8. சிந்தையுள் சிதையும் தேனே..!

4.2
(9)

தேன் 8

“ஓகே நான் சம்மதிக்கின்றேன்..” என்று நிவேதா கூறியதும் காயத்திரிக்கு நிலத்தில் கால் நிற்கவே இ.ல்லை அவ்வளவு சந்தோசம் துள்ளிக் குதித்து தன் வயதுக்கு மீறிப் பாய்ந்து நிவேதாவை கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தார்.

தாயின் உயில் எழுதும் முடிவில் முதல் திணறிப்போன நிவேதா பின்பு தனது அறைக்குள் சென்று திடமாக ஒரு முடிவை எடுத்த பின்பு வெளியே வந்து கார்த்திகேயனுடன் திருமணம் முடிக்க சம்மதம் என தனது தாய், தந்தையர் முன் கூறினாள்.

கருணாகரனுக்கு நிவேதாவை பற்றி நன்றாகத் தெரியும் இருந்தும் நடப்பவை அனைத்தையும் ஒரு பார்வையாளனாக பார்ப்போம் அப்படி என்ன நம் கைமேறி நடக்கப் போகின்றது என மனதிற்குள் நினைத்தவர் தனது மனைவியின் சந்தோசம் அவரது வதனத்திலும் தொற்றிக் கொண்டது.

நீண்ட நாட்களுக்குப் பின்பு காயத்ரி இப்படி குதூகளித்தது கருணாகரத்தின் மனதில் ஒரு பரவச நிலையை உண்டாக்கியது.

என்னதான் இருந்தாலும் தனது காதல் மனைவி ஆயிற்றே, மனைவியின் இன்பம் அவருக்கு சொர்க்கம் அல்லவா..

இத்தனை வருட காலமும் காயத்ரியை உயிருக்கு உயிராக அவ்வளவு விரும்புகிறார். ஒரு சலிப்பில்லாத காதல் என்றே கூறலாம் காதலுக்கு ஏது சலிப்பு, ஏது வயது.

அவரது அளவற்ற காதலோ என்னவோ காயத்ரியின் பேச்சுக்கு அவர் எப்போதும் மறுபேச்சு பேசியதில்லை. 30 வருடங்களுக்கு முன்பு தனக்காக குடும்பத்தை உதறித் தள்ளிவிட்டு வந்த காயத்ரியை எப்பொழுதும் கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அப்போது உறுதி பூண்டவர் தான் அதன் பின்பு ஒரு நாள் கூட காயத்ரி அழுது அவர் பார்த்ததே இல்லை.

அப்படி அவரை அன்புடனும், காதலியுடனும் கையில் வைத்து தாங்குகின்றார் கருணாகரன்.

அதுபோல்தான் காயத்ரியும் இதுவரை கணவனிடம் கேட்காமல் எந்த முடிவும் எடுத்ததே இல்லை. அத்தோடு தான் எடுக்கும் முடிவுக்கு கணவர் எப்போதும் மறுப்பு கூற மாட்டார் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.

நிவேதாவை கட்டி அணைத்து முத்தமிட்டு ஓய்ந்து போன காயத்ரி தன் கணவரை பார்த்து,

“பாத்தீங்களாங்க எனக்கு தெரியும் என்னோட மகள் கல்யாணத்துக்கு சம்மதிப்பான்னு… நீங்கதான் இல்லவே இல்லைன்னு சொன்னீங்களே எப்படி மகள் சம்மதிச்சா..?”

‘ம்க்கும் நல்லா சம்மதிச்சா அவ எங்க சமாதிச்சா நீ தான் சம்மதிக்க வச்சிட்ட சொத்தை எவனுக்கோ எழுதி வைக்கிறேன்னா அவ சும்மா இருப்பாளா இந்நேரம் அந்த சொத்துக்கு ஒரு பெரிய திட்டமே மனசுகுள்ள போட்டு வச்சிருப்ப என்னோட மகளை பத்தி எனக்கு சொல்றியா..’ என்று மனதிற்குள் சிந்தித்து கொண்டு ஒரு நமட்டுச் சிரிப்பை சிரித்தார்.

உடனே அங்குள்ள வேலையாட்கள் அனைவரையும் அழ ஒவ்வொருவருக்கும் சந்தோஷத்தில் 1000, 2000 என்று பணத்தைக் கொடுத்து அன்று அனைவருக்கும் விடுமுறையும் கொடுத்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த கருணாகரனுக்கு சினம் துளிர்விட்டது.

“காயத்ரி ஏன் இப்படி செய்ற சந்தோஷத்துல தல கால் புரியாம இப்படி நடந்துக்காத இப்ப எல்லாரையும் அனுப்பிட்டு நீ எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்யப் போறியா..?”

“இல்லங்க என்னோட சந்தோஷத்தை எப்படி கொண்டாடுறது என்று எனக்கு தெரியல அவ்ளோ சந்தோசமா இருக்கு என்னோட மகன் இப்படி சம்மதிப்பானு எதிர்பார்க்கவே இல்லை..”

“சரி மா சரி கொஞ்சம் இரு சந்தோசம் தான் எனக்கும் ரொம்ப சந்தோஷம் தான்..” என்று கருணாகரன் கூறியபடி அருகில் இருந்த இருக்கையில் காயத்ரியையும் அமர வைத்து தானும் அமர்ந்தார்.

“சரிங்க எப்போ கல்யாணத்தை வெச்சுக்கலாம் நம்ம ஜோசியரை கூப்பிட்டு கேட்டுடுவோமா..?” என்று காயத்ரி கருணாகரனை கேட்க,

அதற்கு நிவேதா கூறிய பதிலைக் கேட்டு இருவரும் மயங்கி விழாத குறையாக அதிர்ந்து நின்றனர்.

“என்னது ஒரு வாரத்திலேயே..?” என்று காயத்ரி கேட்க,

“ஆமாம்மா எனக்கு வன் வீக்ல கல்யாணம் நடந்தாகணும்..”

“என்ன நிவேதா கல்யாணம் பண்ணறன்னா சும்மா காரியம்னா நினைக்கிற அதுக்கு எவ்வளவு வேலை இருக்கு எவ்வளவு அரேஞ்ச்மென்ட்ஸ் செய்யணும் ஊருக்கு சொல்லணும், சொந்தத்துக்கு சொல்லணும், பிசினஸ் ரிலேட்டிவ்ஸ்க்கு சொல்லணும், மண்டபம் புக் பண்ணனும் சாப்பாடு ரெடி பண்ணனும் டிரஸ் எடுக்கணும் எவ்வளவு சம்பிரதாயங்கள் இருக்கு அதெல்லாம் உனக்கு தெரியுமா வன் வீக்ல செய்யறதுக்கு இது என்ன பொம்மை கல்யாணமா..?”

“அம்மா இந்த ப்ளா ப்ளா ப்ளா இதெல்லாம் எனக்கு தேவையில்லை இன்னும் வன் வீக்ல கல்யாணம் நடந்தாகணும் அதுக்கப்புறம் என் மனசு மாறுச்சுனா அதுக்கு நான் பொறுப்பு இல்ல..” என்று தோள்களை குழுக்கி கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அவளது நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரிவதை உணர்ந்த கருணாகரன் நிவேதாவை தனியாக அழைத்து கல்யாணத்திற்கு முன் கட்டாயம் பேச வேண்டும் என்று எண்ணினார்.

அவரது சிந்தனை நிவேதாவின் புறம் போக இங்கோ காயத்ரி புலம்பிக் கொண்டிருந்தார்.

“என்னங்க இது இப்படி சொல்லிட்டு போறா உங்க பொண்ணுக்கு எப்பவுமே பொறுப்பே வராதா ஒரு வாரத்தில கல்யாணம் பண்ணா எவ்வளவு வேலை இருக்கு ஒரே பொண்ணோட கல்யாணம் எவ்வளவு ஆசை ஆசையா எவ்வளவு பிரம்மாண்டமா செய்யணும் என்று எதிர்பார்த்தேன் இவ என்னன்னா இப்படி சொல்லிட்டு போறாளே..!” என்று வருத்தப்பட்டார் காயத்ரி.

“இங்க பாரு காயத்ரி கொஞ்சம் ரிலாக்ஸாகு இப்போ அஞ்சு நிமிஷத்துக்கு முன்னுக்கு சந்தோசத்துல குதிச்சே இப்போ என்னன்னா டென்ஷன்ல குதிக்கிற உனக்கு ஒரே குதிக்கிறது தான் வேலையா போச்சு நான் எதுக்கு இருக்கேன் முக்கியமான வேலைகளை என்கிட்ட கொடுத்துரு நான் அத பார்த்துக்கொள்கிறேன் நீ கூலா இரு டென்ஷன் ஆகாத ஓகே நான் மண்டபம் பிசினஸ் ரிலேட்டிவ்ஸ்க்கு சொல்றது பிரண்ட்ஸ்க்கு சொல்றதுன்னு எல்லாம் நான் பார்த்துக் கொள்றேன்

நீ ட்ரெஸ்சையும் சாப்பாட்டையும் பாத்துக்கோ மீதி வேலைகளை நாம ஆட்கள் வச்சி செய்து கொள்ளுவோம் நிறைய வெட்டிங் பிளான் கம்பெனிகள் இப்போ இருக்கு அவங்க கிட்ட சொல்லி அரேஞ்ச்மெண்ட் ரெடி பண்ணிடுவோம்..”

“சரிங்க அப்படியே செஞ்சுடுவோம் நான் ஒண்ணுமே யோசிக்கல சரியா..?”

“அப்படியே கொஞ்சம் முத்து பல்லு தெரிகிற மாதிரி சிரிச்சா நீ ரொம்ப அழகா இருப்ப..’ என்று அவர் கன்னம் கிள்ளி,

வெட்கத்தில் காயத்ரியின் முகம் செந்நிறத்தைச் சூடிக்கொண்டது.

“என்ன இது சும்மா இருங்க யாராவது பாத்துட்டாங்கன்னா பிள்ளைக்கு கல்யாணம் பண்ற வயசு வந்துச்சு இன்னும் லவ்ஸ் கேட்குதா..?”

“ஏன் என்னோட பொஞ்சாதிய கொஞ்சறதுக்கு இங்க எவன் கேட்டு வருவான்..?” என்று சட்டை காலர் பாட்டினை திறந்து விட்டு சண்டைக்கு நிற்பது போல கருணாகரன் எழுந்து நிற்க,

காயத்ரி அவர் நிற்கும் தோரணையைப் பார்த்து சிரித்து விட்டார்.

“ஆஹ் அது தான் என்னோட காயு குட்டி சரி சரி நான் போயிட்டு வரேன் இந்த ஒத்த சிரிப்புகாகத்தான் இவ்வளவு நேரம் காத்துக் கிடந்தேன் எனக்கு வேலைக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன் என்று கூறிவிட்டு கருணாகரன் வேக நடையுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

**************************

வீட்டுக்கு வந்த மகிழ்மதி அந்த கேஸ் கோப்புகளை தனது அறைக்குள் இருந்து தீவிரமாக புரட்டி புரட்டி படித்துக் கொண்டிருந்தாள்.

‘நடந்த ஒன்பது பெண்களது கடத்தல்களும் ஒரே மாதிரி இருப்பது போல் அவளுக்கு தோன்றியது. காணாமல் போன பெண்கள் அனைவரும் தனிமையில் செல்லும் போது தான் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் கடத்தப்பட்டதை யாருமே பார்க்கவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களை கடத்தி இருப்பதால் அவர்களை யாரோ நீண்ட நாட்கள் கண்காணித்திருக்க வேண்டும்.

எனவே இது ஒரு திட்டமிடப்பட்ட கடத்தல்களாக இருக்கணும் இதை தனி ஒருவன் செய்த மாதிரி தெரியல இதுக்கு பின்னால பெரிய ஒரு கும்பல் இருந்து இருக்கணும்.

எப்படியும் கடத்தப்பட்டவங்களது வீட்டார், ரிலேஷன்ஸ், பிரெண்ட்ஸ் யாரையாவது விசாரிச்சா இதுக்கு ஏதாவது ஒரு முடிவு தெரிய வரும்..’ என்று சிந்தித்தபடி நிவேதா அந்த பைல்களில் இருந்து முக்கியமான விடயங்களை குறித்துக் கொண்டாள்.

ஏனோ அவளுக்கு அன்றைய இராப்பொழுது உறக்கம் இல்லா பொழுதாக மாறிப்போனது.

தனது முதலாவது கேஸ். அதுவும் பெண்கள் பற்றியது. மிகவும் மோசமான கடத்தல் எப்படியாவது கண்டுபிடித்தேயாக வேண்டும். ஆனால் ஒரு குழுவும் கிடைக்கவில்லை. எப்படி, எந்த இடத்தில் இருந்து தொடங்குவது என்று புரியாமல் சிந்தித்துக் கொண்டு இருந்தவளது உறக்கம் தொலைந்து போனது.

மகிழ்மதி அந்தக் கயவர்களை கண்டுபிடிப்பாளா..?

எப்படி கண்டுபிடிப்பாள்….?

பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.2 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!