3. சிந்தையுள் சிதையும் தேனே..!

4.7
(7)

தேன் 3

கருணாகரன் மீட்டிங்கை முடித்துவிட்டு மதியம் உணவு உண்ண வந்த போது நிவேதாவுடன் நடந்த உரையாடலை பற்றி கூற காயத்ரிக்கு முகம் எல்லாம் பூ போன்ற புன்னகை மலர்ந்தது.

உடனே தொலைபேசி மூலம் கார்த்திகேயனுக்கு தெரியப்படுத்தி அவர்கள் இருவரின் சந்திப்புக்கான ஒழுங்குகளை கணப்பொழுதில் செய்து முடித்தார்.

மாலை 4 மணி அளவில் பிரபலமான உயர் ரக உணவகத்தில் நிவேதாவிற்காக காத்திருந்தான் கார்த்திகேயன்.

நான்கு மணிக்கு சரியாக நிவேதா வந்து விடுவாள் என்று காயத்ரி தெரிவித்திருக்க பத்து நிமிடங்களின் முன்பே அவன் அங்கு வந்து அவளுக்காக காத்திருந்தான்.

ஆனால் நிவேதா வரவில்லை அதற்கு பதிலாக ஒரு அழகிய மங்கை அரைகுறையான நவீன ஆடை அணிந்து கண்களை மயக்கும் வண்ணம் கார்த்திகேயனை நோக்கி நடந்து வந்தாள்.

அந்தப் பெண் தூரத்தில் இருந்து வரும்போதே அவளது ஆடையையும், நடை உடை பாவனைகளையும் பார்த்து எரிச்சலுற்ற கார்த்திகேயன் மறுபக்கம் தனது பார்வையை செலுத்தினான்.

ஆனால் அவளோ மிகவும் இயல்பாக உரிமையுடன் கார்த்திகேயன் அமர்ந்திருக்கும் இருக்கையின் அருகில்அவனுடன் நெருங்கி அமர்ந்தாள்.

அவளது இந்த திடீர் செயலில்  கோபமுற்ற கார்த்திகேயன் உடனே தீ சுட்டாற் போல அவ்விடத்திலிருந்து எழுந்து கொண்டான்.

“ஹாய் ஹேண்ட்சம் எங்க போறீங்க..” என்று அவள் கிறக்கமாகப் பேச,

“ஹலோ மைண்ட் யுவர் வேர்ட்ஸ் ஹூ ஆர் யூ..?”

“என்ன டார்லிங் என்ன தெரியலையா..?” என்று கொஞ்சும் குரலில் கேட்க, அவளை மேலிருந்து கீழ் வரை எரிக்கும் பார்வையில் அவளை கண்களால் அளந்தவன், அவளது நவநாகரிக உடையும் முகப்பூச்சுமே சொன்னது அவளின் எண்ணம் போகும் போக்கை.

“சாரி எனக்கு உங்களை தெரியாது ப்ளீஸ் லிவிங் மீ..” என்று நிதானத்தை கையில் பிடித்துக் கொண்டு கூறினான் நமது நாயகன்.

“அப்படி எல்லாம் சொல்லக்கூடாது செல்லம் தெரியலன்னா என்ன வாங்க பேசி பழகி தெரிஞ்சுக்குவோம்..” என்று அவளும் அவனுடன் எழுந்து கொள்ள,

“எஸ் கியூஸ் மீ உங்கள எனக்கு தெரியாதுன்னா தெரியாது தான் நீங்க நினைக்கிற மாதிரி ஆள் நான் இல்ல இப்ப இந்த இடத்தை விட்டு நீங்க போறீங்களா இல்ல..” என்று கை முஷ்டியை எடுத்து குத்துவது போல மடக்க அவ்வளவு தான் ஓட்டமும் நடையுமாக அவள் எழுந்து ஓடியே விட்டாள்.

அப்படியே அந்த நவீன மங்கை ஓடியது வேறெங்கும் இல்லை நிவேதாவிடம் தான். நிவேதா ஒரு மரத்தின் அருகில் நடப்பவை அனைத்தையும் தனது நெருங்கிய நண்பி ரீனாவுடன் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

அந்தப் பெண் வழிந்து கொண்டு பேச அதற்கு முரணாக கார்த்திகேயன் நடந்து கொண்டது.

அவளை எரிக்கும் பார்வை பார்த்ததும், வார்த்தைகளால் திட்டித் தீர்த்ததும், இறுதியில் கையை முறுக்கியதும், ஐயோ சாமி ஆள விட்டாக் காணும் என்று அந்தப் பெண் ஓடி வர நிவேதாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

அவள் நெருக்கி வர விவேகம் புதினா விற்கும் சிரிப்பு மேலும் அதிகமானது.

பாவப்பட்ட முகத்துடன் அந்தப் பெண், “என்ன மேடம் இப்படி சிரிக்கிறீங்க..?” என்று அவள் கூற,

“ஒன்னும் இல்ல நித்தியா நீ ஓடி வர்றதை பார்த்து தான் எங்களால சிரிப்பு அடக்க முடியல..” என்று ரீனா கூறிவிட்டு மீண்டும் சிரித்தாள்.

இருவரும் சிரிப்பதை பார்த்த நித்தியாவிற்கு அந்த இடத்திலேயே தனது மூக்கு உடைந்து கீழே விழுந்தது போல இருந்தது.

முதலில் சிரித்து முடிந்த நிவேதா,

“என்ன சொல்றாரு நம்ம கார்த்திகேயன் சார்..” எனக் கிண்டலாகக் கேட்டாள்.

அவள் கேட்டது தான் தாமதம் உடனே சோக ராகம் பாடுவது போல,

“ஐயோ மேடம் இப்படிப்பட்ட ஒருத்தர நான் பார்த்ததே இல்லை பொண்ணுங்க பார்த்தாலே வழிய வந்து பேசுற ஆம்பளைகள் இருக்கிற இந்த ஊர்ல நான் கிட்ட போய் சிரிச்சு பேசியும் என்னைய ஒரு பொருட்டாவே அவர் எடுக்கல

அது மட்டும் இல்லை ரொம்ப ஜென்டில்மேனா இருக்காரு என்ன ஒரு தடவ கூட அவர் தப்பான எண்ணத்தில் பார்க்கல அதோட சரியான முரடன் போல உடனே கைய முருக்குறாரு பெரிய ஜிம் பாடி எல்லாம் வச்சிருக்காரு அவர் ஒரு ஊது ஊதினாலே நான் கீழ விழுந்துருவேன் அடிச்சா எப்படி இருக்கும் அதுதான் ஓடி வந்துட்டேன்..” என்று நித்தியா பயத்துடன் கூறிவிட்டு பணத்தை வாங்கிச் சென்று விட்டாள்.

நித்தியா கூறியதைக் கேட்டு சிந்தனையில் ஆழ்ந்து போன நிவேதாவைப் பார்த்த அவளது தோழி ரீனா,

“நிவேதா நித்தியா சொன்னதையா யோசிச்சுகிட்டு இருக்க அவனப் பார்த்தா நல்லவன் மாதிரி தான் தெரியுது நீ ரொம்ப அவனை செக் பண்றது அவனுக்கும், உங்க அம்மாக்கும் தெரிஞ்சுதோ கேம் ஓவர் உங்கம்மா உன்னைய நாளைக்கே அவனுக்கு கட்டி வச்சுருவா

சரி விடு உன்னோட விஷயத்துக்கே வாரன் அவன் கிட்ட என்ன குறை இருக்குன்னு இப்படி பண்ணுற அவன் எவ்வளவு ஹேண்ட்ஸமா இருக்கான் பாருடி

அவனோட முடி அப்படியே சுருள் சுருளா வானத்தில் இருக்கிற மேக கூட்டம் போல அப்படியே அலையலையா இருக்கு

அவனோட கண்ண பாருடி ஐயோ என்ன பவர் அப்படியே கொக்கி போட்டு இழுக்குது அவன் சிரிச்சா அவனுடைய கண்ணும் சேர்ந்து சிரிக்குதடி

பாடி பில்டிங்க பார் அப்படியே ஜிம்முக்கு போய் உடம்ப எப்படி தேத்தி வைச்சிருக்கானு இப்ப எல்லாம் யாருக்குடி சிக்ஸ் பேக் இருக்கு எல்லாம் பீர் அடிச்சு தொப்பையோட தான் திரியுதுகள் ஆனா அவனப் பாருடி அப்படியே உடம்ப படிக்கட்டு மாதிரி அவன் போட்டிருக்கிற டீசர்ட்க்கு மேலாக பாடி சேப் அப்படி தெரியுது

அதோட அவன் என்ன விட கலர் ஜாஸ்தியா தான்டி இருக்கான் கடைசியா அந்த லிப்ஸ பாரு அப்பப்பா பொண்ணுகளுக்கு கூட இவ்வளவு சிவப்பா லிப்ஸ் இருந்தது இல்லடி அப்படியே ஸ்ட்ராபெரி பழம் மாதிரி இருக்குடி..” என்று சீனா கிறக்கமாக கூற,

“ச்சீ என்னடி இப்படி அவனை பார்த்து வழியிற அவன் நல்லாத்தான் இருந்து தொலையுறான் ஆனா எனக்கு இப்ப கல்யாணம் வேணான்டி..” என்று எரிந்து விழுந்தாள் நிவேதா.

“அப்போ இப்போ வேணாம்னா எப்போ பண்ணிக்க போற இவனை விட்டுட்டு இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்னா அப்போ சொட்டையும் தொப்பையும் இருக்குறவன் தான் உனக்கு கிடைப்பான் வயசு இருக்கும்போது தான் நம்மளுக்கு அழகெல்லாம் வயசு போகப் போக நம்மட அழகும் கம்மியா போய்டும் அப்புறம் யோசிச்சு முடிவு எடுத்துக்கோ..’ என்று ரீனா நிவேதாவிற்கு சாமர்த்தியமாகப் பேசிப் புரிய வைக்க,

“என்னடி ரொம்ப குழப்பமா இருக்கு இப்போ நான் என்னதான் செய்ய..?”

“இப்படியான ஹேண்ட்சம் பாய் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் கல்யாணம் பண்ணி பாரு உன்னோட ஒத்துப்போய் உன்னோட பிஹேவியருக்கு செட்டானா ரிலேஷன்ஷிப்ப அப்படியே கன்டினியூ பண்ணுங்க அப்படி இல்லன்னா பிடிக்கலனா டிவோர்ஸ் பண்ணிடு தட்ஸ் இட்…” என்று இவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு கார்த்திகேயன் நிவேதாவிற்காக காத்திருந்து பொறுமை காற்றில் பறந்து போனது.

நேரம் ஐந்தைத் தொட அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் எழுந்து வெளியே வர அதனைப் பார்த்த நிவேதா,

“அய்யய்யோ அவன் எழுந்து போறான்டி..” என்று ரீனாவிடம் கூறிவிட்டு எகிறி குதித்து பாய்ந்து ஓடி வந்து கார்த்திகேயன் கதவைத் திறக்க அப்போதுதான் வருவது போல மிகவும் இயல்பாக வந்து கதவின் முன்னே நின்றாள்.

இரு துருவங்களும் எதிர்காலத்தில் ஒன்றை ஒன்று கவருமா..?

பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!