7. சிந்தையுள் சிதையும் தேனே..!

4.3
(9)

தேன் 7

உயிலில் எழுதி இருந்த விடயங்கள் யாதெனில்,

‘திருமதி காயத்ரி கருணாகரன் ஆகிய நான் எனது அனைத்து சொத்துக்களையும் தனபால் கார்த்திகேயனுக்கு முழு மனதுடன் மனப்பூர்வமாகக் கொடுக்கின்றேன் என்பதனை இதன் மூலம் அறியத் தருகின்றேன்..

குறிப்பு – கார்த்திகேயனுக்குரிய சொத்துக்கள் அனைத்தும் அவருக்கு வரப்போகும் மனைவி அனுபவிக்க மட்டுமே முடியும் உரிமை கொண்டாட முடியாது. மேலும் அவர் அந்த சொத்துக்களை யாருக்காவது மாற்றிக் கொடுக்க விரும்பினால் அது அவரது மனைவி மற்றும் வாரிசுகளின் பெயரில் மட்டுமே மாற்றி அமைக்க முடியும். அதுவும் ஒரு வருட காலங்களுக்கு பின்பு தான் மாற்றிக் கொடுக்க முடியும்…’ என்று வக்கீல் ராஜேந்திரன் வாசித்துக் காட்ட,

நிவேதாவின் மனதில் எண்ணங்கள் பேரலையாய் மோதிக்கொண்டிருந்தன. உடனே வேகமாக தனது அறைக்குள் சென்று தாழிட்டவள், தீவிரமாக அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசிக்கத் தொடங்கினாள்.

“அந்த வேலைக்காரனுக்கு போய் சொத்து முழுவதையும் எங்க அம்மா எழுதி வச்சுட்டாங்களே..! ச்சே.. இந்த அம்மாவுக்கு புத்தி கெட்டு போச்சு இப்போ என்ன பண்றது ஏதாவது செய்யணும் நிவேதா யோசி யோசி இந்த சொத்தை நாம விட்டுறக்கூடாது அய்யோ கடவுளே என்னால அதை நினைச்சே பார்க்க முடியல ஒரு நாள் கூட என்னோட கையில காசு இல்லனா என்னால இந்த உலகத்துல உயிர் வாழவே முடியாதே…!” என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டிருந்தாள் நிவேதா.

“இதுக்கு ரெண்டே வழி தான் ஒன்னு அம்மாவை சமாதானப்படுத்தி இந்த உயிலை மாற்றி என் பெயருக்கு எழுதணும் இன்னொன்னு அந்த வேலைக்காரனையே கட்டிக்கிட்டு ஒரு வருஷம் அவனோட பேருக்கு வாழ்ந்துட்டு சொத்தை வாங்கி எடுத்துட்டு டிவோர்ஸ் பண்ணி துரத்தி விடுறது இந்த இரண்டுல எது நம்மளுக்கு செட் ஆகும்

எனக்கு என்னவோ இரண்டாவது வழி தான் சரி வரும்னு தோணுது அவன பாக்க அவ்வளவு கெட்டவனா தெரியல ரொம்ப நல்லவனா தான் இருக்கான்

என்ன ஒரு கெட்ட பழக்கம் நான் தப்பு செஞ்சா ஸ்கூல் மாஸ்டர் மாதிரி கிளாஸ் எடுக்கிறான் அவன் யாரு என்ன தட்டிக் கேட்கிறதுக்கு ராஸ்கல்…

என்ன செய்ய ஒரு வருஷம் அவனோட இம்சையை சகிச்சுக்கிட்டு வாழ்ந்துட்டு  சொத்தை வாங்கியதற்கு அப்புறம் நம்மட வேலையை காட்டிடுவோம்..” என்று திட்டம் தீட்ட, அவளது திட்டத்தை பார்த்த விதியோ பாவம் என்று எக்காளமிட்டுச் சிரித்தது.

விதி விளையாட்டில் யாரும் தப்பிக்க முடியாது. விதி என்னும் வலையில் சிக்கி திசை மாறாமல் தங்களது இலக்கை நோக்கி செயல்பட்டாலே வெற்றி பெறலாம். விதி வலியது அல்லவா பார்ப்போம் யாரின் கழுத்தில் யார் மாலை சூட்டுவது என….

********************

மகிழ்மதி முதல் முறையாக பொறுப்பேற்பதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றாள். அங்கு மாலை போட்டு அனைவரும் வரவேற்க, ஒரு சில ஊர் மக்கள் இருக்க அவள் அனைவரையும் உள்ளே அழைத்து இந்த ஊரின் விபரங்களை கேட்டு அறிந்து கொண்டு வரவேற்க வந்ததற்கு மிக்க நன்றி என அவர்களை வழி அனுப்பி வைத்தாள்.

நாள் முழுவதும் அங்கு நடக்கும் சிறு சிறு குற்றங்களை கோப்புகளில் இருந்து ஆராய்ந்து பார்த்து அதில் எதுவித தடயங்களும் கிடைக்காமல் அந்த கேஸ்ஸுகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதை பார்த்து சந்தேகம் துளிர்த்தது.

அந்த நேரம் பார்த்து அவளது தொலைபேசியின் அழைப்பு மணி ஒலிக்க,

உடனே அதனை அழுத்தி காதில் வைத்தவள்,

“குட் மார்னிங்…” என்று மரியாதையாகக் கூறினாள்.

அவளை விட உயர் அதிகாரியான கமிஷனர் ராம்பிரசாத் தான் அவளுக்கு அழைப்பு எடுத்திருந்தது.

“கங்கிராஜுலேசன் மிஸ் மகிழ்மதி பெஸ்ட் ஆஃப் லக் உங்களது கடமையை நீங்க  ஒழுங்கா திறம்பட செய்வீங்கன்னு நான் நம்புறேன்..”

“உங்க நம்பிக்கையை நான் எப்போதும் காப்பாற்றுவேன் சார் அண்ட் தேங்க்யூ வெரி மச்..”

“ஓகே நான் உங்களை நேரில் சந்திக்கணும் ஒரு முக்கியமான கேஸ் பற்றி உங்ககிட்ட பேசணும் கமிஷனர் ஆபீஸ்க்கு இப்போ கொஞ்சம் வந்துட்டு போங்க..”

“ஓகே சார் டென் மினிட்ஸ்ல நான் அங்க இருப்பேன்..” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

சொன்னபடியே பத்து நிமிடங்களில் கமிஷனர் ஆபீஸ் சென்றவள் அங்கே கமிஸ்னரை சந்திக்க அவரது அறைக்குள் செல்ல அவருடன் அசிஸ்டன்ட் கமிஷனர் அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது மகிழ்மதியைப் பார்த்த அசிஸ்டன்ட் கமிஷனர் ஏதோ சொல்ல வந்து பின்பு இன்னும் பேசாமல் அவளை நன்றாக மேலிருந்து கீழ் வரை அளவெடுத்துப் பார்த்தார்.

அவர் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பதைக் கவனித்த மகிழ்மதியோ அப்போது எதுவும் பேசாமல் இருவருக்கும் ஒன்றாக சல்யூட் அடித்தாள்.

கமிஷனரை அசிஸ்டன்ட் கமிஷனர் கேள்வியாக பார்க்க,

“ரகுவரன் இவங்கதான் புதுசா ஜாயின் பண்ணி இருக்க போலீஸ் ஆபீஸர் மகழ்மதி இவங்கள பத்தி தான் இப்போ பேசிட்டு இருந்தேன்..” என்று அசிஸ்டன்ட் கமிஷனரிடம் கமிஷனர் மகிழ்மதியை அறிமுகப்படுத்தி வைத்தார்.

அவரது அறிமுகத்தை கேட்ட பின்பு மகழ்மதியை பார்த்து தலை அசைத்து விட்டு கமிஷனரை நோக்க,

கமிஷனர் “ஓகே நான் நேரா விஷயத்துக்கே வாரன் உங்கள ஃபர்ஸ்ட் நான் உங்க ஊருக்கே போஸ்டிங் போட்டுக் கொடுத்ததற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு ஏன்னா உங்க ஊரை தவிர சுத்தியுள்ள ஊர்ல இருக்கிற 15 வயசு தொடக்கம் 30 வயசு வரைக்கும் இருக்கிற பெண்கள் அடிக்கடி காணாமல் போறாங்க

இதுவரைக்கும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியல அது சம்பந்தமான தடையங்கள் எதுவும் கிடைக்கல திடீரென்று காணாமல் போனவங்களை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியல

முதல் கேஸே ரொம்ப டிஃபிக்கல்லானத தாரேன்னு நினைக்காதீங்க நீங்க போலீஸ் ட்ரெயினிங் டைம்ல பெஸ்ட் பர்பாமென்ஸ் பண்ணுனீங்கன்னு  சொல்லி எனக்கு தகவல் வந்துச்சு

உங்களிடம் நல்ல திறமை இருக்கு நல்ல முயற்சி இருக்கு அதனால தான் உங்ககிட்ட இந்த பொறுப்பை நான் ஒப்படைச்சிருக்கேன் நீங்க சிறப்பா செய்வீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..”

“நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க சார் நான் கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவேன் இப்படியான கேஸ் எடுக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும் இத நான் ஒரு டாஸ்க்கா எடுத்து செய்கிறேன்..”

“ஒகே மகிழ்மதி எனக்கு தெரியும் நீங்க இது சேலஞ்சா எடுத்து செய்வீங்கன்னு அதோட இதுவரைக்கும் ஒன்பது பொண்ணுங்க காணாமல் போயிருக்காங்க அது பத்தின ஃபுல் டீடைல்ஸ் இந்த பைல்ல இருக்கு..” என்று கமிஷனர் கோப்பை நீட்ட,

அதை வாங்கிய பின்,

“ஓகே சார் நான் கிளம்புறேன்..” என்று சல்யூட் அடித்து விட்டு மகழ்மதி புறப்பட, அசிஸ்டன்ட் கமிஷனர் மகிழ்மதியை பார்த்து,

“மகிழ்மதி  உங்களுக்கு இந்த ஊர் தானா..?”

“ஆமா சார்..”

“உங்களோட அப்பா, அம்மா பேரு..”

“அப்பா சிங்காரவேலன் அம்மா புஷ்பராணி..” என்று கூறிவிட்டு அசிஸ்டன்ட் கமிஷனரை மகிழ்மதி கேள்வியாகப் பார்க்க,

“இல்ல உங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு இதுக்கு முன்னுக்கு நாம சந்திச்சிருக்கோமா..?” என்று அசிஸ்டன்ட் கமிஷனர் ரகுவரன் கேட்டதும் அவளும் தீவிரமாக யோசிக்க தொடங்கினாள். ஆனால்  மகிழ்மதிக்கோ அவரை இதற்கு முன் சந்தித்ததாக ஞாபகம் எதுவும் இல்லை.

ராம்ப்ரசாத் ரகுவரனை பார்த்து பார்த்து,

“என்னடா இது கேள்வி டிபார்ட்மெண்ட்ல இருக்கிறவங்க ஒருத்தர ஒருத்தர் சந்திக்கிறது வழமை தானே ட்ரெயினிங் டைம்ல நீ பார்த்திருப்ப..”

“இல்லடா நான் வேற எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு சரி ஓகே மா நீங்க போய் உங்க வேலைய பாருங்க ஏதோ மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் என்று நினைக்கிறேன்..” என்று குழம்பியவாறு கூறினார் ரகுவரன்.

“ஓகே சார்..” என்று மீண்டும் சல்யூட் அடித்து விட்டு தனது முதல் கேஸை கையில் எடுத்துக்கொண்டு வீறுநடை போட்டு சிங்கப்பெண்ணாக அந்த கயவர்களை வேட்டையாடும் எண்ணத்துடன் புறப்பட்டாள் மகிழ்மதி.

பாவம் அந்த பேதைவளுக்குப் புரியவில்லை இந்த கேஸால் தன் தலையெழுத்தே மாறப் போகின்றது என்று…

அப்படி என்னவாக இருக்கும்…

வாசகப் பெருமக்களே எங்க பதில் சொல்லுங்க பார்ப்போம்….

ஹா.. ஹா.. ஹா.. என்னடா இவள் கேள்வி கேட்டே கொல்லுறாளே என்று பாக்குறீங்களா..?

சும்மா தான் இப்படி உங்களோட விளையாட இன்ட்ரஸ்டிங்கா இருக்கு…

உங்களுக்கு எப்படி..?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!