28. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

4.9
(17)

வரம் – 28

 

“உன் கூட இருக்கும்போது செத்துப்போனாக் கூட நான் சந்தோஷம்தான்டி படுவேன்..” என அவன் கூறிய வார்த்தைகள் அவளுடைய காதுகளுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தன.

இவ்வளவு நாட்களும் அவன் காதல் என்று கூறும் போதெல்லாம் அவளுக்கு அவன் ஏதோ உளறுவது போலத்தான் தோன்ற, இன்றோ இந்த வார்த்தைகளின் வீரியத்தில் அவனுடைய காதலின் ஆழம் புரிய வாய் அடைத்துப் போனாள் மோஹஸ்திரா.

மனமோ சோர்ந்து போனது.

அவனுடைய காதலை எண்ணி கவலையாகவும் இருந்தது.

தான் அரவிந்தனுடன் சேர்ந்ததன் பின்னர் அவன் மிகவும் உடைந்து போவான் என்பது புரிய விழிகள் கூட கலங்கிவிடும் போலத்தான் இருந்தன.
‘சாரி ஷர்வா உன்னோட காதல் இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்குமுன்னு நான் நினைச்சு கூட பார்க்கல… ஆனா என்னோட காதல் முழுக்க அரவிந்தன் மேல தான். அது எப்பவுமே மாறாது..’ என மனதிற்குள் நினைத்தவள் அவனுடைய முகத்தைப் பார்த்தாள்.
ஒரு தலைக் காதல் துயரத்தில் முடியும் என தெரிந்து அவன் விலகித்தானே இருந்தான்.

தந்தையின் தொழிலை காப்பதற்கு அவனை அழைத்துச் சென்று அவனுடைய மனதை மேலும் நொறுக்கியது என் தவறுதான்.

வந்திருப்பது ஷர்வாதிகரன் எனும் தொழிலதிபர் என்பதைக் கூறாது அரவிந்தன் எனப் பொய் கூறி அவனை அரவிந்தனைப் போல நடிக்க வைத்ததும் என் தவறுதான்.

தந்தையின் சந்தோஷத்திற்காக சுயநலமாக சிந்தித்து அவனுடைய தாலியை ஏற்றுக் கொண்டதும் என் தவறுதான்.

இப்படி அனைத்து தவறையும் நான் செய்துவிட்டு அவனுடைய மனதையும் நோகடிக்கின்றோமோ என எண்ணியவளுக்கோ குற்ற உணர்ச்சியாக இருந்தது.

அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாது அவனைப் பார்த்தவள்,

“நீங்க எதுக்காக சாகணும்…? நீங்க ரொம்ப நல்லா வாழணுமுங்கிறதுதான் என்னோட ஆசை..”

அவனோ அவளை அழுத்தமாகத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் வீதியைப் பார்த்தவாறு காரை ஓட்டத் தொடங்க,

“இப்படிப் பார்த்தா என்ன அர்த்தம்..? உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கோங்க ஷர்வா..” என்றாள் அவள்.

“என்னோட வாழ்க்கையே நீதான்டி… இது புரியாம பேசுற உன்கிட்ட என்னால பேச முடியாது..” என்றான் அவன்.

“என்ன ஒரு ரெண்டு மாசமா தானே உங்களுக்குத் தெரியும் இந்த ரெண்டு மாசத்துல அப்படி என்ன காதல்..?”

“தெரியலடி..” என்றான் அவன்.

“ஜஸ்ட் அஃபெக்ஷனா இருக்கும்னு தோணுது ஷர்வா… என்னை விட ரொம்ப அழகான பொண்ணு இல்லன்னா உங்கள ரொம்ப நல்லா பாத்துக்குற பொண்ணு யாராவது உங்களுக்குக் கிடைச்சா கண்டிப்பா இந்த அஃபெக்ஷன் மறைஞ்சு போயிடும்..”

“ஹேய் நீ என்ன நினைக்கிற எனக்கு பொண்ணே கிடைக்காம உன் பின்னாடி சுத்துறேன்னு தோணுதா..? ஆல்ரெடி எனக்கு 20க்கு மேல ப்ரொபோசல்ஸ் வந்திருக்கு… எத்தனையோ பேர் என்ன காதலிச்சாங்க… இப்பவும் காதலிச்சுக்கிட்டு இருக்காங்க அவங்க யாரு மேலயும் வராத லவ் எதுக்காக உன்மேல வந்துச்சுன்னு இப்போ வரைக்கும் எனக்குப் புரியவே இல்லை. எந்த சூழ்நிலையிலும் உன்னோட இடத்துக்கு எந்தப் பொண்ணாலையும் வர முடியாது..” என அழுத்தம் திருத்தமாகக் கூறினான் அவன்.

“சாரி ஷர்வா, நீங்க என்ன சொன்னாலும் உங்க காதலை என்னால ஏத்துக்க முடியாது..”

“உன்ன ஏத்துக்க சொல்லி நான் சொல்லவே இல்லையே..”

“அப்போ ப்ளீஸ் என்னை காதலிக்கிறத ஸ்டாப் பண்ணுங்க..”

“நான் எதுக்கு ஸ்டாப் பண்ணனும்..? ஐ லவ் யூ லவ் யூ சோ மச்..”

அந்த வார்த்தைகளில் அவளுக்கோ இதயம் பிசையத் தொடங்க,
“என்னை தயவு செஞ்சு வெறுத்துடுங்க ஷர்வா என்னை இப்படி நேசிக்காதீங்க..”
அவனுக்கோ சிரிப்புத்தான் வந்தது.

“இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க…? உங்க நல்லதுக்காகத்தான் நான் இவ்வளவு சொல்லிக்கிட்டு இருக்கேன்… என்ன மறந்துட்டு வேற யாராவது ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க..”

“எனக்கு நீ தான் வேணும்..”

“ஐயோ நான் என்ன அவ்வளவு முக்கியமா..?”

“நீ மட்டும் தான் முக்கியம்..”

“உங்களோட வைரத்தை விடவா..?”

“வைரம் என்ன வைரம் நீ எனக்கு கிடைப்பன்னா என்னோட ஒட்டுமொத்த சொத்து அந்த வைரம் உள்ள கிரீடம் எல்லாத்தையுமே விட்டுக் கொடுத்துட்டு உன் கூட வந்துருவேன்..” என அவன் கூற ஆடித்தான் போனாள் அவள்.

அதற்கு மேல் அவனிடம் பேச்சுக் கொடுக்க அவளுக்கோ சற்றும் தைரியம் இல்லை.

அவனுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுடைய அடி மனது வரை சென்று அவளைத் தாக்கி கொஞ்சம் கொஞ்சமாக நொறுக்குவதைப் போல இருக்க கலங்கிய விழிகளை அவன் பார்க்காது மறைத்துக் கொண்டவள் அதன் பின்னர் அவனிடம் பேசவே இல்லை.

சற்று நேரத்தில் வண்டியை நிறுத்தியவன் “வா..” என அவளை அழைக்க ஒரு கோயிலின் முன்பு கார் நிற்பதைக் கண்டு அவனை முறைத்துப் பார்த்தாள் அவள்.

“என்னை பாசமா பார்த்ததெல்லாம் போதும் வாடி..” என அவன் உரிமையாக அழைக்க,

“இந்த டீ போட்டு பேசுற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க..” எனச் சீறினாள் அவள்.

“அடியே இப்போ நீ வர்றியா? இல்லன்னா நான் தூக்கிட்டு போகட்டுமா..?” என அவன் கேட்க பதறி காரில் இருந்து இறங்கியவளின் கரத்தை தன்னுடைய கரத்தோடு கோர்த்துக் கொண்டவன் கிட்டத்தட்ட அவளை இழுத்துக் கொண்டு கோயிலுக்குள் செல்ல அவனைத் தடுக்க முடியாது அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றாள் மோஹஸ்திரா.

அங்கே இறைவனை பிரார்த்தித்து விட்டு அங்கிருந்த குங்குமத்தை எடுத்து அவளுடைய நெற்றி வகிட்டில் வைத்து விட்டவன்,

“இப்போதான் அழகா இருக்க..” எனக் கூற அவளுக்கோ உடல் நடுங்கியது.
ஒவ்வொரு முறை நெற்றி வகிட்டில் அவன் திலகம் வைக்கும் போதும் அவள் மனம் வெகுவாய் சோர்ந்து போவது போலத் தோன்றியது.

தனக்கு நடந்த திருமணத்தை நாடகமென எண்ணி தன்னையே சமாதானப்படுத்தி வந்தவளுக்கு சாக்கு போக்குகள் எல்லாம் அந்த குங்குமத்தின் அழுத்தத்தில் அழிவது போல இருக்க கலங்கிப் போனாள் அவள்.

ஏதோ தவறு செய்தவள் போல குற்ற உணர்ச்சி அவளை வதைக்கத் தொடங்க விலகிச் செல்ல முயன்றவளைப் பார்த்த பூசாரியோ,

“உன் புருஷன் கூட சேர்ந்து நில்லுமா..” எனக் கூறியவாறு தீபாராதனைத் தட்டை அவர்கள் இருவரிடமும் நீட்ட அவர் கூறிய புருஷன் என்ற வார்த்தையில் மின்சாரம் தாக்கியதைப் போல அதிர்ந்து அவனைப் பார்த்தாள் அவள்.

அவனோ சாதாரணமாகத்தான் இருந்தான்.

அவளுக்குத்தான் நொடியில் உடல் வியர்த்துப் போனது.

“உன் புருஷன் கூட சேர்ந்து நில்லுமா..” என பூசாரிக் கூறிய வார்த்தை மீண்டும் மீண்டும் அவளுக்குள் மிகப்பெரும் தாக்கத்தை உண்டு பண்ண தலை சுற்றுவதைப் போல இருந்தது அவளுக்கு.

தட்டுத் தடுமாறி அவள் சரிய சட்டென அவளைத் தாங்கித் தன் மீது சாய்த்து கொண்டவன்,

“என்னாச்சுடி டயர்டா இருக்கா..? உடம்புக்கு முடியலையா..?” என பதறியவாறு அவன் கேட்க,

அவனுடைய கரத்தை இறுக்கமாகப் பற்றித் தன் கால்களை அழுத்தமாக நிலத்தில் ஊன்றிக் கொண்டவள்,

“தல சுத்துற மாதிரி இருக்கு..” என மெல்லிய குரலில் முனகலாகக் கூறினாள்.

“சரி வா காருக்கு போவோம் உன்னால நடக்க முடியுமா..” எனக் கேட்டவன் அவள் பதில் கூறுவதற்கு முன்னரே தன் கரத்தில் அவளை ஏந்திக்கொள்ள அவளுடைய தலையோ பலவீனமாக அவனுடைய மார்பில் சாய்ந்து கொண்டது.

அவளைக் காரில் இருத்திவிட்டு,
“ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு..” எனக் கூறிச் சென்றவன் வரும்போது மாம்பழச்சாறு வாங்கி வந்து அவளுக்குக் கொடுக்க மறுக்காது அதனை வாங்கிக் குடித்தவள் வெற்றுக்கண்ணாடிஇஅ குவளையை அவனிடம் கொடுத்துவிட்டு, “தேங்க்ஸ்..” என்ற வார்த்தையை மெல்ல உதிர்த்தாள்.

“இப்போ உனக்கு எப்படி இருக்கு ஓகேவா..? ஹாஸ்பிட்டல் வர முடியுமா..? இல்லன்னா வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டுமா..? ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா ஹாஸ்பிடல் போகலாம்..” என அவன் அக்கறையுடன் கேட்க மறுப்பாக தலையசைத்தவள்,

“ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போங்க நான் அர்விய பார்க்கணும்..” என்றாள்.

“சரி ஹாஸ்பிடல் போறதுக்கு இன்னும் 20 மினிட்ஸ் ஆவது ஆகும்.. அதுவரைக்கும் கொஞ்சம் சாஞ்சு படுத்துக்கோ..” என்றவன் காரை ஓட்டத் தொடங்க அவன் கூறியதை மறுக்காமல் விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டவள் சற்று நேரத்தில் உறங்கியும் போனாள்.

மருத்துவமனை வந்து சேர்ந்ததும் காரை நிறுத்தியவன் உறங்கிக் கொண்டிருந்த மோஹஸ்திராவை ஆழ்ந்து பார்த்துவிட்டு மெல்ல அவளுடைய கன்னத்தில் தட்டி அவளை எழுப்பினான்.

அதில் தூக்கம் கலைந்து விழிகளைத் திறந்தவள்,

“ஹாஸ்பிட்டல் வந்துடுச்சா..” எனக் கேட்டவாறு இறங்க முயல அவளுடைய கரத்தைப் பிடித்துத் தடுத்தவன் அவளுடைய ஆடை நெகிழ்ந்து உள்ளாடையின் வார் தோல் பக்கம் தெரிய,

“ட்ரஸ்ஸ அட்ஜஸ்ட் பண்ணுடி..” என்றான்.

“ஹாங்…?” என அவள் புரியாது புருவம் உயர்த்தி அவனைப் பார்க்க விலகிய அவளுடைய ஆடையை தன் விழிகளால் சுட்டிக்காட்டியவன் அதை அவனே சரிப்படுத்தி விட்டவாறு அவளுடைய கூந்தலையும் ஒதுக்கிவிட விழிகளை மூடிக் கொண்டாள் அவள்.

அவளுடைய ஆடையை சரி செய்த அவனுடைய கரமோ மெல்ல உயர்ந்து அவளுடைய கன்னங்களைப் பற்றிக் கொண்டன.

 

💜💜💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!