விஷம் – 29
யாழவன் தன்னை அறைந்து விட்டான் என்பதை உணரவே அவளுக்கு வெகுநேரம் பிடித்தது.
அவனுடைய கரத்தின் பலத்தை அவள் ஒன்றும் அறியாதவள் அல்ல.
அவளை அழுத்தமாக இறுக்கி அணைப்பதும் அவனுடைய கரங்கள் தானே.
படுக்கையில் வன்மையாக அழுத்தி வருடுவதும் அந்தக் கரம் தானே.
நெருக்கத்தின் போது மட்டுமே அறிந்த அவனுடைய கரத்தின் வலிமையை முதல் முறையாக அடியின் மூலம் உணர்ந்து கொண்டவளுக்கு விழிகளில் இருந்து கண்ணீர் பொல பொலவென சிதறியது.
நிஜமாகவே ஒரு பக்க கன்னத்தில் யாரேனும் தீயை மூட்டிவிட்டார்களோ என எண்ணக் கூடிய வகையில் கன்னம் எரிய அடிபட்ட கன்னத்தின் மீது தன்னுடைய கரத்தை அழுத்தமாக பதித்துக் கொண்டவளுக்கு மனம் தாளவில்லை.
“எதுக்கு என்ன அடிச்சீங்க..? வ… வலிக்குது யாழன்..” என்றவளின் அடிபட்ட பார்வை அவனை உயிரோடு வதைத்து விட வேகமாக அவள் அருகே சென்றவன்,
“ஹேய் ஹேய் பேபி லிசின்… சாரிடி.. சாரி.. கோபத்துல அடிச்சிட்டேன்.. ஆனா மறுபடியும் நீ உன் கூட ஒன்னா இருக்குறதுக்காகத்தான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டேன்னு தப்பா பேசினா கண்டிப்பா என்னை என்னாலயே கன்ட்ரோல் பண்ண முடியாதுடி..” என அவன் அழுத்திக் கூற அவளுக்கோ உடல் விதிர்விதிர்த்துப் போனது.
என்ன வகையான மனிதன் இவன் என எண்ணியவள் திகைத்துப் போனாள்.
“பேபி நான் உன்ன லவ் பண்றேன்.. அதுக்காக மட்டும்தான் உன்னை கல்யாணம் பண்ணினேன்.. இந்த லஸ்ட் எனக்கு மேட்டரே கிடையாது.. லஸ்டுக்காக கல்யாணம் பண்ணனும்னு எனக்கு அவசியமும் கிடையாது.. உன் மேல எனக்கு இருக்கிறது லவ் தான்.. உன்ன ஹக் பண்ணனும் கிஸ் பண்ணனும் எப்பவுமே என்னோட கைக்குள்ளேயே உன்ன பொத்திப் பொத்தி வெச்சிருக்கணும்னு தோணுறதுக்கு லஸ்ட் மட்டும் காரணம் இல்லடி..”
அவளுக்கோ அழுகை அதிகரித்தது.
“நீ என்னோட பொண்டாட்டி.. மத்தவங்க கூட உன்னை கம்பேர் பண்ணிக்காத..” என அவன் கடினமான குரலில் கூற,
“என்னால கம்பேர் பண்ணிக்காம இருக்க முடியல..” என அழுதாள் அவள்.
“டாமிட்…” என்றான் அவன்.
“மறுபடியும் என்ன அடிப்பீங்களா..?” என உதடுகள் துடிக்கக் கேட்டவளை வேகமாக நெருங்கிச் சென்றவன் அவளை அணைக்க முயன்று பின் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அசையாது நின்றான்.
அவளுடைய ஒவ்வொரு துளி கண்ணீரும் முட்களாய் மாறி அவனுடைய இதயத்தை குத்திக் கிழித்தது.
“என்னை ஏன்டி இப்படி படுத்துற..?” சோர்வோடு கேட்டான் அவன்.
“இதெல்லாம் நான் சொல்லணும்… உங்கள பார்த்தாலே பயமா இருக்கு.. ஒரு கை உடைஞ்சிருக்கு. இன்னொரு கையையும் உடைக்க ட்ரை பண்றீங்களா..? எவ்வளவு ரத்தம் வருதுன்னு பாருங்க.. இப்படி சைக்கோத்தனமா நடந்துக்கிட்டா என்ன அர்த்தம்..? எ.. எனக்கு பயந்து வருது யாழவன்..” என்றாள் அவள்.
“சைக்கோத்தனமா நடந்துக்கிறேனா..?”
“ஆமா உங்கள நீங்க இப்படி காயப்படுத்துறதும் வீட்ல இருக்க திங்ஸ உடைக்கிறதும் பொண்டாட்டியை கைநீட்டி அடிக்கிறதும் சைக்கோத்தனம் தான்..”
“சாரி..” என்றவன் சற்று நேரம் அமைதியாக நின்றான்.
பின் தன் தலையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு விழிகளை அவன் மூடிக்கொள்ள அவனை அந்த நிலையில் பார்த்த அர்ச்சனாவுக்கோ மனதிற்குள் ஏதோ பிசைந்தது.
மனநிலை குழம்பிப் போனவன் போல ஒற்றைக் கையில் காயத்தோடும் மற்றைய கையில் உதிரத்தோடும் தலைக்கேசம் குழம்பி சட்டை கசங்கி நின்றவனை இந்தக் கோலத்தில் அவள் இதற்கு முன்னர் பார்த்ததே இல்லை.
“யாழவன்..?” மெல்ல அழைத்தாள் அவள்.
நிமிர்ந்து பார்த்தவனின் விழிகள் சிவந்து கலங்கிப் போயிருந்தன.
அவனோ அவளை விட்டு விலகிச் சென்று அந்த அறைக்குள் இருந்த கைகுட்டை ஒன்றை எடுத்து வந்தவன் அவளுடைய கன்னத்தில் இருந்த தன்னுடைய உதிரத்தை துடைத்து விட்டான்.
“வலிக்குதாடி..?”
“…….” அவளிடமோ மௌனம்.
“சாரி அச்சு… நாம நார்மலா ரிலாக்ஸா பேசலாம்..” என்றான்.
“உ.. உங்களுக்கு ப்ளீடிங் ஆகுது..” என்றாள் அவள் கண்ணீரோடு.
“எனக்கு வலியே தெரியலடி..” என்றான் அவன் உணர்வுகளை தொலைத்த குரலில்.
“தயவு செஞ்சு இப்படி பிஹேவ் பண்ணாதீங்க யாழவன்.. மிருகம் மாதிரி நடந்துக்காதீங்க… மனுஷன்னா உணர்ச்சி இருக்கணும்.. வலி தெரியணும் இப்படி கல்லு மாதிரி நின்னா என்ன அர்த்தம்..? இவ்ளோ ப்ளீடிங் ஆகுது.. உங்களுக்கு வலியே தெரியலையா..? நிஜமாவே வலிக்கலையா..?”
“இந்த வலியை விட நீ கொடுக்கிற வலி ரொம்ப பெருசா இருக்குடி.. அதனால இது ஒன்னும் எனக்கு பெருசா தெரியல..” என்றானே பார்க்கலாம்..
அவளோ ஆடித்தான் போய்விட்டாள்.
என்ன சொல்கின்றான் இவன்..?
நான் இவனுக்கு வலியை கொடுக்கின்றேனா..?
இவன் அல்லவா எனக்கு தாள முடியாத வழியைக் கொடுத்து விட்டான்.
இப்போது என்னைக் குற்றம் சாட்டுவது எந்த விதத்தில் நியாயம்..?
“இல்ல எனக்குப் புரியல.. நீங்க பண்ணது தப்புன்னு சொல்லி என்னோட வாழ்க்கைக்கு நான் நியாயம் கேட்டா அது உங்களுக்கு வலிக்குதா..?
இத்தனை பொண்ணுங்க கூட வாழ்ந்த உங்களுக்கே என் மேல காதல் வந்து நான்தான் வேணும்னு சொல்றீங்கல்ல.. உங்களை மட்டுமே காதலிச்சு உங்களை மட்டுமே நம்பி இவ்வளவு தூரம் வந்த எனக்கு உங்க பாஸ்ட் லைஃப்ல இத்தனை பொண்ணுங்க இருந்திருக்காங்க.. என்ன தொட்ட மாதிரி நீங்க அவங்களையும் தொட்டு இருக்கீங்கன்னு தெரியும் போது எனக்கு எவ்வளவு வலிக்கும்னு உங்களுக்குப் புரியவே இல்லையா..?
நான் அப்படி என்ன ஆசைப்பட்டுட்டேன்..? நான் எப்படி உங்களுக்கு உண்மையா இருக்கேனோ அதே மாதிரி நீங்களும் எனக்கு உண்மையா இருக்கணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு..?
புரியுது… இப்போ நீங்க எனக்கு உண்மையா இருந்தாலும் முன்னாடி நீங்க அப்படி இல்லையே.. என்னதான் நீங்க அது முடிஞ்சு போன வாழ்க்கைன்னு சொன்னா கூட என்னால அதை ஏத்துக்கவே முடியல.. மனசெல்லாம் வலிக்குது.. நான் என்ன பண்ணட்டும்..?
உங்கள கஷ்டப்படுத்தணும்னோ காயப்படுத்தனும்னோ எனக்கு எந்த விதமான ஆசையுமே கிடையாது.. என்னால தாங்கிக்க முடியல.. என்னால அதை அக்சப்ட் பண்ணிக்க முடியல.. நீங்க என்ன எவ்வளவு லவ் பண்றீங்களோ அதே மாதிரி தானே நானும் லவ் பண்றேன்.. இந்த லவ்வே வேணாம்னு முடிவு பண்றேன்னா என்னோட மனசு எவ்வளவு காயப் பட்டிருக்கும்னு நீங்களே யோசிச்சு பாருங்க…” என தன் பக்க நியாயத்தை எடுத்துக் கூறினாள் அவள்.
“நீ சொல்றதெல்லாம் எனக்கு புரியுது அச்சு.. இப்போ நான் என்ன பண்ணனும்னு நீ நினைக்கிற..?”
“தெ.. தெரியல..”
“பிரிஞ்சு போறது தான் உன்னோட முடிவா அர்ச்சனா..? அவ்ளோதானா..?” ஆழ்ந்த குரலில் கேட்டான் அவன்.
அவளுக்கோ அவனுடன் சேர்ந்து வாழ முடியும் என்று தோன்றவே இல்லை.
அதே போல அவனை மொத்தமாகப் பிரிந்து தன்னால் வாழ்ந்திட முடியும் என்றும் தோன்றவில்லை.
காதே கேளாதவள் போல நின்றிருந்தாள் அர்ச்சனா.
“ஏதாவது சொல்லுடி..”
“மு.. முதல்ல உங்க கைக்கு மருந்து போடுங்க ப்ளீஸ்…” என்றாள் அவள் தவிப்புடன்.
“ப்ச்… லீவ் இட்.. நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடி..”
“ஐயோ.. சொல்லு சொல்லுன்னா என்ன சொல்றது..? எனக்கு தெரியல யாழவன்…” என்றவள் அவனுடைய கரத்தில் உதிரம் நிற்காமல் வழிவதைக் கண்டு மேலும் உடைந்து போனாள்.
அவனாக இந்தக் காயத்திற்கு மருந்து போட மாட்டான் என்பதை உணர்ந்து கொண்டவள் அவனை நெருங்கி வந்து அவனுடைய கரத்தைப் பற்றிக் கொள்ள,
அவனோ அவளை இமைக்காது பார்த்தான்.
“என் கூட வாங்க..” என்றவள் அவனை குளியல் அறைக்குள் அழைத்துச் செல்ல, அவளுடைய இழுப்புக்கு ஏற்ற காத்தாடி போல அவளுடன் சென்றான் அந்த ஆண்மகன்.
அங்கே நீர்க் குழாயைத் திறந்து விட்டு அவனுடைய உதிரம் வழிந்த கரத்தை நீரினால் சுத்தம் செய்தவள் தன்னுடைய துப்பட்டாவினால் அவனுடைய கரத்தை உதிரம் வழியாதவாறு இறுக்கமாகக் கட்டி விட,
தனக்கு அருகே நின்றிருந்த மனைவியின் வியர்வை வாசம் அவனைத் தடுமாறச் செய்தது.
“பேபி போதும்..” என்றவன் தன்னுடைய கரத்தை அவளுடைய பிடியில் இருந்து உருவிக் கொண்டான்.
துப்பட்டா இல்லாத சுடிதாரின் மீது அவன் கட்டிய தாலிக் கொடி தவழ்வதைக் கண்டவனுக்கு இதயத் துடிப்பு எகிறியது.
“இரத்தம் வர்றது நின்னதும் துப்பட்டாவ ரிமூவ் பண்ணிட்டு மருந்து போட்டுக்கலாம் யாழன்..” என்றவளின் முகத்தில் விழுந்த கூந்தலை ஒதுக்கி விட்டவன் அவளுடைய காது மடலை வருட,
அவளோ அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.
“ஐ லவ் யூ பேபி…” என்றவனின் கரம் அவளுடைய காது மடலை வருடி முடித்து மென்மையான சங்குக் கழுத்தை தடவிக் கொடுக்க,
பதறி விலக முயன்றவளின் சுடிதாரை பிடித்துக் கொண்டவன் “ட்ரெஸ்ஸ ரிமூவ் பண்ணிடவா..?” என அவளிடமே கேட்க, அவளுக்கோ உடல் வெட வெடத்துப் போனது.
உறைந்து நின்றவளின் உதடுகளை நெருங்கி கவ்விக் கொண்டவன் அவளை ஆழ்ந்து முத்தமிட்டு விட்டு விலகி வெளியே சென்று விட தடுமாறி சுவற்றில் சாய்ந்து கொண்டவளுக்கோ படபடப்பு குறையவே இல்லை.
தன்னை நிதானப் படுத்திக் கொண்டு வெளியே வந்த அர்ச்சனாவோ சோபாவில் அமர்ந்திருந்தவனை வெறித்துப் பார்த்தாள்.
“இன்னைக்கு நீ என் கூடவே நைட் ஸ்டே பண்ணுடி..” என்றவனை முறைத்துப் பார்த்தவள்,
“என்ன விளையாடுறீங்களா..?” எனச் சீறினாள்.
அவளுடைய குரலில் தவிப்பும் கோபமும் ஒன்றாகக் கலந்திருந்தது.
தன்னையே புரியாத குழப்பத்துடன் நின்றிருந்தவளது இதயத் துடிப்பு ஓசை அவளுக்கே கேட்டது.
சோபாவிலிருந்து மெதுவாக எழுந்தான் யாழவன்.
அவன் கண்கள் அவளையே ஊடுருவிப் பார்த்தன.
ஆம் உயிரை ஊடுருவும் பார்வையே அது.
“என்னப் பார்த்தா விளையாடுற மாதிரி தெரியுதா..?” என்றான் மெதுவான, ஆனால் ஆழம் நிறைந்த குரலில்.
அவள் வாயைத் திறக்க முயன்றாள், ஆனால் வார்த்தைகள் சிதறின.
கோர்வையாக வர மறுத்தன.
அவன் முன்பு தன் உடல் பலவீனமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டவள் அவனை அழுத்தமாகப் பார்த்தாள்.
அவனோ அவளிடம் சில அடிகள் நெருங்கி வந்தான்.
“கிட்ட வராதீங்க..”
“ஏன்..?”
“வரக் கூடாது..”
அவனோ மிக நெருக்கமாக அவளை நெருங்கி நின்றான்.
“எதுக்கு என்ன கிஸ் பண்ணீங்க..?”
“நீதானேடி என்ன மருந்து போட்டுக்க சொன்ன..”
“நா.. நான் மருந்துதான் போட்டுக்க சொன்னேன்.. கிஸ் பண்ண சொல்லலை..”
“உன்னோட லிப்ஸை விட வேற எந்த மருந்துடி என்ன குணப்படுத்த போகுது..?” என்றவன் அவளுடைய கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்துக் கொள்ள உறைந்து போய் நின்றாள் அர்ச்சனா.