9. சிந்தையுள் சிதையும் தேனே..!

4.7
(10)

தேன் 9

நாளை விடிந்தால் திருமணம் என்று இருக்க திருமண ஏற்பாடுகளை பம்பரம் போல சுற்றி சுற்றி காயத்ரியும், கருணாகரனும் செய்து கொண்டிருந்தனர்.

நிவேதாவோ அவை அனைத்தையும் வேடிக்கை பார்த்து சிரித்தபடி தனது தலையாய வேலையான ஊதாரித் தனமாக ஊர் சுற்றுவதை வழமை போல செய்து வந்தாள்.

காலையிலேயே மிக வேகமாக நிவேதா எங்கோ புறப்பட்டு கொண்டிருந்ததைக் கவனித்த காயத்ரி நிவேதாவின் அருகில் வந்து,

“நாளைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு இப்ப எங்க அவசரமா கிளம்பி கிட்டு இருக்க..”

“அம்மா காலையிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா..? என்னம்மா நீங்க கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல நடக்காதீங்கமா..”

“அடியேய் நான் பெத்த மகளே அத நான் தான்டி உன்கிட்ட கேட்கணும்..”

“எப்படியும் நீங்க இப்படி கேப்பீங்கன்னு தெரியும் அதான் அதுக்கு முன்னுக்கு நானே கேட்டுட்டேன்..”

“என்னோட தலையை கொண்டு போய் எங்க முட்டுறன்னு தெரியாம இருக்கேன்..”

“இதோ நம்ம வீட்டு சுவர் ரொம்ப உறுதியானது முட்டிக்கோங்க சுவத்துக்கு ஒன்னும் ஆகாது..”

“இங்க பாரு நிவேதா உன்னோட விளையாட இப்போ எனக்கு நேரமில்லை நாளைக்கு கல்யாணம் இங்க பார்க்கிறதுக்கு 1008 வேலை இருக்கு இந்த நேரம் பார்த்து இப்படி நீ நடந்துக்கிறது கொஞ்சம் கூட சரியில்லை எங்க உங்க அப்பா போயிட்டாரு, பொறு வாரேன்..” என்று காயத்ரி கருணாகரனைத் தேட,

“அம்மா… அம்மா… சரி சரி அப்பாவை கூப்பிடாதீங்க நிப்பாட்டுங்க நாளைக்கு கல்யாணம் பண்றதால இன்னைக்கு நைட்டு பேச்சுலர் பார்ட்டி வச்சிருக்கேன் அதுக்கு தான்மா கிளம்புறேன் ப்ளீஸ்மா போயிட்டு சீக்கிரமா வந்துருவேன்..” என்று நிவேதா கெஞ்ச,

“சரி நைட் 10 மணிக்குள்ள வந்துடனும்..”

“என்னது 10 மணிக்கா..? பத்து மணிக்கு தான் பார்ட்டி ஸ்டார்ட்டே ஆகுது..”

“நிவேதா என்னோட பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு எட்டு மணிக்கு பார்ட்டியை ஸ்டார்ட் பண்ணி பத்து மணிக்கு முடிச்சிட்டு வீட்ட வந்து சேரு அப்படி நீ வரல்லன்னா நான் அப்பாவ கூட்டிட்டு அங்க வந்துடுவேன்..”

“சரி சரி ஓகே 8 மணிக்கே பார்ட்டிய ஸ்டார்ட் பண்ண அரேஞ்ச் பண்றேன்..” என்று கூறிவிட்டு காதில் தொலைபேசியை வைத்துக்கொண்டு ஏதோ தீவிரமாக பேசியபடி வீட்டை விட்டு வெளியேறினாள் நிவேதா.

நிவேதாவுடன் தனிமையில் பேச வேண்டும் என்று நினைத்த கருணாகரன். திருமண ஏற்பாடு செய்யும் வேலைகளிலும், பிசினஸ் வேலைகளிலும்  மூழ்கி போனதால் அவளுடன் பேசுவதற்கான நேரம் கிடைக்கவே இல்லை.

அத்துடன் கருணாகரன் வீட்டுக்கு வரும் நேரம் நிவேதா வீட்டில் இருந்தால் தானே பேசுவதற்கு,

அனைத்து வேலைகளையும் பார்த்த பின்பு ஓய்ந்து போய் காயத்ரி இருக்கையில் அமர்ந்து சிந்தித்தபடி இருக்க, அவரது வாடிய முகத்தைக் கண்டு அருகில் வந்து அமர்ந்தார் கருணாகரன்.

“என்ன காயத்ரி தீவிரமா யோசனை போகுது நிவேதாவை பத்தியா..”

“ஆமாங்க நாளைக்கு கல்யாணத்தை வெச்சுகிட்டு இந்த பொண்ணு என்னென்ன கூத்தெல்லாம் பண்ணுது தெரியுமா..?”

“காயு நான் சொல்றேன்னு நீ தப்பா நினைக்காத நிவேதாட போக்கு ரொம்ப மோசமா போய்கிட்டு இருக்கு அவ கல்யாணம் பண்ணிக்குவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை நீ என்னன்னா அவ சொத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஒத்துக்கொண்டத வெச்சு அவளை தப்பா கணக்கு போடாத ஜாக்கிரதை..”

“என் பொண்ணப் பத்தி எனக்கு தெரியாதா..? 25 வருஷமா நான் பாத்துக்கிட்டு வாரேன் அவளை பத்தி நல்லா தெரிஞ்சதால தான் அவள போக்கிலேயே போய் இந்த கல்யாணத்தை முடிக்கணும்னு நான் படாத பாடு பட்டுக்கிட்டு இருக்கேன்..”

“சரி திடீரென்று உன்னோட மகள் கடைசி நேரம் கல்யாணத்துக்கு வராம எங்கேயாவது ஓடிப்போய் ஒழிஞ்சிக்கிட்டானா என்ன பண்ணுவ..?”

“அப்படி அவ செய்யக்கூடிய ஆள் தான் அப்படி செய்வான்னு எனக்கு தெரியும் அதுக்காக தான் அவளுக்கு தெரியாமலே அவ என்ன பண்ணுற எங்க போற என்ன செய்றான்னு பாக்குறதுக்காக ரெண்டு பேரை செட் பண்ணி ஸ்பையா வச்சு இருக்கேன்..

இந்த மூணு நாளா அவ என்ன என்ன பண்ணுறான்னு அரை மணி நேரத்துக்கு ஒருக்கா அவங்க எனக்கு கால் பண்ணி சொல்லுவாங்க..”

“ப்பா மேடம் ரொம்ப சார்ப்புத் தான் எப்படி இந்த கருணாகரனை கல்யாணம் கட்டிகிட்ட பிறகு என்னோட புத்திசாலித்தனம் உங்களோட ஒட்டிக்கிச்சா இல்லான்னா நிவேதா பிறந்த பிறகு உங்க மகளோட திருட்டுத்தனத்தை கண்டுபிடிப்பதற்காக வந்ததா..?”

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல இது பிறவியிலிருந்தே இருக்கு சும்மா என்ன சீண்டிகிட்டு இருப்பாங்க போய் வேலையை பாருங்க..”

“ஆஹ்.. ஹா.. ஹா.. ஹா.. ஹா..” என்று கருணாகரன் சிரிக்க,

“போதும் போதும் ஓயாம ஒரே லவ்ஸ்ஸு விட்டுட்டு இருக்கிறது தான் உங்களுக்கு வேலை சொந்தக்காரங்க எல்லாம் வார டைம் ஆச்சு போங்க போங்க..” என்று கூற கருணாகரன் காதல் பார்வையுடனே நகர்ந்து சென்றார்.

கருணாகரன் சென்ற பின்பு காயத்ரிக்கு ஏதோ புதுத் தெம்பு வந்தது போல இருந்தது. மனதில் இருந்த வேதனை சற்று விலகி மனம் புத்துணர்ச்சியுடன் இருப்பது போலவே தெரிந்தது. மேலும் வேலைகளைச் செய்ய தொடங்கினார்.

 

*************************

 

மகிழ்மதி தொலைந்து போன பெண்களின் வீட்டாரிடமும், நண்பர்களிடமும் அவர்கள் வழமையாகச் சென்று வரும் இடங்கள் என்று சல்லடை போட்டு அனைத்து இடங்களிலும் தீவிரமாக விசாரணை நடத்தி கொண்டிருந்தாள்.

“எல்லாமே மர்மமாய் இருந்தது. இந்த கேஸை என்னால முடிக்க முடியுமா எங்க சுற்றிப் பார்த்தாலும் ஒரு வழி கூட கிடைக்கலயே..!” என்று அவளுக்கு நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.

அந்நேரம் பார்த்து கமிஷனர் அவளுக்கு அழைப்பு எடுக்க,

“ஹலோ மகிழ்மதி விசாரணை எல்லாம் என்ன மாதிரி போய்கிட்டு இருக்கு எனி அப்டேட்..”

“இதோ விசாரணை போய்கிட்டு இருக்கு சார் கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவேன்..”

“ஓகே மகிழ்மதி இப்போ எதுக்கு உங்களுக்கு கால் பண்ணினேன்னா இதே மாதிரி சென்னைலையும் மூணு பொண்ணுங்க இந்த மூணு நாள்ல காணாமல் போய் இருக்காங்க

இதுபோல வன் இயருக்கு முன்னுக்கும் சென்னையில நடந்திருக்கு ஆனால் இப்போவும் அதே மாதிரி பொண்ணுங்க காணாமல் போறாங்க நான் நினைக்கிறேன் அந்தக் கடத்தல்களும் சிலவேளை இதோட தொடர்பு பட்டிருக்கும்னபட்டிருக்கும்

நீங்க உடனே சென்னைக்கு போய் அங்க அன்னைக்கு பார்த்தீங்களே அசிஸ்டன்ட் கமிஷனர் ரகுவரன் கிட்ட போங்க ஏதோ முக்கியமான இன்ஃபர்மேஷன் கிடைச்சிருக்குன்னு சொன்னாரு

அதோட சில தடயங்களும் கிடைச்சிருக்காம் தீவிரமா அவங்க தேடிக்கிட்டு வாராங்க அக்யூஸ்ட் இருக்குற இடமும் கண்டுபிடிச்சாச்சுன்னு தகவல் சொன்னாரு

நீங்க அந்த இடத்துக்கு போனீங்கன்னா உங்க இன்வெஸ்டிகேசனுக்கு ஹெல்ப்பா இருக்கும் அந்த கேங்கோட ஒரு  அக்யூஸ்ட் தான் மாட்டி இருக்கானும்  இன்னைக்குள்ள அவனை பிடிச்சுருவோம்னு தான் சொன்னாரு

ஒருவேளை அவன் பிடிபட்டான்னா அந்த கேங்கோட சம்பந்தப்பட்ட எல்லா டீடெயில்ஸும் கிடைச்சிடும் நீங்களும் அந்த இடத்துல இருந்தீங்கன்னா நல்லா இருக்கும் உங்களோட கேச டீல் பண்றதுக்கும் கொஞ்சம் ஹெல்ப்பா இருக்கும்..”

“இருள் சூழ்ந்த நடுக்காட்டில் திரிந்தவளுக்கு ஏதோ ஒரு தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது போல இருந்தது. அவளது முகம் எல்லாம் அவ்வளவு பிரகாசம், சந்தோசம் அவளது மனதில் புது உற்சாகம் ஒன்று பிறந்தது.

“எங்கே தனக்கென்று ஒப்படைத்த முதலாவது பணியை தன்னால் நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ..!” என்று நிம்மதியின்றி தவித்துக் கொண்டு இருந்தவளுக்கு இது ஒரு பெரிய தன்னம்பிக்கையூட்டும் செய்தி என்றே கூறலாம். அவள் சந்தோஷத்தில் எதுவும் கூறாமல் இருக்க,

“ஹலோ மகிழ்மதி லைன்ல இருக்கீங்களா..? ஹலோ… ஹலோ..”

“எஸ்… எஸ்.. சார் நான் இதோ உடனே இப்பவே சென்னைக்கு கிளம்புறேன் உடனே ரகுவரன் சேர மீட் பண்றேன் தேங்க்யூ சார் தேங்க்யூ சோ மச்..” என்று கூறியதும் கமிஷனர் தொலைபேசியை துண்டித்து விட்டார்.

மகிழ்மதியின் சென்னை நோக்கிய பயணம் எப்படி அமையும்..?

கேஸ் பற்றிய பல சிந்தனைகளுடன் அவள் பயணிக்க, அங்கோ விதி அவளை வைத்து புது ஆட்டம் ஆட தயாராகிக் கொண்டிருந்தது.

பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!