அரிமா – 2.1

4.6
(10)

அன்று…

கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் கன்னியாஸ்திரி மேரி வசிக்கும் மடத்தில் 1991 ஆம் ஆண்டில்,

“இந்த காயம் எப்படி வந்ததுன்னு சொல்ல போறியா இல்லையா டா” அதட்டினார் மதர் மெரி.

“கீழ விழுந்துட்டேன் மாதர்” – மழலையின் குரல் கனிவாக குலைந்தபடி வந்தது.

“நான் உண்மைய கேக்குறேன்”

“நிஜமாவே கீழ விழுந்துட்டேன் ” – மீண்டும் அச்சிறுவன் பொய் சொல்ல,

“அப்படியா சரி. இன்னைக்கு ராத்திரிக்கு உனக்கு சாப்பாடு கிடையாது. நீ இன்னைக்கு வெளியில பனியில தான் நிக்கணும் உன் பொய்க்கு அதுதான் தண்டனை. உண்மையை சொன்னா உள்ள வரலாம்” – திட்டவட்டமாக கூறியவர் நாற்காலியில் இருந்து எழுந்து உள்ளே சென்றார்.

நேரம் கடந்து கொண்டே போக. அச்சிறுவனின் வயிறு, பசியில் அலறியது. ஆனாலும் அடித்த வாடைக்காற்றிலும், பொழிந்த பனி துளியிலும் நனைந்து கொண்டு குளிரில் நடுங்கியபடி நின்றவன், மறந்தும் உண்மையை கூறாமல் நிற்க, அச்சிறுவனின் பிடிவாதத்திற்கு முன்னால், கன்னியாஸ்திரி மேரி தான் தோற்று போனார்.

பிறந்தவுடன் தன் விரலை ஆறுதலாய் பற்றிக்கொண்ட அந்த பிஞ்சின் விரல்கள் இப்பொழுது குளிரில் நடுங்குவதை கண்டவரின் உள்ளம் பரிதவிக்க, அவனை தன்னுடன் அணைத்தபடி உள்ளே அழைத்து வந்தார். அச்சிறு வயதில் அவனுக்குள் இருந்த  வைராக்கியம் அவருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

” பசியில கூட இருந்துக்குவ ஆனா உன்னை அடிச்சவங்க யாருன்னு மட்டும் சொல்ல மாட்ட அப்படி தானே, உண்மைய சொல்லிட்டு உள்ள வந்திருக்கலாம்ல ஏன் சொல்லல ?? தினமும் அவன் உன்னை அடிக்கிறான்ல உனக்கு கோபம் வரல ” அவனது விழிகளை பார்த்து கேட்டார்.

” யாருமே வேணும்னே நமக்கு தீமை செய்ய மாட்டாங்க, ஏதோ ஒரு சூழ்நிலை தான் அவங்களை அப்படி செய்ய வச்சிருக்கும். என்னைக்காவது ஒருநாள் அவங்க மாறுவாங்க. நம்மளையும் ஏத்துக்குவாங்க. இந்த உலகத்துல உறவுகளை உண்டாக்குறது தான் கஷ்டம் உடைக்கிறது ரொம்ப சுலபம், அதனால யாரையும் வெறுக்கமா கோபப்படாம எல்லார்கிட்டயும் நட்ப்பு பாராட்டணும்ன்னு நீங்க தானே மதர்  சொன்னீங்க.” – என்றான் அவன் நீதானமாக.

” நான் தான் சொன்னேன் ஆனாலும்..” என்றவருக்கு அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை, அச்சிறுவனை பார்க்கும் பொழுது அவ்வளவு பிரம்மிப்பாக இருந்தது.

மதர் மெரி அந்த மடத்தில் இதுவரை பல குழந்தைகளை சந்தித்துள்ளார், ஆனால் இவன் அனைவரையும் விட அவரது கண்ணுக்கு வித்யாசமானவனாய் தெரிந்தான்.

இன்று..

மும்பையில்,

ராம்குமார், “ப்ரீத்தா ப்ளீஸ் அழாத நீ அழும் பொழுது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அக்கா பேசுனத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். ப்ளீஸ் பா அழாத” – கவலையுடன் கண்ணீர் வடிக்கும் மனைவியை சமாதானம் செய்தார்.

“மன்னிப்பா ! என் பாவத்துக்கே விடை தெரியாம நான் முழிச்சிட்டு இருக்கேன் உங்கள நான் எப்படி மன்னிக்க முடியும்”

” ப்ரீத்தா பழசை மறந்திரு டா “

” மறக்கணும் தான் நினைக்கிறன் முடியல பா ” – அழுதபடி தன் கணவனின் தோளில் சாய, ராம்குமாரோ கனிவுடன் அணைத்துக்கொண்டு ஆறுதல் கூறிய போதிலும், ராம்குமாரின் முகம் இறுக்கமாக இருந்தது.

அதேநேரம் மிருதுளாவோ தன் கணவன் அருள்நிதியை தன் வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டிக்கொண்டிருந்தாள்.

” அங்க அத்தனை பேருக்கு முன்னாடி என்னை திட்டுறீங்க. ம்ம்ம் எங்க இருந்து வந்தது இந்த தைரியம் ??” – காளிஅவதாரத்தில் கணவனை தன் வார்த்தையால் வதைத்து கொண்டிருந்தாள்.

அருள்நிதிக்கு ?? என்ன எல்லாம் பழக்கப்பட்டது தானே !! வழக்கம் போல ‘சரி மா சாரி மா ‘ தான்.

அப்பொழுது தடாரென்று அறையின் கதவை திறந்து கொண்டு வந்த ஜூவாலா கண்களில் நீருடன் ,

” நான் உங்க கிட்ட என்ன கேட்டேன் நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ” – என்று கத்தி அழுதாள்.

” என்னாச்சு மா ” – பதறி போன தாய் தந்தை இருவரும் தன் மகள் ஜுவாலாவை அணைத்துக்கொள்ள முயற்சிக்க. தன் கரம் உயர்த்தி தடுத்தவள்.

” வேண்டாம் இதெல்லாம் என்னை சமாதானம் செய்ய முடியாது. எனக்கு அர்ஜுன் அத்தான் வேணும். அர்ஜுன் அத்தான் தான் வேணும். புரிஞ்சிக்கோங்க மா அவரு இல்லமா வாழ முடியாது. முதல்ல அத்தை மாமா கிட்ட இதை பத்தி பேசுங்க. அவரு மது மதுன்னு உருகும் போது கஷ்டமா இருக்கு “

” எல்லம் உங்க அண்ணன் பொண்ணால வந்தது ” – அருள்நிதியை பார்த்து மிருதுளா திட்ட,

” இதுல மது மேல என்ன தப்பு இருக்கு. அவளே அப்பா அம்மா எல்லாரையும் இழந்துட்டு நிக்கிறா. அவளை ஏதும் சொல்லாத நமக்கு ஜூவாலா எப்படியோ அப்படி தான் மதுவும் “

” ஆமா வாங்க. மது ஒன்னும் என் பொண்ணு இல்லை உங்க அண்ணன் பொண்ணு. உங்க அண்ணன் பொண்ணால என் பொண்ணு அழுறா ” – உக்கிரமாய் கத்தினார்.

” அம்மா கொஞ்சம் வாய மூடுங்க. ரெண்டு பேருக்கும் உங்க சண்டை தான் பெருசா இருக்கு ” – தன் பெற்றோரின் வாக்குவாதத்திற்குள் குறுக்கிட்டபடி கத்தினாள் ஜூவாலா.

” அப்படி இல்ல டா.. அந்த மதுவை எதாவது பண்றேன் ” – மிருதுளா சமாதானம் பேச ஆர்மபிக்கவும் தடுத்தவள்,

” என்ன பேசிட்டு இருக்கீங்க? மதுவ என்ன பண்ணனும்? இதுல மது மேல என்ன தப்பு இருக்கு, மது நல்லா இருக்கணும். எனக்கு உங்கள போல மது மேல எந்த கோபமும் இல்லை. எனக்கு அர்ஜுன் அத்தான் வேணும் அவ்வளவு தான். எனக்கு மதுவும் கஷ்டப்படக்கூடாது. அதேநேரம் அர்ஜுன் அத்தானும் வேணும் அதுக்கு என்ன பண்ண முடியுமோ அதை மட்டும் பண்ணுங்க ” – என்றவள் கதவை படாரென்று சாற்றிவிட்டு அங்கிருந்து செல்ல.

” மதுவை அழிச்சாவது அர்ஜுனை உன் கூட சேர்த்து வைப்பேன். இது என் மேல சத்தியம் “- மிருதுளாவின் மனம் வஞ்சகமாய் உறுதி கொண்டது.

ஜூவாலா இளமாறனின் தங்கை. அருள்நிதி மற்றும் மிருதுளாவின் செல்ல மகள். பட்டப்படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருக்கிறாள். இவள் தன்னை விட அதிகம் நேசிப்பது யார் என்றால் அது அர்ஜுன் தான். அர்ஜுனையே தன் உலகமாக நினைத்து கனவில் அவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

தனக்காக ஒரு பெண் நித்தமும் தவித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை கூட அறியாத அர்ஜுனோ மாறனிடம்,

“மாறா மதுக்கு கால் பண்ணினேன் அவ எடுக்க மாட்டிக்கிறா. எனக்கு ஒரு முக்கியமான வேலை வந்திருக்கு நான் கண்டிப்பா போகணும். நீ கொஞ்சம் மதுவ டிராக் பண்ணிக்கோ அவ வந்தது மறக்காம எனக்கு மெசேஜ் பண்ணிடு ” – என்க, உடனே இளமாறன் தான் பார்த்துக்கொள்வதாய் உறுதியளிக்க. அர்ஜுன் யாருக்கோ தன் அலைபேசியில் இருந்து குறுஞ்செய்தி ஒன்றை டைப் செய்தபடி அங்கிருந்து சென்றான்.

” எங்க இருக்கீங்க ?” என்று குறுஞ்செய்தி அனுப்பினான் அர்ஜுன்.

” அங்க தான் சார் இருக்கோம். எல்லாம் பக்காவா இருக்கு நீங்க சொன்னீங்கன்னா அவங்களை அரெஸ்ட் பண்ணலாம்  ” – என்று  பதில் அனுப்பினார்  எதிர் தரப்பில் இருந்தவர்.

உடனே அர்ஜுனோ,” நோ வெயிட், இது பத்தாது. நான் க்ளீயர் பண்ணிக்குறேன். என் ஆர்டர்க்காக காத்திருங்க ” – என்று பதில் அனுப்பினான் .

பிறகு அர்ஜுன் தன்னுடன் பணிபுரியும் தன் நண்பன் மதனுக்கு  அலைபேசி மூலமாய் தொடர்பு கொண்டு,

” நான் சொன்னது என்னாச்சு ” என்று வினவினான்.

” நீ சொன்னது சரிதான் டா. மிரட்டல் காலோட வோக்களும்(vocal voice ). நீ சொன்ன ஆளோட வோக்களும் மேட்ச் ஆகுது. “

” தட்ஸ் இட். நாம குற்றவாளிய நெருங்கிட்டோம் மதன் “

“குற்றவாளி யார்ன்னு உனக்கு எப்படி டா தெரியும் ?”

 “அவர பார்க்க தான் இப்போ போகப்போறோம் யார்ன்னு இன்னும் அரைமணி நேரத்துல உனக்குத் தெரியும்”

” எவிடன்ஸ் சரியா இல்லாம எப்படி. “

” ஆதாரம் தானே அவனே சொல்லுவான் “

“சரி இப்போ பிளான் என்ன ??”

” நீ நம்ம டீம்ல ஒரு அஞ்சு பேர மட்டும் ரெடி பண்ணி கோவிந்தன் தலைமையில நான் சொல்ற இடத்துக்கு அனுப்பு.. வெளியவே இருக்கட்டும் என் ஆர்டர்க்காக வெயிட் பண்ண சொல்லு. உள்ள நம்ம ஆளுங்க ரெண்டு பேர் ஏற்கனவே இருக்காங்க. நான் சொல்லும் பொழுது உள்ள போனா போதும்.. என்கூட நீ மட்டும் வந்தா போதும். அட்ரஸ் மெசேஜ் பண்றேன் வந்திரு  ” – என்றவன் கண்களில் குற்றவாளிகளை பிடிக்க போகும் ஆர்வம் மின்னியது.

அர்ஜுன் ட்ரைவிங் சீட்டை ஆக்கிரமித்திருக்க.கார் ஒரு பங்களாவுக்கு முன்பாய் போய் நின்றது.

———————————————-

ஆதித்யா மறைந்த செய்தி சாயங்காலம் தான் அறிவிக்கப்பட்டிருந்ததால், செய்தி கிடைத்த மறுநிமிடத்தில் இருந்து ஆதித்யாவின் வீட்டில் வெள்ளை நிற உடையணிந்த மனித வெள்ளம் அலைமோதியது.  பத்திரிக்கையாளர்கள் துவங்கி  தெரிந்தவர்கள் நண்பர்கள் என மொத்த தொழில் உலகத்தினரும் படையெடுத்து வந்தனர். சாயங்காலம் மறைந்து இரவு வந்திருந்தும் மக்கள் கூட்டத்தினரின் வருகை குறைந்தபாடில்லை.

அவர்கள் அனைவரையும் வாட்டசாட்டமான பாதுகாவலர்கள் சோதனை செய்தபடி உள்ளே அனுப்பினர். ஆதித்யா பயணம் செய்த அவனது பிரைவேட் சாப்பர் நடுவானில் வெடித்து சிதறியதில் அவனது உடல் கிடைக்காமல் போகவே. அவனது புகைப்படத்திற்கு மாலையிட்டு அது தான் நடுவில் வைக்கப்பட்டிருந்தது.

அதன் அருகே துக்கம் தேய்ந்த வதனதில் கண்ணீர் வடிய ஆமர்ந்திருந்தாள் அவனது சகோதரி அருந்ததீ.

தனது தமையனுடன் அவள் கழித்த அந்த சுகமான நாட்கள் எல்லாம் அவள் கண் முன் வந்து போக, இனி அவன் தண்னுடன் இருக்க போவதில்லை என்கின்ற எண்ணம் அவளை மிகவும் வாட்டியது.

அடிவயிற்றில் இருந்து எழுந்து வந்த துக்கம் அவள் நெஞ்சை அடைக்க, கண்ணீர் விடாமல் கசிந்து கொண்டிருந்தது.

” ஆதி அண்ணா வந்திரு ப்ளீஸ், அம்மாக்கு என்னடா பதில் சொல்றது “- உதடுகள் முணுமுணுக்க, அவளுடைய அழுகை ஓயவே இல்லை. யாருடைய சமாதானத்திலும் அவள் மனம் அடங்கவில்லை, செய்தியை அறிந்ததில் இருந்து இப்படி தான் அழுது கொண்டே இருக்கிறாள்.

அப்பொழுது,

“நிறுத்துங்க ” – என்று கர்ஜித்த படி மாடியில் இருந்து வேகமாக கீழே இறங்கி வந்த பெண்மணியை அனைவரும் இமைத்தட்டாமல் பார்த்தனர். நாசி விடைத்திருக்க, கண்கள் கலங்கிருந்தது. முகம் இறுகி இருக்க. முகத்தில் விவரிக்க முடியாத கோபம் அப்பியிருந்தது. ஆனால் சிறிதளவு கூட சோகம் இல்லை.

வேகமாக கீழே வந்து நேரே சென்று ஆதித்யாவின் புகைப்படத்திற்கு போட்டிருந்த மாலையை படாரென்று பிடிங்கி கீழே எறிந்தவர். ஆதித்யாவின் புகைப்படத்தை எடுத்து முத்தமிட்டவாறு தன் நெஞ்சோடு அணைத்து கொண்டவர், “என் பையன் செத்து போகல எல்லாரும் என் வீட்ல வந்து ஏன் அழுதுட்டு இருக்கீங்க கிளம்பி போங்க ” – ஆத்திரத்தில் தொண்டை அடைந்துகொள்ள கத்தியவரின் விழிகளில் நீர் கோர்த்தது.

” அம்மா ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க, அண்ணா நம்மளை விட்டு போய்ட்டாரு ” – தன் தாயை அணைத்தபடி அழுதாள் அருந்ததீ.

மகனின் செய்தி கேட்டதும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தவர். இப்பொழுது தான் மயக்கம் தெளிந்து கீழே வந்தார். வந்ததும் அவர் கண்ணில் பட்டது, மாலையுடன் இருந்த தன் மகன் ஆதித்யாவின் புகைப்படம், அவ்வளவு தான் தாயின் உள்ளம் அல்லவா பதறிப்போனார். தன் மகன் உயிரோடு இல்லை என்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவே  முடியவில்லை.

” வாய மூடு அருந்ததீ. என் பையன் வருவான் ஆதி வருவான்…வரு…..வான் ” – ஆத்திரத்தில் ஆரம்பித்த குரல் அமைதியுடன் கூடிய உறுதியோடு முடிந்தது. பின்பு அனைவரையும் இறுக்கமாக ஒரு பார்வை பார்த்தவர், செக்யுரிட்டியை அழைத்து ,” என் வீட்ல இந்த அழுகை சத்தமெல்லாம் கேட்க கூடாது வெளிய அனுப்பு ” –  என்று கடுமையாக ஆணையிட்டவர் வந்த வேகத்தில் தன் அறைக்கு சென்று தாழிட்டுக்கொண்டார். அவரது உறுதியான நம்பிக்கை அனைவருக்கும் வியப்பை குடுத்தது.

———————————————————————-

ஆள் நடமாட்டம் இல்லாத அந்த கட்டிடத்தில். அந்த இளைஞனின் கையில் இருந்த துப்பாக்கி மதுமதியை குறிவைத்திருக்க ‘ டுமீல் ‘ என்ற சத்தம் கேட்ட மறுநொடி. உடம்பில் தோட்டா பாய்ந்தது. ஆம் தோட்டா பாய்ந்தது மதுமதியின் பின்னந்தலைக்கு குறிவைத்திருந்த சூரஜின் அடியாளின் உடம்பில் மர்ம இளைஞனின் தோட்டா பாய்ந்திருக்க. தனக்கு என்ன நேர்ந்தது என்பதை உணர்ந்து திரும்பி பார்த்தவள் , ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தவனை பார்த்ததும். அதிர்ச்சியில் தலைசுற்றி கீழே விழப்போக மதுவின் தலையை அவனது இடது உள்ளங்கை தாங்கியிருந்தது.

——————————-

நேரம் நள்ளிரவை தொட்டிருக்க. அந்த இடத்தை சுற்றி பெரிய பெரிய கப்பல்களில் இருந்து பெரிய பெரிய கண்டெயினர் பெட்டிகள் க்ரேன் மூலமாக தரையிறக்க பட்டுக்கொண்டிருக்க. சுமார் ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான  தோற்றத்தில் ஆடவர்கள் ஒரு இருபதில் இருந்து முப்பது பேர் மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவர்கள் வேலை செய்வதை கருப்பு நிற கோட் சூட்டில், நீளமான சுருட்டை தன் வாயில் வைத்து புகைத்தபடி ஒருவன் நாற்காலியில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்க. அவன் அருகே இரெண்டு பேர். கால் மேல் கால் போட்டபடி தோரணையாக அமர்ந்திருந்தனர். அதில் ஒருவன் வெளிநாட்டவன் என்பது அவனது தோற்றத்திலே தெளிவாய் தெரிந்தது.

பிறகு அவர்களின் கட்டளையின் பேரில் கண்டெயினரில் இருந்து எடுத்துவந்த மரப்பெட்டிகளுள் ஒன்று அவர்கள் முன்பு இறக்கிவைக்கப்பட்டது.

அப்பொழுது அவர்களின் கண்ணசைப்பில் பெட்டி திறக்கப்பட. நாற்காலியில் அமர்ந்திருந்ததில்  ஒருவன் அதில் சீராய் அடுக்கிவைக்கப்பட்ட பாக்கெட்டினை எடுத்து முகர்ந்து. அந்த வாசனையை தனக்குள் இழுத்து ரசித்தபடி,

” ஷப்பா எவ்வளவு நாள் ஆச்சு குப்தா ஜி. இந்த வாசனையை முகர்ந்து !!. ரொம்ப சுத்தவிட்டுட்டான். நல்லவேளை அவன் கதைய அந்த  சூரஜை விட்டு முடிச்சிட்டீங்க. இப்போ தான் நிம்மதியா மூச்சே விட முடியுது. அப்புறம் பாய் சரக்கு பக்காவா இருக்கு” – என்று அவன் குப்தாவிடம் கூறினான்.

உடனே குப்தா அங்கிருந்த தனது ஆட்களில் ஒருவனை வரச்சொல்லி அனைத்து பொருட்களையும் சேரவேண்டிய இடத்துக்கு பிரித்து கொடுக்குமாறு கட்டளையிட்டான்.

அந்த கண்டெயினர் பெட்டியில் இருந்த அனைத்தும் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து கப்பல் வழியாக இந்தியாவில் மும்பைக்கு கொண்டு வரப்பட்ட கேட்டமைன் ((KETAMINE) என்னும் போதைப்பொருட்கள்.

(கேட்டமைன்  ஹெராயின், அபின், கஞ்சா உள்ளிட்ட அணைத்து போதைப் பொருட்களுக்கும் டான். அதான் டானுக்கெல்லாம் டான்  .

கேட்டமைனை ஊசி மூலம் நரம்பு வழியாக செலுத்தப்படலாம், அல்லது பொடியாக நுகரப்படலாம் அல்லது புகைக்கப்படலாம். எனினும் ஊசிமூலம் செலுத்துவதுதான் இதை உபயோகிக்கும் மனிதர்களை மிக உச்ச பரவசநிலையை அடையச் செய்யும்.

ஹெராயின், அபின், கஞ்சா, மது ஆகிய போதைப் பொருட்களுக்கு மூலப் பொருள் எல்லாமே இயற்கையான பொருட்கள். ஆனால் இதே நேரம் கேட்டமைன் முழுக்க, முழுக்க ரசாயனப் பொருள். பார்க்க சர்க்கரை போலவே பளபளப்பாக வெண்மை நிறத்தில் இருக்கும்.

இந்தியாவில் ஹெராயின், அபின், கஞ்சா போன்ற அண்டர்கிரவுண்ட் பிசினஸ்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக்கொண்டு இருக்கிறது கேட்டமைன் பிசினஸ். வட அமெரிக்காவுக்கு அடுத்து போதை உலகில் கேட்டமைன் அதிகம் நுகரப்படுவது இந்தியாவில்தான். இந்தியாவில் மும்பைக்கு அடுத்ததாக கேட்டமைன் கடத்தல் மையமாக சக்கைப்போடு போடுவது.. சென்னையில்!

 இந்தியாவில் மும்பையில் பண்ணாட்டு நிறுவனங்கள் மூலமாக ஒட்டுமொத்த கேட்டமைனும் உற்பத்தி செய்யப்படுகிறது.

குப்தா தான் புகைத்துக்கொண்டிருந்த சுருட்டை அணைத்தபடி,

” ஷர்மா இவ்வளவு நாள் அவனை ஆட விட்டதே அவன் ஆட்டமும் எப்படி இருக்குன்னு பார்க்க தான். நானும் பார்த்துட்டேன் அவனும் ரொம்ப ஆடிட்டான் அதான். ஒரேடியா கதைய முடிச்சிட்டேன் ” என்று கூறினான்.

” அவன் செத்ததை என்னால இன்னும் நம்ப முடியலை. அவன் பேரை இப்போ கேட்டாலும் கொஞ்சம் நடுக்கமாத்தான் இருக்கு பாய். ” என்றான் ஷர்மா.

” பயந்தா தோழில் பண்ண முடியாது ஷர்மா ஜி ” எக்காளமாய் சிரித்தபடி கூறினான் குப்தா.

” மிஸ்டர் குப்தா ஹூம் ஆர் யு டாக்கிங் அபவுட் ? ” நீங்க யாரை பத்தி பேசுறீங்க ??.. எல்லாரும் பயப்படுற அளவுக்கு அவன் அவ்வளவு பயங்கரமான ஆளா?? ” – என்று கேட்ட அந்த வெளிநாட்டவனை. நிமிர்ந்து பார்த்த குப்தா. தன் விழியை அவனிடம் இருந்து அகற்றாது,

” ஆதீ. ஆதீத்யா” என்ற குப்தா சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு மேலும் தொடர்ந்தார்,

 ” அவன் தீ மாதிரி. ஒன்னு நினைச்சான்னா அடையாம விடமாட்டான். எதுக்கும் பயந்ததே இல்லை. கொடூரமான அரக்கன். பெரிய பெரிய ஆளுங்கெல்லாம் அவன் முன்னாடி ஸலாம் போட்டு கூனிக்குறுகி தான் உக்கார்ந்திருப்பாங்க. அவன் கெட்டவன் இல்லை!! எமன் !! நிழல் உலகத்தோடு மரண தேவன். சொல்ல போனா ஒரு சைக்கோ. அவனை புரிஞ்சிக்கவே முடியாது. அவனை எதிர்க்கிறவங்க எல்லாருக்கும் அவன் சிம்ம சொப்பனம்! பயப்படாதீங்க அவன் இப்போ இல்லை, அவனை அழிச்ச சந்தோஷத்துல தான் நாங்க எல்லாரும் இருக்கோம் சொல்ல போனா இன்னைக்கு தான் எங்களுக்கு தீபாவளியே இனிமே நாம நிம்மதியா தொழில் பண்ணலாம் ” – என்று குப்தா அந்த வெளிநாட்டவனிடம் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அசுர வேகத்தில் ஐந்து பி.எம்.டபிள்யூ கார்கள்  விர்ரென்று வழுக்கிக் கொண்டு வரிசையாக அவர்கள் முன்னால் வந்து நின்றது.

வெள்ளை  நிற கார்களுக்கு நடுவே கருப்பு நிற காரில்  இருந்து கம்பீரமாக இறங்கினான்  ஆதித்யா. அதான் நிழல் உலகினரின் மரண தேவன். அவனுடனே

அவனது வலது கையான நாகேந்திர ப்ரதாபும்(நாகா) வர, அவர்களுக்கு பின்னால் அவர்களது பாது காவலர்கள் கையில் துப்பாக்கியுடன் வந்தனர்.

குப்தாவின் விழிகள் பயத்தில் விரிய, ஷர்மாவின் கைகள் தாறுமாறாய் உதறியது. எதோ ஒன்று தனது தொண்டைக்குழியை அடைத்தது போல உணர்த்த ஷர்மாவுக்கு மூச்சு வேகமாக வாங்கியது.

– அரிமா வருவான்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “அரிமா – 2.1”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!