தன் அண்ணன் கூறியதைக் கேட்டு புரையேற விழி விரித்து அண்ணனை பார்த்தாள் தன்வி.
தான் குடித்துக் கொண்டிருந்த காஃபி கஃபை டேபிளில் வைத்து விட்டு, “ ஹே! பார்த்து தனு!”என்று தங்கையின் தலையை தட்டினான் ரித்திஷ்பிரணவ்.
“அண்ணா! நீங்க என்ன சொல்றீங்க?” என்று பயத்துடன் திக்கித், திணறி வினவ.
“எதுக்கு இப்படி பயப்படுற? நான் என்ன கொலை பண்ணவா ஐடியா கேட்டேன். லவ் ப்ரொபோஸ் பண்ண தானே ஐடியா கேட்டேன்.” என்று தங்கையைப் பார்த்து வினவினான் ரித்திஷ்பிரணவ்.
“அது… எப்படிண்ணா அதெல்லாம் எனக்கு தெரியும். நான் யாருக்கும் ப்ரொபோஸ் பண்ணதில்லையே.” என்று பயத்தில் வாய்க்கு வந்ததை உளறி கொட்டியவளோ,’டேய் மடையா! இதெல்லாமா தங்கச்சி கிட்ட கேட்கிறது.’ என்று மனதிற்குள் நொடித்துக் கொள்ளவும் செய்தாள்.
அவளது மனதை படித்தவனோ,”என்னடா இதெல்லாம் தங்கச்சி கிட்ட கேட்பாங்களா மடையான்னு நினைக்கிறியா?” என்று வினவ.
ஆமாம் என்று தலையாட்டி விட்டு, பதறியவாறே,”இல்லைண்ணா!” என்று வேகமாக கூறினாள்.
“நீ யோசிக்கிறது அப்படியே ஃபேஸ்ல தெரியுது. ஒரு அண்ணன் இதெல்லாம் தங்கச்சிக் கிட்ட கேட்கக்கூடாதுன்னு நினைக்கிறல்ல, அதே போலத்தான் அண்ணனைப் பத்தி என்ன பேசுறங்குறதும் இருக்கு. எப்பப் பாரு, அண்ணன் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான். அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்னு வயசுக்கு மீறி பேசுறது.” என்று கோபமாக கூற.
‘ஆத்தி நம்ம பேசுனதை கேட்டுட்டார் போல. அதான் வச்சு செய்றார்.’ என்று மனதிற்குள் எண்ணியவளோ, கண்ணை கசக்கியவாறே, “ சாரி அண்ணா! தெரியாமல் சொல்லிட்டேன்.” என்றாள்.
“ஓகே இனிமேலாவது வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ. சரி கீழே போ.” என்று கூற.
விட்டால் போதும் என்று ஓடிய தன்வியோ, கதவு வரை சென்று விட்டு அண்ணனை பார்த்து திரும்பிப் பார்த்து, “அண்ணா மொத மொதல்ல நீ என்கிட்ட ஒன்னு கேட்டுட்டு அதுக்கு பதில் சொல்லாமல் போனால் எனக்கு தூக்கம் வராது. அண்ணிக்கு பீச்சுன்னா ரொம்ப பிடிக்கும். அங்க போய் ப்ரொபோஸ் பண்ணீங்கன்னா, அவங்க இம்ப்ரெஸ் ஆக சான்ஸ் இருக்கு. ஆல் த பெஸ்ட்.” என்றுக் கூற.
“அடிங்க!” என்று ரித்திஷ்பிரணவ எழுந்து வருவதற்குள் சிட்டாக ஓடி விட்டாள் தன்வி.
ஓடும் தங்கையை பார்த்து தலையசைத்தவன், ‘கொஞ்சமாவது அடங்கறாளா பாரு! ஆனாலும் தன்வி நல்ல ஐடியா தான் கொடுத்திருக்கா
‘என்று மனதிற்குள் கூறிக் கொண்டான்.
எந்த இடத்திற்கு தியாழினியை அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தவன், பொக்கேவை தெரிவு செய்து வைத்து விட்டு, அவளை ஆச்சரியப்படுத்துவதற்காக சில ஏற்பாடுகளை கோபி மூலம் செய்து, கோபியையும் ஆச்சரியப்படுத்தினான்.
தன்னுடைய பரபரப்பு வீட்டில் உள்ளவர்களுக்கு காட்டிக் கொடுத்து விடும் என்பதால் அவர்களுக்கு மியூசிக் கான்சர்டுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்திருந்தான்.
தீபாவும், கேசவ்வும் ஆச்சரியமாக பார்க்க.
“தெரிஞ்சவங்க குடுத்தாங்க. தனுவுக்கு பிடிக்கும். மூணு பேரும் போயிட்டு வாங்க.” என்றுக் கூற அவர்களும் அன்று மாலை செல்வதாக இருந்தனர்.
அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்பு, என்ன ட்ரெஸ் போடலாம் என்று யோசித்து, வார்ட்ரோப்பையே கலைத்துப் போட்டு விட்டு, பிறகு எப்பவும் போலவே கிளம்பினான் ரித்திஷ்ப்ரணவ்.
மனதில் இருந்த உற்சாகமும், பரபரப்பும் அவனை மிக அழகாகக் காட்டியது.
அலுவலகத்திற்கு சென்ற ரித்திஷ்ப்ரணவ்வோ, அவனது நாற்காலியில் அமர்ந்து, கண்களை மூடினான்.மூடியவனோ கற்பனையில் ஆழ்ந்திருந்தான்.
அவன் வந்ததும் நோட் பேடோடு, அருகே வந்தாள் தியாழினி.
கண்கள் மூடி, முகமெல்லாம் விகசித்து, இருந்தவனை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தியாழினி.
தியாழினியின் வருகையை உணர்ந்தவனோ, அவளது அழைப்பிற்காக காத்திருக்க, அவளது மௌனத்தில் விழி விரித்துப் பார்த்தான்.
அவன் பார்த்ததும், பதறி பார்வையை திருப்பிக் கொண்டாள் தியாழினி.
லேசாக நகைத்தவனோ, “யாழினி! ஈவினிங் ரெடியா இரு. வெளியே போகணும்.”என்றுக் கூற.
தலையாட்டினாள் தியாழினி.
“எங்கன்னு கேட்க மாட்டியா யாழினி.”
“ நீங்களே சொல்லுவீங்கன்னு நினைச்சேன் சார்.” என்று மெல்லிய குரலில் கூறியவள், ‘உங்களோட
இருப்பதே எனக்குப் போதும். அப்புறம் ஏன் கேள்விக் கேட்கப் போறேன்.’ என்று எண்ணினாள்.
“நான் சொல்ல மாட்டேன். அது சர்ப்ரைஸ். ஈவினிங் நீயே தெரிஞ்சுப்ப.” என்றுக் கூறி புன்னகைத்தான்.
அவனது புன்னகையை சேகரித்து மனப்பெட்டகத்தில் வைத்துக் கொண்டாள்.
****************
மாலை மயங்கும் வேளையில், மனதிற்கு இனியவளை, அந்த தனியாருக்கு சொந்தமான பீச் பகுதி அழைத்துச் சென்றான் ரித்திஷ்ப்ரணவ்.
காரிலிருந்து இறங்கியதும், தியாழினியின் கண்களைப் பொத்தி அழைத்துச் சென்றான்.
“சார்!” என்று படபடப்பாக தியாழினி அழைக்க.
அவளது செவியோரம்,”ஷ்!” என்றான் ரித்திஷ்ப்ரணவ்.
அவனது அனல் மூச்சு அவளைப் படபடக்க செய்தது.
அவளது ஒவ்வொரு செய்கையையும் ரசித்துக் கொண்டே, அவன் ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றவன், கைகளை விலக்கினான்
விழி விரித்து பார்த்தவளின் கண் முன்னே பரந்த வானமும், போட்டிப் போட்டுக் கொண்டு கரையைத் தொடும் அலைகளும், அந்த அழகிய இடத்தில் மேலும் அழகுற செய்ய சிவப்பு பலூன்களால் அலங்காரம் செய்த ஹார்ட் வடிவிலான சிறிய மேடை அவனது மனதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
வெட்கமும், பூரிப்புமாக அவள் இருக்க. அதையெல்லாம் தனது ஃபோனில் ரெக்கார்ட் செய்துக் கொண்டிருந்தான்.
அதைத் தடை செய்வது போல அவனது ஃபோன் அடித்தது
கட் செய்தான் ரித்திஷ்ப்ரணவ்.
மீண்டும் அவனது ஃபோன் அடிக்க.
யோசனையுடன் எடுத்தான் ரித்திஷ்ப்ரணவ்.
அழைத்தது கோபி. ‘முக்கியமான விஷயம் இல்லாமல் தான் கட் செய்தும் தொடர்ந்து அழைக்க மாட்டாரே.’ என்று யோசனையுடனே ஃபோனை ஆன் செய்தான்.
“அந்த கொட்டிவாக்கம் ப்ராஜெக்ட் நம்ம கையை விட்டு போயிடுச்சு.”
“ ஹவ் பாஸிபல்? இருக்குறதுலே லோ ஃப்ராபிட் வச்சு தானே கோட் பண்ணோம். எந்த கம்பெனிக்கு கிடைச்சிருக்கு. எவ்ளோ அமௌன்ட் டிஃபெரெண்ட்ஸ்.” என்று புருவம் சுருக்கி வினவினான் ரித்திஷ்பிரணவ்.
“ அது வந்து நம்ம கோட் பண்ணத விட ஜஸ்ட் ஹண்ட்ரெட் ரூபிஸ் குறைவா கோட் பண்ணியிருக்காங்க. நியூ கன்ஸ்ட்ரக்ஷன். நேம் நேத்ரன்.” என்ற கோபி முழுவதும் கூறாமல் தயக்கத்துடன் இழுக்க.
“ வாட் கோபி? இன்னும் என்ன விஷயம் இருக்கு? அதையும் சொல்லுங்க. எதுக்கு தயங்குறீங்க? தென் உங்கக் கிட்ட இந்த கேர்லெஸை எதிர்ப்பார்க்கலை. இவ்வளவு குறைவா கோட் பண்ணி இருக்காங்கன்னா, ஏதோ தப்பு நடந்திருக்கு. நீங்க இன்னும் கவனமா இருந்திருக்கணும்.”
“ சார்! இந்த தடவை என் கிட்ட இருந்து வெளி வரலை.” என்று கோபி கூறும் போதே, இந்தப் பொறுப்பை யாரிடம் ஒப்படைத்தான் என்பது அவனுக்கு நினைவுக்கு வர,
திரும்பி தியாழினியைப் பார்த்தான்.
அவளோ இவனைத் தான் வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தலையை உலுக்கிக் கொண்டவன்,” சிசிடிவி ஃபுட்டேஜ் பார்த்தீங்களா கோபி?” என்று வினவினான்.
“பார்த்தேன் சார்! அது…” என்று தயக்கத்துடன் ஏதோ கூற வர.
“அந்த ஃபுட்டேஜ்ஜை எனக்கு அனுப்புங்க.”
“ சார்!” என்று கோபி அழைக்க.
“நோ மோர் டாக். ஃபர்ஸ்ட் அதை எனக்கு அனுப்புங்க.” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூற.
கோபி பெருமூச்சு விட்டுக் கொண்டே அனுப்பினார்.
ரித்திஷ்ப்ரணவால் நம்பவே முடியவில்லை. அதிர்ந்து நின்றதெல்லாம் ஒரு நொடி தான். அதற்குப் பிறகு ஆக்ரோஷமாக தியாழினியிடம் சென்றான்.
அவளோ, இவனைப் பார்ப்பதும் வெட்கப்படுவதுமாக இருக்க.
அவனுக்கு வந்த கோபத்திற்கு அங்கு இருந்த அலங்காரத்தை எல்லாம் பிச்சு போட்டான்.
“ப்ரணா!” என்று அழைக்க.
“கொன்றுவேன்! என் பேர சொன்னா அப்படியே கொன்னு இந்த கடல்ல புதைச்சுடுவேன்.” என்று அவளது கழுத்தை நெறிக்க சென்றான்.
தியாழினி பயந்து விழிக்க.
“ச்சே!” என்று கையை உதறியவன், “இந்தப் பார்வையை வச்சு தானே என்னை ஏமாத்துன. நானும் கேனையனாட்டாம் ஏமாந்துப் போயிருக்கேன்.
திருடன் கையில் சாவியை கொடுத்தால் திருட மாட்டாங்கன்னு சொல்லுவாங்க. ஆனா நீ அது தான் சான்ஸுனு யூஸ் பண்ணிக்கிட்ட.
உன்கிட்ட அந்த கொட்டேஷனை கொடுத்து டெஸ்ட்பாட்ச் பண்ண சொன்னா, கொஞ்சம் கூட சிசிடிவி கேமரா இருக்கும்னு பயம் இல்லாமல் அலட்சியமா அப்படியே வாட்ஸ் அப் பண்ணி இருக்கேன்னா, எவ்வளவு திமிர் இருக்கணும். உன்னை அப்படியே கொன்னுப்போட்டாக் கூட என் ஆத்திரம் தீராது.” என்று கொந்தளித்தான் ரித்திஷ்ப்ரணவ்.
“ப்ர.. சார்…” என்று ஏதோ கூற வந்தாள் தியாழினி.
“மூச்! எதுவும் பேசக் கூடாது. அந்த நேத்ரனுக்கும், உனக்கும் என்ன சம்பந்தம்? இந்த கேவலமான வேலையை என்னை மயக்கி செய்ய சொல்லி அனுப்பினானா? அவன் சொன்னான்னு தானே நீயும் எனக்கு வலை விரிச்ச. ஆனால் ஒன்னும் சொல்லணும், நீ நல்லா நடிச்சுருக்க. உன் நடிப்புல மயங்கி, நானும் பைத்தியக்காரனா லவ் சொல்ல இவ்வளவு ஏற்பாடு பண்ணிருக்கேன் பாரு.” என்று அந்த மேடையை எத்தினான்.
“தப்பா பேசாதீங்க சார்.” என்று வேகமாக மறுத்தாள் தியாழினி.
“ஓஹோ! அந்த கேடுக்கெட்டவனை சொன்னா உனக்கு வலிக்குதோ. அவனை சும்மா விடுவேன்னு நினைச்சியோ. இந்த ஒரு ஆதாரம் போதும். உங்க ரெண்டு பேரையும் உள்ளத் தள்ள. அவன் இனி இந்த கன்ஸ்ட்ரக்ஷன் பிஸ்னஸ்ல நுழையவே முடியாதபடி செய்றேன் .” என்றவாறே ஃபோனை எடுத்து யாருக்கோ அழைக்க.
“ப்ளீஸ்! ப்ரணா! எங்க அண்ணனை ஒன்னும் பண்ணிடாதே.” என்று அவன் கைகளைப் பிடித்துக் கெஞ்சினாள் தியாழினி.
வேகமாக அவளது கைகளைத் தட்டி விட. கீழே விழுந்தாள் தியாழினி.
“ஓஹோ! அண்ணனுக்காக இந்த அளவுக்கு இறங்குவியா? ரைட்! இப்போ உங்க அண்ணனை நான் சும்மா விடணும்னா, நான் சொல்றதை செய்வியா?” என்று அவளை அழுத்தமாகப் பார்த்தபடி வினவ.