என்ற மந்திரத்தை புரோகிதர் உச்சரிக்க அந்தப் பொன் தாலியை எடுத்து தன்னுடைய சரிபாதியாக மாறப் போகின்றவளின் கழுத்தில் கட்டினான் யாழவன்.
அவனுடைய கரங்களில் ஒருவிதமான நடுக்கம்.
இன்று இந்தக் கல்யாணம் சரி வருமா என அவள் கேட்ட கேள்வியில் அவன் ஆடித்தான் போய்விட்டான்.
மூன்று முடிச்சுகளை அவளுடைய கழுத்தில் போட்டு முடித்தவனுக்கு நெஞ்சம் காதலில் விம்மியது.
அங்கே வந்திருந்த அனைவரும் மகிழ்ச்சியோடு எழுந்து நின்று அவர்களுக்கு பூ தூவி சத்தமாக வாழ்த்தைத் தெரிவிக்க ஆனந்தக் கண்ணீரோடு தன்னுடைய மகளின் திருமணத்தை அருகே நின்று பார்த்துக் கொண்டிருந்தார் அன்னம்.
“அம்மா அக்கா எவ்வளவு அழகா இருக்கான்னு பாரு.. அவ அழகு பல மடங்கு கூடி ஜொலிக்குது..” என கீர்த்தனா கூற,
கீர்த்தனாவின் தலையை வருடிய அன்னமோ “நீயும் இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க கண்ணம்மா..” என்றார்.
அன்னையைப் பார்த்து சிரித்தவள் “இன்னைக்கு நடந்த பிரச்சினைல எங்க அக்கா கல்யாணமே வேணாம்னு சொல்லிடுவாளோன்னு பயந்துட்டேன்.. அவள பத்திதான் உங்களுக்கு தெரியுமே.. நல்லவேளை மாமா எப்படியோ சமாளிச்சுட்டார்.. அந்த ரீனாக்காக்கும் செமையா திட்டி விட்டுட்டாரு..” என கீர்த்தனா கூற
“எனக்கு நெஞ்சில தண்ணியே வத்தி போயிடுச்சு கீத்து.. நல்லவேளை மாப்பிள்ளை பிரச்சனை பெருசாகாம பார்த்துக்கிட்டாரு.. உங்க அக்கா மேல நல்ல அன்பு வெச்சிருக்காரு.. இந்த பாசமே போதும்.. அவங்க ரொம்ப நல்லா வாழ்வாங்க..” என மன நிறைவோடு கூறினார் அனனம்.
விழிகள் கலங்க மகிழ்வோடு அவன் கட்டிய தாலியை தன் கழுத்தில் வாங்கிக் கொண்டாள் அர்ச்சனா.
நெகிழ்ந்து போய் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் நெற்றியில் மென்மையாக முத்தம் பதித்தவன் “லவ் யூ பொண்டாட்டி..” எனக் கூற அவளுக்கோ கன்னங்கள் சிவந்து போயின.
இருவருடைய ஜோடிப் பொருத்தமும் அவ்வளவு அழகாக இருந்தது.
அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடிக் கொண்டிருக்க இதுதற்கும் எனக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை என்பதைப் போல ஒவ்வாது விலகி நின்றிருந்தார் யாழவனின் தந்தை.
அந்தத் திருமணத்திற்கு ஆர்த்தியின் தந்தையும் வந்திருந்தார்.
“என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க..? என் பொண்ணைத்தான் உங்க பையனுக்கு கட்டி கொடுப்பீங்கன்னு நம்பினேன்..” என திருமணத்திற்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு வந்தவர் யாழவனின் தந்தையிடம் கேட்க,
“அவன் முடிவெடுத்தா அத யாராலையும் மாத்த முடியாது.. ஆனா என்னோட பையன பத்தி எனக்கு நல்லா தெரியும்.. இவங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கூட செட் ஆகாது.. அவன் வடக்குன்னா இந்த பொண்ணு தெற்கு.. அவன் ஃபாரின்ல வாழ்ந்த வாழ்க்கை இந்த பொண்ணுக்கு செட்டே ஆகாது.. அவனுக்கு ரூல்ஸ் போட்டாலே பிடிக்காது.. இவங்க ரெண்டு பேரும் தானாவே பிரிஞ்சிடுவாங்க..” என்றார் அவர்.
“அதுக்கப்புறம் கூட ஆர்த்தியை உங்க வீட்டுக்கு மருமகளா அனுப்ப எங்களுக்கு சம்மதம்தான்..” என்றார் ஆர்த்தியின் தந்தை.
பெருமிதமாக சிரித்தார் சாள்ஸ்.
“உங்க பொண்ணு வரலையா..?”
“அவ ஒரே அழுகை சார்.. யாழவன்தான் வேணும்னு பிடிவாதமா இருக்கா..”
“பார்க்கலாம் என் மகனோட வாழ்க்கைல நான் எப்பவுமே தலையிட மாட்டேன்.. அவன் கல்யாணம் பண்ணிக்கும்போது அட்வைஸ் பண்ணேன்.. பட் அவன் கேட்கல.. அதே மாதிரி எப்படியும் இன்னும் கொஞ்ச மாசத்துல டிவோர்ஸ்னு வந்து நிப்பான்.. அப்பவும் கேட்க மாட்டேன்.. அந்த டைம்ல அவனுக்கு உங்க பொண்ண பிடிச்சுதுன்னா கண்டிப்பா கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாம்..” என்றார் அவர்.
தன்னைப் பற்றிய பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியாமல் தன்னருகே அழகுப் பதுமையாக வீற்றிருந்த அர்ச்சனாவை பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தான் யாழவன்.
சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் நடந்து முடிந்த பின்பு போட்டோகிராபரோ தன்னுடைய கைவண்ணத்தை அவர்களிடம் காட்டத் தொடங்கி இருந்தார்.
மணமக்களின் பொக்கிஷ நிமிடங்களை அவர் புகைப்படங்களாக சிறைப்படுத்திக் கொண்டிருக்க அந்த இடமே கலகலவென இருந்தது.
“இந்தக் கல்யாணம் சரியா வருமா.. உங்க குணம் வேற.. என்னோட குணம் வேற…? நமக்குள்ள ஸ்டேட்டஸ்ஸும் ஒத்துப் போகல..” என அர்ச்சனா அப்போது தயங்கிக் கேட்ட கேள்விக்கு அவளைக் கடிந்து கொண்டவன்,
“குணம் பணம் இதெல்லாம் நமக்கு இடைல எப்போ வந்துச்சு..? நம்ம ரெண்டு பேரும் லவ் பண்றது நமக்காக மட்டும்தான்.. வேற எதுக்காகவும் இல்லை..” என அழுத்திக் கூறியவன் அவளை சமாதானம் செய்து திருமணமும் செய்திருந்தான்.
திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தி விட்டு விருந்து முடித்து விட்டுச் செல்ல அர்ச்சனாவிற்கோ மிகவும் சோர்வாக இருந்தது.
அவளுடைய முகச் சோர்வைக் கண்டவன்,
“ஜூஸ் ஏதாவது கொண்டுவரச் சொல்லட்டுமா..?” என அக்கறையாகக் கேட்டான்.
“அச்சோ இல்ல.. அவங்க பர்ஃபெக்ட்டாதான் தச்சு கொடுத்தாங்க.. பட் மேக்கப் பண்றவங்கதான் பிளவுஸ் கொஞ்சம் லூசா இருக்குன்னு நான் போட்டதுக்கு அப்புறமா கையால சைட்ல ஸ்டிச் பண்ணாங்க.. அதுதான் கொஞ்சம் அன்கம்ஃபர்டபுளா இருக்கு..”
“ஓஹ்.. ஆனா நீ ரொம்ப அழகா இருக்கடி.. என்னால என்னோட கண்ண உன்னை விட்டு திருப்பவே முடியல..”
“போங்க யாழன்.. எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா..? தலையில வேற நிறைய க்ளிப்ஸ்.. அதிகமா ரோசஸ் வச்சதால ரொம்ப பாரமா இருக்கு.. உங்களைத் திரும்பி பார்க்கவே கழுத்து வலிக்குது..”
“அழகுக்கு பின்னாடி இவ்வளவு வலி இருக்கும்னு இப்போதான்டி பார்க்கிறேன்..” எனச் சிரித்தவன்,
“சரி வா..” என்றவாறு எழுந்து கொள்ள,
“அத்தை ஈவினிங் 4 மணிக்கு பிறகுதான் வீட்டுக்குப் போகலாம்னு சொன்னாங்க.. மாமாவோட பிசினஸ் பார்ட்னர்ஸ் எல்லாம் நிறைய பேர் வருவாங்கன்னு சொன்னாங்களே, நீங்க இப்பவே எழுந்துட்டீங்க..?” எனக் கேட்டாள் அவள்.
“வர்றவங்கள அப்பாவும் அம்மாவும் பார்த்துப்பாங்க.. அவங்களுக்கு புரியும்.. நீ வா.. இவ்வளவு கஷ்டப்பட்டுல்லாம் நீ இங்க இருக்க வேணாம்..” என்றவன் அவளுடைய கையைப் பற்றி எழுப்ப மெல்ல எழுந்து கொண்டவளோ தேவதை போலத்தான் மிளிர்ந்தாள்.
அவ்வளவு அழகாக இருந்தது அவளுடைய வதனம்.
பெரியவர்களிடம் எல்லாம் ஆசிர்வாதம் வாங்கி அனைத்து சம்பிரதாயமும் எப்போதோ முடிந்திருக்க நேரடியாக தன்னுடைய அன்னையிடம் சென்றவன் விஷயத்தைக் கூற புரிந்து கொண்டவராக,
“சரிப்பா நீங்க கிளம்புங்க.. நான் பாத்துக்குறேன்..” என்றார் அவர்.
அவனுடைய முடிவை யாராலும் மாற்ற முடியாது என்று அவருக்குத் தெரியும்.
அத்தோடு காலையிலிருந்து பல சிரமங்களை அர்ச்சனா அனுபவித்து விட்டாள் என்பதை உணர்ந்து கொண்டவர் அவளுக்கு ஓய்வு முக்கியம் என்பதை புரிந்து கொண்டார்.
அர்ச்சனாவோ அவளுடைய அன்னையுடனும் தங்கையுடனும் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க அவர்களை நெருங்கி வந்தவன்,
“அத்தை அப்போ நாங்க கிளம்புறோம்.. நீங்க இன்னைக்கு நைட் நம்ம வீட்டிலேயே ஸ்டே பண்ணிருங்க..” எனக் கூற மறுப்பாக தலையசைத்தார் அவர்.
“இல்ல தம்பி போட்டதெல்லாம் போட்டபடியே இருக்கு.. இன்னைக்கு வீட்டுக்கு கிளம்பினாதான் சரியா இருக்கும்.. உறவுக்காரங்க எல்லாம் வந்திருக்காங்க.. அவங்களையும் கவனிக்கணும்.. காலையிலேயே உங்க வீட்டுக்கு வந்துடுறோம்..” என அவர் கூற சரி என்றான் அவன்.
“பேபி கிளம்பலாமா..?” என கேட்டவாறு அர்ச்சனாவின் கரத்தை அவன் பற்றிக்கொள்ள,
“அம்மா காலைல வந்துருங்க… கீத்து பைடி..” என்றவளுக்கு விழிகள் கலங்கிவிடும் போல இருந்தன.
சிரமப்பட்டு தன் அழுகையை அடக்கிக் கொண்டவள் “கிளம்புறேன்மா..” எனக் கூறிவிட்டு அவனுடன் நடக்கத் தொடங்கினாள்.
மண்டபத்திற்கு வெளியே அவர்களுக்காக கார் காத்திருக்க, ட்ரைவரை காரில் இருந்து இறங்கச் சொன்னவன் தானே ட்ரைவர் சீட்டில் அமர்ந்து காரை செலுத்தத் தொடங்கினான்.
இருக்கையில் சற்றே சாய்ந்து அமர்ந்திருந்தவளின் பார்வையோ யாழவனின் மீது பதிந்தது.
ஏசியை ஆஃப் செய்துவிட்டு கார்க் கதவின் ஜன்னலை இறக்கி விட்டிருந்தான் அவன்.
அதனூடாக உள்ளே நுழைந்த காற்றோ அவன் மீது மோத அவனுடைய தடித்த முடிகள் யாவும் அலை அலையாக அசைந்து கொண்டிருந்தன.
மிகவும் அழகாக இருந்தான் அவன்.
சட்டென அவளைத் திரும்பிப் பார்த்து இமை சிமிட்டிச் சிரித்தவன் “எத்தனை மார்க் கொடுப்ப எனக்கு..?” எனக் கேட்க அவளுக்கோ முகத்தில் வெட்கம் அப்பிக் கொண்டது.
‘ஐயோ கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம இப்படி பார்த்து வெச்சிட்டோமே..’ என தனக்குள் முனகியவள்,
“பக்கத்துல வாடி.. என் தோள்ல சாஞ்சுக்கோ..” என ஒற்றைக் கையை விரித்தவாறு அவளை அழைக்க மறுக்காமல் அவனை நெருங்கி அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டவளுக்கு மனம் முழுவதும் காதல் காதல் காதலே.
“இப்படியே எப்பவும் நீ என் பக்கத்திலேயே இருக்கணும்..” என உணர்ந்து கூறினான் அவன்.
இருவரும் காதலில் திளைத்து எடுத்த வார்த்தைகளை பரிமாறிக் கொண்ட வண்ணமே அவர்களுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தனர்.
ரூபாவதியின் சகோதரியோ அவர்களுக்காக வீட்டிற்கு வந்து காத்திருந்தவர் ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே அழைத்தார்.
அவரிடம் சிறு வார்த்தைகளை பேசிவிட்டு தன்னவளைத் தன்னுடைய அறைக்குள் அழைத்துச் சென்றவன்,
“பசிக்குதாடி..?” என அக்கறையுடன் கேட்டான்.
“இல்லப்பா.. முதல்ல இது எல்லாத்தையும் ரிமூவ் பண்ணனும்.. ஹெயார் முழுக்க கிளிப்பும் பூவுமா இருக்கு.. ரொம்ப டைட்டா பின் பண்ணி வச்சிருக்காங்க.. இது எல்லாத்தையும் ரிமூவ் பண்ண ஹெல்ப் பண்றீங்களா..?” என அவள் கேட்க அவளை அழைத்து வந்து அங்கிருந்த ஆளுயுற கண்ணாடியன் முன்பு அமர வைத்தவன்
அவளுடைய உச்சந்தலையில் அழுத்தமாக முத்தத்தை பதித்து விட்டு ஒவ்வொரு ரோஜா பூக்களாக அவளுடைய தலையில் இருந்த பூக்களை அகற்றத் தொடங்க கண்ணாடியில் தெரிந்த அவனுடைய பிம்பத்தை இரசித்தவாறே அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.
ஒவ்வொரு பூவையும் அகற்றும் போது அவளுடைய உச்சந் தலையிலும் காது மடலிலும் பின் கழுத்திலும் முத்தங்களை வைத்து அவளை நெளிய வைத்தான் அந்த மன்மதன்.
கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு மேலாக அவளுடைய சிகை அலங்காரத்தை கலைத்து முடித்தவனுக்கு அவளுடைய நீளக் கூந்தலை விரித்துவிட்டதும்தான் திருப்தியாக இருந்தது.
“தேங்க்ஸ் பா.. நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வந்துடுறேன்..” என எழுந்து கொண்டவளின் கரத்தைப் பற்றி மீண்டும் கண்ணாடியின் அருகே அவளை நிற்க வைத்தவன்
அவளுடைய புடவையில் குத்தி இருந்த சேஃப்டி பின்களை அகற்றத் தொடங்க அவளுக்கோ முகம் குங்குமமாக சிவக்கத் தொடங்கியது.
“யா.. யாழன் நானே…”
“உஷ்…” என்றவன் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தான்.
வெட்கத்தில் சிவந்து தலை குனிந்தவளின் முதுகில் முத்தம் வைத்தவன் அவளுடைய புடவையை கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய உடலில் இருந்து அகற்றத் தொடங்கினான்.
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.👌👌👌👌👏👏👏👏😍😍😍😍🥰🥰🥰🤩🤩🤩❤️❤️❤️❤️❤️