31. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ .?

4.9
(20)

வரம் – 31

“ஒருவேளை அவன் பண்றது உனக்கும் பிடிச்சிருக்கோ…?”
அரவிந்தனின் வார்த்தைகளில் விக்கித்துப் போனவள் சட்டென தன் காதுகளைப் பொத்திக் கொண்டாள்.

என்ன வார்த்தைப் பேசி விட்டான்.

அவனுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் கத்தியாக மாறி அவளைக் குத்திக் கிழிப்பது போல இருக்க அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் அவள்.

“இப்ப எதுக்கு இப்படி பார்க்குற…? நான் கேட்டதுல என்ன தப்பு இருக்கு..? அவன் கொஞ்சம் கூட பயப்படாம எனக்கு முன்னாடியே உன்னோட உதட்டுல கிஸ் பண்றான்.. அப்போ நான் இல்லைன்னா என்னல்லாம் பண்ணுவான்..?”

“போதும் நிறுத்து… அவன் என்ன வேணா பண்ணிட்டுப் போகட்டும் உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா..?” அழுத்தமாகக் கேட்டாள் அவள்.

“நான் உன்ன நம்புறதாலதான் இவ்வளவு பொறுமையா பேசிகிட்டு இருக்கேன்..”

“உன்னோட நம்பிக்கையத்தான் இப்போ பார்த்தேனே.. நம்பிக்கை இருந்திருந்தா அவன் பண்றது எனக்குப் பிடிச்சிருக்கான்னு நீ கேட்டிருக்கவே மாட்ட.. உனக்கு என் மேல சுத்தமா நம்பிக்கை இல்லை அர்வி..” எனக் கூறியவளுக்கோ விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து விட,
அவனுக்கோ பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக பறந்து கொண்டிருந்தது.
“ஓகே லீவ் இட்… இவ்வளவு நாளும் நீங்க ரெண்டு பேரும் நைட் எங்க ஸ்டே பண்ணீங்க..”

“புரியல..?” எனக் கேட்டாள் அவள்.

“அமெரிக்காவுல இருக்கும்போது நீங்க ரெண்டு பேரும் எங்க ஸ்டே பண்ணீங்க..?

ஒரே பெட்லதான் தூங்கினீங்களா..? அவன் உன் ரூமுக்கு வந்தானா..? இல்லன்னா நீ அவனோட ரூமுக்குப் போனியா..?” என அவன் ஒவ்வொரு கேள்விகளாகக் கேட்டுக் கொண்டே இருக்க, அவளுக்கோ கொஞ்சம் கொஞ்சமாக மனம் உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்தது.

“ப்ளீஸ் போதும் நிறுத்து… இப்படி எல்லாம் பேசினா உன்னோட மூஞ்சில கூட நான் முழிக்க மாட்டேன் அர்வி..” எனக் கத்தினாள் அவள்.

“ஓஹோ இதுதான் சாக்குன்னு என்னை விட்டுட்டு அவன்கிட்டயே போகப் போறியாடி..” என அவன் கேட்டு விட உடைந்து போனாள் அவள்.

அவளுக்கோ அதற்குமேல் கட்டுப்படுத்த முடியாமல் அழுகை பெருக விம்மி விம்மி அழத் தொடங்கியவளைக் கண்டு நிதானத்திற்கு வந்தவன் வேகமாக அவளுடையக் கைகளை பற்றிக்கொண்டான்.

“பேபி டால் சாரி… நான் பேசினது தப்புதான்… என்னால தாங்க முடியலடி.. எங்க உன்னை இழந்திடுவேனோன்னு ரொம்ப பயமா இருக்கு.. என் முன்னாடியே அவன் எப்படி இந்த உதட்டில கிஸ் பண்ணலாம்..” எனக் கேட்டவன் அவளுடைய சிவந்த மெல்லிய உதடுகளைத் தன்னுடைய இரு விரல்களால் பற்றி இழுக்க அவளுக்கோ வலித்தது.

வேகமாக அவனுடைய கையைத் தட்டி விட்டாள் அவள்.

“அவன் கிஸ் பண்ண வரும் போதும் இப்படி அவனைத் தள்ளி விட்ருக்கலாமே.. நான் தொட்டா மட்டும் ஏன்டி தள்ளி விடுற..” என மீண்டும் அவன் அதே போல பேச அவளுக்கோ உள்ளம் சோர்ந்து போனது.

“பைத்தியமா நீ..? அவன் என்னை கிஸ் பண்ணுவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்ல… சடனா என்ன பிடிச்சு இழுத்து கிஸ் பண்ணதும் ஷாக் ஆகிட்டேன்.. சுயநினைவு வந்ததும் தள்ளிவிட்டுத்தானே போனேன்.. நான் ஒன்னும் அவனோட முத்தத்தை ரசிச்சு ஏத்துக்கிட்டு இருக்கலையே…
என்ன புரிஞ்சுக்காம ஏன் பேசுற…? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு…. நீ இப்படி எல்லாம் பேசுவேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..” என்றாள் அவள்.

“சாரி சாரி இனிமே நான் இப்படி எல்லாம் பேச மாட்டேன்… நீ அவனை விட்டு என்கிட்ட வந்துரு… நாம எங்கேயாவது போயிடலாம்.. இந்த டிவோர்ஸ் எல்லாம் தேவையே இல்லை… வேற நாட்டுல போய் நிம்மதியா வாழலாம்..”

“நாம எதுக்காக ஒழிஞ்சு மறைஞ்சு வாழணும்..? நம்ம மேல எந்த தப்பும் இல்லையே அர்வி.. விவாகரத்து வாங்கிட்டு உரிமையா நம்ம கல்யாணத்த முறையா பண்ணிக்கலாம்..” என்றாள் அவள்.

அவனோ வேகமாக அவளுடைய கரத்தைப் பிடித்து தன்னருகே இழுத்தவன்,

“இங்க வா கொஞ்ச நேரம் அப்படியே இரு..” எனக் கூறிவிட்டு அவளை அணைத்துக் கொள்ள, முதல் முறையாக அவனுடைய அணைப்பு அவளுக்கு வெறுப்பை மூட்டியது.

அவனுடைய கையணைப்புக்குள் நிற்க முடியாது துடித்து விலக முயன்றவளின் இடுப்பில் தன்னுடைய ஒற்றைக் கரத்தை அழுத்தமாகப் பதித்தவன்,

மற்றைய கரத்தை அவளுடைய பின் கழுத்தில் உறவாட விட,

“அர்வி ப்ளீஸ் போதும் நிறுத்து..” என உடைந்த குரலில் கூறினாள் மோஹஸ்திரா.

“எனக்கு நீ வேணும் பேபி டால்..” என்றான் அவன்.

“புரியல..” என்றவள் அவளுடைய இடையில் அழுத்தமாகப் பதிந்த அவனுடைய கரத்தை விலக்கியவாறு அவனுடைய முகத்தைப் பார்க்க அவனோ மீண்டும் அவளுடைய சிவந்த இதழ்களை அழுத்தமாகப் பார்த்தவன் தன்னுடைய பெருவிரலால் அவற்றை அழுத்தி வருடியவாறு அவளிடம்,
“நீ எனக்கு இப்போ வேணும்… என்னால உன்ன யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது..” என்றான் அவன்.

“அதுக்கு இப்படித்தான் அத்துமீறி நடந்துப்பியா அர்வி…?” என கோபமாகக் கேட்டாள் அவள்.

“ஏன்டி நான் இதுக்கு முன்னாடி உன்ன தொட்டதே இல்லையா..? இல்ல உன்ன ஹக் பண்ணதே இல்லையா…?”

“ஐயோ கொஞ்சம் பொறுமையா இரு..” என்றவள் தன்னுடைய கழுத்தில் அத்துமீறி முகம் புதைத்து தன்னுடைய இதழ்களை அழுத்தமாக பிடித்தவனின் விரலை விலக்கப் போராடினாள்.

அவனோ அவளுடைய கழுத்து வளைவில் முத்தமிட்டது மட்டுமல்லாமல் அழுத்தமாக தன்னுடைய பற்களால் கடிக்கவும் செய்துவிட அவளுக்கோ பொறுமை பறந்தது.

வேகமாக அவனைத் தன்னில் இருந்தும் தள்ளி விட்டவள்,

“இவ்வளவுதான் உன்னோட லிமிட்… இதுக்கு மேல என்கிட்ட வந்தா செருப்பாலே அடிப்பேன் அர்வி..” என அவள் கத்தி விட அதிர்ந்து போய் அவளைப் பார்த்தான் அவன்.

“இவ்வளவு சீப்பா பிஹேவ் பண்றதுக்குத்தான் என்ன இங்க வரச் சொன்னியா..? உன்ன எவ்வளவு நல்லவன்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன்.. தயவு செஞ்சு அத நீயே கெடுத்துக்காத..” என கோபமாகச் சீறிவிட்டு அந்த வீட்டை விட்டு வேகமாக வெளியேறினாள் அவள்.

“போகாதே பேபி.. ப்ளீஸ் என்ன விட்டுப் போகாத… நான் இனி இப்படி பண்ண மாட்டேன்.. எங்க நீ எனக்கு கிடைக்காம போயிருவியோங்கிற பயத்துல தான்டி இப்படி எல்லாம் பண்ணினேன்.. இனி உன்னோட பெர்மிஷன் இல்லாம சத்தியமா உன்னைத் தொட மாட்டேன் என் கிட்டயே வந்துரு பேபி போகாத..” எனக் கத்தியவாறே அவன் அவளின் பின்னாலேயே செல்ல, அவளோ வேகமாக தன்னுடையக் காருக்குள் ஏறி அமர்ந்து கொண்டவள் அடுத்த நொடியே அந்த இடத்தை விட்டுச் சென்றிருந்தாள்.

அரவிந்தனுக்கோ ஏமாற்றத்திலும் கோபத்திலும் விழிகள் சிவந்து போயின.

*****
திவாகரை சந்தித்துப் பேசிவிட்டு வீட்டிற்கு திரும்பிய ஷர்வாவோ நேராக தன்னவளைக் காண்பதற்காக தன்னுடைய அறைக்குள் விரைந்தவன் அங்கே மோஹஷ்திரா இல்லாததைக் கண்டதும் அவனுடைய புருவங்களோ சுருங்கின.

அறை முழுவதும் தேடியவன் பாத்ரூம், பால்கனியையும் பார்த்துவிட்டு அங்கேயும் அவள் இல்லை என்றதும் மீண்டும் கீழே சென்றவன் தன்னுடைய அன்னையைத் தேட அவர் கிச்சனுக்குள் நிற்பதை உணர்ந்தவன் நேராக அவரிடம் சென்றான்.

“ம்மா.. உன்னோட மருமகளைப் பாத்தியா..?” என அவன் கேட்க,
“யாரோ ஃப்ரண்ட பார்க்கணும்னு என்னோட காரை எடுத்துட்டு போய் இருக்காடா வந்துருவா..” என்றார் அவர்.
“ப்ரண்டா..” எனக் கேட்டவனின் முகமோ சுருங்கியது.

‘இங்கே தான் அவளுக்கு நண்பர்களே இல்லை அல்லவா..
அரவிந்தனைத் தான் பார்ப்பதற்கு சென்றிருப்பாளோ..’ என எண்ணியவன் அமைதி காத்தான்.

இவ்வளவு வேகமாக கிளம்பி இருக்கிறாள் என்றால் ஏதாவது காரணம் இருக்கக்கூடும் என எண்ணியவன் அவளுடைய அலைபேசிக்கு அழைத்துப் பார்க்கலாம் என எண்ணியவாறு,

“சரிம்மா நான் பாத்துக்குறேன்..” எனக் கூறிவிட்டு மீண்டும் தன்னுடைய அறைக்குள் நுழைந்தான்.

தன்னுடைய போனை எடுத்து அவளுடைய இலக்கங்களை அழுத்த, கீழே கார் வந்து நிற்கும் சத்தம் அவனுடைய காதுகளை வந்து அடைந்தது.

அவள்தான் வந்து விட்டாள் என்பதை உணர்ந்து கொண்டவனின் முகமோ சடுதியில் மலர தன்னை எண்ணியே வியந்து போனான் அவன்.

எப்படி அவனுக்கு இவள் மீது இத்தனை காதல் தோன்றியது என்ற விடயம் இப்போது கூட புதிராகத்தான் இருந்தது.

அவள் மீது கொள்ளைப் பிரியம் ஏன் முகிழ்த்தது என சிந்தித்துச் சிந்தித்து விடை அறியாமல் குழம்பிப் போனவன் அவள் வரும் நேரத்திற்காக அறைக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனை ஏமாற்றாது நேரே ரூம்க்குத்தான் வந்திருந்தாள் அவள்.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவள் முகத்தைச் சிறு சிரிப்போடு பார்த்தவன் அங்கே அவள் முகத்தில் அழுததற்கான அடையாளங்கள் இருப்பதைக் கண்டு புருவம் உயர்த்தினான்.

“எங்க போயிட்டு வர்ற..?” என அவன் அவளை நோக்கி கேள்வியை எழுப்பியதும் அங்கே அரவிந்தனின் மீது அதீத கோபத்தோடு வந்தவளுக்கோ மொத்த கோபமும் ஷர்வாவின் மீது திரும்பியது.

“நான் எங்க வேணாலும் போவேன் வருவேன் உனக்கு என்ன.. நீ யாரு என்ன கேள்வி கேட்குறதுக்கு..” எனக் கத்திவள் தன்னுடைய ஹேண்ட் பேக்கை தூக்கி விசிறி அடித்தாள்.

அவள் கத்திய விதத்திலும் அடுத்தடுத்து நடந்து கொண்ட செய்கையிலும் அதிர்ந்துதான் போனான் அவன்.

💜💜💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!