மயங்கினேன் மன்னவனிடம்

5
(2)

ஹாய் டியர்ஸ் 😍

ஏந்திழை காதல் கொண்டாட்டத்தில் நான் எழுத போற கதை ஸ்டூடண்ட் ப்ரொப்சர் லவ் ஸ்டோரி.. எந்த வித டென்ஷனும் இல்லாம ஜாலியா படிக்கிற போல கதை தான்.. படிச்சு உங்க ஆதரவையும் கருத்தையும் கொடுங்க மக்களே..

டீசர்

“அச்சோ லேட் ஆகிருச்சே” என புலம்பியபடி குளியலறையிலிருந்து வெளி வந்த கீர்த்திகா அவசர அவசரமாக காட்டன் புடவை உடுத்தி தலை வாரி மிதமான மேக்கப் செய்து நெற்றி நடுவே சின்னதாய் ஒரு பொட்டு இட்டு ரெடியாகியவள், ஹேண்ட் பேக்கை தோளில் மாட்டி விட்டு மீண்டும் ஒருமுறை கண்ணாடி முன் நின்று அனைத்தும் ஓகேவா என்று சரி பார்த்தவள்,

‘அச்சோ இதை மறந்துட்டேனே’ என தலையில் அடித்து கொண்டு கழுத்தில் தொங்கிய தாலிக்கொடியை கழட்டி மேஜையில் கீர்த்திகா வைக்கவும் அவள் கணவன் வீரய்யன் அறைக்குள் வரவும் சரியாக இருந்தது..

சார்ஜரிலிருந்த போனை எடுக்க வந்தவன் கண்ணில் தாலிக்கொடி பட, கோவப்படவோ, அதிரவோ இல்லை… கேள்வியாக கீர்த்திகாவை பார்த்தான்,

 “காலேஜ்ல யாருக்கும் கல்யாணமானது தெரியாதுல்ல அதான்” என்றவள் என்ன சொல்லுவானோ என்ற தயக்கத்தோடு அவன் முகம் பார்க்க,

ஒரு கணம் அவளை ஆழ்ந்து பார்த்தவன் எதுவும் சொல்லாது அறையிலிருந்து வெளியேறினான்..

‘அப்பாடா எதுவும் சொல்லவில்லை’.. நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்ட கீரத்திகாவும் வெளியே செல்ல,

அவளை கல்லூரியில் விடுவதற்காக அவன் புல்லடில் தயாராக இருந்தான்..

“இல்ல நான் ஆட்டோவில் போய்க்கிறேன்.. ஏன்னா கல்யாணமானது காலே”… என அவள் சொல்லி முடிப்பதற்குள் புல்லட் அவ்விடத்தை விட்டு பறந்து இருந்தது..‌

‘சரியான திமிர் வரலைன்னு சொன்னா, அப்புடியே விட்டுட்டு போய்டுறதா, காலேஜ்க்கு கொஞ்ச முன்னாடி இறக்கி விடுறேன், வா கீர்த்திகான்னு சொன்னா இவர் கீரிடம் குறைஞ்சிடுமா.. சரியான ஆட்டியூட் திமிர் திமிர்’ என கணவனை திட்டிய படியே ஆட்டோ பிடித்து கல்லூரிக்கு வந்து சேர்ந்தாள்..

இன்று இளநிலை படிப்பிற்கான முதலாமாண்டு மாணவர்களுக்கான முதல் நாள்.. அவர்களை வரவேற்று வகுப்பறையில் அமர வைத்து விட்டு “ஹாய் ஸ்டூடண்ஸ் ஐயம் கீர்த்திகா மாணிக்கவேல்” என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு

“Introdced யுவர் செஃல்ப்” என்றபோது வகுப்பறை வாயிலில் எக்ஸ் க்யூஸ் மீ மேம் என்ற குரல் கேட்க, திரும்பி பார்த்த கீர்த்திகா அதிர்ச்சியானாள், அவளை நோக்கி வந்த அவள் கணவனை பார்த்து,

அருகே வந்தவனிடம் என்ன விஷயம் எதுக்காக இங்க வந்தீங்க என மெதுவான குரலில் சீற,

“படிக்கிறதுக்கு வந்து இருக்கேன் மேம்.. பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட் க்ளாஸ் கண்டுபிடிச்சு வரதுக்கு லேட்டாகிருச்சு” என எதிரே இருந்த மனைவியை பயங்கர அதிர்ச்சியில் தள்ளி விட்டு கூலாக கடைசி பெஞ்சில் சென்று அமர்ந்தான் வீரய்யன்…

“நான் டாக்ட்ரேட் பட்டம் வாங்கி இருக்கேன்.. நீங்க வெறும் ப்ளஸ் டூ தான்.. எப்புடி உங்களை என் புருஷன்னு வெளியே சொல்ல முடியும்.. ஃப்ரெண்ட்ஸு, கூட வொர்த் பண்றவங்க எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க.. நீங்க படிச்சு ஒரு இரண்டு டிகிரியாவது வாங்குனா தான் என்னால் கொஞ்சமாச்சும் வெளியே சொல்லவே முடியும்.. அதனால் படிங்க.. முதல் இரவு அன்றிலிருந்து நேற்று இரவு வரை அவள் சொல்லும் போது அமைதியாக இருந்தது எல்லாம் இதுக்காக தானா,

படிக்க சொன்னது அவள் தான்.. அவள் சொன்னது தபால் வழி கல்வி.. ஆனால் இவன் வேண்டுமென்றே அவளை பழிவாங்கவே 33 வயதில் பேக்கை மாட்டி கொண்டு இப்புடி அவள் பணிபுரியும் கல்லூரிக்கே வந்து சேர்ந்து இருக்கின்றானே தீயாய் அவனை கீர்த்திகா முறைக்க, வீரய்யனோ படு கூலாக பேனாவை விரலில் சுழற்றியபடி கீர்த்திகாவை இமைக்காமல் பார்த்தபடி அமர்ந்து இருந்தான்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!