பால்வடியும் வதனமது அதிகாலை சூரியனை கண்டு பிரம்மித்துப் போய் இருக்க.. அவளின் துருதுரு கண்களோ உதயமாக சூரியனை கண்டு இம்மியும் அகலவில்லை. அவளது அஞ்சன விழிகளிலோ அப்படி ஒரு ரசனை. கவிஞன் யாராவது கண்டால் கண்டிப்பாக இந்த காட்சியை கவிதையாக படித்துவிடுவான் அப்படி ஒரு அழகு.
“உன் அஞ்சன விழிகளிலே கோடி மின்னல்கள் தெறிக்கின்றதே
உன் அழகிய கருவிழிகளிலே படப்படக்கும் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றதே
உன் ஆழமான இமைகளிலே பல உலகமும் சுழலுவதை காட்டுகின்றதே“
என்று அவளின் அழகிய காந்தக்கண்களுக்கே கவிதையை அள்ளிதள்ளியிருப்பான். அதற்கே அப்படி என்றால் பின்னே அவளின் கொழுக்கொழுக் கன்னங்களுக்கு.. ஆப்பிள் கன்னங்கள் அவளின் மணவாளன் அருகில் இல்லாமலே சிவந்து போயிருக்க.. தேனில் முக்கியெடுத்த ஈர இதழ்களோ தான் கண்ட காட்சியில் அழகாக விரிந்திருந்தது.
அதற்கும் மேல் அந்த ஊரின் குளிரில் அவளின் இதழ்களும் நடுங்கியது தான். அழகிய மஞ்சள் நிற புடவையில் பனிச்சிற்பமாய் அமர்ந்திருந்தாள் சாய்பல்லவி. வயது இருபத்தி ஒன்று தான்.
சாய்பல்லவியின் ஊர் ஊட்டி. மலைகளால் சூழப்பட்டி மலைகளால் பனி சூழப்பட்ட குளிர் பிரதேசம். அதுவும் தமிழ்நாட்டில் உள்ள நல்ல சுற்றுலாதளம் அது. அந்த ஊர் தான் சாய்ப்பல்லவியின் ஊர்.
காட்டிற்கு வெளிப்பக்கமாக இருந்த தன் வீட்டின் மாடியில் நின்றுக்கொண்டு மலைப்பிரதேசத்தை ரசித்துக்கொண்டிருந்தாள் பெண்ணவள். அவளது இடைத்தான்டிய கூந்தலே அவ்வளவு அழகாகவும், நல்ல மயில் தன் தோகையை விரித்துவிட்டது போல காற்றில் அலைப்பாய்ந்துக்கொண்டு ஆட அதனை காண கண் கோடி வேண்டும்.
அப்படியே இதமான காற்றினை தன் நுரையீரலுக்குள் இழுத்து சுவாசித்தவளுக்கோ மனம் இன்னும் அந்த அழகிய இயற்கை காட்சியிலிருந்து விடுப்படவில்லை..
“அம்மாடி பல்லவி“என வீட்டின் கீழிருந்து வந்த சத்தத்தில் பெண்ணவளோ கொஞ்சமே கொஞ்சம் முகத்தை சுருக்கிக்கொண்டு சலித்துக்கொண்டாள்..
“என்ன பாட்டி“என சிறுபிள்ளையாக உதட்டு பிதுக்கி சலித்த பல்லவிக்கோ தன் பாட்டி எதற்காக அழைத்திருப்பார் என்று தெரியாமல் இல்லை..
“அம்மாடி தங்கமே பனிக்காத்துல நிக்காதடி செல்லம். அப்புறம் உன் உடம்பு என்னத்துக்கு ஆகுறது.”பாசமாக அவர் கீழிருந்து கத்தினார்..
“ஹான் வரேன் பாட்டி..”என்றவளோ.. “கொஞ்ச நேரம் காத்துல நிக்க விடுறீங்களா பாட்டி.”சலித்தவாறே கீழே இறங்கியவளோ நேராக கிட்சனில் போய் எட்டிப்பார்க்க அங்கே அவளின் பாட்டி கோதை பல்லவிக்கு தேவையான பத்திய சாப்பாட்டை தயார் செய்துக்கொண்டிருந்தார்.
அந்த சாப்பாட்டினை கண்டவளுக்கோ முகம் ஏழுக்கோணலாக போனது. “அய்யோ பாட்டி இன்னிக்கும் இதே பத்திய சாப்பாடு தானா..”அவரின் தோளின் சாய்ந்தவாறே கொஞ்சிவளை கண்டவருக்கு அவள் கண்டிப்பாக இரட்டை குழந்தைகளுக்கு தாய் என்ற நினைப்பே மறந்து போனது அவருக்கு.
“ம்ச் அப்டிலாம் சலிச்சிக்க கூடாது தங்கம்.. இந்த மாதிரி நேரத்துல பத்திய சாப்பாடுதான் உடம்புக்கு வலு சேக்கும்.. இல்லனு வையி நோஞ்சானாட்டம் ஆகிடுவ.”அவள் கன்னத்தை பிடித்து கொஞ்சியவரோ உணவினை கிண்ட மறக்கவில்லை..
“க்கூம்.. ம்கூம்.. இதையே சொல்லுங்க எப்போ பார்த்தாலும்.. இருங்க மச்சான் வரட்டும் உங்கள மாட்டிவிடுறேன் பாருங்க..”என்றவளோ தன் அறைக்கு சிட்டாக பறந்துவிட்டாள். போகும் அவளையே கண் நிறைய, மனம் நிறைய கண்ட கோதைக்கோ அவ்வளவு மகிழ்ச்சி. ஏதோ அவரின் வாழ்க்கைக்கு விளக்கேற்ற வந்தவளாகவே தான் பல்லவியை நினைத்தார் அந்த வயதான பெண்மணி.
சென்னையில் விமான நிலையத்தில் அமெரிக்காவிலிருந்து விமானம் இறங்கிய வேகத்தினை விட கூடுதலான வேகத்திற்கு ஓடிவந்தான் ஒருவன். அவன் பதறிய காரியம் அப்படிப்பட்டதல்லவா. உலகத்தினை இயக்கும் மந்திரம் எது என்று கேட்டால் அவனின் தந்தை என்று தான் கூறுவான்.
பின்னே வினையன் ரகோத்மனை ஆசையாக, அன்பாக வளர்த்தது அவனின் தந்தை விஜயவிக்ரமன் தான். அப்போது அவரின் மீது பாசம் அலைமோத தானே செய்யும்.
“அய்யா மேல யாரோ வேணும்னுதான்யா தாக்குதல் நடத்திருக்காங்க.. சீக்கரம் அது யாருனு கண்டுப்பிடிக்க சொல்லி ஆடர் போடு..”என்று விஜயவிக்ரமனின் கட்சியின் மூத்த தொண்டர் போலீஸிடம் கட்டளை போட்டுக்கொண்டிருக்க.. அவரின் அரசியலில் பழம் திண்று கொட்டை போட்டவர் யாரும் இல்லை என்ற காரணத்தால் போலீஸும் அவரிடம் மரியாதையாக பேசிக்கொண்டிருந்தது.
“அய்யாவுக்கு முன்னாடி நீங்க கொடுத்த காவல விட இன்னும் அதிகமான போலீஸ காவலுக்கு போடு. வெறும் பூனைப்படை மட்டும் வச்சிக்கிட்டு என்ன செய்ய சொல்ற.. ஒரு நாப்பது பேர இறக்கிவிடு..”ஏனோ தானோவென்று அவர் கட்டளை போட்டுக்கொண்டிருக்க.. அதனை காதில் வாங்கியவாறே சிங்க நடை போட்டு, வேக எட்டுக்கள் வைத்து ஓடிவந்தான் வினையன்.
“அய்யா அய்யா தம்பி..”ஒரு தொண்டன் அந்த மூத்த தொண்டனிடம் ஓடிவந்து காதில் ஓத. அதில் அவ்வளவு நேரம் அதிகாரமாக நின்று கட்டளை போட்ட அந்த பெரியவறோ கொஞ்சமே கொஞ்சம் மிரண்டு போனார். அவர் கண்கள் அலைப்பாய்ந்தவாறே ஓடிவருபவனை பார்க்க.. அவனோ வந்த வேகத்திற்கு அக்னி குழம்பை கண்ணில் பூசியவாறே அவரின் முன்னால் வந்து நின்றவனோ..
“அப்பாவுக்கு என்னாச்சி..”அதட்டலாக கத்தினான் ரகோ..
“அது அது தம்பி பெருசா ஒன்னுமில்ல.. சும்மா வண்டி ப்ரேக் புடிக்காம..”இழுக்க
“என்ன ப்ரேக் புடிக்காம அத கூட ஒழுங்கா பாக்காம அப்டி என்னத்த கிழிக்கிறீங்க நீங்கெல்லாம்..”ஆக்ரோஷமாக கத்தியவனோ.. “ஒன்னுத்துக்கும் ப்ரோயஜனம் இல்லாத ஜந்துக்கள கூட வச்சிட்டு சுத்துற இவர சொல்லனும்..”வாய்க்குள் தன் தந்தையை திட்டியவனோ.. “எனக்கு இத யார் செஞ்சான்னு தெரியனும்.. ஐ வான்ட் டு க்நோ ஹிம்.. அன்ட் ஐ வான்ட் டு கில் ஹிம்.”கொலைவெறியில் கத்தியவனை கண்டு அங்கு நின்றிருந்தவர்களுக்கு அள்ளுவிட்டது.
“அய்யோ தம்பி ஆளு யாருன்னு கண்டுப்பிடிக்க சொல்லிருக்கேன்.. இன்னிக்கி கண்டிப்பா மாட்டிப்பான்..”என்றவறை முறைத்தவனோ வேகவேகமாக தன் தந்தையை வைத்திருக்கும் அறையை நோக்கி வேக எட்டினை வைத்தான்.
விஜயவிக்ரமனை வைத்திருக்கும் அறைக்குள் நுழைய முயல.. வேகமாக ஒரு மிஷின் கன் வந்து அதனை தடுப்பது போல குறுக்கே நின்றது. அதனை குனிந்து வெறித்து பார்த்த ரகோத்தோ அக்னி பார்வை இன்னும் அதிகரிப்பது போல முகம் சிவக்க நின்றவனோ பார்வையை கொஞ்சமாக மேலேற்றினான்.
அங்கு விஜயவிக்ரமனின் பூனைப்படை ஹெட்டான ரஞ்சித் தான் குறுக்கே கன்னை நீட்டியவாறே நின்றிருந்தான். அதில் இன்னும் வெறியேறியது ரகோத்திற்கு. “சாரி சார் சார் இப்போ தான் தூங்க ஆரம்பிச்சிருக்காங்க இந்நேரம் உங்கள உள்ள அனுப்ப முடியாது.”நிமிர்வாக கூறியவனை கண்டு மேலும் கடுப்பாகியவனோ..
“அத அந்த கேனயங்க கிட்ட போயி சொல்லு. என் அப்பன ஒழுங்கா பாத்துக்க துப்பில்ல உள்ள அனுப்ப முடியாதுனு திமிரா பதில் சொல்றியா..”ஆக்ரோஷமாக கத்தியவனை அதே நிமிர்வான அதே நேரம் கம்பீரமாக முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் நின்றிருந்த ரஞ்சித்தோ..
“சாரி சார் நீங்க என்ன திட்டுனாலும் உங்கள உள்ள அனுப்ப முடியாது..”என்ற ரஞ்சித் கதவினை மறைத்தவாறே நின்றவனை கண்டு ரத்தம் சூடாகியது ரகோத்திற்கு.
“ரஞ்சித் மூவ்..”கட்டளையாக கத்தியவனை கண்டவனோ மாட்டேன் என்று வேகமாக தலையாட்டினான் ரஞ்சித்.
“ரஞ்சித் ஐ செட் மூவ்.. என்ன கொலைக்காரன் ஆக்காத. ஐ வில் கில் யூ..”இன்னும் ஆத்திரமாக கத்தியவனை அவன் ஒரு பொருட்டாகவும் நினைக்கவில்லை.
ரஞ்சித் தன்னுடைய கோவத்தை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல் நிற்பதே அவனை இன்னும் ஆத்திரப்படுத்த.. “சொன்னா கேட்கமாட்ட..”என்றவனோ வேகமாக ரஞ்சித்தின் காலரை தன் கைக்குள் கொண்டு வந்தவன்.. “உன்ன வழிவிடுன்னு சொன்னேன், குறுக்க நிக்காதனு சொன்னேன் ஆனாலும் திமிரா நிக்கிற.. யாரு குடுத்த தைரியம்டா இது..”என்றவனோ தன் முன்னால் முகத்தில் எந்த உணர்வினையும் காட்டாமல் நிமிர்வாக நின்றவனை கண்டு ரகோத்திற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
இந்த உலகத்திலையே ரகோத்தினாலையே ஒருவனை சமாளிக்க முடியாதென்றால் அது ரஞ்சித் தான். ரஞ்சித் அப்படிப்பட்டவன் தான். அழுத்தக்காரன் சுமார் நான்கு ஆண்டுகளாக விஜயவிக்ரமனுக்கு ரஞ்சித் தான் பாதுக்காப்பாளனாக இருக்கின்றான்.
“இப்போ விட போறியா இல்லையா..”கடைசியாக கேட்கின்றேன் என்ற தோணியில் ரகோத்மன் கேட்க அதற்கும் இல்லை என்று தான் மறுப்பாக தலையாட்டிருப்பான் ரஞ்சித். ஆனால் அதற்குள் உள்ளே இருந்து யாருக்காக பதறி ஓடிவந்தானோ அவரின் சாந்தக்குரல் கேட்பதில் ரஞ்சித் அமைதியாகிவிட்டான்.
“ஐ ம் வேக்கப் ரஞ்சித் அவன உள்ள விடு..”கம்பீரமான அதே நேரம் சாந்தமான குரல் ரஞ்சித்தை அடிப்பணிய வைக்க இவ்வளவு நேரம் சிலை போல நின்றவனோ இப்போது கொஞ்சமாக நகர்ந்து நின்றான்.
ரகோத்மனோ ரஞ்சித்தின் சட்டை காலரிலிருந்து கையை எடுக்காமல் அப்படியே நிற்க. அதனை தன் ஒற்றை கைக்கொண்டு தட்டிவிட்ட ரஞ்சித்தோ.. “உள்ள போலாம் சார்..”என்றவனோ தன் பணி முடிந்தது என்பது போல ரகோத்தை பார்க்க அவனுக்கோ பற்றிக்கொண்டு வந்தது.
“உன்ன அப்புறம் பாத்துக்குறேன்..”அதட்டியவன் கதவினை வேகமாக தள்ளிவிட்டவாறே உள்ளே ஓட.. அங்கோ கையில் கட்டுடனும், தலையில் கட்டுடனும் ஆளுமையான தோற்றத்தில் படுத்திருந்தார் விஜயவிக்ரமன்.
“ப்பா…”கத்தலாக அவர் அருகில் ஓடிய ரகோத்மனை பார்க்க கண்டிப்பாக இருபத்தி எட்டு வயது ஆண்மகனாக தெரியவில்லை.ஏதோ எட்டு வயது பாலகனாக தான் விக்ரமனுக்கு தெரிந்தான். அதில் அவரது உதடுகளும் புன்னகையில் விரிய… “ப்பா வாட் ஹேப்பன்ட்ப்பா.. என்னாச்சி உங்க கைக்கு..”என்று பதறினான் அந்த ஆசைமகன்.
“நத்திங் கண்ணா.. இட்ஸ் ஜெஸ்ட் எ மைனர் ஆக்ஸிடென்ட்.. அவ்ளோ பெரிய இஞ்ஜூரியெல்லாம் இல்ல.. ஜெஸ்ட் ஒன் வீக் ரெஸ்ட் எடுத்தா க்யூர் ஆகிடும்னு டாக்டர் சொல்லிருக்காரு.”புன்னகையுடன் கூறியவரைக்கண்டு முகத்தில் எள்ளும்.கொள்ளும் வெடித்தது ரகோத்மனுக்கு. பல்லை கடித்து கோவத்தை அடக்கிக்கொண்டவனோ..
“வாட் டேட்.. இது உங்களுக்கு குட்டி காயமா.. மைனர் ஆக்ஸிடென்டா வாட் ரப்பிஸ்..”இடையில் கை வைத்து தலையை அந்த பக்கமும் இந்த பக்கமும் ஆட்டியவாறே நின்றவனோ.. “சீ(see) டேட் இந்த இஞ்சூரி சின்னதா இருந்தாலும் எனக்கு இது பெருசு தான். தென் இங்க காயம் பெருசா, சின்னதான்னு பேச்சில்ல.. அடிப்பட்டிருக்கு டேட் அதான் இங்க விஷியம்..”மூச்சுவாங்க கத்தியவனை அமைதியான பார்வை பார்த்த விக்ரமனோ..
“யா ஐ க்நோ கண்ணா.. பட் இது ஆக்ஸிடென்ட்.. தெரியாம நடந்து போச்சி.. விடு கண்ணா..”அவனை அமைதிப்படுத்தும் நோக்கத்துடன் பேசியவரைக்கண்டு நோ என்று மறுப்பாக தலையசைத்தவனோ..
“இதுக்கெல்லாம் அந்த ரஞ்சித் பய தான் காரணம் டேட்.. அவனுக்கு எவ்ளோ திமிர் இருந்தா என்னையே உள்ள விடமாட்டேன்னு சொல்றான்.. இவன எங்க டேட் பிடிச்சீங்க..”என்றவனின் தோளில் வலியக்கரம் ஒன்று வந்து விழ.. அந்த கரத்துக்கு சொந்தக்காரனோ அழகான புன்னகையை சுமந்துக்கொண்டு நின்றான்.
“ம்ம்ம் கண்ணா நீ அந்த ரஞ்சித் பயல எங்க பிடிச்சன்னு தானே கேட்ட.. இப்போ சொல்றேன் பாரு.. இந்த ரஞ்சித் பய என் புள்ள வினையோட பள்ளி தோழன், விளையாட்டு தோழன், காலேஜ் தோழன் இன்னும் சொல்லப்போனா இப்போ உன் அப்பனுக்கு பாடிகாட் தோழன்னு கூட வச்சிக்கலாம்..”அடக்கமாட்டாமல் புன்னகையுடன் பேசியவரை கண்டு ரகோத்மன் புன்னகைக்க அவனின் தோளில் ஆசையாக கைப்போட்டு விக்ரமன் பேசியதற்கு தலையாட்டியவாறே புன்னகைத்தான் ரஞ்சித்.