தேவை எல்லாம் தேவதையே…..

4.2
(21)

தேவை எல்லாம் தேவதையே….!

 

 

தேவதை 1

 

எந்தன் நெஞ்சில் நீங்காத

தென்றல் நீதானா…!

எண்ணம் எங்கும் நீ பாடும்

திருதிரு தில்லானா…..

என்ற பாடல் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்க,,, குளித்து முடித்து உடை மாற்றி,, கண்ணாடியின் முன்பு நின்றான்,, நமது கதையின் நாயகன் தேவா….தேவேந்திரன்.,..

பருவ வயது ஆணவன்,, ஆறடி உயரமும்,, கட்டுக் கோப்பான உடலும், பார்க்க பால் வடியும் முகமும், புதிதாய் ஆங்காங்கே முளைத்த தாடி, மீசை என நல்ல  ஆணழகன் தான்…

முன் தலையை கோதியப்படி நின்றவன் மனதில் ஒரு பெண்ணின் முகம் வந்து செல்ல,,, இதழோரம் புன்னகை மலர்ந்தது… பாடலை முனுமுனுத்தப் படியே……எந்தன் நெஞ்சில் நின்றாடும்….. அந்த நேரம் தனது செல்லின் அழைப்பு ஒலியை கேட்டு திரையை பார்த்தவன் தர்ஷி நீதானா,,..! என பாடல் வரியை முடித்து அழைப்பை எடுத்திருந்தான்….

ஹலோ சொல்லுடி வண்டு….

கிளம்பிட்டியா? டா… என்ன கலர் ட்ரெஸ் போட்ருக்க….?

க்ரே கலர் டி வண்டு….

நோ நேவிப்ளூ போடு,நானும் அந்த கலர் தன போட்டுருக்கேன்…

ஹே போடி,,, கிளம்பி ரெடியா இருக்கேன்,,, இனிமேல்லாம் என்னால மாத்த முடியாது…..

அப்போ ஒகே வை,, என உடனே வைத்து விட.

சரியான இம்சை என சிரித்தப் படியே தன் க்ரே கலர் சட்டியை கழட்டி விட்டு ,,,,நேவி ப்ளூ உடையை மாற்றி இருந்தான்…

அறையிலிருந்து வெளியே செல்ல,, அவனது தந்தை செல்வம் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்….

செல்வம் ஒரு சிறிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பேனி வைத்திருக்கிறார்… அவர் அருகில் சென்று அமர்ந்த தேவாவிற்கு தட்டில் இட்லி, சாம்பார் வைத்து பரிமாறினார் அவனது தாய் கலாவதி….

ஏன்பா சொல்ல சொல்லக் கேட்காம போய் கம்ப்யூட்டர் கோர்ஸ் எடுத்துட்ட,,. உன் மார்க்குக்கு இன்ஜினியரிங்க் எடுத்து படிச்சிருக்கலாம்,,, நல்ல வேல்யூ இருக்கும்…. என செல்வம் புலம்ப….

ப்பா புலம்பாம சாப்பிடுப் பா,,, எனக்கு இன்ஜினியரிங்க் படிக்க சுத்தமா இன்ட்ர்ஸ்ட் இல்ல… எனக்கு கம்ப்யூட்டர் கோர்ஸ் தான் படிக்கணும் என சமாதானம் செய்தவனுக்கும் , அவனது தாய் கலாவதிக்கும் மட்டும் தான் தெரியும்,, இவன் கம்ப்யூட்டர் கோர்ஸ் எடுத்துப் படிக்க காரணம் முழுக்க முழுக்க தர்ஷிணி தான் என்கிற விஷயம்….. அவள் கம்ப்யூட்டர் கோர்ஸ் தானே எடுத்திருக்கிறாள்…. அவளை விட்டு சிறு வயதிலிருந்தே பிரியாதவன்,, 1ஆம் வகுப்பில் இருந்து ஒன்றாக படித்தவர்கள் இன்று வரை ஒன்றாக தான் இருக்கிறார்கள்…

சாப்பிட்டு முடித்தவன் எழ,, முதல் நாள் காலேஜ் போற,,, கோவில் போய்ட்டு போங்க பா,, என்றவர் அவனுக்கு மதிய உணவும் பாக்ஸில் வைத்துக் கொடுக்க,, போய்ட்டு வரேன் மா, பை பா என்றவன் தன் பைக்கை எடுத்திருந்தான்,,,,

செல்லும் வழி எல்லாம் அவளின் நியாபகம் மட்டுமே!. ஸ்கூல் வரைக்கும் ஒன்றாக படித்தவர்கள்,, இன்று கல்லூரியிலும் ஒன்றாக படிக்கப் போகிறார்கள்….என் தர்ஷிணி அவள் இல்லாத நாட்களையும், வாழ்க்கையையும் எண்ணி கூட பார்த்தது இல்லை… அவளை தன்னால் மட்டுமே சந்தோசமாக பார்த்துக் கொள்ள முடியும்,, தகப்பனாகவும்,,தாயாகவும்,, நல்ல நண்பனாகவும் எல்லாமுமாக நான் மட்டுமே அவளுக்கு,,,,

ஸ்கூல் படிக்கும் போது இருவரும் சைக்கிளில் ஒன்றாக தான் சென்று வருவோம்,… ஒரு முறை ஸ்கூல் விட்டு வீட்டிற்கு செல்லும் போது சட்டென இறங்கி ஓடி சென்று ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துக் கொண்டாள்…

ஏய் என்னடி…எதுக்கு அங்க போன…!? பூச்சி பொட்டு கடிச்சா என்ன பண்ணுவ? வெளில வா என நான் புரியாமல் கத்த….

அவளோ வயிற்றைப் பிடித்துக் கொண்டு….என் பக்கம் வராத டா… என வலியில் முகம் சுணங்க… என்னால் தாங்க முடியவில்லை….

என்னடி ஆச்சி? வயிறு வலிக்குதா? பாத்ரூம் போகணுமா? சொல்லு டி என அவள் அருகில் சென்று முழங்கையை பற்ற…

டேய் எப்டி டா இப்ப வீட்டுக்கு போவேன்….!? என கண் கலங்கினாள்….

என்னனு சொல்லு டி என கத்தவும்,…

அ…. அது,,.. வந்து நா ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டேணு நினைக்குறேன் டா…, என்.ட்ரஸ்லாம் பாலாப் போச்சு என தட்டுத் தடுமாறி சொல்லியவள் அழவும் தான் எனக்கும் உண்மை விளங்கியது…

அவள் வயிற்றுக்கு கீழ் குருதியின் படிவம் பள்ளி சீருடையின் மேல் அப்பட்டமாய் வெளியே தெரியவும்,, என மனதும் அவளின் குருதியைப் பார்த்து பட படத்தது,,,. எனக்கு கூட பிறந்த சகோதரிகள் இருந்திருந்தால்,,, இதைப் பற்றிய விழிப்புணர்வு இருக்குமோ! என்னவோ! சட்டென என் மேல் சட்டையை கழட்டி அவள் இடுப்பில் கட்டிவிட்டேன்……

அவளின் கையைப் பற்றி மெதுவாய் அழைத்து சென்று சைக்கிளின் பின்னால் அமரவைத்து வேக எட்டுகளாக மிதித்து அவள் வீட்டிற்கு அழைத்து செல்ல..என் முகம் கூட பார்க்காமல் சட்டென வீட்டிற்குள் ஓடி விட்டாள்…..

அன்றிலிருந்து பத்து நாட்கள் அவளை பார்க்க முடியவில்லை.. அவள் இல்லாத க்ளாசிலும் என்னால் அமர முடியவில்லை… மனம் ரணமாய் வலித்தது…..மனதின் ரணம் முகத்தில் அப்பட்டமாய் தெரிய எனது நண்பன் ஜெய் என்னவென்று கேட்டு கேட்டு ஓய்ந்துப் போனான்….

இது என்ன உணர்வு,? அவளைப் போலவே எனது நண்பன் ஜெய்யும் சிறு வயதில் இருந்தே எங்கூட இருப்பவன் தான்….. அவன் ஸ்கூல் வரவில்லை என்றால் மட்டும் எனக்கு பெரிதாக எதுவும் தோன்றாது…. ஆனால் என் தர்ஷி வரவில்லை,, அவள் அமரும் இடத்தை பார்த்துக் கொண்டே பள்ளி பொழுதை கழிக்குறேன்… இது என்ன மாதிரியான உணர்வு புரியவில்லை…..

4 நாட்கள் பொருத்திருந்தேன்.. அதற்கு மேல் முடியவில்லை.. என் பொருமை காற்றில் கரைந்து போனது.,… ஸ்கூல் எப்போது முடியும் என காத்திருந்து,,, கடைசி பெல் அடித்ததும் வேகமாக ஓடி எனது சைக்கிளை எடுத்தவன் தான்,,, மூச்சிரைக்க நொடியும் நிற்காமல் அவளது வீட்டிற்கு தான் சென்றேன்,,,பின்னால் எனது நண்பன் ஜெய்யும் தேவா தேவா என கத்தியப் படி வந்தான்… அவனது அழைப்பு என் காதில் சிறிதும் கேட்கவில்லை….

என்னவளின் வீட்டு வாசலில் சென்று மூச்சு வாங்க நிற்கவும்,, அவளது அம்மா வாசலில் தண்ணீர் தெளிக்க,,, என்னைப் பார்த்ததும் வா பா…. தேவா? நல்லாருக்கியா? எனக் கேட்க,… என் பின்னால் ஜெய்யும் வந்து இறங்கினான்…

அத்தை தர்ஷிய பாக்கணும்,,, அவ எப்டி இருக்கா? ஏன் ஸ்கூல் வர மாட்டுறா? என கேட்கவும்,, அவளது தாய் ராதா சிரித்தார்,…

அவ வயசுக்கு வந்துட்டா பா… ஸ்கூல் இனி அடுத்த வாரம் தான் வருவா… அவளுக்கு சடங்கு சுத்த நானே உங்க அம்மா வீட்டுக்கு வந்து அழைப்பு தரணும் இருந்தேன்,.. சடங்கு சுத்தி முடிச்சி ஸ்கூலுக்கு அனுப்புறேன்….

அப்றம் இன்னொரு விஷயம்… நீதான் இனி அவள பத்திரமா பாத்துக்கணும்,,. எப்போதும் போல ஸ்கூலுக்கு ஒட்டுக்க போங்க,,, திரும்ப வரப்ப அவள பத்திரமா கொண்டு வந்து விட்டுருங்க… என்ன புரிஞ்சிதா?

ஹ்ம்ம்ம் அத்தை அவள பாக்கணும்,,, என உள்ளே செல்ல பார்க்க…அதற்குள் அவர் என்னை தடுத்து விட்டார்…

ஏனாம்? பாக்க கூடாதாம்… சடங்கு முடிஞ்சி தான் பாக்கணுமாம்….முகத்தை தொங்கப் போடவும் அவளது தாயிற்கு சிரிப்பு வந்து விட்டது….

என் தலையில் கை வைத்து வாஞ்சையாய் வருடியவர்,,, உன் ஃப்ரண்ட் வீட்ல தான் இருக்கா.. இன்னும் ஒரு வாரம் தான.., அப்போ பாத்துக்கலாம்,, சரியா இப்ப வீட்டுக்கு போ என்றதும் சரி அத்தை என மெல்லிய குரலுடன் ,,, அவள் என் கண்ணில் அகப் பட மாட்டாளா? என்ற ஏக்கத்தில் வீட்டினுள் கண்களால் அலசியப்படி என் சைக்கிளை எடுத்திருந்தேன்…

பாவி அவள் தரிசனத்தை எனக்கு தரவில்லையே! முக வாட்டத்துடன் என் சைக்கிளை தள்ளிக் கொண்டே நடக்க….

டேய் டேய் இங்க ஒருத்தன் கூப்பிடுறானே! உனக்கு காதுல விழுதா..?டா என என் பாவப்பட்ட நண்பன் ஜெய் கேட்க

சொல்லு டா… என்ன?

என்னடா 4 நாளா நீ சரியில்ல…ஒழுங்க சாப்பிட மாட்டுற., க்ளாஸ்ல கவனம் இல்ல.., என்ன தான் உன் ப்ரச்சனை…!? என தன் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியவன்,,, அவன் முன் சென்று நிற்க….

டேய் இவ என்னடா இத்தன நாள் ஸ்கூல் வரல… என்னனு புரியல டா,!? எதையோ இழந்த மாதிரி இருக்கு… அவ பக்கத்துல இருக்குறப்ப கூட ஒன்னும் தெரியல… இப்ப அவள இந்த 4 நாள் பாக்காம இருந்ததுக்கே என்னமோ பண்ணுது டா… என் கண் கலங்க

டேய் 9 த் தான டா படிக்குற? அதுக்குள்ளவாடா? என கண்கள் விரிய இடுப்பில் கை வைத்து நின்ற ஜெய்ய்யை புரியாப் பார்வை பார்த்தேன்…

என்னடா சொல்ற ஒன்னும் புரியல?

இதுக்கு பேரு தான் டா லவ்வு… என்றதும் அதிர்ச்சியில் ஜெய்யை அடித்துப் போடலாம் என்ற அளவிற்கு கோவம் வந்து விட்டது…..

ச்சீ வாய மூடு டா என்ன டா பேசுற? அவ நம்ம ஃப்ரண்டு டா… தப்பா பேசாத என கடுப்படித்து விட்டு முன்னே செல்லப் பர்க்க அவன் கை நீட்டி தடுத்தான்…

சரி நாயே…. நா 20 நாள் அம்மை போட்ருச்சுனு லீவ் போட்டேனே! என்ன மிஸ் பண்ணியா? என ஜெய் கேட்க

ஆமாம் என தலையசைத்தான், தேவா….

ஹ்ம்ம் மிஸ் பண்ணிருப்ப.., ஆனா இப்ப உனக்குள்ள ஒரு தவிப்பு இருக்குல்ல,, அது இருந்துச்சா? டா எனக் கேட்கவும் தேவாவிடம் அமைதி மட்டுமே…

இதுக்கு பேரு தாண்டா லவ்வு….

டேய் மூடிட்டு போ அடிச்சி பல்ல உடச்சிற போறேன்…இப்டிலாம் தப்பா பேசாத,,,

ஓஹ் சரி டா,,, இந்த 4 நாளுக்கே அவள பாக்காம இருக்க முடியலயே! அடுத்து 11த் , 12த் வேற ஸ்கூல் போக போறோமே! அப்ப அவள பாக்க முடியாதே என்ன பண்ணுவ,,?

கேட்கவுமே மனம் ஏற்க மறுத்து விட்டது… சிறிதும் யோசிக்காமல் அவ படிக்குற ஸ்கூல்ல தான் நீயும் ,நானும் படிக்க போறோம்,,, என்றான் தேவா

ஹ்ம்ம்ம் சரி ஒகே வேற காலேஜ் போய் படிக்குற நிலமை வந்தா? என ஜெய் எதிர் கேள்விக்கேட்க….

அதுக்கும் வாய்ப்பு இல்ல.. மூணு பேரும் ஒன்னா தான் ஒரே காலேஜ் தான்.. துளிக் கூட மாற்றம் இல்லை….திட்டவட்டமாய் தெரிவித்தான்,,,,

அதுவும் சரி தான்,, காலேஜ் ஒன்னா படிப்போம்,,, காலேஜ் முடிஞ்சி அவ வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிட்டு போய்ருவா,, அப்ப நீ நெனச்சாலும் அவள பாக்கமுடியாது,,, என ஜெய் சொன்னது தான் தாமதம்,, அவனை நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டு சைக்கிளில் ஏறி அவ்விடம் விட்டு சென்றேன். மனதிற்குள் ஒரு வித பயம் சூழ்ந்துக் கொண்டது….

அவள் என்னை விட்டு போய்ருவாளோ! என்ற பயம்.,, வாழ்க்கையில எல்லாரும் ஏதோ ஒரு கட்டத்துல பிரிய தான் போறோம்,,, அது அக்கா, தங்கையாவோ,, அண்ணன், தம்பியாகவோ,, அப்பா அம்மாவாகவோ,,, நண்பன், தோழியாகவோ,,, யாராக இருந்தாலும், சரி தான்,,என்ற உண்மை புரியாமல் இல்லை…

ஆனால் ஏனோ இவளின் தற்காலிக பிரிவு என் உயிரின் அடி வரை சென்று வலிக்கிறது,.. தெரியவில்லை…!

 

தொடரும்……

டியர்ஸ் என் கதை பிடிச்சிருந்தா., எனக்கு மறக்காம வோட் பண்ணுங்க…. உங்கள் ஆதரவு தான் எனக்கு மேலும் ஊக்கமளிக்கும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.2 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!