குறிஞ்சி மலர்.. 60
விருந்தினர் இல்லத்தில் இருந்த போது, பொழுது போகாத நேரங்களில் வியாகேசோடு ஜேம்ஸை எப்படித் தன் வழிக்கு கொண்டு வரலாம் என கோதை திட்டம் போட்ட போது தான், அவரின் மூலமாக லாரன்ஸும் போதை கடத்தும் தொழில் செய்கிறான் என்பது கோதைக்குத் தெரிய வந்தது.
அவ்வளவு தான் அடுத்த நொடியே லாரன்ஸுக்கு கோதையிடம் இருந்து ஃபோன் அழைப்பு பறக்க, கொழும்பில் முக்கியமான மீட்டிங்கில் இருந்த லாரன்ஸ், கோதையின் பெயரைப் ஃபோனில் பார்த்ததும், மீட்டிங்கில் இருந்தவர்களிடம் எஸ்கியூஸ் கேட்டு விட்டு, வெளியே வந்து அவளது அழைப்பை ஏற்றான்.
லாரன்ஸ் இந்தளவு தூரம் முக்கியம் கொடுத்து யாருடன் பேசுகிறான் என்பது போல மற்றவர்கள் அவனை வேடிக்கை பார்க்க அவனோ தன் பாசமலரின் அழைப்பை சந்தோஷமாக ஏற்றுக் காதில் வைத்தான்.
“சொல்லும்மா..”
“அண்ணா.. எனக்காக என்னெண்டாலும் செய்வன் எண்டு சொன்னியளே அது உண்மையோ..”
“உன்ரை அண்ணன் பொய் சொல்ல மாட்டன் எண்டு உனக்கு தெரியாதோ..”
“தெரியும் தான்.. இருந்தாலும் நீங்கள் திரும்பவும் ஒருக்கா உறுதிமொழி குடுங்கோ..”
“நீ என்ன சொன்னாலும் செய்வன்.. இப்ப நிக்கிற பில்டிங்கில இருந்து தலைகீழா குதிக்கச் சொன்னாலும் செய்வன்.. ஆனா நீ என் கிட்டே எதையுமே கேக்கிறாயே இல்லையே..”
“இப்ப இந்த நிமிஷமே கேக்கிறன் செய்வியளோ..”
“ஐயோ செய்யிறன் கோதையம்மா.. அதுக்காக தானே அண்ணன் வெயிற்றிங்.. சொல்லு..”
“என் மேல சத்தியமா..”
“சத்தியம் எல்லாம் என்னத்துக்கு தங்கச்சி.. நீ கேட்டால் நான் செய்வன் அண்ணனுல நம்பிக்கை இல்லையோ..”
“நம்பிக்கை இருக்கிறதால தான் கேக்கிறன்.. என் மேல சத்தியம் செய்யுங்கோ நான் சொல்லுறதை செய்வன் எண்டு..”
“சரி உன்ரை திருப்திக்காக செய்யிறன்.. என்ரை தங்கச்சி மேல சத்தியமா நான் நீ சொல்லுறதை செய்வன் போதுமா..”
என லாரன்ஸ் சத்தியம் செய்ததும் அந்தப் பக்கம் கோதை மௌனமாகிப் போனாள்.
“கோதைம்மா.. இருக்கியாடி அது தான் அண்ணா சத்தியம் செஞ்சிட்டனே பிறகு ஏன் பேசாமல் இருக்கிறாய்..”
“அண்ணோய்..”
“சொல்லுடா.. நீ என்ன கேட்டாலும் நான் செய்வன் கேளும்மா..”
“அண்ணா.. நீயும் போதை கடத்துறனியோ..”
“உனக்கு யாரு சொன்னது..”
“அப்ப கடத்துறனி அப்புடித் தானே..”
“கோதைம்மா அதெல்லாம் உனக்கு தெரியக் கூடாத விசியமடா.. உதைப் பத்தி எல்லாம் நீ யோசிக்கவே கூடாது..”
“இப்ப கேக்கிறன்.. எனக்காக அந்த தொழிலை நீ விடுவியோ மாட்டியோ..”
“கோதைம்மா..”
“இந்தக் கோதைமா கோதுமைமாக் கதை எல்லாம் வேண்டாம்.. நான் என்ன சொன்னாலும் செய்வன் எண்டு சத்தியம் செஞ்சு குடுத்திருக்கிறாய்.. அந்த தொழிலை அடியோட விட்டிட்டு எனக்கு ஒரு நல்ல அண்ணனா என்னைய வந்து பாரு.. அது வரைக்கும் உன்னோட நான் கதைக்க மாட்டன்..”
“தங்கச்சி தங்கச்சீ..”
என லாரன்ஸ் அந்தப் பக்கம் சத்தம் போட, ஃபோனை கட் செய்து ஆஃப் செய்தாள் கோதை.
அவளுக்கு உள்ளூர கலக்கமாக இருந்தது. எங்கே லாரன்ஸும் ஜேம்ஸைப் போல அடம் பிடிப்பானோ என ஏகத்துக்கும் யோசனை செய்தாள்.
ஆனால் அவள் பயந்தது போல இல்லாமல் ஒரு நாள் முழுவதும் தீவிரமாக யோசனை செய்த லாரன்ஸ் அடுத்த தினமே, தன்னிடம் கிடந்த அத்தனை போதைப் பொருட்களையும் ஒரு பெரிய வாகனத்தில் ஏற்றி, பொலிஸாரிடம் அது அகப்படும் படி வழி வகை செய்திருந்தான்.
அதோடு தன்னிடம் பங்குதாரர்களாக இருந்து சரக்குகளை கைமாற்றும் அத்தனை பேரிடமும், தனக்கும் இந்தத் தொழிலுக்கும் இனிமேல் எதுவிதமான தொடர்பும் இல்லை என்றும், இது தொடர்பாக தன்னை இனிமேல் நாட வேண்டாம் என்றும் அறிவித்து விட்டு, எல்லோரிடமும் எல்லாவற்றையும் செட்டில்மெண்ட் செய்து விட்டிருந்தான்.
அதன்படி ஜேம்ஸுக்கும் லாரன்ஸ் அந்தத் துறையில் இருந்து முற்று முழுதாக நீங்கி விட்டான் என்ற செய்தி வந்து சேர்ந்தது.
லாரன்ஸை பொறுத்தவரை இந்தத் தொழிலை விடலாம் என்ற எண்ணம் ஏற்கனவே அவனிடம் அரைமனதாக இருக்கத் தான் செய்தது. அதிலும் தங்கை என உயிரை வைத்து விட்ட ஒருத்தி, தன் மீதே சத்தியம் செய்து இந்தத் தொழிலை விடச் சொன்னதும் அவன் முழு மனதாகவே அதை விட்டு விட்டான்.
……………
கோதை பக்கத்தில் இல்லாமல் ஒரு நாளைக் கடத்துவதே ஜேம்ஸால் முடியவில்லை. அதற்குள் லாரன்ஸ் போதை கடத்தும் தொழிலை அடியோடு விட்டு விட்டான் என்ற செய்தியும் அவனுக்கு வந்தபோது, அவன் லாரன்ஸை ஃபோனில் அழைத்திருந்தான்.
“என்னடா.. என்ன நடந்த ஏன் எல்லாத்தையும் விட்டிட்டாய்..”
“என் தங்கச்சி இருக்காளே உம் பொண்டாட்டி.. எனக்கு ஃபோன் செஞ்சு நான் முக்கியமோ உந்த தொழில் முக்கியமோண்டு கேட்டாளா.. நமக்கு தங்கச்சி தானே எப்பவுமே முக்கியம்.. இந்த உக்கிப் போன தொழில் எல்லாம் ஒரு விசயமா எண்டு விட்டிட்டன்டா..”
“எப்புடிடா.. இத்தனை நாள் கட்டிக் காத்த அந்த சாம்ராஜ்யத்தை விட முடிஞ்சுது..”
“உறவுகளை விடவோ இதெல்லாம் முக்கியம்.. யோசிச்சு பாத்தன்.. உன் பொண்டாட்டி வேறை பிடிவாதக்காரி ஒண்டு நினைச்சால் அதை நடத்தீட்டு தான் மற்ற வேலை பாப்பாள்.. நான் வேறை அவளுக்கு கடன் பட்டிருக்கிறன்.. அது தான் இந்த தொழிலை விட்டு அந்தக் கடனை அடைச்சிட்டன்.. அடுத்த மாதம் உன் வீட்டுக்கு வாரன்.. உன்னையப் பாக்க இல்லை என்ரை தங்கச்சியைப் பாக்க.. அப்புறம் நீயும் சீக்கிரமா உந்தத் தொழிலை விடப் பாரு நம்ம கோதைக்காக..”
என்ற லாரன்ஸ் ஃபோனை வைத்து விட, தலையைப் பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்து விட்டான் ஜேம்ஸ்.
என் பேபியை விடவா இந்த தொழில் எனக்கு பெரிசு என அவன் எண்ணம் ஓட, லாரன்ஸை மானசீகமாக பாராட்டினான். தங்கை என்ற உரிமையில் அவன் செய்ததை தான் ஏன் தன் பேபிக்காக செய்யவில்லை எனத் தன்னையே நொந்து கொண்டான். அடுத்த கணமே வேக வேகமாக தானும் தன் போதை கடத்தல் தொழிலை அடியோடு விடுவதற்கான அனைத்து வேலைகளையும் முடித்தான்.
அவனுக்கு அவனின் மனைவியை அப்போதே பார்க்க வேண்டும் போல இருந்தது.
வேகமாக விருந்தினர் இல்லம் நோக்கிப் போனான். மனைவியின் முகத்தைப் பார்த்து முழுதாக ஒரு கிழமை ஆகி விட்டிருந்தது.
எப்போதும் போல தோட்டத்து மாமரத்தின் கீழே அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தவளை, பார்த்தபடி அவளுக்கு அருகே வந்து நின்று கொண்டான் ஜேம்ஸ்.
திடீரென தன் முன்னால் நிழலாட, வஞ்சியாக்கும் என நினைத்து நிமிர்ந்தவள், அங்கே தன் கணவனைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
அவன் மீது கோபம் ஏற, வேகமாக எழுந்து உள்ளே செல்லப் போனவளின் கையைப் பிடித்து தன் பக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டான் ஜேம்ஸ்.
ஒரு நொடி அந்தத் திடீர் அணைப்பில் சிலிர்த்து நின்றாலும், அடுத்த கணமே அவனிடம் இருந்து விடுபட முயன்றாள் கோதை ஆனால் முடியவில்லை.
“சாரிடி..”
“உங்கடை சாரியை நீங்களே வைச்சுக் கொள்ளுங்கோ.. என்னைய விடுங்கோ..”
“சாரி பேபி..”
“ஆரவோ நான் இல்லாமல் நிம்மதியா வாழுவினம் எண்டு சொல்லிச்சினம்.. போய் வாழ வேண்டியது தானே..”
“சாரிடா..”
“கையை எடுங்கோ முதல்.. எங்கையாவது போய்த் தொலை எண்டு சொன்னியள் தானே.. தொலைஞ்சு போகாமல் இங்க நிக்கிறனே எல்லாம் என்ரை தலையெழுத்து..”
“நீ ஆசைப் பட்ட போல அந்தத் தொழிலை விட்டிட்டன் பேபி..”
என ஜேம்ஸ் சொன்னதும், அவனிடம் இருந்து திமிறிக் கொண்டிருந்தவள் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்து
“உண்மையாவோ..”
என நம்பாத பார்வையோடு கேட்டாள்.
அவளின் நெற்றியில் மெல்ல முட்டி
“நான் பொய் சொல்லுறதில்லை பேபீ..”
என்றவனை இமைக்காமல் பார்த்தவள்
“எதுக்காகவும் ஆருக்காகவும் அந்தத் தொழிலை விட மாட்டன் எண்டியளே..”
எனத் தன் சந்தேகத்தைக் கேட்டாள்.
“ம்ம்.. யோசிச்சுப் பாத்தன்டீ.. ஏதவோ ஒரு வேகத்துல சொன்னாலும் உன்னைய விட எனக்கு எதுகுமே முக்கியம் இல்லை எண்டு எனக்கே நல்லாத் தெரியும்.. அதுலயும் இந்த ஒரு கிழமையில நீ பக்கத்துல இல்லாம நான் அனுபவிச்ச வலியில எனக்கு நல்ல புத்தி வந்திட்டு.. நீ பக்கத்துல இல்லாமல் என்னால வாழவே முடியாது பேபீ..”
“ஓ..”
“என்னடி ஓ..”
“அப்போ மனசாற மன்னிப்பு கேக்கிறியளோ..”
“ஓமடி பொண்டாட்டி..”
“இருந்தாலும் எனக்கு கோபம் குறையவே மாட்டன் எண்டுது..”
“குறைக்கிறதுக்கு என்கிட்டே நல்ல ஐடியா இருக்கு..”
“என்னது.. எதுவா இருந்தாலும் என்னையத் தொடாமல் கோபத்தைக் குறைக்கிற ஐடியாவா சொல்லுங்கோ..”
“அதெப்புடி முடியும்.. ஐடியாவே உன் இடுப்பைக் கிள்ளுறது தானே..”
என்றபடி கோதையின் இடுப்புப் பக்கம் ஜேம்ஸ் கையைக் கொண்டு போக, சட்டென்று அவனின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“உங்களை மன்னிக்கோணும் எண்டால்.. என்னைய இப்பவே அந்தக் குடில் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போங்கோ..”
என்றவளை அடுத்த நிமிடமே குடில் வீட்டுக்குத் தூக்கிச் சென்றான் ஜேம்ஸ்.
இருவரும் குடில் வீட்டின், அன்றொரு நாள் இருந்த அந்த அழகான இடத்தில் வானத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.
“பேபி ஒரு பாட்டுப் பாடேன்..”
“நான் இன்னும் கோபத்துல இருந்து வரேல்லை..”
“எப்போடி வருவே..”
“இப்போதைக்கு வார ஐடியா இல்லை..”
“ஏன்டி..”
“என்னையத் துலைஞ்சு போன்னு சொன்னீங்க தானே..”
“ஐய்யோ.. மன்னிச்சுருடி மன்னிச்சிரு தெரியாமல் சொல்லீட்டன்.. உன்ரை காலுல வேணும் எண்டாலும் விழுறன்..”
என்று கொண்டு அவளின் காலிலேயே விழுந்து விட்டான் ஜேம்ஸ்.
கோதை பதறிக் கொண்டு அவனைத் தூக்கி விட்டாள்.
“அச்சோ என்ன அத்தான் நீங்கள்.. நான் சும்மா பம்பலுக்கு சொன்னான்.. நீங்கள் எனக்காக அந்தத் தொழிலை விட்ட உடனேயே எனக்கு உங்க மேல இருந்த கோபம் ஓடிப் போயிட்டுது அத்தான்..”
“பேபீ.. பேபீ.. இப்போ என்னடி சொன்னே..”
“உங்களில இருந்த கோபம் போட்டுது எண்டு சொன்னான்..”
“அதில்லைடி என்னைய என்னண்டு கூப்பிட்டனீ..”
“ஓ அதுவா.. ஏன் அப்புடிக் கூப்பிடக் கூடாதோ..”
“கூப்பிடு கூப்பிடு.. இப்புடிக் கூப்பிடுனு தானேடி உன்னைய கெஞ்சீட்டு திரிஞ்சன்.. ஆனா நீ தான் கேக்கவே இல்லை..”
“நான் தான் சொன்னானே.. எனக்கா தோணோணும் எண்டு..”
“ஒரு வழியா தோணிச்சுது போல..”
என்றவனைக் கோதை கட்டிக் கொண்டு
“பாட்டு பாடட்டுமா அத்தான்..”
என்று கேட்க
“பாடு பேபீ.. ரொம்ப நாளாச்சு உன்ரை பாட்டைக் கேட்டு..”
என்று கொண்டு தானும் மனைவியை அணைத்துக் கொண்டான் ஜேம்ஸ்.
கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டே
“ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு உறவாடும் யோகம் ஒரு தாய்கின்று மழலை போல் உந்தன் நெஞ்சம் உறங்கட்டும் பாவம் கொஞ்சம் தாய்க்கு பின் தாரம் நான் தான் அய்யா..
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா தாயாக்கி வைத்ததே நீயடா நீ யடா..
தலைவா நீ எந்தன் தலைசன் பிள்ளை பாடுகிறேன் நான் தாலோ
கனிசே பூ விழி தாலோ
பொன்மனி தாலேலோ
நிலவோ நிலத்தில் இறங்கி
உன்னை கொஞ்ச என்னுதே அதிகாலை சேவல் கூவும் அதுவரை வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிடு..
தலைவா நீ எந்தன் தலைசன் பிள்ளை பாடுகிறேன் நான் தாலோ
கனிசே பூ விழி தாலோ
பொன்மணி தாலேலோ
பொன்மணி தாலேலோ?..”
எனப் பாடியவளின் இனிய குரலில் பாடலின் அர்த்தத்தை உள் வாங்க மறந்தான் ஜேம்ஸ்.