அத்தியாயம் 2
“ஏமிமா அர்ச்சனாவை ஏன் திட்டிட்டு இருக்க” என்றபடி வீட்டுக்குள் நுழைந்தான் கார்த்திகேயன்.
“வேண்டுதல் பாரு உன் தங்கச்சி ஒழுங்கா வீட்டுக்குள்ளேயே இருக்க மாட்டாளா எப்போ பாரு வெளியே வந்து” என்று அவர் ஏதோ சொல்ல வர, “அம்மா போதும் நீங்க ஒன்னும் செப்ப வேண்டாம்” என்று அவரை அடக்கியவன் தங்கையின் அறைக்குள் நுழைந்தான்.
“ஏமன்டி அர்ச்சனா” என்ற கார்த்திகேயனிடம், “ஏமி லேது அண்ணையா நா அம்மாயி வழக்கமா திட்டும் தானே” என்று புன்னகைத்தவளின் தலையில் கை வைத்தவன் , “சாப்பிட்டியா” என்றான்.
“கபடி மேட்ச்ல மீரு ஜெலிச்சாரா அண்ணையா” என்ற அர்ச்சனாவிடம், “உன் அண்ணையா தோத்துப் போவேனா என்ன” என்றவன், “அக்கா வந்துட்டு போச்சா” என்றான். “ஆமாம் அண்ணையா இந்த முறையும் சம்பந்தம் தட்டிப் போச்சுன்னு வைஷ்ணவியை உங்களுக்கு விவாஹம் செய்ய சொல்லி பேசி அம்மாகிட்ட வசவு வாங்கிட்டு போச்சு” என்றாள் அர்ச்சனா.
“அது சகஜம் தானே விடு” என்றவன், “சரி நீ ரெஸ்ட் எடு” என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்று விட்டான்.
கார்த்திகேயன் சிவநேசன், சௌந்திரவள்ளி தம்பதியரின் ஒரே மகன். மூத்தவள் அருணா தேவி, இரண்டாவது கார்த்திகேயன் மூன்றாவது அர்ச்சனா. கடைக்குட்டி அர்ச்சனா எப்போதும் அண்ணன் செல்லம். அவன் பிறந்து பனிரெண்டு வருடங்கள் கழித்து பிறந்தவள் அதனால் தன் தங்கையை தானே தூக்கி வளர்த்தான்.
அருணா தேவி பணத்தாசை பிடித்தவள். தம்பி நன்றாக படித்து வெளிநாட்டில் வேலை செய்து அதில் தந்தை வாங்கிப் போட்ட சொத்துக்களை அனுபவிக்க வயது அதிகம் ஆனாலும், ஏன் செவ்வாய் தோஷம் இருந்தாலும் சரி தன் தம்பிக்கு தன் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவனுக்கு வரும் சம்பந்தங்கள் எல்லாவற்றையும் மறைமுகமாக தட்டி விட்டுக் கொண்டு இருக்கிறாள். அதை கண்டும் காணாமல் சிவநேசனும், கார்த்திகேயனும் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
நிறைய விவசாய நிலங்களை சிவநேசன் வாங்கி வைத்திருந்த காரணம் அவன் வெளிநாட்டில் இருந்து வந்து விட்டு சொந்தமாக விவசாயம் செய்து ஆடு, மாடு, கோழி என பண்ணை வைத்து வளர்த்துக் கொண்டு இருக்கிறான். வசதிக்கு குறைவில்லை. வருமானத்திற்கும் குறைவில்லை. செவ்வாய் தோஷம் ஒன்று தான் குறை. அவனை பார்க்கும் யாரும் முப்பத்து ஏழு வயது ஆண்மகன் என்று சொல்ல மாட்டார்கள். இருபத்தி ஏழு, இருபத்தி எட்டு என்று தான் சொல்வார்கள். தன் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருந்தான். சிறு வயதில் இருந்தே கபடி விளையாடுவது என்றால் கொள்ளைப் பிரியம் அவனுக்கு. அதனால் கபடி மேட்ச் எங்கு நடைபெற்றாலும் அவனது கிராமத்தின் சார்பாக கார்த்திகேயன் விளையாட சென்று விடுவான். விளையாட்டோடு சரி மற்றபடி யாருடனும் எந்த பழக்கமும் வைத்துக் கொள்ள மாட்டான்.
“பழக்க வழக்கம் எல்லாம் பஞ்சாயத்தோடு இருக்கனும்” என்ற வடிவேலு டையலாக் போல கபடி மேட்ச் முடிஞ்சதும் நண்பர்களை கட் செய்து விட்டு வீட்டுக்கு வந்து விடுவான். வீடு வீடு விட்டால் வயல்வெளி, தோட்டம் இது தான் அவனது வாழ்க்கை.
“கார்த்தி” என்று அழைத்த படி வந்தார் சிவநேசன். “ஏமி நைனா” என்ற கார்த்திகேயனிடம், “நுவ்வு நேனு ஹைதராபாத் வெல்டமு” என்றார் சிவநேசன். “ஹைதராபாத்திற்கு எதற்கு போறீங்க நைனா” என்றாள் வீட்டிற்குள் நுழைந்த அருணா தேவி.
“நா கொடுக்குக்கு ஒரு விவாஹம் பண்ணி பார்த்துரலாம்னு அல அனுகுன்டே(நினைத்தாலே) அதை கெடுக்கவே நடு வீட்டுக்குள்ளே நுழைஞ்சுருவாள்” என்று நினைத்தார் சிவநேசன்.
“என்ன நைனா ஹைதராபாத் போகிறதா பேசிகிட்டீங்களே என்ன சங்கதி” என்றாள் அருணா தேவி. “வேற என்ன சங்கதியா இருக்க போகுது நம்ம கார்த்தியோட கல்யாண விஷயம் தான்” என்று உலறிக் கொட்டினார் சௌந்திரவள்ளி.
மனைவியின் அறியாமையே நினைத்து நொந்து கொண்ட சிவநேசன் வேறு வழி இல்லாமல் மகளிடம் சொல்ல ஆரம்பித்தார். “நம்ம தூரத்து சொந்தம் கோகுலகிருஷ்ணன். அவரோட மகளுக்கும் செவ்வாய் தோஷம் இருக்கு. அந்த பொண்ணு ஜாதகம் நம்ம கார்த்தி ஜாதகத்தோட பொருந்தி இருக்கு. அதான் பொண்ணு பார்க்க போகலாம் என்று இருக்கிறேன்” என்றார் சிவநேசன்.
“அதற்கு நீங்களும், தம்பியும் மட்டும் போனால் போதுமா நேனு, நா அம்மாயி ரகுடாடா நைனா” என்றாள் அருணா தேவி.
“எதற்கு நீ வந்து என் மகனுக்கு கிடைக்கப் போற வாழ்க்கையை கெடுத்து விடவா?” என்று நினைத்த சிவநேசன், “எல்லோரும் எதற்கு இப்போதைக்கு நானும், தம்பியும் மட்டும் போயி பொண்ணு பார்த்துட்டு வரோம். கல்யாணம் நிச்சயம் ஆன பிறகு குடும்பத்தோட போகலாம்” என்றார் சிவநேசன்.
“அது எப்படி நைனா பொண்ணு பார்க்க வீட்டில் இருக்கிற பொம்பளைங்க வராமல் ஆம்பளைங்க நீங்க போவீங்க” என்ற அருணாவிடம் , “சிவநேசன் ஏதோ சொல்ல வர ஆமாம் பாவா நானும், அருணாவும் உங்க கூட வரோம்” என்றார் சௌந்திரவள்ளி.
“நீங்க இரண்டு பேரும் வந்துட்டால் அர்ச்சனா தனியா இருப்பாள். அதெல்லாம் சரிப்பட்டு வராது நானும், தம்பியும் மட்டும் போயிட்டு வருகிறோம்” என்றார் சிவநேசன்.
“நைனா நான் ஒரு யோசனை சொல்லலாமா?” என்றாள் தன் அறைக்குள் இருந்த படி அர்ச்சனா. “நீ என்ன யோசனை சொல்லி கிழிக்க போற விளங்காத உன் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருடீ விளங்காதவளே” என்றாள் அருணா தேவி.
“அக்கா ஏமி செப்பன்டி அவள் நம்ம தங்கச்சி இப்படி எல்லாம் பேசாதே” என்று தன் அக்காவை அடக்கிய கார்த்திகேயன், “நீ செப்பு அர்ச்சனா” என்றான்.
“எனக்கு துணையாக அக்கா இருக்கட்டும் அண்ணையா நீங்கள் அம்மாவை உங்க கூட பொண்ணு பார்க்க அழைச்சிட்டு போங்க” என்று அர்ச்சனா கூறிட அருணாவின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது.
“இதுவும் நல்ல யோசனை தான்” என்று சிவநேசன் கூறிட, “அப்போ நானும் கிளம்பட்டுமா பாவா” என்று உற்சாகமாக கிளம்பினார் சௌந்திரவள்ளி.
“என்ன நைனா நான் தான் சொல்றேன்ல நேசனல்க்கு செலக்சன் இருக்கு அதனால் கல்யாணம் எல்லாம் இப்போதைக்கு வேண்டாம்னு” என்று தெய்வானை கூறிட, “இதோ பாரு தெய்வானை பொம்பளைப் பிள்ளை நீ உனக்கு காலாகாலத்தில் ஒரு கல்யாணம் பண்ணி புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைக்கனும்னு பெத்தவங்க எங்களுக்கு ஆசை இருக்காதா. உன் அண்ணனுக்கும் இருபத்தேழு வயசாகிருச்சு அவனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கனும் அதனால் ஒழுங்கா இந்த குத்துச்சண்டை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு கல்யாணம் பண்ணி புருஷன் வீட்டுக்கு போயி சந்தோஷமாக வாழ பாரு” என்றார் கலாராணி.
“அம்மா நான்” என்று அவள் ஏதோ சொல்ல வர , “சரிடீ உனக்காக ஒரு ஆப்சன் தரேன் நேசனல் செலக்சன்ல நீ தோத்துப் போய் விட்டால் கண்டிப்பா நான் காட்டுற மாப்பிள்ளைக்கு நீ கழுத்தை நீட்டனும் சரியா?” என்றார் கலாராணி.
“நானா ஒருத்தனை இழுத்துட்டு வந்தால் அவனை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டிங்களா அம்மா” என்ற தெய்வானையிடம் , “அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்ட. அதுவும் குத்துச்சண்டைகாரியை பார்த்து பத்தடி தூரத்துக்கு எல்லா பயலும் ஓடிருவானுங்க நானே நல்ல மாப்பிள்ளையை பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்றார் கலாராணி.
“என்ன மம்மி இப்படி சொல்லிட்ட கபாட்டி நேனு அன்டங்கா லேனா (அப்போ நான் அழகா இல்லையா)” என்றாள் தெய்வானை. “என் பொண்ணுக்கு என்னடா குறைச்சல் நீ அழகு தேவதைடா” என்றார் கோகுலகிருஷ்ணன்.
“அழகா இருந்து என்ன பிரயோஜனம் கூடவே பாக்ஸிங் வேற கத்து வச்சுருக்கியே அப்பறம் எப்படி உன் பின்னால் எவனும் வருவான். ஆஃபீஸ்ல கூட உன்னை பார்த்து நமஸ்காரம் சோதரினுல செப்புறானுங்க” என்று சிரித்தான் பிரசாந்த். “அண்ணையா” என்று அவள் சிணுங்கிட மொத்த குடும்பமும் சிரித்தனர்.
“சரி , சரி நேரமாச்சு நான் ஆஃபீஸ் கிளம்புறேன்” என்ற தெய்வானையிடம், “ப்ராக்டீஸ் போகலையா தெய்வா” என்றான் பிரசாந்த். “அம்மா எங்கே” என்றவளிடம் , “அம்மா உள்ளே போயிட்டாங்க சொல்லு நீ ப்ராக்டீஸ் போகலையா?” என்றான் மீண்டும்.
“போகனும் தான் ஆனால் அம்மாக்கு பிடிக்கலையே அதான் நேசனல் செலக்சன்ல தோத்துப் போயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றாள் தெய்வானை.
“தெய்வா இது உன்னோட ட்ரீம்” என்ற பிரசாந்த்திடம் , “அண்ணையா என்னோட ட்ரீமை விட என் அம்மாவோட ஆசை எனக்கு ரொம்ப முக்கியம் . சரி அண்ணையா நான் கிளம்புறேன்” என்று சொல்லி விட்டு அவள் சென்று விட்டாள்.
தங்கையை நினைத்து புன்னகைத்து விட்டு தன் அறைக்கு சென்று யூனிபார்ம் அணிந்து கொண்டு அவனும் வேலைக்கு கிளம்பினான். பிரசாந்த் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். தெய்வானை ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள்.
“என்ன பிரசாந்த் கிளம்பிட்டியா?” என்ற கோகுலகிருஷ்ணனிடம், “ செப்பன்டி நைனா” என்றான் பிரசாந்த்.
“தெய்வானையை பொண்ணு பார்க்க நாளைக்கு மாப்பிள்ளை வீட்டில் இருந்து வராங்க” என்ற கோகுலகிருஷ்ணன் மணமகனின் புகைப்படத்தை கொடுத்து விட்டு அவனைப் பற்றிய தகவல்களை கொடுத்தார்.
“ஏமி நைனா மாப்பிள்ளை தெய்வாவை விட பதினைந்து வயது மூத்தவரா இருக்காரு” என்றிட , “செவ்வாய் தோஷம் அதனால கல்யாணம் தட்டி போயிருக்கலாம் மாப்பிள்ளை ஃபோட்டோவில் பார்க்க அம்சமா தானே இருக்காரு” என்றார் கலாராணி.
“ஆளு அழகா இருந்தால் போதுமா அதுவும் ஃபோட்டோவில் இப்போ உள்ள டெக்னாலஜியில் மார்பிங், டீஏஜிங் இப்படி எதுனாலும் பண்ணி வச்சுருக்கலாமே” என்ற பிரசாந்திடம் கலாராணி ஏதோ சொல்ல வர, “நாளைக்கு நேரில் பார்த்த பிறகு தெய்வாவுக்கு பிடித்திருந்தால் மேல பேசலாம்” என்று பேச்சை முடித்து வைத்தார் கோகுலகிருஷ்ணன்.
சரியென்று ஸ்டேசனுக்கு கிளம்பி சென்று பிரசாந்த்தின் மனதில் அந்த மாப்பிள்ளையின் வயது உறுத்தலாகவே இருந்தது.
“தெய்வா என்ன யோசனை” என்ற தோழி வத்சலா விடம் ஒன்றும் இல்லையே என்று கூறி விட்டு தன் வேலையை கவனித்தாள் தெய்வானை.
“ஏமி அண்ணையா இது நல்ல காரியத்திற்கு போகும் போது என்னை பார்க்க வந்து இருக்கீங்க” என்ற அர்ச்சனாவிடம் , “ஏன் அர்ச்சுமா நீயும் இப்படியே பேசுற” என்றான் கார்த்திகேயன்.
“உங்களுக்காக நான் கண்டிப்பா வேண்டிக்குவேன் என் அண்ணையாக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகி அண்ணி வீட்டுக்கு வரணும்னு” என்ற அர்ச்சனாவின் கன்னத்தில் கை வைத்தவன் , “பத்திரமாக இரு அக்கா இங்கே வர மாட்டாள். மாவா கிட்ட சொல்லி இருக்கேன் வைஷ்ணவி கட்டாயம் உனக்கு துணைக்கு வருவாள்” என்று தங்கையிடம் ஆயிரம் பத்திரம் சொல்லி விட்டு தாய், தந்தையுடன் ஹைதராபாத் கிளம்பினான் கார்த்திகேயன்.
(மயக்கியே…)