்தில் மலர்ந்த வண்ண மலர்களை வாஞ்சையோடு பார்த்திருந்தாள் தேன் நிலா. ராகவ்வின் நினைவில் தத்தளித்த மனதை வேறு பக்கம் திசை திருப்ப, மலர் கொய்து மாலை தொடுக்கத் துவங்கினாள். “தேனுஊஊ” என்ற மழலை மொழியில் தலை தூக்க, மான் குட்டியாய் துள்ளி வந்து அவளருகில் அமர்ந்து கொண்டாள் ப்ரீத்தி. “ரேஷ்மாவுக்கு

16. நேசம் நீயாகிறாய்! Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 32

Episode – 32 எப்போதுமே அபர்ணாவும் ஆதியும் எலியும் பூனையும் மாதிரியான ஜோடிகள் தானே. அதிலும் அபர்ணா திருமணத்துக்கு பிறகு அவனின் மீது கொலை வெறியில் இருந்தாள் என்று சொல்லலாம். அவன் இருக்கும் இடத்தில் கூட அவள் இருக்க விரும்புவது இல்லை. ஆனாலும் ஆதி விடாது தேடிப் போய் அவளிடம் வம்பு இழுப்பான். அபர்ணா ஒன்றும் தமயந்தி மாதிரி அமைதியாக போகின்றவள் இல்லையே. ஆகவே அவளும் அதிரடியாக அவனிடம் வம்பு இழுத்து விட்டு எங்கேயாவது போய் ஓடி

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 32 Read More »

15. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 15   உடை மடித்துக் கொண்டிருந்த மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ராகவ். நேற்றிலிருந்து அவளின் செய்கைகள் வித்தியாசமாகத் தோன்றின. வழமையாக அவனோடு சண்டை போட்டாலும், நேரத்திற்கு சாப்பாடு எடுத்து வைப்பாள், ஹாஸ்பிடலில் இருந்து வரும் போது வாயிலுக்கு ஓடி வருவாள், காஃபி போட்டுக் கொடுப்பாள். ஆனால் இப்போது ஒன்றும் இல்லை. அவனைப் பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை. அவளை சீண்டினால் கொந்தளிப்பாள் என்று அவன்

15. நேசம் நீயாகிறாய்! Read More »

14. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 14   எரிந்து முடிந்து சாம்பலான புகைப்படத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்த தேன் நிலா கணவனை நோக்கி பார்வையைச் செலுத்த, அவளை இங்கு எதிர்பாராததில் அதிர்ந்த தோரணை மாறாமல் நின்றான் ராகவ்.   “அந்த போட்டோவில் இருந்தது யார்?” என்று அவள் கேட்க, “ப்ச்! அதை கேட்காத. அப்படியே விட்று” என்றவனுக்கு அதைச் சொல்லும் எண்ணம் இல்லை போலும்.   “அப்படிலாம் விட முடியாது. கண்ணு முன்னால ஒரு

14. நேசம் நீயாகிறாய்! Read More »

error: Content is protected !!