5. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

5
(18)

வரம் – 05

 

இவ்வளவு நேரமும் எரிமலை போல கோபத்தில் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தவள் உள்ளே நுழைந்த ஆண்மகனைக் கண்டதும் சட்டென வெண்பனி போல தணிந்து குளிர்ந்து போனாள்.

அதிலும் அவனுடைய ஹாய் பேபி என்ற அழைப்பில் அவளுக்கோ உள்ளமும் உடலும் ஒருங்கேத் தித்திக்கத் தொடங்கியது.

எப்போதும் பொது இடத்திலோ அல்லது அவளுடைய அலுவலகத்திலோ அவன் அவளைச் சந்திப்பதற்கு விரும்புவதே இல்லை.

அப்படி இருக்கையில் திடீரென இன்று தன்னுடைய அலுவலக அறைக்கே வந்து நிற்பவனைக் கண்டு வியப்பின் உச்சிக்கே சென்றவள் வார்த்தைகள் மறந்தவளாய் அவனை தலை சரித்துப் பார்க்க,

அந்தப் பார்வையில் அவனுடைய தடித்த அதரங்களிலோ குறுநகை மலர்ந்தது.

அரவிந்தனின் உடற் கட்டமைப்பை பிரமிப்பாக பார்த்த குருவுக்கோ எப்போதும் தன்னுடைய மேடத்தை சந்திப்பதற்கு வீட்டுக்கு வரும் அரவிந்தன் இன்று அலுவலகத்திற்கு வந்திருப்பது சற்றே வியப்பைக் கொடுத்தது.

அதுவும் அவனுடைய மேடம் மிகவும் கோபமாக இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவர் வேறு வந்திருக்கிறாரே எனச் சிறு பதற்றத்துடன் எண்ணியவன் இருவருக்கும் சண்டை வந்துவிடுமோ எனப் பயந்தவாறு சற்றே விலகி நிற்க,

வேகமாக அவள் அருகே நெருங்கிய அரவிந்தனோ அடுத்த நொடி அவளுடைய இடையில் தன் கரத்தைப் பதித்து அவளை இழுத்து தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான்.
கண் முன்னே விரிந்த காட்சியில் குருவுக்கோ உடல் தூக்கி வாரிப் போட்டது.

‘அய்யய்யோ சூறாவளியையே இழுத்து ஹக் பண்ணிட்டாரே அடி கன்ஃபார்ம்..’ என அவன் மனதிற்குள் அலறி விழிகளை மூடிக்கொள்ள அவன் நினைத்தது போல எதுவுமே அங்கே நிகழாது இருக்க மெதுவாக தன் விழிகளைத் திறந்து பார்த்தவன் மீண்டும் திகைத்தான்.

ஆம் மொத்த கோபத்தையும் உடனடியாக மறந்து விட்டவள் போல தன்னை இழுத்து அணைத்தவனின் கழுத்தை தன் கரங்களால் வளைத்துக் கொண்டவள் அவனுடைய விழிகளை இமைக்காது பார்த்து அழகாய் சிரிக்க இவனுக்கோ அதிர்ச்சியில் மாரடைப்பே வந்துவிடும் போல இருந்தது.

“எப்பவுமே என்னைத் தேடி வர மாட்டீங்களே.. என்ன இன்னைக்கு புதுசா ஆஃபீஸ்க்கு வந்துட்டீங்க ஏதாவது ஸ்பெஷலா..?” எனக் கேட்டவாறு அவனுடைய கன்னத்தில் தன்னுடைய ஒற்றை விரலால் கோடிட்டவளின் விரலை இறுக்கமாக பற்றிக் கொண்டவன் அந்த விரலைப் பிடித்து தன்னுடைய உதட்டில் பதித்து அழுத்தமான முத்தத்தை அவளுடைய மோதிரம் அணிந்த விரலுக்கு கொடுத்துவிட்டு,

“நீ ரொம்ப டென்ஷனா இருப்பேன்னு தெரியும்… அதனால தான் உன்னைப் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்.. இன்னும் டூ டேஸ்ல நான் யு எஸ் போயிருவேன் போயிட்டு வந்ததும் மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணிடலாம்… அதுவரைக்கும் உன் கூட இருக்கணும் போல தோணுச்சு.. அப்புறம் உன்னோட பங்க்ஷன்ல பிரச்சனைன்னு கேள்விப்பட்டேன் உன்னை கொஞ்சம் ச்சில் பண்ணலாம்னு வந்தேன் பேபி டால்..” என்றவனை அவளுக்கோ மேலும் மேலும் பிடித்துக் கொண்டது.

எதற்கும் அடங்காதவள்
யாருக்கும் அடிபணியாதவள்
எந்த உயரத்தில் இருக்கும் பதவி மாந்தர்களுக்கும் கட்டுப்படாதவள் அவள் நேசிக்கும் அரவிந்தன் ஒருவனுக்கு மட்டுமே அடிமை சாசனம் எழுதிக் கொடுத்திருந்தாள்.

“உன்னை இன்ஸல்ட் பண்ணவனை என்கிட்ட விட்ரு, அவன் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் நான் அவன பாத்துகிறேன் நீ டென்ஷன் ஆகாம இருந்தாலே எனக்குப் போதும்..”

“இல்ல அர்வி.. இதுவரைக்கும் இப்படிப்பட்ட ஒரு அவமானத்தை நான் சந்திச்சதே இல்லை… இதுக்கு அவன் எனக்கு பதில் சொல்லியே ஆகணும்.. நான் தான் அவனுக்குத் திருப்பி கொடுக்கணும் நீ இந்த விஷயத்துல வராத நானே பார்த்துக்கிறேன்..”
“கீழ விழுந்தது வலிக்குதா பேபி டால்…? அடி ஏதாவது பட்டுருச்சா..” என அக்கறையாக விசாரித்தான் அரவிந்தன்.

“நான் கீழே விழுந்தது வரைக்கும் கேள்விப்பட்டீங்களா..?” என புருவம் உயர்த்திக் கேட்டாள் அவள்.

“அந்த பங்க்ஷன் ஃபுல்லா கேமரா இருந்தது மறந்துட்டியா.. லைவ் ஷோவா எல்லா சேனல்லையும் டெலிகாஸ்ட் பண்ணிட்டு இருந்தாங்க..” என்றதும் அவளுடைய முகமோ சட்டென வாடிப் போனது.

“இட்ஸ் ஓகே பேபி டால் தோற்றுப் போனவன் துள்ளத்தான் செய்வான்… இதுக்கு அப்புறமா நம்ம வெற்றி அசுர வெற்றியா இருக்கணும்.. இவனுங்கள மாதிரி நிறைய பேர் நமக்கு குடைச்சல் கொடுப்பானுங்க… பட் டோன்ட் வொரி… எப்பவுமே உன் கூட உனக்கு துணையா நான் இருப்பேன்..” என்றவனைக் காதல் ததும்ப ஆழ்ந்து பார்த்தாள் அவள்.

தன்னுடைய மனநிலை மிகவும் மோசமாக இருக்கும் என்பதை உணர்ந்து தன்னுடைய இயல்பை மாற்றி தனக்காக தன்னைக் காண்பதற்காக ஓடோடி வந்திருக்கும் காதலனின் மீது அளவு கடந்த காதல் பெருக்கெடுக்க அவளுடைய கரங்களை உயர்த்தி அவனுடைய தாடி அடர்ந்த கன்னங்களை அழுத்தமாக பற்றிக் கொண்டவள்,

“இப்படி ஏதாவது பண்ணி என்னை இம்ப்ரஸ் பண்றதே உங்களுக்கு வேலையா போயிருச்சு..” என அவனை மயக்கும் ஹஸ்கி குரலில் அவள் கூற அவனுடைய ஒற்றைக் கரமோ அவளை மேலும் தன்னோடு இழுத்து இறுக்கிக் கொண்டதோடு அவளுடைய வளைந்த மியாந்தர் இடையையும் அழுத்திப் பிடிக்க பெண் அவளுக்கோ உடலில் உள்ள மயிர்க்கால்கள் அனைத்தும் குத்திட்டு நின்றன.

‘ஆத்தீஈஈ… என்னடா இது என் கண்ணு முன்னாடியே இப்படி ரொமான்ஸ் பண்றாங்க… இப்ப நான் என்ன பண்றது வெளியே போறதா இல்ல இங்கேயே நிற்கிறதா..’ என மனதிற்குள் புலம்பியவன்,

“மேடம்..” எனத் தயக்கத்துடன் அவளை அழைக்க,

விழிகள் கூர்மை பெற சட்டென அவனைத் துளைக்கும் பார்வையோடு திரும்பிப் பார்த்தவளின் விழிகளில் வெளிப்பட்ட ரௌத்திரத்தில் அதிர்ந்து சட்டென தன் வாயை மூடிக்கொண்டான் குரு.

“கெட் அவுட் இடியட் என்னோட மூட ஸ்பாயில் பண்றதே இவனுக்கு வேலையா போச்சு..” என அவள் கோபத்தில் கத்த அடுத்த நொடி திட்டிக் கொண்டிருந்த அவளுடைய சிவந்த அதிரங்களின் மீது தன்னுடைய பெருவிரலை வைத்து அவளுடைய பேச்சுக்குத் தடா போட்டவன்,

“தேன் சிந்துற இந்த உதட்டுல இருந்து இவ்வளவு கோபமான வார்த்தைகள் வரலாமா பேபி டால்..” எனக் கேட்டவாறு தன் பெருவிரலால் அவளுடைய இதழ்களை அழுத்தமாக வருடி விட அவளுக்கோ சட்டென சிவந்து போயின கன்னங்கள்.

குருவோ தப்பித்தேன் பிழைத்தேன் என அந்த அறையை விட்டு வெளியே சென்று விட இப்போது அறைக்குள் தனிமையில் நின்ற இருவருக்கும் விழிகளில் காதல் பெருக்கெடுத்தது.

“அர்வி நம்ம ரிலேஷன்ஷிப் வெளியே தெரியக் கூடாதுன்னு முடிவெடுத்ததை மறந்துட்டீங்களா..? என்னவா இருந்தாலும் இப்படி பப்ளிக் பிளேஸ்ல என்னைத் தேடி வராதீங்க..” என அவள் கூறிக் கொண்டிருக்கும்போதே அவளை இழுத்து அங்கிருந்த சுவற்றோடு சாய்த்தவன் அவளுடைய புடவையை விலக்கி வெற்று வயிற்றில் தன்னுடைய கரத்தை அழுத்தமாகப் பதித்து சிறு சிறு கற்றை முடிகள் தொட்டுத் தழுவிக் கொண்டிருந்த அவளுடைய கழுத்து ஓரத்தில் தன்னுடைய முகத்தைப் பதிக்க அவளோ அதிர்ந்து பின் அவனுடைய தீண்டலில் திளைத்து விழிகளை மூடிக்கொண்டாள்.

“ஐ காண்ட் கண்ட்ரோல் மை செல்ப் பேபி டால்.. சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாம்..” என்றவனுடைய உதடுகள் அவளுடைய கழுத்து வளைவில் அழுத்தமாக பதிந்து சற்று மேலே உயர்ந்து அவளுடைய கன்னத்திலும் தடம் பதிக்க,

அவளுடைய கரங்களோ அவனுடைய சிகைக்குள் நுழைந்து அதனை இறுகப் பற்றிக் கொண்டன.

“போதும் அர்வி இங்கேயும் கேமரா இருக்கு யாராவது பார்த்துட போறாங்க..” என்றவளின் கீழ் உதட்டை அழுத்தமாகப் பிடித்தவன் தன்னுடைய இரு விரல்களுக்கு இடையே அவற்றை அழுத்தி பிடித்து அதில் தெரிந்த அவளுடைய உதட்டு ரேகைகளை வருடி விட்டவாறு,

“யார் பார்த்தாலும் எனக்கு கவலையே இல்லை.. எனக்கு நீ வேணும்… கேமரா கண்ட்ரோல் உன்னோட கைல தானே இருக்கு… யாரும் பாக்கறதுக்கு முன்னாடி ஃபுட்டேஜை டெலிட் பண்ணிடு..” என்றவன் தன் விரல்களுக்கு இடையே சிக்கியிருந்த அவளுடைய கீழ் உதட்டை குனிந்து முத்தமிட நெருங்க சட்டென தன்னுடைய கரங்களை உயர்த்தி அவனுடைய மார்பில் பதித்து அவனை தன்னில் இருந்தும் தள்ளி விட்டவள் “ராஸ்கல்..” எனச் சிரிப்போடு முனகினாள்.

“ஹா.. ஹா..” என வாய் விட்டு சிரித்தவன்,
“இப்போ நீ ஓகே தானே..” என அக்கறையாக கேட்க அவனுடைய கேள்விக்கு ஆம் என தலையசைத்தவளுக்கோ நிஜமாகவே மனநிலை முற்றிலும் மாறிப் போயிருந்தது.

அவனுடைய பார்வையோ அவளுடைய விலகிய இடையிலும் மேலே தாமரை மொட்டுக்களாக குவிந்து அழகியலை எடுத்துக்காட்டும் அவளுடைய மார்பிலும் பதிவதை உணர்ந்தவள் வெட்கத்தோடு புடவையை இழுத்து விட அவளைப் பார்த்து இமை சிமிட்டிச் சிரித்தவன்,

“இன்னும் எத்தனை நாளைக்கு என்கிட்ட இருந்து மறைக்க போறேன்னு நானும் பார்க்கிறேன்..” எனக் கூரியாவாறே மீண்டும் அவளை நெருங்க,

“போதும் போதும் ஹனி… முதல்ல இங்கிருந்து கிளம்புங்க… நாம அப்புறமா மீட் பண்ணலாம்..” எனக் கூறி அவனை அங்கிருந்து அனுப்பி வைத்தாள்.

அங்கிருந்து செல்வதற்கு முன்னர் அவளை மீண்டும் இழுத்து தன்னோடு இறுகணைத்துக் கொண்டவன் அவளுடைய இரண்டு கன்னங்களிலும் அழுத்தமாக முத்தத்தைப் பதித்து விட்டே அங்கிருந்து வெளியே செல்ல இவளுக்கோ கன்னங்கள் ஏகத்துக்கும் சிவந்து போயின.

“ஐ லவ் யு ஹனி..” என அவன் சென்ற திசையைப் பார்த்து கூறியவள் அவன் அந்த அறையை விட்டு வெளியேறிச் சென்றதும் மீண்டும் தன்னுடைய இயல்பு நிலைக்கு வந்தாள்.

அடுத்த நொடியே அவளை வேலைகள் இழுத்துக் கொள்ள அரவிந்தனைப் பற்றி முழுமையாக மறந்துவிட்டு இனி நடக்கப்போகும் மீட்டிங்கில் அவளுடைய கவனம் பதியத் தொடங்கியது.

******
திவாகரோ ஷர்வாவின் கட்டளைக்கு இணங்க மோகஸ்திராவை பற்றி ஆராயத் தொடங்கியவன் அவளைப் பற்றிய பல விடயங்களை அறிந்து கொண்டான்.

அவள் இதுவரை சாதித்த விடையங்கள்
இந்த உயரத்தை அடைவதற்கு அவள் போராடிய விதம் அவளுடைய பணத்தின் எல்லை அதைவிட அவளிடம் அதிகமாக கொட்டி கிடக்கும் திமிர்,

அவள் காலை தொடக்கம் இரவு தூங்கச் செல்லும் வரை, செல்லும் அனைத்து இடங்கள் என ஒவ்வொன்றையும் பற்றி ஆராய்ந்து முடித்தவன் அன்றைய நாளை மோஹஸ்திராவை பற்றிய ஆராய்ச்சியிலேயே முடித்திருந்தான்.
அவன் நினைத்ததைப் போல அல்லாது வித்தியாசமான பெண்ணாக இருந்தாள் அவள்.

அவன் சேகரித்த அனைத்து விடயங்களையும் ஒரு கோப்பாக மாற்றி பென்ட்ரைவில் சேவ் செய்தவன் அதனை எடுத்துக்கொண்டு ஷர்வாவை நோக்கிச் சென்றான்.

அவனுடைய தனிப்பட்ட அறைக்குள் நுழைந்தவன் அந்த மிகப்பெரிய அறையின் ஒரு பக்க சுவற்றையே திரையாக பாவித்து அதில் மோகஸ்த்திராவின் விம்பத்தை உருவாக்கி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஷர்வாதிகரனைக் கண்டு அதிர்ந்து போனான்.

😍😍💜💜😍😍

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

1 thought on “5. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!