உயிர் தொடும் உறவே அத்தியாயம் -(04)

4.7
(7)

புகழினியோ ஒரு ‌நிமிடம்‌ அதிர்ந்து போனாள். ஏனெனில் விளையாட்டு போல் கூட இம்மாதிரியான வார்த்தைகளை மீனாட்சி பயன்படுத்த மாட்டாள். இன்று மீனாட்சி பேசியது ஏனோ மனதிற்கு மிகவும் நெருடலாகவே இருந்தது.

ஈஸ்வரனை கரம் பிடிக்கவே இத்தனை வருடங்களாக திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தவள். இன்று திடீரென இவ்வாறு பேசியது அவளுள் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் சமாளித்து கொண்டு,” ஏன்டி மக்கு புள்ள…பிறந்தநாள் அதுவுமா சட்டையவா போய் குடுப்ப..? இறுக்கி அணைச்சு ஒரு ‌உம்மால்ல கொடுத்திருக்கனும்… சட்டையை நீட்டுனா…சண்டைக்குப் தான் எங்கண்ணன்‌ வரும்…நீ வேணா போய் ஒரு டைட் ஹக் பண்ணி லிப் லாக் பண்ணிட்டு வந்துடேன். அப்பறம் பாரு எங்கண்ணன் உன் முந்தானையைவே பிடிச்சிட்டு சுத்தும்…” என கிண்டலடித்தாள்.

மீனாட்சியோ அவளை முறைத்தாள்,” தங்கச்சி மாதிரியா பேசுற….நீயு…? சட்டைக்கே கண்டபடி பேசிடுச்சு மாமா..இதுல முத்தமாம் ‌முத்தம்…போடி..அங்குட்டு…” என சிலிர்த்துக் கொண்டாள்.

” உனக்கு சாமர்த்தியம்‌ பந்தலை டி மீனு குட்டி…. இம்புட்டு வருஷமா எங்க அண்ணன் பின்னாடியே சுத்துற.. அதுவும் உன்னைய‌ மனசுல நினைச்சிட்டு இருக்குது…இப்படியே கண்ணாலையே பேசிபுட்டு… வாய்க்கா…வரப்புன்னு சுத்துறீங்க…ஆனா ஒன்னுத்துக்கும் லாயக்கில்லை நீங்க… இன்னேரம் நீ அம்மாவாகி , உங்கப்பாவ தாத்தவாக்கிருக்க வேணாம்….என்னவோ போ மீனு குட்டி….சுத்த சைவமா இருக்கீக ரெண்டு பேரும்…ம்ம்..” என சிலிர்த்துக் கொண்டாள்.

” அடியேய் புகழினி…!  ஒரு டாக்டர் மாதிரியா  பேசிட்டு இருக்க..நீயு.‌‌..?அப்படியெல்லாம் பண்ணி நான் எங்க வூட்ல செருப்படி வாங்கனும்…உங்க அண்ணன் ஊருக்கு முன்னே தலைக்குனிஞ்சி நிக்கனும் அதான உன் ஆசை…? ரொம்பவே ஏத்தம் டி உனக்கு…” என கடுகாய் பொரிந்தாள் மீனாட்சி.

புகழனியோ ,  “ம்ம்க்கும்…நீ எப்ப கல்யாணம் கட்டி, நா எப்ப உங்க அண்ணனைக் கட்டி, ஒரு நல்லது‌ எனக்கெப்ப நடக்குறது…ம்ம்…இவ சரி வர‌ மாட்டா‌..நாமளே நம்ம லவ்வுக்கு அதிரடி முடிவு எடுத்தா தான் சரிப்படும் போல…” என முணுமுணுத்து கொண்டாள்.

” என்ன டி  வாய்குள்ளாறாயே முணுமுணுக்குற…? சத்தமா தான் சொல்லேன்…” என்றாள்.

” ஒண்ணுமில்லை  நீ விசனப்படாம‌ வீட்டுக்கு போ…நான் அண்ணன் கிட்ட பேசுறேன்… ” என்றவள் ஒரு கணம் யோசனையுடன்,

” மீனாட்சி ‌கேக்குறேன்னு வருத்தப்படாத….ஒருவேளை உங்கப்பா எங்கண்ணனை நீ கட்டிக்க ஒத்துக்கலைன்னா..? என்ன‌ பண்றது..?” என்றாள்.

விலுக்கென நிமிர்ந்து கண்ணில் நீர் கோர்க்க அவளைப்‌ பார்த்தாள் மீனாட்சி. அவளது ஜீவன் அல்லவா அவன்….! அவனின்றேல் அவளேது..? இந்த கேள்வியை அடிக்கடி அவளுக்கு அவளே கேட்டுக்கொண்டு தான் இருக்கிறாள்.…விடையறியா வினாவிற்கு பதலேது..?

” தெரியலை டி” என்று கண்கள் கலங்க விழித்தவாறு நின்றவளைப் பார்த்து ‌பரிதாபமாகத் தான் இருந்தது.

ஆம் …ஈஸ்வரனும் பிடி கொடுக்காமல் அல்லவா இருக்கிறான்…சுயமரியாதைக்கும் காதலுக்கும் இடையே நூலறுந்த பட்டம் போல அல்லாடுகிறான் .

நாளை என்ன நிச்சயம் என சரியாக தெரியாத போது அவளிடம் திருமணம் செய்து கொள்கிறேன் என வாய்மொழியாக் கூட வாக்கு கொடுக்காமல் நாட்களை தள்ளிப்போட இதோ வருடங்கள் பல தாண்டி விட்டது.. இன்றும் அதே மனநிலையில் அவனிருக்கவே மெல்ல அவள் திருமணம் பேச்சை ஆரம்பிக்கவும் ஈஸ்வரனுக்கு தனது இயலாமையால் கோபம்‌ வந்துவிட்டது.

மனம் முழுவதும் காதல் நிறைத்திருந்தாலும் குடும்ப கௌரவத்திற்கும் சுயமரியாதைக்கும் இடைய‌ சிக்கிக்கொண்டு தவித்தன இரு ஜீவன்கள்.

மீனாட்சியின்  வாடிய ‌ முகத்தை காணச் சகியாது ,”  இங்க‌ பாரு சீக்கிரம் அதையும் யோசிச்சு வைய்யு நீ. எல்லாத்துக்கும் உன்‌ மனசை பக்குவப்படுத்தி  வைச்சுக்க. சரி…சரி வண்டில் ஏறு . உன்னை வீட்டுல விட்டுட்டு நான் கிளம்பறேன்…” என்றபடி அவளை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவளது வீட்டில் இறக்கிவிட்டாள்.

“ பை.. மீனு டார்லிங் “ என்று அவளது கன்னம் தட்டி விட்டு , தனது வாகனத்தை இயக்கிக் கொண்டு அந்த பாழடைந்த சினிமா தியேட்டர் அருகில் வண்டியை நிறுத்திவிட்டு சுற்று முற்றும்‌ பார்த்துக்கொண்டே நடந்தாள்.

திடீரென ஒரு வலிய ஆணின் கரம்‌ அவளைப் ‌பிடித்திழுத்தது.

 

“ ஆ..ஆ…” என அலறும் முன் அவளது வாயை தனது கரத்தைக் கொண்டு மூடியது.   அவளது நாசி ‌உணர்ந்த வாசமே எடுத்துக் கூறியது‌ அவள‌வன் தான் கரம்‌ பற்றி இழுத்திருக்கின்றான்‌ என.  இருப்பினும்  சிலிர்த்துக் கொண்டு ,

” யோவ்…! இப்படியா‌‌ பிடிச்சு இழுப்ப…பயந்தே போயிட்டேன் தெரியுமா..?” என்றாள்.

” என்னைய  தவிர வேற யாருக்கு‌ உன்னோட கையை பிடிக்க தைரியம் இருக்கு…?” என மீசையை முறுக்கிக் கொண்டான்.

 அவனை மேலிருந்து கீழே பார்த்து விட்டு நக்கலாக , ” ஹான்…சரி தான் ஓவர் கான்பிடென்ஸ் உடம்புக்கு ஆகாது சார்…” என்றாள்.

 

‌” ஹலோ..டாக்டரம்மா..!என்ன  ரொம்ப சலிச்சுக்குற… “ என்றான் பாண்டியன் மீனாட்சியின் அண்ணன்.

 

” பின்ன என்ன நாம் லவ் பண்ண‌ ஆரம்பிச்சு எவ்வளவு நாளாச்சு…என்னைக்காவது ஒரு‌ சின்ன‌ கிப்ட்… கொஞ்சம் ‌ரொமான்டிக்கா பேசுறது…அட்லீஸ்ட் ஒரு‌‌ கிஸ்…ஒன்னும் இல்லை…சுத்த சாமியார் குடும்பமா இருக்கும் போல..” என்றாள்.

” ஹேய்…என்ன டி வாய் நீளுது…என் வேலை அப்படி….நான்‌ என்ன பண்ண..? எனக்கு அப்படியெல்லாம் கெஞ்சி,கொஞ்சி பேசத் தெரியாது….” எனப் பேசிக்கொண்டே வந்தவன்,” ஹேய்…இரு…இரு…இப்ப யாரை நீ சாமியார் குடும்பம்ன்னு சொல்ற..? “ என திடுமென கேட்டான்.

“அய்யய்யோ…!  மாட்டிக்கிட்டியே புகழினி…சமாளி…சமாளி…அண்ணனும் தங்கச்சியும் இதுல ஒரே மாதிரி இருக்குதுங்க…” என மனதினுள் வருத்தெடுத்தவள் ஒரு முடிவுடன், ” எப்படியும் நீ என்னைய ஒரு முத்தத்துக்கே ஏங்க விடுறீங்க…சோ நானே உங்களுக்கு கொடுத்துடுறேன்…” என்றவள் அவன் சுதாரித்துக்கும முன்னர் அவனது தலையை தன்‌ புறமாக இழுத்து அவன் முரட்டு இதழோடு தன் மெல்லிய இதழைப் பொருத்தினாள்.

பாவம் அதற்கு மேல் எதுவும் புரியவில்லை அவளுக்கு..திரு திருவென விழித்த விழிகளை கண்டவனுக்கோ சிரிப்பு பொத்துக்கொண்டு வர…மெல்ல அவளது இடையை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்தணைத்து அவளது இதழ்களை அழுத்தமாக முத்தமிட்டான்..ஆரஞ்சு பழ சுளைகளை போல் சுவைத்தான் ..மெல்ல மெல்ல இமைகள் மூடி முத்தத்தை ரசிக்க ஆரம்பித்தாள்.

ஆணவனுக்கோ மோகம் பீறீட்டு எழ மேலும் மேலும் இதழ்களை அழுத்தமாக சிறைப்பிடித்தான்.

பசியால் பட்டினி கிடப்பவன் முன் பல வகையான உணவு பதார்த்தங்கள் படைத்ததை போல மென்மையிலிருந்து வன்மைக்கு தாவியிருந்தது அவனது முத்தம்.. அடர்ந்த மீசையின் குறுகுறுப்பு வேறு அவளை இம்சித்தது.‌ பாதத்தினால் சிறிது எம்பி அவனது‌ சிகையில் தனது விரல்களை நுழைத்துக் கொண்டாள்.

அவள் சுவாசத்திற்கு தவிக்கவே அவளது  இதழ்களை விடுவித்து மோகத்துடன் மெல்ல இதழ்களை வருடினான்.  அவளது மெல்லிய தேகம் சிலிர்த்து அடங்கியது.

அவனது முகத்தை பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்திருந்தாள்.  அவளது நாடியினை தனது விரல் கொண்டு நிமிர்த்தினான்‌ .

 

அவளோ மறுபடியும் தலையை குனிந்துக் கொண்டாள். அவன் முகம் காணவே நாணம் பிடிங்கித் தின்றது .

இவ்வளவு நேரம் அவனுடன் வாயடித்துக் கொண்டும் வம்பிழுத்துக் கொண்டும் இருந்தவள் அவனது‌ இதழ் செய்த மாயத்தால் பேசா மடந்தையாக நின்றாள்.

” என்ன மேடம்… அமைதியா ஆகிட்டீங்க… ஒரு கிஸ்ஸாவது ஒழுங்கா அடிக்க தெரியுதா உனக்கு..? டூ பேட்….இனி நானே உனக்கு கத்து தரேன்…” என்றவன் அவளது முகத்தை நிமிர்த்தி , “என்னடி இவ்வளவு நேரம் அதகளம் பண்ணிட்டு இருந்த…இப்ப என்ன‌ ஒரேடியா அமைதியா ஆகிட்ட…? என்னாச்சு வெக்கமா…?இந்த கிஸ் போதுமா…?

இல்லை இன்னும் டீப்பா…ஐ ..மீன்…” என் அவன் ஆரம்பிக்கும் முன்னரே அவனது வாயை தனது தளிர் கரங்களால் மூடினாள்.

  ” போதும் உங்களை அப்பாவி..,  …வெர்க்கஹாலிக்ன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன். நீங்க அடப்பாவி ரேன்ஞ்க்கு பேசுறீங்க ” என்றாள்.

 ” என்னைய‌ மாங்கான்னு தானே நினைச்ச..? குடும்பம்‌‌ நடத்த போதுமான ஜென்ரல் நாலேட்ஜ் இருக்குங்க மேடம்.  என்ன‌ சந்தேகம்ன்னாலும் என்கிட்ட கேளு …நானே உனக்கு பாடம் நடத்துறேன்.” என‌ மோகமாய் கூறி அவளது இடைப் பற்றி தன்னருகே இழுத்தான்.

அவளோ கலகலவென்று சிரித்தபடி அவனிடமிருந்து விலகி நின்று கொண்டு ,”  சார்…நீங்க மாங்கா தான்னு அடிக்கடி நிருபிக்கிறீங்க… நான் டாக்டருங்கறதகூட அடிக்கடி மறக்குறீங்க”  என்றவள்‌,  மெல்ல அவனருகே வந்து அவனது விழிகளோடு தனது விழிகளை கலக்கவிட்டவாறே மெல்லிய குரலில், “குடும்பம் நடத்த அப்படி ஒண்ணும் பெரிசா எனக்கு சந்தேகம்‌ வராது. ” என்றாள்.

அவனோ அவளது தோள்களில் தனது  இரு வலிய கரங்களை போட்டவாறே ,

” அதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய்….உதவாது..என் கிட்ட தான்  உன் சந்தேகத்தை தீர்த்துக்கனும்…” என்றபடி அவளது காதில் சில விஷயங்களை கூற‌ அவளது அழகிய வதனமோ சிவந்து போய் இதயம் பலமாகவே அடித்துக் கொண்டது அவனது‌ நெருக்கத்தில்.

காதலில்  சிறிது காமமும்‌  கலந்திருப்பது மனதாலும் நெருக்கத்தை மேலும் கூட்டுமோ…? என்னவோ..?

 

சட்டென நிதானத்திறகு வந்தவள் மறுபடியும் குறும்புடன் அவனைப் பார்த்து ,” என்னது…? எனக்கு வெக்கமா…? அதெல்லாம் ஒண்ணுமில்லை…நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர்றீங்களா ன்னு செக் பண்ணுனேன்…” என்றாள் சின்ன சிரிப்புடன்.

 

” என்னடி‌….வாய்‌ நீளூது…அதிகமா பேசுற‌ வாயை திரும்ப லாக் பண்ணுவா..? “ என்று கூறியவாறே அவளருகே வர அவனது மார்பில் கை வைத்து தள்ளி விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

“ ஏய் புகழினி..இங்க பாரு..”

 

“என்ன..?” என்றாள் ‌அவன் முகத்தை பார்க்கமலே.

 

“ ம்ம்ச்…இங்க பாரு…ஹாஸ்பிட்டல் கட்டற விஷயம் என்னாச்சு..” என்றான் ஒரு வித தீவிரத்துடன்.

 

அவனது குரலில் இருந்த பேதத்தை உணர்ந்தவள்‌ நிமிர்ந்து அவனைப்‌ பார்த்தாள்.

 

“ சொல்லு டி…” என்றான்.

” அண்ணன் போய் இடத்தை பாக்கனும்னு

சொல்லிச்சு… பாத்த உடனே வேலையை ஆரம்பிக்கனும். அதோட பணத்தை தான் தரேன்னு சொல்லிருக்கு…ம்ம்..ஆரம்பிக்கனும்… “ வாடிய முகத்துடன் கூறினாள்.

ஏனெனில் அந்தப்‌பணம்‌ முழுவதும் ஈஸ்வரனின்‌ உழைப்பு. அவனின் உழைப்பினை எடுத்துக் கொள்கிறோமே என்ற‌ வலி புகழினிக்கு எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும் ‌. இப்போதும் அந்த வலி அவளது முகத்தில் தெரிந்தது.

 

“ புகழினி உங்க அண்ணன் பாவம்ல….அது கிட்ட பணம் வாங்காத…நான் கொடுக்குறேன் டி…சங்கடப்படாம வாங்கிக்கோ…” என ஆற்றாமையுடன் கேட்டான் .

 

பாண்டியனுக்கு எப்பொழுதுமே ஈஸ்வரன் மீது தனி மரியாதை உண்டு. குடும்பத்திற்காக தன்னையே வில்லாக வளைத்துக் கொண்டவன் மீது அபிரிதமான அன்புண்டு.

முறைத்துக் கொண்டு நிற்காவிட்டாலும், கொஞ்சி குலாவுவதுமில்லை. .எட்டி நின்று அவனை மெச்சிக் கொள்வான் அவ்வளவே… எனவே மீண்டும் மீண்டும் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தில் கூறினான்.

 

அவளோ அவசரமாக மறுத்தாள்.  ” என்னன்னு குடுப்பீங்க…? எந்த உரிமையில் நா வாங்குறது..? அதெல்லாம் சரிப்பட்டு வராது…ப்ளீஸ் இப்ப உங்க உதவியை ஏத்துக்க முடியாது…கோவிச்சுக்காதீங்க…உங்க பொண்டாட்டி ஆனதுக்கப்பறம் எல்லா சலுகைகளும்‌ நா ஏத்துப்பேன்…அது வரைக்கும் வேற எந்த உதவியும் நா உங்க கிட்ட இருந்து எதிர்பார்க்கல‌.” என நிர்தாட்சண்யமாக அவனது உதவியை மறுத்துவிட்டாள்.

யாரிவள் ஈஸ்வரனின் தங்கையாயிற்றே…! சுயமரியாதையும் சுயகௌவுரமும் சற்று அதிகமாகவே காணப்பட்டது.

 

அவளை மறுத்ததைக் கண்டு அவனுக்கு கோபம் வரவில்லை. மாறாக அவள் மீது காதலும் பெருமிதமும் ஒருங்கே எழுந்து “இவள் என்னவள்…” என்ற எண்ணமே நெஞ்சம் முழுவதும் தித்திப்பாய் பரவியது..

 

“சரி…சரி கிளம்பு….நேராமாச்சு….தேடப்போறங்க…நாளை கழிச்சு நான் மும்பை கிளம்புறேன் ..திரும்ப வர ரெண்டு மூணு மாசமா கும்..உன்னையே எப்படித்தான் பாக்காம இருக்கப் போறேன்னு தெரியல…அதுவும் இன்னிக்கு இராவுக்கு தூக்கமே வராது..‌‌முடியல…சீக்கிரம் உன்னை கல்யாணம் கட்டனும்…எப்படியும் அப்பா மீனாட்சி கல்யாணத்தை இந்த வருஷம் முடிச்சிபுடுவாவ…. கவலைப்படாதே அடுத்து நம்ம கல்யாணம் தான்…” என கண் சிமிட்டி கூறிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தான்.

 

“கிளம்புறேன் புகழினி….நீயும் சீக்கிரம் கிளம்பு..கொஞ்ச தூரம் உன் பின்னாடி வாரேன்….” என அவள் கிளம்புவதற்கு துரித படுத்தினான்.

 

புகழினிக்கோ இப்போது மீனாட்சியின் மனநிலை நன்றாகவே புரிந்தது.

பாண்டியனுக்கு அரசல் புரசலாக தெரிந்தாலும்…எதுவாகினும் ஈஸ்வரன் நேரில் வந்து தனது தந்தையிடம் பேசிக் கொள்ளட்டுமென இருந்தான் .

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!