27. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

4.9
(16)

வரம் – 27

அவள் சத்தமாக அலறியதும் அவள் மீதிருந்த தன்னுடைய கரத்தை விலக்கிக் கொண்டவன்,

“அடிப்பாவி வெளியே யாருக்காவது கேட்டுச்சுன்னா தப்பா நினைக்கப் போறாங்க… கத்துறத நிறுத்துடி…” என சிறு நகைப்போடு ஷர்வா கூற அவளுக்கோ ஐயோவென்றானது.

அவள் கத்துவதை நிறுத்தியதும் “குட் இதுக்கு மேல எந்த ட்ராமாவும் பண்ணாம அப்படியே தூங்கு… என்னோட சுண்டு விரல் கூட உன் மேல படாது…. இல்ல கத்துவேன் இந்த ரூம விட்டு ஓடுவேன்னு நீ அடம் பிடிச்சா நீ எங்க போனாலும் உன் பின்னாடி நானும் வருவேன்…” என மிரட்டல் போல அவன் கூற சட்டென அவனுக்கு முதுகு காட்டி மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டவளுக்கோ விழிகளில் இருந்து கண்ணீர் கொட்டத் தொடங்கியது.

ஏன் தனக்கு இந்த நிலைமை என எண்ணி ஏங்கி ஏங்கி அழத் தொடங்கினாள் அவள்.

அரவிந்தனைக் காதலித்து விட்டு ஷர்வாவின் அருகே படுத்திருப்பதோ அவளுக்கு நெருப்பின் அருகே இருப்பதைப் போலத் தகித்தது.

மறுபக்கம் திரும்பிப் படுத்து இருந்தாலும் கூட அவளுடைய முதுகு குலுங்குவதில் இருந்தே அவள் அழுது கொண்டிருக்கிறாள் என்பது ஷர்வாவுக்கும் புரிந்தது.

அவனிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட எதுவும் கேட்காது அமைதியாக படுத்துக் கொண்டான் அவன்.

அவளுடைய மனநிலை அவனுக்கு நன்றாகவே புரிந்தது‌.

இவ்வளவு சீக்கிரத்தில் அவளுடைய மனம் மாறாது…. தன்னை புரிந்து கொள்ள அவளுக்கு கால அவகாசம் வேண்டும் என எண்ணிக் கொண்டவன் தூங்க முடியாமல் அவளுடைய அழுகை நிற்கும் வரையிலும் விழிகளை மூடியவாறு உறங்காது காத்திருந்தான்.

சற்று நேரத்தில் அழுதழுது அவளோ ஓய்ந்து போனவள் உறக்கத்தின் வசத்தில் ஆழ்ந்து போக அதன் பின்னரே அவனுக்கும் உறக்கம் வந்தது.

மெல்ல மறுபக்கம் திரும்பிப் படுத்து இருந்தவளை தன்னை நோக்கித் திருப்பியவன் அவளுடைய விழிகளை துடைத்துவிட்டு அவளுடைய முகத்தை மெல்ல இழுத்து தன் மார்பில் பொருத்திக் கொண்டவன் அவளை அணைத்தவாறே படுத்துக் கொண்டான்.

சொர்க்கமே தன் கரங்களில் கிடந்தது போல இருந்தது அவனுக்கு.
சிறிது நேரத்திலேயே அனைத்தையும் மறந்து குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்தவளை காலம் முழுவதும் தன் மார்பில் தாங்கத் தயாராக இருந்தான் அவன்.

அவளுடைய மென்மையான உடலின் ஸ்பரிசம் அவனை மெய் மறக்கச் செய்தது.

தன்னை மறந்து அவளைத் தன் உடலோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டவன்,

“ஐ லவ் யூ மோஹி…” எனக் கூற,
அவளோ தூக்கத்தில் விழிகளைக் கூடத் திறக்காமல்,

“ஐ லவ் யூ டூ அர்வி…” எனக் கூறி விட இவனுக்கோ நெருப்பை அள்ளிக் கொட்டியது போல இருந்தது.

சடாரென அவளைப் படுக்கையில் தள்ளி விட்டவன் தலையைப் பிடித்தவாறு எழுந்து கொள்ள அதில் தூக்கம் கலைந்து மோஹஸ்திராவும் விழித்துக் கொண்டாள்.

அப்போதுதான் அழுதழுது அப்படியே உறங்கி விட்டோம் என்பது புரிய தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தவனை புரியாத பார்த்தாள் அவள்.

அவளுக்கு என்னவென்று புரியவில்லை ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இங்கிருந்து சென்றுவிடலாம் என படுக்கையில் இருந்து எழுந்து கொள்ள அவளை விட வேகமாக அவன் எழுந்து நின்றான்.

“இனாஃப்… நீ எங்கேயும் போகத் தேவலை… இது உன்னோட ரூம்தானே சோ நீ இங்கேயோ படுத்துக்கோ.. நான் போறேன்…” என்றவன் இரண்டு அடிகளை வைத்துவிட்டு மீண்டும் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“என்னோட அன்பு உனக்குப் புரியவே இல்லைல..? இப்போ இல்லைன்னாலும் எப்பவாவது ஒரு நாள் உனக்குப் புரிய வரும் ஆனா அப்போ நான் உன் கூட இருப்பேனான்னு எனக்குத் தெரியல..‌ உன்னோட காதல் அரவிந்தனுக்குத்தான்னு புரியுது..‌ ஆனா நான் உன்னோட புருஷன்கிறத மறந்துடாத… இட்ஸ் டூ ஹர்ட்…” எனக் கூறிவிட்டு அவன் வேகமாக வெளியே சென்று விட அவளுக்கோ தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.

‘என்ன கொடுமடா காதலன்னு ஒருத்தன்… கணவன்னு ஒருத்தன்… ரொம்ப சிறப்பா இருக்கு… நம்ம வாழ்க்கைல எப்போ தான் இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சு நான் நிம்மதியா இருக்கப் போறேனோ தெரியல.‌‌.. கடவுளே நீதான் என்ன இந்தப் பிரச்சினைல இருந்து காப்பாத்தணும்…” என வேண்டிக் கொண்டவள்,

அவன் அறையை விட்டு வெளியேறிய அடுத்த கணமே சென்று அறைக் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு நிம்மதியுடன் படுக்கையில் மீண்டும் படுத்துக் கொண்டாள்.

கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் அவள் உறக்கத்திற்கு செல்லத் தொடங்கையில் அவளுடைய அலைபேசி சிணுங்கத் தொடங்கியது.

“ஓ காட் இந்த நேரத்துல யாரு கால் பண்றாங்க..?” என சலித்துக் கொண்டவாறே அலைபேசியைப் பார்த்தவள் அரவிந்தனின் எண்ணில் இருந்து அழைப்பு வருவதைக் கண்டதும் சட்டென எழுந்து அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
இதயம் படபடத்துப் போனது.

“ஹ…ஹலோ… பேபி டால்..” என்றான் அவன்.

“அர்வி இடியட்.. உனக்கு இப்பதான் என்னோட ஞாபகம் வந்துச்சா…? எத்தனை தடவை உனக்கு கால் பண்ணிட்டே இருந்தேன்… ஒரு தடவை கூட ஏன்டா எடுக்கல..?” என அவள் கோபமாக திட்டிக் கொண்டே போக அவனுடைய ஒற்றை வார்த்தையோ அவளுடைய கோபத்தையும் பேச்சையும் அக்கணமே தடுத்து நிறுத்தியது.

அரவிந்தன் மறுபக்கத்தில் இருந்து பேசப் பேச அவளது உள்ளம் அவனுக்காக பதறித் துடிக்கத் தொடங்கியது.‌

சற்று நேரத்தில் அரவிந்தன் அழைப்பைத் துண்டித்ததும் வேகமாக எழுந்தவள் கதவைத் திறந்து கொண்டு ஷர்வாவை நோக்கி ஓடினாள்.

இம்முறை கவனமாக அவனுடைய அறைக்கதவைத் தட்டி விட்டு கண்ணீரோடு உள்ளே நுழைந்தவள் படுக்கையில் படுத்திருந்தவனை நெருங்கி,

“நாளைக்கு நீங்க சொன்ன மாதிரி இந்தியா போகலாம்..” எனக் கூற அவனுக்கோ புருவங்கள் உயர்ந்தன.

“சோ ஃபைனலி அரவிந்தன் கண்ணு முழிச்சுட்டான் போல…?” என ஷர்வா சாதாரணமாகக் கேட்க அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

“அடப்பாவி அப்போ அவர் ஹாஸ்பிடல்ல உயிருக்கு போராடிக்கிட்டிருந்தது உனக்குத் தெரியுமா….?” என அவள் அதீத அதிர்ச்சியில் அவனைப் பார்த்துக் கேட்க,

அவனோ “இந்த ஷர்வாவுக்குத் தெரியாதது ஏதாவது இருக்குமா…?” என்பதைப் போல புருவம் உயர்த்தி அவளிடம் பதில் கேள்வி கேட்டான்.

“ச்சீ…. நீ எல்லாம் ஒரு மனுஷனா…? அவர் அங்க உயிருக்கு போராடிக்கிட்டிருக்கும் போது நீ இங்க என்னோட மனச மாத்த ட்ரை பண்ணிட்டு இருக்கியே, உனக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசு உறுத்தவே இல்லையா…? உன்ன ரொம்ப நல்லவன்னு நினைச்சேன்… ஆனா நீ ஒரு சுயநலவாதின்னு ப்ரூஃப் பண்ணிட்ட….
உலகமே அழிஞ்சாலும் இந்த உலகத்துல கடைசி ஆம்பளையா நீ மட்டுமே இருந்தாலும் எனக்கு நீ வேண்டவே வேண்டாம்… என்னோட வாழ்க்கையில உனக்கு எப்பவுமே இடம் கிடையாது… என்னோட மனசு அரவிந்தனுக்கு மட்டும்தான்..‌ அது அரவிந்தனை மட்டும்தான் காதலிக்கும்…” என கோபத்தோடு திட்டியவள் அங்கிருந்து சென்றுவிட தன் விழிகளை மீண்டும் மூடிக்கொண்டான் ஷர்வாதிகரன்.

மோகஸ்திரா காலையில் எழுந்தது தொடக்கம் இந்தியா செல்வதற்கான வேலையில் மும்முரமாக இறங்கிவிட அடுத்த நாள் அவர்கள் இந்தியாவிற்கு செல்வது உறுதியானது.

இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை முற்றிலுமாக இல்லாமல் போய்விட ஷர்வாவும் அவளோடு பேச முயற்சிக்கவில்லை.

அடுத்த நாள் விமானப்பயணம் சில மணி நேரங்களின் பின்னர் முடிவடைய மீண்டும் இந்தியாவில் கால் பதித்தவளுக்கு மனம் முழுவதும் வேதனையே அதிகரித்தது.

ஷர்வாவின் அன்னையோ ஏர்போர்ட் வரை வந்து அவர்களை வரவேற்க சிறு புன்னகையை மாத்திரம் அவருக்கு பதிலாக கொடுத்திருந்தாள் மோஹஷ்திரா.

“வீட்டுக்கு போகலாம் பா.. என் மருமகள கூட்டிட்டு வீட்டுக்கு வா.. உன்னோட கார் உனக்காக வெயிட் பண்ணுது… நான் முன்னாடி என் கார்ல வீட்டுக்குப் போறேன்…”

“இல்லம்மா சின்ன வேலை இருக்கு.. அதை முடிச்சுட்டு வர்றோம்.. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க…”

“இல்லப்பா கல்யாணம் பண்ணி முதல் தடவையா ரெண்டு பேரும் ஒன்னா இந்தியா வந்துருக்கீங்க… எங்க போறதா இருந்தாலும் கோயிலுக்கு போயிட்டு அதுக்கு அப்புறமா போகலாமே..” என சிறு தயக்கத்துடன் அவர் கூற,

“சரிமா கோயிலுக்கு போயிட்டே போறோம்… நீங்க இப்போ வீட்டுக்கு கிளம்புங்க…” என அன்னையை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தவன் தன்னுடைய கார் வந்ததும் அவளை அழைத்துக் கொண்டு அந்த காரில் ஏறினான்.

“என்னால இப்போ கோவிலுக்கு எல்லாம் வர முடியாது… வண்டிய நேரா ஹாஸ்பிடல் விடுங்க…” என அவள் இறுகிய குரலில் கூற அவள் கூறிய விதத்தில் அவனுக்கோ சீற்றம் உச்சியைத் தொட்டது‌
வண்டி ஓட்டும் விதத்தில் அவன் தன்னுடைய கோபத்தின் அளவைக் காட்டப் பயந்துதான் போனாள் அவள்.

“இப்படியே போனீங்கன்னா இன்னும் கொஞ்ச நேரத்துல நாமளும் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆக வேண்டி வரும்…” என அவள் பதறியவாறே கூற,

“உன் கூட இருக்கும் போது நான் செத்துப் போனாக் கூட சந்தோஷம்தான்டி படுவேன்…” என உடைந்த குரலில் கூறினான் அவன்.

அந்த வார்த்தைகளில் உறைந்து போய் விட்டாள் அவள்.

 

💜💜💜💜

அடுத்தடுத்த எபி இன்றே வரும் டியர்ஸ்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!