தண்ணீரில் கால்களை நனைத்து தொட்டியின் கரையின் அமர்ந்திருந்தவளுக்கு உலகம் மறந்து போனது. இளங்கன்று பயம் அறியாது, துள்ளி விளையாடினாள்.
யூனிபார்ம் நீர் பட்டு நனைந்து போக, அருகில்தான் வீடு என்பதால் கவலை இல்லை அவளுக்கு. தண்ணீரை வாயில் நிறைத்து கொப்பளித்தாள் பைப்பிலிருந்து நுரைத்து கொட்டும் அருவி நீர் மீது.
உள்ளே இறங்கி குளிக்க ஆசைதான். ஆனால் தங்களுடைய தோப்பு இல்லை என்பதால் ஏமாற்றமாய் இருந்தாலும், தன் மீது தெரித்துவிழும் நீரை ரசித்து அனுபவித்தாள்.
“பொம்பளைப்புள்ளங்க அக்கம் பக்கம் என்ன இருக்குன்னு வெவரமா இருக்கணும் கண்ணு. எந்நேரமும் உஷாரா இருக்கணும் இல்லன்னா தலையில மொளகாயை அரைச்சுட்டு போய்டுவாங்க பாத்துக்கோ. உங்கம்மாக்காரி மாதிரி ஒரு மாமியா வந்தா சமாளிக்க புத்தியில சூதானம் வேணும்” ராமாயி சுலோச்சனாவை நினைத்து வெத்தலையை இடிப்பார்.
படிப்பினையை மறந்து போன அன்னம் கால்களை தப் தப் என சத்தம் வர நீரில் அடித்தாள். எதன் மீதோ பாதம் படுவது புரிய, மீண்டும் உதைத்தாள் வலது காலை. கடினமான ஒன்றின் மீது கால் பட. வலியில் முகம் சுனங்கி எழ தயாரானாள்.
ஆனால் கால்களை எதுவோ உடும்பாய் பிடித்துக்கொள்ள, பாம்பா இருக்குமா? அலற முற்பட்டு வாயை திறந்தவள் தண்ணீருக்குள் இருந்து எதுவோ வெளிவர பக்கென வாயை மூடினாள்.
தண்ணீரை பந்து போல் வீசி வீசி விளையாடிவள், புற்றுக்குள் இருந்து வெளியே தலை நீட்டும் பாம்பு மாதிரி தண்ணீருக்குள் இருந்து வெளியே வந்தவனை பார்த்து விழிகள் தெறிக்க, அப்படியே உறைந்து போனாள். வெளியே நழுவி விழ துடித்த இதயத்தை நெஞ்சோடு அழுத்திப் பிடித்தாள்.
“லட்சு பயந்துட்டியா புள்ள?” அவள் கால்களை பிடித்து தண்ணிக்குள் இழுத்தான்.
தண்ணீரை இரண்டாய் கிழித்து, உள்ளே இருந்து வெளியே வந்தவனைப் பார்த்து, “அய்யோ இவரா?” எழுந்தோட முயன்றாள். மூச்சை பிடித்து வைக்கும் கலை அவனுக்கு தெரிந்திருக்க, அவளை பயமுறுத்த முடிந்தது. நல்லவேளை அதை கத்துக்கிட்டோம்.
அவள் பயந்த முகத்தை பருகி பருகி ரசித்தவன்,
“எங்க புள்ள தப்பிக்க பாக்குற” அவள் கால்களை பிடித்து உள்ளே இறக்கிவிட்டான்.
தொப்பென விழுந்தவள் அவன் கால் மீது கால்களை ஊன்றி நின்றாள்.
“ஏய் தள்ளி நில்லு புள்ள. ஆம்பளை பையன் மேல வந்து விழுற வெக்கமா இல்ல” அவளை தள்ளிவிட்டான் தண்ணிக்குள்.
தலை குப்புற விழுந்தவள், தத்தளித்து எழுந்து நின்றாள், “நா போறன்” படியில் கால் வைத்து ஏறினாள்.
“என்னம்மிணி வந்தது வந்துட்ட. வாங்கிட்டு போறது?” என்னவோ பரிசு கொடுப்பது போல அழைத்தான்.
தண்ணீருக்குள் அவள் துள்ளித் துடிக்க, தலையை வெளியே வராமல் அமுத்தியவன், “கருப்புச்சாமி வீட்டுல இன்னைக்கு சாவு விழுவ போவுது. இன்னையோட அந்த கருப்பன் ஆட்டம் க்ளோஸ்” வெற்றிச்சிரிப்புடன் மீசையை நீவினான்.
மூச்சு பிடிக்காம அவனிடமிருந்து துள்ளினாள் அன்னம்.
ஒரு நொடியில் அவளை விடுவித்தான்.
வெளியே வந்தவள் நிற்க முடியாம தடுமாறி அவன் தோள்களை ஆதரவாய் பற்றி நின்றாள். எதிர்பாராம தண்ணிக்குள் தள்ளிவிட்டு தலையை அமுக்கினதால். மூக்கில் தண்ணீர் போயிருக்க, தொண்டைக்குள்ளும் நீர் போக, புரையேறி இருமினாள்.
“கடைசி ஆசை என்ன புள்ள” அவளிடம் கேட்டான்.
“எ எ என்ன” மூச்சு வாங்க கேட்டவள், நிற்க முடியாது அவன் மேல் சாய்ந்தாள்.
திகில் பிடிக்க தப்பிக்க முயன்றவளை திரும்பவும் தண்ணிக்குள் முக்கினான்.
மீண்டும் விடுவிக்க, அவளுக்கு இன்னைக்கு செத்துடுவோம் என தோன்றியது.
இப்படியே பலதடவை உள்ளே வெளியே போராட்டம் நடக்க. மயங்கி விட்டாள் அன்னம்.
தன் மீது கிடந்தவளை பார்த்தவன் அவள் கன்னத்தில் அடித்து எழுப்பினான்.
அரைகுறையா கண் திறந்து பார்த்தவள் பேச முயன்று வாயசைத்தாள்.
“இன்னைக்கு உன்ற உசுரை விட்டு வைக்கறேன் புள்ள. பொழைச்சுப்போ” என்றவன் கடைசி முறைக்கு தண்ணீருக்குள் அமுத்த.
இம்முறை மயங்கியவள் அவன் எழுப்பியும் எழுந்திருக்கவில்லை.
அதுக்கு பிறகு பிழைத்தது தனி கதை.
அந்த நாளில் கருப்பாய் ஒல்லியாய் நெடு நெடுவென வளர்த்தியாய் குச்சிமாதிரி இருப்பான். உடல்வாகுதான் அப்படி. விளையாடி உடலில் உரம் சேர்ந்திருக்க, முதுகில் அடித்துவிட்டு போகையில் மூச்சு நின்னு போகும் அளவுக்கு சுளீரென வலிக்கும். சாட்டை கை அவனுக்கு.
தண்ணீரில் மூச்சுத் திணறியவளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு போனவன்தான். அதன் பிறகு அவன் இருக்கும் பக்கமே தலைவைத்து படுத்தது இல்லை.
ஐந்து வருடம் கழித்து இப்பொழுதுதான் பார்க்கிறாள், அவனா இவன் என புருவத்தை உயர்த்தி யோசிக்கும் அளவுக்கு மாறி இருந்தான்.
தன் முன் காட்டேரியாக நின்றவனை பார்த்து அவசர மூச்செடுத்தவள் பின்னால் எட்டு வைத்தாள் ஓட.
அவனுக்கு பதில் சொல்லாமல் ஓடினாள். இளவரசன் சத்தியசீலனுக்கு தம்பி முறை என்பதால் அவனை எதுவும் செய்ய மாட்டான் என்பது உறுதி. ஆனால் தன்னை ஏதாவது செய்யாமல் விடவே மாட்டான். ‘தண்ணிக்குள் தள்ளி சாவடிக்க பாத்தவன்தான. இன்னைக்கு எனக்கு நேரமே சரியில்ல’ எண்ணமிட்டவள் வேகமாய் ஓட முயன்று ஓரிடத்திலேயே ஓடிகொண்டிருக்க.
குனிந்து தரையை பார்த்தவள் தான் ஒரே இடத்தில் ஓடுவது கண்ணில் பட, ‘சிக்கிட்டோம்’ சோர்ந்து நின்றாள்.
“கருப்பன் தங்கச்சி தானா கைல சிக்கிட்டா. நானும் இத்தன நாளா போனா போவட்டும்னுதான் கண்ணு விட்டு வச்சன். சரி பிள்ளைய சாவற கண்டிஷனுக்கு விட்டாச்சு பொழைச்சு போவட்டும்னு பாத்தேன். அப்படியே இருந்திருந்தீன்னா உனக்கும் நல்லது எனக்கும் உன் மொவரைய பாக்கற சான்ஸ் கிடைச்சிருக்காது” அவளை தென்னை மரத்தில் சாய்த்து நிக்க வச்சவன்,
“இந்தப் பக்கம் வரவேண்டாம்னு சொன்னா கேக்க மாட்டியா புள்ள?” அவள் கை இரண்டையும் பின்னால் மரத்தோடு சேர்த்து பிடித்தான்.
“என்ன புள்ள அவன் மேல லவ்வா?”
விழிகளை இளவரசன் மீது ஓட விட்டவள் எப்படி சொல்லுவாள் இவன் மீது இப்பொழுதுதான் ஈர்ப்பு வந்திருக்கிறது என்று. போயும் போய் இவன்கிட்டே சொல்ல பைத்தியமா அவள்.
ஆமாம் இல்லை என எதுவும் சொல்லாது அமைதி காத்தாள்.
அத்தியாயம் 12
மானுடப் பிறவியாக இருந்தால் தன்னவளுக்கு வலிக்குமே பிடிக்காதே என இரக்கம் பார்த்திடுவான். அவள் மனதை அறிந்து தள்ளி நின்று உரையாடலை தொடங்குவான். பார்வை விழிகளை தவிர எங்கும் நகராது உயர் குண மனிதனுக்கு.
இருப்பினும் சத்தியசீலனுக்கு அந்தக் குணங்கள் அன்னத்தைக் கண்டால் தூர ஓடிப்போகும். கருப்புச்சாமி தங்கச்சி என்ற ஒரு தகுதியே போதும் அவளை காயப்படுத்திட.
பூனையானது எலியை ஒரே சமயத்தில் கொன்று புசிக்காதாம் தூண்டி தூண்டி, சீண்டி சித்தரவதை செய்து குற்றுயிராக்கி இறுதியில் வலி தாங்காது தயவு செய்து என்னை கொன்னுடு என்று பூனையிடமே உயிரை எடுத்துக்கொள்ளச் சொல்லி சரணாகதி அடையுமாம்.
உடம்பெல்லாம் நகங்களால் பிராண்டி குற்றுயிரான நிலையில் அது உயிரோடு இருந்து என்ன பயன். பாவம் பார்த்து பூனை விட்டுப் போனாலும் சிற்றுயிர்களான எறும்பு இனங்கள் அதை உயிரோடு சிதைத்துவிடுமாம். வாழவும் முடியாது சாகவும் முடியாத மீளா துயர்க்கு வதைத்தவனிடமே சரண் புகுவது மேல்.
தீரா பகையில் வதைக்கும் சத்தியசீலனிடம் அன்னம் சரண் புகுவாளா இல்லை வதைபட்டு மனதளவில் சிதைந்து போவாளா அவன் வசமே அவள் முடிவு.
இரு கைகளையும் வளைத்து வலது கரத்தால் இறுக்கிப் பிடித்தவன் மரத்தோடு சேர்த்து அழுத்தினான் அவள் வலியால் துடிப்பதை உதடு கடித்து ரசித்துப் பார்த்தான்.
“இங்க வந்தது தப்புதான். இனிமேல் இந்த பக்கமே எட்டி பார்க்க மாட்டேன் போக விடுங்க” கண்ணீர் அவள் கன்னங்களை நனைத்தது.
“ரொம்ப வளர்ந்துட்ட புள்ள. பாத்தவுடனே சும்மா தீ மாதிரி பத்திக்குது ஒடம்பெல்லாம். என்னவோ பண்ண கையெல்லாம் படபடன்னு நடுங்குது புள்ள” மதம் பிடித்த யானை கணக்காக அவளை ஒட்டி நின்றான்.
அவன் நெருங்க பின்னே சாய்ந்தவளை தென்னை மரத்தின் சொரசொரப்பு முதுகில் உரசி எரிச்சலை தந்தது. அதற்காக முன்னே செல்லவும் முடியாது. அவன் மார்பில் முட்டி நிற்கும் ஆபத்து அதிகம் இருப்பதால் எரிச்சலை பொறுத்துக்கொண்டு நின்றாள். இங்கே வந்த மடத்தனத்தை நூறாவது முறையாக நொந்துகொண்டாள் அன்னம்.
“என்னை பார்த்து பேசு புள்ள” அவள் மேலேயே சாய்ந்து நின்றான்.
அவன் உடம்பு முழுவதும் தன் மீது படரவும் விக்கித்து அவனை வெறித்தாள்.
“அவனுக்கும் உனக்கும் இடையில என்ன இருக்குன்னு கேட்டேன்” அவன் விழிகளை பார்த்தவளுக்கு அச்சம் மேவியது.
அவன் மோசமானவன் கொடூர புத்தியுள்ளவன் என அறிந்தவள்தான். அவன் விழிகளில் இருந்த செய்தி அவளை நடுங்க வைத்தது. அவன் பாரம் தாங்காது அவன் மார்பில் கைவைத்து தள்ளி நிறுத்த முயன்றவளுக்கு தோல்வியே கிட்டியது.
கல் போல இறுகி இருந்த வெற்று மார்பு முன் தேகத்தில் அழுந்தி உரச,
மூச்சுவிடும் போதெல்லாம் முன் அழகுகள் அவன் திண்ணிய மார்பில் உரசி உரசிப்போனது.
அதை அறிந்தவன் கள்ளச் சிரிப்புடன் இன்னும் நெருங்கி நின்றான் மென்மைக்கு வலியை கொடுக்க எண்ணியே.
அய்யோ எதுக்கு இப்படி நடந்துக்கறான். எப்பவும் போல அழ வச்சிட்டு போக வேண்டியதுதானே. அவனது மன்மத அவதாரத்தில் திக்கி திணறிப் போய் மரத்தின் மீதே சாய்ந்தாள்.
அசையாது மூச்சை அடக்கி அவன் மீது உரசுவதை தடுக்க நினைத்தாள்.
அருகில் இளவரசன் மயங்கிக்கிடக்க எப்பொழுது வேண்டுமானாலும் அவன் விழித்துவிடும் அபாயம் இருந்தது. எழுந்தால் இப்படி இருப்பதை பார்த்து என்ன நினைப்பான்?…