விஷம் – 30
தன் கழுத்தோரத்தில் யாழவனின் மூச்சுக் காற்றை உணர்ந்து கொண்டவளுக்கு விழிகள் தானாக மூடிக் கொள்ளத் துடித்தன.
கால்கள் நிற்க மறந்து தொய்ந்து சரிந்து விடும் என்பது போல இருக்க,
எந்த உணர்வையும் முகத்தில் காட்டி விடக் கூடாது என உறுதியோடு நின்றவளுக்கு அந்த உறுதியைக் காப்பாற்ற முடியும் என்று தோன்றவே இல்லை.
“யாழன் ப்ளீஸ்.. லஸ்ட் முக்கியம் இல்லைன்னு சொல்லிட்டு இப்போ நீங்க பண்றது சரியா..?” என அவள் கோபத்தோடு கேட்க சட்டென அவளை விட்டு விலகி நின்றான் அவன்.
“இது லவ்டி…”
“ப்ச்…” என சலித்துக் கொண்டவள் அவனுடைய கரத்தில் சுற்றியிருந்த துப்பட்டாவை கழற்றி அந்த காயத்திற்கு தேவையான சிகிச்சையை சரியான முறையில் செய்ய அமைதியாக அவளிடம் தன் கரத்தை ஒப்படைத்து விட்டு அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான் யாழவன்.
“ஏன்டி சலிச்சுக்கிற..?”
“தயவு செஞ்சு இப்போ எதுவும் பேசாதீங்க.. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.. அப்புறமா பேசலாம்..”
“சரி பேபி…” என்றான் அவன்.
அவளோ எந்த பதிலும் கூறாது அந்த அறையை விட்டு வெளியே சென்று விட அவனுக்கோ பெரு மூச்சு.
ஒரு பெண்ணை சமாளிப்பது இவ்வளவு கடினமாக இருக்கும் என அவன் நினைத்தும் பார்க்கவில்லை.
அதே கணம் விஷ்வாவிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வர அதனை ஏற்றவன் சோர்வோடு “ஹலோ..” என்றான்.
“என்னடா மச்சி இவ்ளோ டல்லா பேசுற..? நான் கொடுத்த ஐடியா ஒர்க்கவுட் ஆகலையா..?” எனக் கேட்டான் விஷ்வா.
“மூடிட்டு வீடியோ கால் வா என்ன நடந்துச்சுன்னு நானே சொல்றேன்..” என்ற யாழவனோ அவனுக்கு வீடியோ அழைப்பை ஏற்படுத்த அடுத்த நொடியே அதனை ஏற்ற விஷ்வாவும் அவனை முழுவதுமாக பார்த்துவிட்டு சத்தமாக சிரிக்கத் தொடங்கி விட்டான்.
“டேய் என்னடா ஆக்சிடென்ட் மாதிரி நடின்னு சொன்னதுக்காக இவ்ளோ பெரிய கட்டு போட்டு வச்சிருக்க..? இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லையா..? ஒரு கைல கட்டு போட்டு நடிச்சிருந்தா கூட பரவால்ல.. அடுத்த கைல வேற கட்டு போட்டு வச்சிருக்கியே… உலக மகா நடிகன்டா நீ..” என விஷ்வா சிரிக்க,
அவனை முறைத்துப் பார்த்தான் யாழவன்.
“போடா நீயும் உன்னோட ஐடியாவும்…”
“என்னடா சொல்ற..? இவ்வளவு பெரிய கட்டைப் பாத்து கூடவா அர்ச்சனா சிஸ்டர் உன்கிட்ட பேசல..?” என அதிர்ந்து போய் கேட்டான் விஷ்வா.
“ஆரம்பத்துல கவலைப்பட்டு பேசினாடா.. கொஞ்சமா பீல் பண்ணினா… பட் என்னை ஏத்துக்க அவ தயாராவே இல்லடா… இந்த பிளான் எல்லாம் சொதப்பிருச்சு.. தயவு செஞ்சு இனி ஐடியா தரேன் ஹெல்ப் பண்றேன்னு வாயை திறந்து எதையாவது சொல்லித் தொலைச்சுடாத.. உன் வாயை கிழிச்சிடுவேன்..” எனத் திட்டியவாறு நிமிர்ந்து பார்த்தவன் அங்கே விழிகளில் கண்ணீர் வழிய அவனையே அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சனாவைக் கண்டு பதறிப் போனான்.
“டேய் நீ ஒழுங்கா நடிச்சிருக்க மாட்ட.. எல்லா இந்தியன் பொண்டாட்டிகளும் எமோஷனல் இடியட்ஸ்தான்டா.. புருஷனுக்கு ஏதாவது ஒன்னுனா பயந்து நல்லா பாத்துப்பாங்க..” என விஷ்வா பேசிக் கொண்டே போக,
“ஷட் அப் யூ ஃ***** இடியட்…” என விஷ்வாவைத் திட்டி விட்டு சட்டென அந்த அழைப்பை துண்டித்து அலைபேசியை படுக்கையில் வைத்தவன்,
“ஷிட்…” என முனகியவாறு அர்ச்சனாவை மீண்டும் பார்த்தான்.
அவளுக்கோ விஷ்வா பேசிய அனைத்தும் தெள்ளத் தெளிவாக செவிகளில் விழுந்து விட அவனை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
இவ்வளவு கேவலமான செயலை யாழவன் செய்திருப்பான் என்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.
அவனுக்காக உணவு எடுத்துக்கொண்டு வந்தவளின் காதில் அவர்கள் பேசிய அனைத்தும் விழுந்துவிட அவள் கரங்களில் இருந்த உணவுத் தட்டோ நழுவி தரையில் விழுந்து உடைந்தது.
அதிலிருந்த உணவும் சிதறி தரையில் சிந்த,
அழுதவாறே வெளியே வேகமாகச் சென்றாள் அர்ச்சனா.
“பேபி நான் சொல்றத கேளு.. ஏய் நில்லுடி…” என்றவன் வேகமாக எழுந்து அவளின் பின்னே செல்ல் தொடங்கினான்.
அவளுக்கோ மீண்டும் மீண்டும் அவனிடம் ஏமாற்றமே பரிசாக கிடைக்க அவருடைய மனம் வெகுவாக நொந்து போய் இருந்தது.
இனி ஒரு நிமிடம் கூட இந்த வீட்டில் இருக்கவே கூடாது என உறுதியோடு எண்ணியவள் வேகமாக அந்த வீட்டின் வரவேற்பறையைத் தாண்டி வெளியே சென்றுவிட அதிர்ந்து விட்டான் யாழவன்.
வெளியே குளிர் வேறு அதிகமாக இருந்தது.
அதற்கு மேலாக மழை வேறு பெய்து கொண்டிருக்க இந்த காலநிலை மாற்றத்தை அவள் தாங்கிக் கொள்ள மாட்டாள் என்பதை உணர்ந்தவன் இன்னும் பதறித்தான் போனான்.
“அர்ச்சனா சொல்றத கேளு.. நில்லு.. எதுவா இருந்தாலும் பேசி முடிவு பண்ணலாம்.. ஏய் உள்ளவாடி… இந்தக் குளிர நீ தாங்க மாட்ட..” எனக் கத்தியவன் ஓடிச்சென்று வெளியே சென்றவளின் கரத்தைப் பிடித்து நிறுத்த,
“ச்சீ தொடாதீங்க..” எனச் சீறினாள் அவள்.
“சரி.. சரி தொடல… நான் சொல்றத கொஞ்சம் கேளுடி… இப்போ மழை பெஞ்சுகிட்டே இருக்கு.. இந்த டைம்ல எங்க வெளிய போற..?”
“எங்கேயோ போறேன்.. எங்க போனா உங்களுக்கு என்ன..?”
“பைத்தியம் மாதிரி பேசாத அர்ச்சனா முதல்ல உள்ளவா..”
“ஆமாங்க நான் பைத்தியம்தான்.. உங்களை நம்பி கல்யாணம் பண்ணி இவ்வளவு தூரம் வந்து இருக்கேன்ல நான் பைத்தியம் தான்… நீங்க சொல்றதெல்லாம் நம்பி உங்களுக்காக மனசுக்குள்ள தவிச்சுக்கிட்டு இருந்தேன்ல நான் பைத்தியம்தான்.. இதுக்கு அப்புறமும் இங்கேயே நான் உங்க கூட இருந்தா என்ன மாதிரி ஒரு முழு பைத்தியம் இந்த உலகத்துல வேற யாருமே இருக்க மாட்டாங்க..” என்றவள் அழுதவாறே இன்னும் வேகமாக நடக்கத் தொடங்க,
ஓடிவந்து அவளின் முன்பு வழியை மறைத்து நின்றவனுக்கோ சலிப்பாக இருந்தது.
“சத்தியமா என்னால முடியலடி.. தயவு செஞ்சு உள்ளவா..”
“முடியாது யாழவன்.. இதுக்கு மேல உங்க கூட இருக்க என்னால முடியாது.. இந்த லண்டன்ல பிச்சை எடுத்தாவது காசு சேர்த்து டிக்கெட் போட்டு இந்தியா போய்க்கிறேன்..”
“இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு நீ இவ்வளவு கோபப்படுற..?”
“ஏங்க நீங்க பண்றது எல்லாம் சரியா..? இப்படி பொய்யா கட்டு போட்டு வந்து ஆக்சிடென்ட்னு நடிக்கிறதுக்கு அசிங்கமா இல்லையா..? உங்கள போய் எவ்வளவோ நல்லவர்னு நம்பினேன்.. ஆனா ஒவ்வொரு நாளும் உங்களைவிட அசிங்கமான ஒருத்தர் இந்த உலகத்திலேயே இருக்க முடியாதுன்னு நிரூபிச்சுக்கிட்டே இருக்கீங்க..”
“ஆமாடி பொய்தான் சொன்னேன்.. எனக்கு ஆக்சிடென்ட் ஆகல.. வேற எப்படி உன்னை நெருங்குறதுன்னு எனக்குத் தெரியல பேபி.. அதனால தான் அப்படி பொய் சொன்னேன் உன்னை ஏமாத்துறது என்னோட நோக்கமே இல்லை. உன்னை பார்க்கணும் உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன்.. அதுக்காகத்தான்டி அப்படி சொன்னேன்..”
“சரிதான் இந்தியன் பொண்டாட்டி எல்லாருமே எமோஷனல் முட்டாளுங்க தானே..? உங்க பிரண்ட் கொடுத்த ஐடியாவை பக்காவா நடிச்சு என்னை ஏமாத்த ட்ரை பண்ணி இருக்கீங்க பட் உண்மை எல்லாம் எனக்கு இன்னைக்கே தெரிஞ்சு போச்சு… போதும்… இதுக்கு மேல நீங்க நடிக்கணும்னு அவசியம் இல்ல.. இந்த பேண்டேஜ் எல்லாம் கழட்டி தூக்கிப் போட்டுட்டு ஃப்ரீயா இருங்க..”
“அர்ச்சனா ஆக்சிடென்ட் நடக்கலதான் ஆனா நிஜமாவே கை உடைஞ்சிடுச்சு..” என்றவனை கோபமாகப் பார்த்தாள் அவள்.
மழைநீர் அவளை மொத்தமாக நனைத்து விட்டிருந்தது.
அவனையும் நனைத்துக் கொண்டிருந்தது
“கடவுளே போதும்.. இன்னும் எவ்வளவுதான் என்கிட்ட நடிக்கப் போறீங்க…? பொய்க்கு மேல பொய் சொல்லி என்ன சாதிக்கப் போறீங்க…? இனி நீங்க என்ன சொன்னாலும் நான் உங்களை நம்புறதா இல்ல..”. என்றவள் நிற்காமல் முன்னேறிச் செல்ல அவளுடைய வார்த்தை பிரயோகங்கள் யாவும் அவனை வெகுவாக காயப்படுத்தின.
“சாரி அர்ச்சனா. விஷ்வா ஐடியா கொடுத்துதான் நான் இப்படி எல்லாம் நடிச்சேன்.. ஆனா உன்கிட்ட பொய் சொன்னது தாங்கிக்க முடியாம அதை உண்மையாக்குறதுக்காக என் கையை நானே உடைச்சுக்கிட்டேன்டி.. இது உன் மேல சத்தியம்… நான் பொய் சொல்லல அர்ச்சனா… நீயும் நர்ஸ் தானே..? நீயே வந்து இந்த கட்ட பிரிச்சு என்னோட கையை செக் பண்ணிப் பாரு.. உனக்கே உண்மை என்னன்னு தெரியும்…
உண்மையாவே கை உடையாம இருந்துச்சுன்னா நானே உன்னை இந்தியாக்கு அனுப்பி வைக்கிறேன்.. நாளைக்கே அனுப்பி வைக்கிறேன். ஐ ப்ரோமிஸ் யூ..” என்றான் அவன் உடைந்து போன குரல்.
ஒரு கணம் தன் நடையை நிறுத்தியவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“நான் பொய் சொல்லலடி.. சத்தியமா என்னோட கைய நானே உடச்சிகிட்டேன்.. வந்து நீயே செக் பண்ணி பாரு..” என் அவன் கூற அவளுக்கோ விழிகளில் இருந்து கண்ணீர் நில்லாமல் வழிந்தது.
என்ன வாழ்க்கை இது என்ற சலிப்பும் ஆதங்கமும் அவளுக்குள் எழுந்து போட்டி போட்டு அவளை வதைக்க அப்படியே அசையாமல் நின்றாள் அவள்.
“என்ன நம்புடி.. என்னால ரொம்ப நேரம் இப்படியே இந்த மழைல நிக்க முடியல.. உடம்பு முழுக்க பெயின்னா இருக்கு.. ரொம்ப வீக்கா ஃபீல் பண்றேன் ப்ளீஸ் கம் வித் மீ..” என்ற அவனின் சோர்ந்த குரலில் எதுவும் கூறாது அவனுடன் உள்ளே வந்தவள் அவனை நம்ப முடியாமல் அவனுடைய கைக்கட்டைப் பிரித்து பரிசோதித்து பார்த்து அதிர்ந்து போனாள்.
நிஜமாகவே கை சிவந்து வீங்கி உள்ளே இருந்து எலும்பு பிசகியது போலவே இருக்க அவளுக்கோ அவனை என்ன செய்வதென்றே புரியவில்லை.
“நி.. நிஜமா நீங்களே உங்க கையை உடைச்சுட்டீங்களா..?” எனக் கேட்டவளுக்கு உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
“உன்கிட்ட பொய் சொல்ல புடிக்கல அதனால சொன்ன பொய்யை உண்மையாக்கிட்டேன்..” என்றவன் தன்னுடைய கையை அசைக்க முடியாமல் சிரமப்பட அவளுக்கோ வேதனை இன்னும் அதிகரித்தது.
தன் கணவனை எந்த வகையில் சேர்த்துக் கொள்வது..?
உள்ளம் பிசைந்தது.
அழுகையை அடக்க முடியாது அழுது தீர்த்தவளோ,
“முதல்ல டாக்டரை கூப்பிட்டு மறுபடியும் கட்டு போடுங்க.. இல்லைன்னா பிரச்சனையாகிடும்..” என்றாள் வலியோடு.
“நீ ட்ரஸ் மாத்து. இந்தக் குளிர்ல இப்படியே ஈரத்தோட இருந்தீன்னா உனக்கு கோல்ட் புடிச்சுரும்..” என அந்த நேரத்திலும் அவன் அவளைப் பற்றி யோசித்து அக்கறையாகக் கூற அவள்தான் தடுமாறிப் போனாள்.
“இல்ல டாக்டரை வர சொல்லுங்க..”
“நான் கால் பண்ணி வர சொல்றேன்டி.. நீ போய் ட்ரஸ் மாத்து…” என அவன் அழுத்தமாகக் கூற மறுக்க முடியாத உள்ளே சென்றவள் நடுங்கியவாறே தன்னுடைய ஆடையை மாற்றி விட்டு ஈரக் கூந்தலை விரித்துவிட்டவாறு அவனிடம் வர அவனோ அப்படியே அதே ஈர ஆடையுடன் அமர்ந்திருந்தான்.
“நீங்க ட்ரெஸ் மாத்தலையா..?”
“கைய அசைக்க முடியல அர்ச்சனா.. ரொம்ப பெயினா இருக்கு.. என்னால ட்ரெஸ் சேன்ச் பண்ண முடியல…” என்றான் அவன் வேதனையில் முகத்தை சுளித்தவாறு.
அடுத்த நொடியே அவனை நெருங்கியவள் மெல்ல அவன் அணிந்திருந்த ஷர்ட்டை கழற்றிவிட்டு துவாலையை எடுத்து வந்து அவனுடைய தலையை துவட்டத் தொடங்க விழிகளை மூடி அமைதி காத்தான் யாழவன்.
💜💜