தேன் 9
நாளை விடிந்தால் திருமணம் என்று இருக்க திருமண ஏற்பாடுகளை பம்பரம் போல சுற்றி சுற்றி காயத்ரியும், கருணாகரனும் செய்து கொண்டிருந்தனர்.
நிவேதாவோ அவை அனைத்தையும் வேடிக்கை பார்த்து சிரித்தபடி தனது தலையாய வேலையான ஊதாரித் தனமாக ஊர் சுற்றுவதை வழமை போல செய்து வந்தாள்.
காலையிலேயே மிக வேகமாக நிவேதா எங்கோ புறப்பட்டு கொண்டிருந்ததைக் கவனித்த காயத்ரி நிவேதாவின் அருகில் வந்து,
“நாளைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு இப்ப எங்க அவசரமா கிளம்பி கிட்டு இருக்க..”
“அம்மா காலையிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா..? என்னம்மா நீங்க கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல நடக்காதீங்கமா..”
“அடியேய் நான் பெத்த மகளே அத நான் தான்டி உன்கிட்ட கேட்கணும்..”
“எப்படியும் நீங்க இப்படி கேப்பீங்கன்னு தெரியும் அதான் அதுக்கு முன்னுக்கு நானே கேட்டுட்டேன்..”
“என்னோட தலையை கொண்டு போய் எங்க முட்டுறன்னு தெரியாம இருக்கேன்..”
“இதோ நம்ம வீட்டு சுவர் ரொம்ப உறுதியானது முட்டிக்கோங்க சுவத்துக்கு ஒன்னும் ஆகாது..”
“இங்க பாரு நிவேதா உன்னோட விளையாட இப்போ எனக்கு நேரமில்லை நாளைக்கு கல்யாணம் இங்க பார்க்கிறதுக்கு 1008 வேலை இருக்கு இந்த நேரம் பார்த்து இப்படி நீ நடந்துக்கிறது கொஞ்சம் கூட சரியில்லை எங்க உங்க அப்பா போயிட்டாரு, பொறு வாரேன்..” என்று காயத்ரி கருணாகரனைத் தேட,
“அம்மா… அம்மா… சரி சரி அப்பாவை கூப்பிடாதீங்க நிப்பாட்டுங்க நாளைக்கு கல்யாணம் பண்றதால இன்னைக்கு நைட்டு பேச்சுலர் பார்ட்டி வச்சிருக்கேன் அதுக்கு தான்மா கிளம்புறேன் ப்ளீஸ்மா போயிட்டு சீக்கிரமா வந்துருவேன்..” என்று நிவேதா கெஞ்ச,
“சரி நைட் 10 மணிக்குள்ள வந்துடனும்..”
“என்னது 10 மணிக்கா..? பத்து மணிக்கு தான் பார்ட்டி ஸ்டார்ட்டே ஆகுது..”
“நிவேதா என்னோட பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு எட்டு மணிக்கு பார்ட்டியை ஸ்டார்ட் பண்ணி பத்து மணிக்கு முடிச்சிட்டு வீட்ட வந்து சேரு அப்படி நீ வரல்லன்னா நான் அப்பாவ கூட்டிட்டு அங்க வந்துடுவேன்..”
“சரி சரி ஓகே 8 மணிக்கே பார்ட்டிய ஸ்டார்ட் பண்ண அரேஞ்ச் பண்றேன்..” என்று கூறிவிட்டு காதில் தொலைபேசியை வைத்துக்கொண்டு ஏதோ தீவிரமாக பேசியபடி வீட்டை விட்டு வெளியேறினாள் நிவேதா.
நிவேதாவுடன் தனிமையில் பேச வேண்டும் என்று நினைத்த கருணாகரன். திருமண ஏற்பாடு செய்யும் வேலைகளிலும், பிசினஸ் வேலைகளிலும் மூழ்கி போனதால் அவளுடன் பேசுவதற்கான நேரம் கிடைக்கவே இல்லை.
அத்துடன் கருணாகரன் வீட்டுக்கு வரும் நேரம் நிவேதா வீட்டில் இருந்தால் தானே பேசுவதற்கு,
அனைத்து வேலைகளையும் பார்த்த பின்பு ஓய்ந்து போய் காயத்ரி இருக்கையில் அமர்ந்து சிந்தித்தபடி இருக்க, அவரது வாடிய முகத்தைக் கண்டு அருகில் வந்து அமர்ந்தார் கருணாகரன்.
“என்ன காயத்ரி தீவிரமா யோசனை போகுது நிவேதாவை பத்தியா..”
“ஆமாங்க நாளைக்கு கல்யாணத்தை வெச்சுகிட்டு இந்த பொண்ணு என்னென்ன கூத்தெல்லாம் பண்ணுது தெரியுமா..?”
“காயு நான் சொல்றேன்னு நீ தப்பா நினைக்காத நிவேதாட போக்கு ரொம்ப மோசமா போய்கிட்டு இருக்கு அவ கல்யாணம் பண்ணிக்குவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை நீ என்னன்னா அவ சொத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஒத்துக்கொண்டத வெச்சு அவளை தப்பா கணக்கு போடாத ஜாக்கிரதை..”
“என் பொண்ணப் பத்தி எனக்கு தெரியாதா..? 25 வருஷமா நான் பாத்துக்கிட்டு வாரேன் அவளை பத்தி நல்லா தெரிஞ்சதால தான் அவள போக்கிலேயே போய் இந்த கல்யாணத்தை முடிக்கணும்னு நான் படாத பாடு பட்டுக்கிட்டு இருக்கேன்..”
“சரி திடீரென்று உன்னோட மகள் கடைசி நேரம் கல்யாணத்துக்கு வராம எங்கேயாவது ஓடிப்போய் ஒழிஞ்சிக்கிட்டானா என்ன பண்ணுவ..?”
“அப்படி அவ செய்யக்கூடிய ஆள் தான் அப்படி செய்வான்னு எனக்கு தெரியும் அதுக்காக தான் அவளுக்கு தெரியாமலே அவ என்ன பண்ணுற எங்க போற என்ன செய்றான்னு பாக்குறதுக்காக ரெண்டு பேரை செட் பண்ணி ஸ்பையா வச்சு இருக்கேன்..
இந்த மூணு நாளா அவ என்ன என்ன பண்ணுறான்னு அரை மணி நேரத்துக்கு ஒருக்கா அவங்க எனக்கு கால் பண்ணி சொல்லுவாங்க..”
“ப்பா மேடம் ரொம்ப சார்ப்புத் தான் எப்படி இந்த கருணாகரனை கல்யாணம் கட்டிகிட்ட பிறகு என்னோட புத்திசாலித்தனம் உங்களோட ஒட்டிக்கிச்சா இல்லான்னா நிவேதா பிறந்த பிறகு உங்க மகளோட திருட்டுத்தனத்தை கண்டுபிடிப்பதற்காக வந்ததா..?”
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல இது பிறவியிலிருந்தே இருக்கு சும்மா என்ன சீண்டிகிட்டு இருப்பாங்க போய் வேலையை பாருங்க..”
“ஆஹ்.. ஹா.. ஹா.. ஹா.. ஹா..” என்று கருணாகரன் சிரிக்க,
“போதும் போதும் ஓயாம ஒரே லவ்ஸ்ஸு விட்டுட்டு இருக்கிறது தான் உங்களுக்கு வேலை சொந்தக்காரங்க எல்லாம் வார டைம் ஆச்சு போங்க போங்க..” என்று கூற கருணாகரன் காதல் பார்வையுடனே நகர்ந்து சென்றார்.
கருணாகரன் சென்ற பின்பு காயத்ரிக்கு ஏதோ புதுத் தெம்பு வந்தது போல இருந்தது. மனதில் இருந்த வேதனை சற்று விலகி மனம் புத்துணர்ச்சியுடன் இருப்பது போலவே தெரிந்தது. மேலும் வேலைகளைச் செய்ய தொடங்கினார்.
*************************