மான்ஸ்டர்-2

4.7
(10)

அத்தியாயம்-2

வெல்வெட் பாரடைஸ் என்ற பலகை அந்த இரவு நேரத்திலும் நன்றாக ஜெக ஜோதியாக மின்னிக்கொண்டிருந்தது. பலகை மட்டும் அல்ல அந்த பலகையை தாங்கி நின்ற அந்த நான்கடுக்கு கட்டிடமும் தான் மின்னிக்கொண்டிருந்தது.

அது பெரிய பணக்காரர்கள் மட்டுமே உபயோகிக்கும் மும்பையிலையே உயர்தர பப். அது மட்டும் அல்ல மும்பையிலையே மிகவும் பிரபலமானது. பிரபலமானவர்களுக்கு மட்டுமே என்ற பெயர் பலகையை தாங்கிக்கொண்டு தான் நின்றது அந்த பப். அதனின் உரிமையாளனும் அப்படிதான் மிகவும் பிரபலமானவன். சொல்ல போனால் இந்த பப் அவனுக்கு தேவையில்லாத ஒன்று தான். அவன் செய்யும் பிஸினஸிற்கு இந்த பப்பில் இருந்து தான் அவன் பிழைக்கவேண்டும் என்றேல்லாம் இல்லை.

சொல்லபோனால் அந்த பாதி மும்பையே அவனுடையது தான் அப்படிப்பட்டவனுக்கு இந்த பப் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை. ஆனாலும் அதனை விடாமல் செய்துக்கொண்டிருந்தான் அந்த மும்பைக்கே மான்ஸ்டர் என்று அழைக்கப்படும் மார்ட்டின் லுதாஸ்.

ம்ம் பெயரே வித்தியாசமாக இருக்கின்றது அல்லவா.. ஆள் இன்னும் வித்தியாசமாக இருப்பான். அதனை விட அவன் குணமோ அதனை விட வித்தியாசம் தான். நிழல் உலக தாதா தான். ஆனால் வெளியுலகத்திற்கு தொழிலதிபன் அவன். பல படங்களில் வந்துவிட்டாலும் இவனிடத்திலும் இந்த வசனம் தான் சரியாக இருக்கும். நல்லவனுக்கு நல்லவன், வல்லவனுக்கு மிகவும் வல்லவன், தீயவர்களுக்கோ இவனை போல கொடியவனை பார்க்கவே முடியாது.

அப்படிப்பட்டவன் தான் இந்த மார்ட்டின். ஆள் ஆறடி உயரத்தை அனாயசமாக தாண்டி தனது தேக்குமர உருண்டு, திரண்ட தேகத்தை ஒத்து வைத்திருந்தான் தன் உடலை.

மார்ட்டின் லுதாஸ் அதாவது எம்.எல் கேங் என்றால் மும்பைக்கே ஒரு பயம் தான். பயம் மட்டுமில்லை அதனையும் தாண்டி ஒருவித மரியாதை இருக்கும். பல தெலுங்கு படத்தில் காட்டுவது போல பெரிய கேங் லீடரை அடித்து இந்த பதவிக்கு வரவில்லை அவன். மார்ட்டின் வம்ச வம்சமாக தான் இந்த பேரை கொண்டிருக்கின்றான். ஆம் அவனின் தாத்தா காலத்தில் ஆரம்பித்த கேங் இது. அவரின் பேரும் மார்ட்டின் தான் ஆனால் சார்லஸ் மார்ட்டின். அவரின் பேரை தான் இவனுக்கு வைத்திருந்தார் அவனின் தந்தை.

மார்ட்டினின் தந்தை மைக்கெல் மிக்கி. இவர்கள் அனைவரது தொழிலும் இதான்.. அதாவது நிழல் உலகத்தினை ஆழ்வது, வெளி உலகில் பிஸினஸில் ரன்களை குவிப்பது. நிழல் உலகமென்றால் அதில் அப்படி என்ன செய்வார்கள். ஓஓஓ திரைப்படத்தில் காட்டுவது போல உறுப்புகள் விற்பார்களா இல்லை பெண்களை விற்பார்களா இல்லை ஏதேனும் மாத்திரைகள், போதை வஸ்துக்கள்..

ம்கூம்.. சொல்லப்போனால் ஒருகாலத்தில் நிழலுலகில் இல்லை வெளியுலகிலே இந்த அட்டூழியத்தை எல்லாம் அழித்ததே இவர்கள் தான். ஆம் உண்மை தான் மற்றவர்கள் பாதிக்காத வகையில் பிஸ்னஸ் செய்வது தான் இவர்களின் வேலை. அப்படி என்றால் நிழலுலகில் இவர்களின் வேலை தான் என்ன என்று கேட்டால்.. மற்றவர்களுக்கு பாதிப்பு வரக்கூடியது அல்லாத டைமன்ட் கடத்தல், பொற்சிலைகளை கடத்தல், கறுப்பு பணத்தை கை மாற்றுதல், வெளிநாட்டிற்கு பொருளாதார ரீதியில் உதவி செய்வது இதுதான் இவர்களின் தொழில்.

அதற்கு அவர்களின் வட்டியோ பல மடங்காக இருக்கும். இதில் முக்கியமானது.. இந்நாட்டில் இருக்கும் பல முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைகட்டுக்கும் தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்வது தான். அதனை இன்னும் முதன்மையாக செய்து வருகின்றனர்.

அதனால் பெரிய பெரிய அரசியல் ஆட்களும் மார்ட்டினிடம் அடிப்பணிந்து தான் செயல்படுகின்றனர். சொல்லப்போனால் ஒரு மினி அரசாங்கமே வைத்து நடத்துகின்றான் அவன். அதற்காக பணம் எல்லாம் நேர்மையான வழியில் தான் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவன் இல்லை எவ்வழியில் வந்தாலும் பணம் பணம் தான்.

என்ன கீழ்த்தரமாக இறங்கவில்லை அவ்வளவு தான். அது அவனின் பரம்பரைக்கே உள்ள குணம் தான். யாருக்கும் அடுத்தவனை ஏமாற்றியோ, பெண்களை விற்றோ, சிறுபிள்ளைகளை கொன்றோ வாழ வேண்டிய எண்ணம் இதுவரை வந்ததில்லை.. இனியும் வராது. ஏனென்றால் அவ்வளவு கட்டுக்கோப்புடன் வளர்ந்தவன் தான் மார்ட்டின்.

நல்ல அசரடிக்கும் வெள்ளை நிறம், ஆறடி உயரம், நல்ல பூனைக்கண்களை உடையவன். அதனை சுருக்கி பார்க்கும் போது அதனின் கூர்மை எதிரிகளை சுட்டு வீழ்த்தும், நல்ல அடர்த்தியான பங்க் ஹேர்ஸ்டைல் அதனை பின்னால் குடுமியாக போட்டிருப்பான், இடப்பக்க புருவத்தின் மத்தியில் ஒரு வெட்டுக்காயம் இருக்கும் அதுவும் அவனை அசரடிக்கும் அழகாக இருந்தது.

மார்ட்டின் வயது முப்பத்தி ஆறு. ஆனால் அவனை பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியாது. இன்னும் இருபத்தி ஆறு வயதிலையே தான் நிலைத்திருந்தான். உடலை அவ்வளவு வலிமையாக வைத்திருந்தான். பின்னே அவனின் ஹாபியே அதானே. குத்துச்சண்டையில் வல்லவன். ரிங்கில் ஏறினால் ரூல்ஸாவது, மண்ணாவது என்று கேட்பவன். அதற்காக தற்பெருமை சிங்கம் என்றேல்லாம் இல்லை. அவனை தோற்கடிக்க யாராலும் முடியாதது தான். ஏனென்றால் அவனின் பயிற்சி அப்படிப்பட்டது.

அப்படிப்பட்ட மார்ட்டினோ இந்த முப்பத்தி ஆறு வயதிலும் திருமணமோ ஏன் பெண்கள் என்ற கேட்டகிரிக்குள்ளையே நுழையமாட்டான். அதாவது இதுவரை பெண்களை ஆராய்ந்து என்ன எதார்த்தமாக கூட பார்த்ததில்லை. ஏனோ பெண்களென்றாலே ஒருவகை அலர்ஜி அவனுக்கு. குடிப்பான் அதுவும் நிதானமாக தான், புகைப்பிடிப்பான் அதுவும் லிமிட்டில் இருக்கும். மற்றப்படி வேறு எந்த பழக்கமும் இல்லை.

மொத்தத்தில் சிங்கம் சிங்கிளாக தான் சுற்றுகின்றது. வார இறுதியில் நிழலுலக தாதாக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்ட்டி செலபிரேட் செய்வார்கள். பெரும்பாலும் அதற்கு மார்ட்டின் வரமாட்டான். மாதத்திற்கு ஒன்றோ இல்லை இரண்டு மாதத்திற்கு ஒன்றோ தான் அதில் கலந்துக்கொள்வான். அப்போது தன் மீது விழ வரும் பெரிய பெரிய கேங்க்ஸ்டர்களின் மகள்களையுமே எரிக்கும் பார்வையில் எட்ட நிறுத்துவான்.

மிஸ்டர் மார்ட்டின் உங்களுக்கு பொண்ணுங்கனா பிடிக்காதா..”அவனை நக்கலாக பார்த்து கேட்பவர்களை அவர்களை விட நக்கலாக பார்ப்பவனோ.. “மே பி இருக்கலாம்.. ஏன் ஆண்கள கூட பிடிக்கலாம் முகர்ஜி.. எனிவே என்னை விட்டு தூரமாவே இருங்க.. அப்புறம் தூக்கிட்டு போய்ட போறேன்.”அவரை அசால்ட்டாக நோஸ் கட் செய்வான் அந்த அரிமா.

அவனின் நடவடிக்கை எந்த அளவுக்கு மற்றவர்களை பயமுறுத்துகின்றதோ அதே போல அவன் பேச்சும் அப்படியே ஆளை ஆட்டிவிக்கும். மொத்தத்தில் இவன் மார்ட்டின் இல்லை மான்ஸ்டர்.

இப்போதும் தன்னுடைய க்ளப்பில் ஒரு மூலையில் உட்கார்ந்துக்கொண்டவனின் கண்களோ அந்த க்ளப்பின் மூலை முடைக்கை எல்லாம் அலசி ஆராய்ந்தது. அவன் இருக்குமிடம் யாருக்கும் தெரியாதது போல தான் எப்போதும் உட்காருவான். அவனின் வாடிக்கை அதுவே. கையில் இருக்கும் மது குவளையில் இன்னும் பாட்டிலை சரித்தவன் தன் வாயிலையே ஊற்றிக்கொண்டவனுக்கு இது எத்தனையாவது ரவுன்ட் என்றே தெரியவில்லை.

ஆனாலும் அவன் எண்ணமும், செயலும் அதனை விட அவன் மூளையும் அவன் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். மொடாக்குடிக்காரன் தான் ஆனால் மட்டையாகிற அளவுக்கு வேஸ்ட் பீஸில்லை.

இப்படி வயிறு முட்ட குடிக்க காரணம் தேடுபவன் இல்லை அவன். நாள் முழுதும் உடலையும், மனதையும், மூளையையும் நன்றாக கசக்கி புழிந்து வேலைப்பார்ப்பவன் மார்ட்டின். அதனாலே இந்த குடி அவனுக்கு கொஞ்சம் நிம்மதியை கொடுத்தது.

அந்த பப்பில் பாட்டுச்சத்தம் காதை கிழிக்க ஆனாலும் அதனை கண்டுக்கொள்ளாமல் தன்னுடைய வேலையை அக்கறையாக பார்த்தான் மார்ட்டின். அவனுக்கு அருகில் நின்றிருந்தான் கபீர். மார்ட்டினின் பிஏ, ஏஏ, சிஏ இன்னும் என்ன என்ன ஏ இருக்கின்றதோ மொத்தமும் அவன் தான். பிஸினஸில் பிஏ, அடிதடியில் ஏஏ, கணக்கு பார்ப்பதில் சிஏ. இப்படி அனைத்திற்கும் அவனின் போஸ்டிங் மாறும். மொத்தத்தில் முன்ஜென்மத்தில் பொண்டாட்டியாக இருந்திருப்பானோ என்னவோ ஒருநாளின் இருபது மணிநேரம் மார்ட்டினுடன் தான் இருப்பான்.

மார்ட்டின் போதை விழிகளுடன் அங்கு ஆட்டமாக ஆடும் இளவட்டங்களை பார்த்தவனுக்கோ பார்க்க பார்க்க சலிப்பு தான் வந்தது. கிட்டதட்ட வாரத்தில் நான்கு முறை இந்த பப்பிற்கு வருகின்றான் அத்தனை முறையும் இப்படி சலிப்பாக தான் அங்கு ஆடும் பெண்களையும், ஆண்களையும் பார்ப்பான். ஆனால் அவன் முகத்திலோ சலிப்பை தவிர ஒன்றுமிருக்காது.

அப்டி சலிச்சிட்டு என்னத்துக்கு பாக்கனும்..”கபீர் பல முறை மனதில் நினைத்ததுண்டு.

ம்ச் கபீர் அப்டி என்னடா இருக்கு இப்டி கட்டிப்புடிச்சிட்டு ஆடுறதுல..”பலதடவை கேட்கும் அதே கேள்விதான். ஆனால் அவன் குரலில் சலிப்போ பலமடங்கு.

ஜி இப்டி கட்டிப்புடிச்சிட்டு ஆடுறதே ஒரு கிக்குதான் ஜி..”வழக்கம் போல அதே பதில்.

ம்கூம்ம்…”பெருமூச்சை தலையாட்டியவாறே விட்ட மார்ட்டினோ.. “வாட் எவர் அப்டி தொட்டுட்டு ஆடுறதுல அப்டி என்ன கிடைக்க போது.”என்றவனுக்கு அதில் என்ன உணர்விருக்கின்றது என்றே புரியவில்லை. இத்தனைக்கும் அவன் எந்த பெண்களையும் நெருங்கவிட்டதில்லை. ஆனால் இது வேடிக்கையாக தெரிந்தது.

அதுது.. ஒரு இது பாஸ்.. நல்லா இருக்கும் அந்த ஃபீல்..”என்றானே கபீர்.

அவனை சிவந்த போதை விழிகளுடன் பார்த்த மார்ட்டினோ.. “ஃபீல்..”என்று அழுத்தமாக கூறியவன்.. “அது இதுக்கு அப்புறமும் இவங்களுக்கு இருக்குமா என்ன..”என்றவனோ.. “மொத்த ஃபீலிங்கையும் இங்கையே முடிச்சிட்டா வாழ்க்கையில என்னடா ஃபீல் ஐ மீன் உணர்வுகள் இருக்க போது.. கொஞ்சமாச்சும் தன் பொண்டாட்டியோ இல்ல புருஷனோ தொட்டா திரும்ப ஃபீல் வருமா என்ன..”அவனுக்கு யோசனை பலமாக இருந்தது.

அதுதான் அவனுக்கு புரியவில்லை. அந்த உணர்வுகள் அது எப்படி இருக்கும், தொட்டால், முத்தமிட்டால், அணைத்தால் எப்படி இருக்கும்.. அது பற்றி அவனுக்கு ஆனா வானா கூட தெரியாது. தெரியவும் அவன் விரும்பவில்லை. சிறு வயதிலிருந்தே உணர்வுகள் இல்லாமல் மரக்கட்டையாக தன்னை வளர்த்துக்கொண்டவன் அவன். அதற்கும் அவனிடம் காரணமிருந்தது.

வெல்ல்ல்ல்… வாட் எவர்.. ஐ ம் டன்..”கம்பீரமாக கூறியவாறே எழுந்தவனோ கொஞ்சமும் தடுமாறவில்லை. அதனை கண்ட கபீருக்கு எப்போதும் போல இதுவும் ஆச்சரியம் தான்.

ரெண்டு க்ளாஸுக்கு மயக்கம் வருது நமக்கு.. தல ஒரு பாட்டிலையே முடிக்கிது ஆனா மண்ண கவ்வ மாட்டிங்கிதே.. என்ன அதிசயமா இருக்கும்..”யோசித்தவனின் கண்களுக்கு மார்ட்டின் லுதாஸ் பெரிய ஏஞ்சலாக தெரிந்தான்.

மார்ட்டினோ தன்னுடைய வழக்கம் போல காரின் கீயை எடுத்துக்கொண்டு நடந்தவனோ.. “ஒழுங்கா மூடிக்கிட்டு வீட்டுக்கு கெளம்பு இல்ல உன் பொண்டாட்டிக்கு கால் போடுவேன்..”என்று மிரட்டியவாறே சென்றான் மார்ட்டின்.

என்னாதுதுது.. பொண்டாட்டியா.. கேங்க்ஸ்டர் செய்யிற வேலையா இது..”கபீர் சத்தமாக கூற.

நான் வேறமாதிரிடா..”பதில் கொடுத்தவாறே காரிடாரினை நோக்கி நடந்தவனின் மீது மிரண்ட பார்வையுடன் ஓடிவந்து விழுந்தாள் பாவை ஒருத்தி.

உணர்வில்லாதவனுக்கு உணர்வு குவிந்தால்.. அதற்கு காரணம் உணர்வுகளில் முங்கிய ஒருத்தியாக இருந்தால்…

(கேப்பச்சினோ..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!