மயக்கியே என் அரசியே..(5)

4.6
(7)

அத்தியாயம் 5

 

“அண்ணையா என்ன யோசனை” என்ற தெய்வானையிடம், “உனக்கு இரண்டு நாத்தனார் இருக்காங்க” என்றான் பிரசாந்த். “ஆமாம் அருணா, அர்ச்சனா” என்றாள் தெய்வானை. “உனக்கு முன்னமே தெரியுமா?” என்ற பிரசாந்த்திடம் “அம்மா சொன்னாங்க அர்ச்சனா ஹஸ்பண்ட் இறந்து போய்விட்டாராம் அதனால் அவங்க பெரும்பாலும் வெளியே வர மாட்டாங்கன்னு அத்தைம்மா சொன்னாங்களாம்” என்றாள் தெய்வானை.

 

“அந்த பொண்ணுக்கு வயசு எத்தனை இருக்கும் தெரியுமா?” என்ற பிரசாந்த்திடம் , “தெரியாது அண்ணையா” என்றாள் தெய்வானை. “உன்னை விட இரண்டு வயசு மூத்த பொண்ணா இருக்கும். பாவம் தெய்வா அந்த பொண்ணு வெள்ளை புடவை கட்டி” என்று அவன் ஏதோ சொல்லிக் கொண்டு இருக்க அந்த நேரம் சரியாக கலாராணி தெய்வானையை அழைத்திட , “அண்ணையா அம்மா வராங்க அப்பறம் பேசலாம் இதைப் பற்றி” என்று கூறி விட்டு தெய்வானை சென்று விட்டாள்.

 

“உன்னோட கல்யாணப் புடவையை உனக்கு காட்டுறதுக்கு உன் அத்தைம்மா வந்திருக்காங்க வா” என்று மகளை அழைத்து சென்றார் கலாராணி.

 

“நல்லா இருக்கியா அம்மு” என்று மருமகளை சௌந்திரவள்ளி கேட்டிட, “நல்லா இருக்கேன் அத்தைம்மா” என்றாள் தெய்வானை. அவளது நெற்றி வழித்து சொடுக்கிட்டவர், “இந்த புடவை உனக்கு பிடிச்சுருக்கு தானே” என்று கேட்டிட, “ரொம்ப பிடிச்சிருக்கு அத்தைம்மா” என்றாள் புன்னகையுடன்.

 

அவளது ஆளை மயக்கும் புன்னகையில் சௌந்திரவள்ளி மயங்கி தான் போனார். “சாயங்காலம் கோவிலுக்கு வரும் போது இந்த புடவையை கட்டிக்கொண்டு வா அம்மு” என்ற சௌந்திரவள்ளி ஒரு புடவையை அவளிடம் கொடுத்தார்‌. அதை வாங்கிக் கொண்டவள் “சரிங்க அத்தைம்மா” என்றிட மருமகளின் நெற்றியில் முத்தமிட்ட சௌந்திரவள்ளி கிளம்பி சென்று விட்டார்.

 

வீட்டிற்கு வந்ததும் மருமகள் புராணம் பாட ஆரம்பித்தார். “நீ என்னைக்காவது உன் மாமியாரை அத்தைம்மானு கூப்பிட்டு இருக்கியா டீ ஆனால் என் மருமகள் வார்த்தைக்கு வார்த்தை அத்தைம்மா , அத்தைம்மானு கூப்பிட்டாள்” என்றார் சௌந்திரவள்ளி.

 

“அவள் அத்தைம்மானு கூப்பிட்டதும் நீ சொக்கிப் போயிட்டியாக்கும் மயக்கி மயக்கி என்ன மாயம் மந்திரம் பண்ணினாலோ பொண்ணு பார்க்க போனப்பவே என் தம்பியை மயக்கிட்டாள். இன்னைக்கு புடவை காட்ட போன உன்னையும் மயக்கிட்டாள்” என்று கூறிய அருணா முகத்தை வெட்டிக் கொண்டு சென்று விட்டாள்.

 

“என்னாச்சு அண்ணையா தாலிக்கு தங்கம் உருக்கிட்டு வந்ததில் இருந்து உன் முகமே சரியில்லை” என்று தெய்வானை கேட்டிட , “எனக்கு பயமா இருக்கு தெய்வா. இந்த ஊரில் உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுக்க” என்றான் பிரசாந்த்.

 

 

“ஏமி அண்ணையா பாவா ரொம்ப நல்லவரா இருக்காருன்னு நீ தான் செப்புன இப்போ இப்படி செப்புற என்னாச்சு” என்றாள் தெய்வானை.

 

“பாவா நல்லவரா தான் தெரியுறாரு ஆனால் அவங்க தங்கச்சியை வீட்டுக்குள்ளே அடைச்சு வச்சுருக்கிறது” என்று அவன் ஏதோ சொல்ல வர அவனது கையைப் பிடித்து அமர வைத்தவள் “அண்ணையா இப்போ என்ன உன் பிரச்சினை அந்த பொண்ணு நிலைமை நாளைக்கு எனக்கு வந்துரும்னு பயப்படுறியா?” என்றாள் தெய்வானை.

 

“தெய்வா என்ன சொல்லிட்டு இருக்க விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதே என்னால தாங்க முடியாது நீயும், பாவாவும் சந்தோஷமாக இருப்பீங்க நூறு வயசுக்கு” என்று அவன் கூறிட ,அவனைப் பார்த்து சிரித்தவள், “எனக்கு நூறு வயசு ஓகே உன் பாவாக்கு மட்டும் நூற்றி பதினைந்து வயசு ஓகேவா அண்ணையா” என்று சிரித்தாள் தெய்வானை. அவளைப் பார்த்து புன்னகைத்த பிரசாந்த், “எல்லாமே உனக்கு விளையாட்டு தான்” என்றான் பிரசாந்த்.

 

“விளையாட்டு இல்லை அண்ணையா சீரியஸா தான் செப்புறேன் பாவாவுக்கு நூற்றி பதினைந்து வயசு இருந்தால் தான் நான் என்னோட நூறு வயசு வரைக்கும் அவரோட சேர்ந்து வாழ முடியும்” என்று கூறியவள், “உனக்கு அந்த பொண்ணு மேல இரக்கமா?” என்றாள் தெய்வானை.

 

அவன் ஏதோ சொல்ல வர , “அண்ணனும், தங்கையும் பேச ஆரம்பித்தால் பேசிட்டே இருப்பீங்க கிளம்புங்க இரண்டு பேரும் கோவிலுக்கு போகனும்” என்று கலாராணி கூறிக் கொண்டே வர , “இதோ வரோம்மா” என்ற தெய்வானை தன் அண்ணனுடன் வெளியே வந்தாள்.

 

 

கோவிலுக்கு கோகுலகிருஷ்ணன் குடும்பமாக சென்றிட அங்கே சிவநேசனும் அர்ச்சனா தவிர தன் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்திருந்தார்.

 

பிரசாந்த்திற்கு ஏனோ இந்த ஊரும் பிடிக்க வில்லை. கார்த்திகேயனின் குடும்பத்தையும் பிடிக்க வில்லை. அர்ச்சனா சொன்ன வார்த்தை தான் அவன் மனதில் தோன்றியது. “நான் தொட்டால் தீட்டு அப்பறம் வதனை கொடுத்த சட்டையை அண்ணையாவை அம்மா போட்டுக்க விட மாட்டாங்க” என்று அவள் கூறியது தான் தோன்றியது. “அந்த பொண்ணு தொட்டால் தீட்டா அந்த அளவுக்கு மூட நம்பிக்கையில் ஊறிப் போன கூட்டத்தில் எப்படி தன் தங்கையை திருமணம் செய்து கொடுப்பது” என்று அவன் யோசனை செய்து கொண்டு இருந்தான்.

 

“ஏமி அண்ணையா எப்போ பாரு ஏதோ யோசிச்சுட்டே இருக்க” என்ற தெய்வானையிடம், “பாவா கிட்ட நீ பேசுனியா கல்யாணம் முடிஞ்சதும் நீ அவரோட ஹைதராபாத் வருவதைப் பற்றி” என்றான் பிரசாந்த்.

 

“இப்போ என்ன அவசரம் அண்ணையா கல்யாணம் முடிஞ்சதும் பேசலாம்” என்று கூறிய தெய்வானையிடம், “நீ பேசு நான் அவரை வரச் சொல்லுறேன்” என்று கூறி விட்டு பிரசாந்த் சென்று விட்டான்.

 

எங்கே இந்த கிராமத்தில் தன் தங்கையை விட்டால் அவளது வாழ்க்கையில் மூட நம்பிக்கைகள் வேறு வழியில் நுழைந்து அவளது வாழ்க்கையை சிதைத்து விடுமோ என்ற பயம் பிரசாந்த்தை ஆட்கொள்ள அட்லீஸ்ட் தங்கை தன் கண் முன்னால் சிட்டியில் வாழ்ந்தால் நிம்மதியாக இருக்கலாம் என்று யோசித்தான் பிரசாந்த்.

 

“பாவா” என்று அழைத்த பிரசாந்த்தை புன்னகையுடன் பார்த்தான் கார்த்திகேயன். “சொல்லுங்க பிரசாந்த்” என்ற கார்த்திகேயனிடம், “தெய்வா உங்க கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னாள்” என்று தயக்கமாக கூறினான் பிரசாந்த்.

 

“என்ன பேசணும்” என்ற கார்த்திகேயனிடம், “தெரியலை பாவா” என்றான் பிரசாந்த். “உங்க கிட்ட என் ஃபோன் நம்பர் இருக்கு தானே தெய்வானையை ஃபோன்ல பேச சொல்லுங்க எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் கிளம்பனும்” என்று சொல்லி விட்டு சென்று விட்டான் கார்த்திகேயன்.

 

“அண்ணையா” என்று வந்த தெய்வானையிடம், “உன் கிட்ட பாவா நம்பர் இருக்கு தானே தெய்வா” என்றான் பிரசாந்த். “அண்ணையா உன் பிரச்சினை தான் என்ன” என்றாள் தெய்வானை.

 

“எனக்கு இந்த கல்யாணம் உனக்கு சரியா இருக்குமான்னு பயமா இருக்கு. அவரு எந்த காலத்தில் இருக்காரு உன் கிட்ட தனியா பேசினது இல்லை. ஃபோனில் கூட பேசியதில்லை இப்போ நீ தனியா பேசணும்னு வரச் சொன்னதாக சொன்ன பிறகும் கூட ஃபோன்ல பேச சொல்லுன்னு சொல்லிட்டு போறாரு.

 

அவங்க வீட்டில் விதவைங்கிற ஒரே ஒரு காரணத்தால் அந்த பொண்ணை சொந்த அண்ணன் கல்யாணத்தில் கூட சேர்க்காமல் அவள் தொட்டால் தீட்டுன்னு ஒதுக்கி வச்சுருக்காங்க எனக்கு உன் எதிர்காலத்தை நினைச்சா ரொம்ப பயமா இருக்கு தெய்வா” என்றான் பிரசாந்த்.

 

“அண்ணையா நீ இவ்வளவு பயப்பட வேண்டிய அவசியமே இல்லை” என்ற தெய்வானையிடம், “நீ பாவா கிட்ட பேசு கல்யாணம் முடிஞ்சதும் ஹைதராபாத் வந்து செட்டில் ஆகுறதைப் பத்தி” என்றான் பிரசாந்த்.

 

“சரி அண்ணையா நான் பேசிக்கிறேன் நீ இதை பற்றி யோசிக்காமல் கல்யாண வேலையை பாரு” என்றாள் தெய்வானை.

 

 

“தெய்வா அது” என்று அவன் மேலும் தயங்கிட, “உனக்கு இந்த கல்யாணம் நடக்க வேண்டாம்னு நினைக்கிறியா சொல்லு கல்யாணம் வேணாம்னு அப்பா, அம்மா கிட்ட சொல்லிடுறேன்” என்று தெய்வானை கூறிட‌, “ஐயோ தெய்வா என்ன பேச்சு இது” என்ற பிரசாந்த், “ஸாரி தெய்வா நீ பாவாகிட்ட பேசு” என்று கூறி விட்டு பிரசாந்த் சென்று விட்டான். தெய்வானையும் ஃபோன் செய்வதை மறந்து விட்டாள். தெய்வானையிடம் இருந்து ஃபோன் வரும் என்று பிரசாந்த் சொன்னதை கார்த்திகேயனும் மறந்து விட்டான்.

 

அதோ இதோ என்று திருமண நாளும் வந்து விட்டது. தெய்வானை அழகு பதுமையாக மணவறையில் அமர்ந்திருக்க அவளருகில் கம்பீரமாக அமர்ந்திருந்தான் கார்த்திகேயன்.

 

கெட்டி மேளம் கொட்டிட மங்கை அவளது சங்கு கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்து அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான் கார்த்திகேயன்.

 

தெய்வானை, கார்த்திகேயன் இருவரது திருமணமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. தங்கையின் முகத்தில் இருக்கும் சந்தோஷம் எப்போதும் நிலைத்து இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டான் பிரசாந்த்.

 

கோகுலகிருஷ்ணன், கலாராணி தம்பதியோ மகளின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

சிவநேசன் சௌந்திரவள்ளி தம்பதியரின் பல நாள் கனவு பலித்தது. அன்பு மகனின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. முகம் கொள்ளா புன்னகையுடன் மகன், மருமகள் இருவரையும் பார்த்து சந்தோஷம் அடைந்தார் சௌந்திரவள்ளி.

 

அருணா தேவி ஒருத்தியை தவிர அனைவரும் சந்தோஷமாகவே இருந்தனர்.

 

கார்த்திகேயன், தெய்வானை இருவரையும் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள் அருணா. சௌந்திரவள்ளி மருமகளை பூஜை அறையில் விளக்கேற்றச் சொல்ல தெய்வானையும் விளக்கேற்றினாள்.

 

“ஏமி கலா அழுதுட்டு இருக்க” என்ற கோகுலகிருஷ்ணனிடம், “நம்ம பொண்ணு இனிமேல் தினமும் நம்ம கூட இருக்க மாட்டாளே. தினமும் என் கிட்ட வாயாடிகிட்டே, வம்பு பண்ணிக்கிட்டே இருக்க மாட்டாளே அந்த ஏக்கம் பாவா” என்றார் கலாராணி.

 

“நம்ம பொண்ணு சந்தோசமா வாழனும் அது தான் முக்கியம் சும்மா கவலைப் படாமல் இரு. வேணும்னா உன் கூட சண்டை போடுறதுக்கு நம்ம பிரசாந்த்திற்கு கல்யாணம் பண்ணி ஒரு மருமகளை கொண்டு வந்திடலாம்” என்றார் கோகுலகிருஷ்ணன். காலாராணியும் சிரித்து விட்டார்.

 

“அண்ணையா வதனை ரொம்ப அழகா இருக்காங்க” என்று அர்ச்சனா கூறிட, “அவளது கையைப் பிடித்தவன் வந்து அவள் கூட பேசலாமே அர்ச்சு” என்றான் கார்த்திகேயன்.

 

“இல்லை அண்ணையா அம்மா,‌அக்கா எதுனாலும் சொல்லுவாங்க. நீங்க இங்கே இருக்கிறதை பார்த்தாலே அக்கா திட்ட ஆரம்பிச்சுரும் நீங்க போங்க அண்ணையா” என்று தன் சகோதரனை அனுப்பி வைத்தாள் அர்ச்சனா.

 

வேண்டா வெறுப்பாக தெய்வானையை அலங்காரம் செய்தாள் அருணா. தெய்வானை யின் அருகில் வந்த சௌந்திரவள்ளி மருமகளின் நெற்றி வழித்து சொடுக்கிட்டவர் அவள் கையில் பால் சொம்பினை

கொடுக்க அதை வாங்கிக் கொண்டு கணவனின் அறைக்குள் நுழைந்தாள்.

 

 

 

(…மயக்கியே..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!