28. காதலோ துளி விஷம்

4.7
(112)

விஷம் – 28

மருத்துவமனைக்குச் சென்று தன்னுடைய கையை வைத்தியரிடம் காட்ட,

அவரோ “என்னாச்சு மிஸ்டர் யாழவன் இது ஃபோர்ஸ்ஃபுல்லி காஸ்ட் ப்ராக்சர் மாதிரி இருக்கு..?” எனக் கேட்டார்.

யாழவன் சிரிப்போடு அமைதியாக இருந்துவிட, அவனிடம் இருந்து பதில் வராது என்பதை புரிந்து கொண்ட வைத்தியரோ அவனுக்கான சிகிச்சையை ஆரம்பித்திருந்தார்.

கைமுஷ்டியில் வழிந்து கொண்டிருந்த உதிரத்தை துடைத்து காயத்தை சுத்தப்படுத்தியவர் மணிக்கட்டு எலும்பில் சிறிய பிசகு இருப்பதை உணர்ந்து அடுத்த கட்டமாக எக்ஸ்ரே எடுப்பதற்கு தயாரானார்.

சற்று நேரத்தில் எக்ஸ்ரே எடுத்து முடிந்ததும் அறுவை சிகிச்சை அளவிற்கு செல்லத் தேவையில்லை எனக் கூறியவர் அவனுடைய கரத்தை மெல்ல அழுத்தி பழைய நிலைக்கு எலும்பை இயற்கை முறையிலேயே நகர்த்தியவர் அப்படியே வைத்து அவனுடைய முழங்கை தொடக்கம் கரத்தின் முனைவரை ஸ்ப்ளிண்ட் போட்டு விட,

யாழவனுக்கோ எப்போது தன்னுடைய வீட்டிற்குச் சென்று அர்ச்சனாவை பார்ப்போம் என்றிருந்தது.

“தேங்க்ஸ் டாக்டர்..”

“இப்போதைக்கு பிராப்ளம் இல்ல.. ஃபோர் டு சிக்ஸ் வீக்ஸ் இந்தக் கட்டை ரிமூவ் பண்ணாதீங்க.. பிசியோதெரபி பண்ணினா இன்னும் சீக்கிரமாவே சரியாயிடும்.. பயப்படாதீங்க..” என்றார் வைத்தியர்.

“நான் பயப்படவே இல்லையே..” என பதில் கொடுத்தான் யாழவன்.

சில வலி நிவாரணி மாத்திரைகளை அவனுக்கு எழுதிக் கொடுத்தவர் “நெக்ஸ்ட் டைம் நீங்க வரும் போது கை சரியாயிடுச்சா இல்லையான்னு எக்ஸ்ரே எடுத்து பார்த்தா தெரிஞ்சிரும்..”

“ஓகே டாக்டர் நான் கிளம்பலாமா..?”

“எஸ்… ரெஸ்ட்ல இருங்க..” எனக் கூறி விட்டு அவர் கிளம்பலாம் என்பது போல தலை அசைக்க வெளியே வந்தவனுக்கோ ‘கொஞ்சம் ஓவராதான் கையை அடிச்சிட்டோமோ..’ என்ற எண்ணம் எழுத்தான் செய்தது.

அவனுடைய ட்ரைவரோ அவனுக்காக கார்க் கதவை திறந்து விட உள்ளே ஏறி அமர்ந்த அடுத்த நொடி “சீக்கிரமா என்னோட வீட்டுக்கு போங்க..” என்றுதான் கூறினான் அவன்.

அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தவனுக்கு அர்ச்சனாவின் அணைப்பு ஒன்றோ அத்தியாவசியமாக இருந்தது.

அதே கணம் எங்கே அவள் மீண்டும் வெறுப்பது போல பேசி விடுவாளோ என்ற அச்சமும் அவனுக்குள் எழுந்தது.

நிதானமற்று காரில் இருந்து இறங்கியவன் வேகமாக உள்ளே செல்ல காரின் சத்தம் கேட்டு படிகளில் வேகமாக இறங்கி வந்தவளை நேரடியாக எதிர் கொண்டான் யாழவன்.

அவளுடைய பார்வையோ பதற்றத்தோடும் பரிதவிப்போடும் அவனுடைய கரத்தையே வெறித்துப் பார்த்தன.

அவளுடைய விழிகள் கலங்கிச் சிவந்திருப்பதைக் கண்டவனின் உள்ளம் நெகிழ்ந்தது.

“ஐயோ.. எ.. என்ன இவ்ளோ பெரிய கட்டு…?” பதறினாள் அர்ச்சனா.

அவளுக்கோ தலை சுற்றிக் கொண்டு வந்தது.

தடுமாறி சரிந்தவளை சட்டென பிடித்துக் கொண்டவன் “ஹேய் என்னடி..? ஆர் யூ ஓகே..” எனக் கேட்க, ம்ம் என்றவள் “நான் ரொம்ப பயந்துட்டேன் யாழன்..” என்றாள்.

“ரிலாக்ஸ் பேபி பிசியோதெரபி பண்ணினா சீக்கிரமா சரி ஆயிடும்..” என்றான் அவன்.

“எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு..? வேற எங்கேயும் அடிபட்டுருக்கா..?” என அவள் கேட்டதும் ஒரு கணம் அதிர்ந்தவன் உண்மையும் கூற முடியாது பொய்யையும் கூற முடியாது திணறித்தான் போனான்.

“அதெல்லாம் விடு பேபி.. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு..” என்றவன் சோர்வாக விழிகளை மூடிக்கொள்ள பதறிப் போனவள் மெல்ல அவனுடைய மற்றைய கரத்தை தன் மென்மையான கரங்களால் பிடித்துக் கொண்டாள்.

“என் கூட வாங்க..” என அவனை அவனுடைய அறைக்குள் அவள் அழைத்துச் செல்ல,

அவனுடைய மனமோ உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போகலாமே என உள்ளே அலறியது.

அவனுக்கோ பெருத்த ஏமாற்றம்தான்.

அவள் தன்னைப் பார்த்ததும் ஓடிவந்து அணைத்துக் கொள்வாள் கரங்களை ஏந்தி முத்தமிடுவாள் என்றெல்லாம் கனவோடு வந்தவனுக்கு அவள் தள்ளி நின்று பேசியதும் மனதில் பாரம் ஏறியது.

இப்போது அவள் தங்கி இருக்கும் அறைக்கு அவனை அழைத்துச் செல்லாமல் அவனுடைய அறைக்குள் அழைத்துச் சென்றதும் மிகவும் சோர்ந்துதான் போனான் அவன்.

இந்தத் தனி அறையில் இருப்பதற்காகவா அவன் தன்னுடைய கையை உடைத்துக் கொண்டு இவ்வளவு வேகமாக இங்கே வந்து சேர்ந்தான்..?

அவளோ அவனை மெல்ல அழைத்து வந்து அங்கிருந்து படுக்கையில் அமர வைத்தவள் “டாக்டர் என்ன சொன்னாங்க..?” என விசாரித்தாள்.

அவர் கூறியதை அப்படியே அவளிடம் கூறியவன் ஒரு கணம் தன்னுடைய விழிகளை மூடித் திறந்தான்.

“இந்த ரெண்டு நாளும் நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணினேன் பேபி. நீ என்னை மிஸ் பண்ணவே இல்லையா..?” என அவன் காதல் வழிந்த குரலில் கேட்க அவளுடைய முகத்திலோ சட்டென ஒரு விதமான இறுக்கம் தோன்றியது.

“சாப்பிட்டீங்களா..? உங்களுக்கு சாப்பிடுறதுக்கு ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா..?” என அவன் கேட்ட கேள்விக்கு எந்தப் பதிலும் கூறாது நாசூக்காக அந்தக் கேள்வியை புறக்கணித்தவள் அவனிடம் வேறு கேள்வி கேட்க,

அவனுடைய பார்வையோ அழுத்தமாக மாறியது.

“அவாய்ட் பண்றியாடி..?” நேரடியாகக் கேட்டு விட்டான் அவன்.

அவனுக்கு தேவைப்பட்டது அவளுடைய காதல் மட்டும்தான் பரிதாபமோ பரிதாபப் பார்வையோ அல்ல.

அவன் கோபமாக கேட்ட கேள்வியில் அவனுடைய விழிகளை நேராகப் பார்த்தவள் “உங்கள அவாய்ட் பண்றதுக்கு நீங்க எனக்கு முதல்ல யாரு..? தெரிஞ்சவருக்கு அடிபட்டா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களோ அப்படித்தான் நானும் ரியாக்ட் பண்றேன்.. மத்தபடி உங்களுக்கும் எனக்கும் நடுவுல எதுவுமே கிடையாது.. நீங்க சொன்ன மாதிரி இன்னும் 28 நாள்ல நான் இந்தியாவுக்கு கிளம்பிடுவேன்… டிவோர்ஸ் பத்தி அதுக்கப்புறமா பாத்துக்கலாம்…” என அவள் கூறியதும்

“வாட் த ஃ*********” கோபத்தில் வார்த்தைகளை விட்டவன் தன்னுடைய காயம் பட்ட கரத்தை கட்டில் மீது மோத முயன்று வலியில் முடியாமல் அவன் தடுமாற,

“யாழன்…” என அலறிவிட்டாள் அவள்.

“உங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? என்ன பண்றீங்கன்னு தெரிஞ்சுதான் பண்றீங்களா..? இப்படி கை உடைஞ்சு போய் இருக்கு அதைப் போய் அடிக்க ட்ரை பண்றீங்க..?” என அவள் பதறியவாறு கேட்க,

“டிவோர்ஸ் பண்ணப் போறியா..?” அவளைப் பார்த்து கேட்டான் அவன்.

அவளுக்கோ அதைப் பற்றி பேசவே பிடிக்கவில்லை.

“நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க.. எதுக்காக இப்படி பைத்தியக்காரத்தனமாக நடந்துக்கிறீங்க..?”

“ஏய்… என்ன டிவோர்ஸ் பண்ணப் போறியா டி..?” என அவன் மீண்டும் கர்ஜிக்க அவனுடைய கர்ஜனையில் அவளுக்கு உடல் தூக்கி வாரிப் போட்டது.

அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறும் முயற்சியில் அவள் திரும்பி நடக்கத் தொடங்க “படீர்…” என்ற சத்தம் அவளுடைய நடையை நிறுத்தியது.

பதறிப் போனவளாய் அவள் திரும்பிப் பார்க்க கட்டிலின் அருகே சிறிய மேஜை மீது இருந்த பூச்சாடி உடைந்து நொறுங்கி இருப்பதைக் கண்டவள் அப்படியே அதிர்ச்சியோடு அவனுடைய கரங்களைப் பார்த்தாள்.

கட்டுப்போட்ட கரம் அல்லாத மற்றைய கரத்திலும் உதிரம் வழிந்து கொண்டிருப்பதைக் கண்டவளுக்கு மூச்சு நின்றது போல இருந்தது.

நன்றாக இருந்த கரத்தால் அடித்து உடைத்திருக்கிறான் என்பது புரிய விக்கித்துப் போனவளாய் அவனைப் பார்த்தாள் அர்ச்சனா.

“ஐயோ கடவுளே எதுக்காக இப்படி பைத்தியம் புடிச்ச மாதிரி நடந்துக்கிறீங்க..? உங்கள நீங்களே காயப்படுத்துறதால உங்களுக்கு என்ன கிடைச்சிடப் போகுது..?”

“எனக்கு உன்னோட பதில் வேணும்..”

“எல்லாத்துக்கும் நான் எப்பவோ பதில் சொல்லிட்டேன் யாழவன்..”

“ஏய் யாழவனாடி நான்..? நான் உனக்கு யாழவனா..? நான் உன்னோட யாழன்டி..”

“ப்ச்.. ஒரு எழுத்து தானே இல்லாம போச்சு.. இதுல என்ன இருக்கு..?” என விரக்தியாக கேட்டாள் அவள்.

“ஒரு எழுத்து தானேவா..? இடியட் நீ என்னை யாழவன்னு கூப்பிட்டாலே தல வெடிக்கிற மாதிரி இருக்கு அர்ச்சனா.. யாரையோ ஒருத்தனோ கூப்பிடுற மாதிரி ஃபீல் ஆகுது..‌ நான் கேட்காத அளவுக்கு காதலைக் கொட்டி கொடுத்துட்டு என்ன பைத்தியக்காரனா ஆக்கிட்டு இப்போ டிவோர்ஸ் பண்ணனும்னு சொல்ல உனக்கு எப்படி மனசு வருது..?”

“வேற என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்க யாழவன்..?” வேண்டுமென்றே யாழவன் என்ற அவனுடைய பெயரில் அழுத்தம் கொடுத்து அழைத்தாள் அவள்.

அவனுக்கோ உடல் முழுவதும் தீப்பற்றி எரிவது போல இருந்தது.

அவனால் அந்த வார்த்தையை சகிக்கவே முடியவில்லை.

“சொல்லுங்க வேற என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்க..? நீங்க எத்தனை பேர் கூட வாழ்ந்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு உங்க பின்னாடியே என்ன வர சொல்றீங்களா..? இல்லன்னா எல்லாத்தையும் மறந்துட்டு நாலாவது ஆளா உங்க கூட படுக்க சொல்றீங்களா? அப்படி உங்க கூட ஒன்னா இருந்தா அவங்களுக்கும் எனக்கும் என்னங்க வித்தியாசம்..?”

“அர்ச்சனா ப்ளீஸ்.. அவங்க வேற நீ வேற..”

“பட் நீங்க எல்லாரையும் ஒரே மாதிரி தானே யூஸ் பண்ணி இருக்கீங்க..”

“ஏய் என்னோட பொறுமையா ரொம்ப சோதிக்கிறடி நீ.. நான் உன்ன யூஸ் பண்ணினேனா..? என்ன பேச்சுடி இது..?”

“ஆமா இதுக்கு முன்னாடி இருந்தவங்க கல்யாணம் பண்ணாமலேயே நீங்க கூப்பிட்டதும் வந்திருப்பாங்க.. உங்க தேவையை ஈஸியா முடிச்சுக்கிட்டு அவங்க எல்லாரைம் அனுப்பி வச்சிட்டீங்க.. ஆனா இந்த பைத்தியக்காரி தான் ஹக் பண்ண கூட விட மாட்டான்னு தெரியுமே… அதனாலதான் கல்யாணம் பண்ணி அதுக்கப்புறம் என்ன எடுத்துக்கிட்டீங்க.. இப்போ எப்ப வேணாலும் உங்க ஆசை தீர்ந்ததும் என்னை தூக்கி எறிஞ்சிட்டு இன்னொருத்தி கூடவும் உங்களால ஒன்னா இதே பெட்ரூம்ல இருக்க முடியும் தானே..?” என அவள் கேட்டு முடியவும் அவனுடைய கரம் அவளுடைய கன்னத்தை வேகமாக மோதவும் சரியாக இருந்தது.

அவன் பூச்சாடியை அடித்து நொறுக்கியதில் உதிரம் வழிந்து கொண்டிருந்த அவனுடைய மற்றைய கரமோ கோபத்தில் அர்ச்சனாவை அறைந்து விட அவளுடைய கன்னத்திலும் அந்த கரத்தில் வழிந்த உதிரம் அப்பிக்கொண்டது.

அவளோ தன்னை அடித்து விட்டானா என்ற அதிர்ச்சியில் பேச்சு மூச்சற்று அவனை அதிர்ந்து பார்த்தபடி நிற்க,

“உன்ன லவ் பண்ணி உயிருக்குயிரா உன்னை நினைச்சு எங்க அப்பா அம்மா முன்னாடி ஊர் அறிய தாலி கட்டி பொண்டாட்டியாதான் உன்னை எடுத்துக்கிட்டேன்.. வெறும் லஸ்ட்காக உன் கிட்ட வரணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.. ஏய் ஏன்டி உன்னத் தவிர வேற பொண்ணே எனக்கு கிடைக்காதுன்னு நினைக்கிறியா..?

நான் இப்போ வரைக்கும் ஏன் உன் கூட போராடிட்டு இருக்கேன்னா உன்ன உண்மையா லவ் பண்ணி தொலைச்சிட்டேன்டி.. அதுக்காகதான் இவ்வளவு நேரம் நின்னு பேசிட்டு இருக்கேன்.. ‌ இந்தக் காதல் மட்டும் இல்லன்னா நீ பேசுற பேச்சுக்கு சரிதான் போடின்னு தூக்கிப் போட்டுட்டு கெத்தா போயிருப்பேன்டி..” என அந்த இடமே அதிரும் வகையில் கத்தியவன் அவள் தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை கட்டுப்படுத்த போராடினான்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 112

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!